சனி 28 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-54

ஒப்பனைகளின் கூத்து ( சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு)




சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய் குயிலிக்கான நினைவுச்சின்னம் தமிழக அரசால்18.07.2014 அன்று வேலுநாச்சியாருக்கு என திறக்கப்பட்ட மணிமண்டபத்தில் குயிலிக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.


குயிலி....யாரிந்த குயிலி...?

1780 ஆம் ஆண்டில் ஆற்காட்டு நவாப், புதுக் கோட்டை தொண்டைமான், ஆங்கிலேயரது படைகள் ஒரு புறமாகவும்,  வேலுநாச்சியார்,மருது பாண்டியரது படைகள் ஒரு புறமாகவும் நின்று சிவகங்கையை மீட்க நடைபெற்ற போரில் சிவகங்கை அரண்மனைக்குள் இருந்த ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அழித்த முதல் தற்கொலை போராளியாக..வீரத்தாயாக தமிழகத்தில் அறியப்பட்டவர் குயிலி............!!!

இந்த  குயிலியை சாதி வெறி குல தெய்வத்தின் வழி வந்த சாதி வெறியர்கள் வீரத்தாய் குயில (மறவர் / தேவர்)   எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்றும்..  சுய சாதி யர்களான அருந்ததியர் சாதியைச் சேர்ந்தவர் என்றும்.. இல்லையில்லை நாங்கள் நேரடி கள ஆய்வு செய்ததில் குயிலி (ஆதிதிராவிடர்/  பறையர்) சாதியைச் சேர்ந்தவர் என்றும்..இல்லவே இல்லை..குயிலி எங்கள் தேவேந்திர குல வேளாளா (பள்ளர்/மள்ளர்) பெண் என்று ஒவ்வொரு சாதி வெறியர்களும் சுயசாதியர்களும் குயிலி எங்கள் குல சாதிப் பெண் என்று  உரிமை கொண்டாடி  அதற்க்காக பல நூல்களும் படைத்தும் இணையதளங்களிலும் குறிப்பிட்டு   குயிலி  எந்த சாதிக்கு சொந்தம் என்றுஅந்தந்த சாதிக் கட்சிகளும் அமைப்புகளும் உரிமைப் போர் நடத்திக் கொண்டு வரும் வேளையிலே

 மேலே கண்ட தோழர் மயில்வாகனன் அவர்களின் ” ஒப்பனைகளின் கூத்து” ஒரு ஆய்வு நூல் ஒன்று  சாதி வெறியர்களுக்கும், சுயசாதியர்களுக்கும் மொத்தமாய்  ஆதாரபூர்வமாக.. சரியான ஆய்வை . தெளிவுபடுத்தியுள்ளார்.

குயிலி எந்தச் சாதியையும் சேர்ந்தவரல்ல என்கிறது அந்த நூல்... குயிலி எந்தச் சாதியையும் சேர்ந்தவரல்ல என்றால் சாதி வெறியர்கள் நிறைந்த, சுய சாதியர்கள் நிறைந்த நாட்டிலே.. என்ன அர்த்தம்....குயிலி ஒரு கற்பனை பாத்திரம் என்பதுதான்  பல்வேறு வகைப்பட்ட, எதையும் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் நிறுவி உள்ளார்.

அப்படி..என்ன ஆதாரம், ஆய்வு என்று நக்கல் பேசுபவர்கள். மேற்கண்ட ”ஒப்பனைகளின் கூத்து” என்ற புத்தகத்தை வாங்கி வாசித்து தெரிந்து கொள்ளலாம்.....

 வரலாறு அறியாமல்
நாட்டுப்பற்று உருவாகது
நாட்டுப்பற்று இல்லாமல்
குடிமக்கள் வாழும்
நாடு எக்காலமும்
உருப்படாது..உருப்படாது....!!!!!!!!!!!!!



“ மேற்கண்ட ”ஒப்பனைகளின் கூத்து”  ஓர் ஆய்வு நூலை என்னையும் படிக்கத் தூண்டிய ஆய்வாளர் தோழர் குருசாமி மயில்வாகனன் அவர்களுக்கு நன்றியும்!! வாழ்த்துக்களும்!!!



வெள்ளி 27 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-53


Image result for புத்தர்



ஆசையே அனைத்து
துன்பத்துக்கு காரணம்
என்றார் புத்தர்...

ஆம்..............!!!!!!!!!!!!!1
புத்தர் சொன்னது
உண்மைதான் ஸ்டெர்லைட்
முதலாளி அகர்வால்
ஆசை பட்டது  தான்
 தூத்துக்குடி மக்களின்
துன்பத்திற்கு  காரணம்
ஆகியது...இதேபோல..

எடப்பாடி பழனிசாமியின்
எட்டுவழி சாலையின்
ஆசைதான் சேலம்
மக்களின் துன்பத்திற்கு
காரணம் ஆகியது.

இவர்களை போன்றே
என் தெருவிலிருக்கும“
நாட்டாமையின் ஆசையின்
காரணமாகத்தான் நான்
 காவல் நிலையம்
 நீதிமனறம் அலையும்
நிலை ஏற்பட்டது



அன்றே சொன்னார் புத்தர்
ஆசையை ஒழிக்க
வேண்டும் என்று........
என்னால் மட்டும்
அவர்களின் ஆசையை
ஒழிக்க முடியவில்லையே
 என்ன செய்வது   ..!!!!

புதன் 25 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-52




Image result for கைப்பேசி தொடர்பு


ஒவ்வொரு நாளும்
கைப் பேசியை தொட்டதும்
முதல் வேலையாக
அவனை மனதில்
கொண்டு தொடர்பு
கொள்ளும் போதெல்லாம்
ஒலிக்கும் இசைக்குப்
பின்னால்  அவன்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருப்பதாக
தகவல் வரும்.

பல நாள்
சில மாதம்

தொடர்ந்த முயற்சிக்கு
பின்னால்தான் தெரிந்தது
இந்த மெய்
நிகர் உலகத்தின்
எல்லைக்குஅப்பால்
கடந்து விட்டான்
என்று............!!!!!!!!!!




செவ்வாய் 24 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-51






Image result for சிறந்த உணவு






பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள். 

அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள். 

அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.

அதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும். 

ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.

பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் எல்லாம் தன் விழிகளை பதிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.

ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது.ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது. 

சமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது.

கதைச் சுருக்கம் வருமாறு.

மத்திய தர வர்க்கத்துப் பெண்ணுக்கு,வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது. 

மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம். 

மிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள்.நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார். வலியால் துடிக்கிறாள் இவள். 

இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயைவைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார். 

பின் பெண்ணின் முலைகளை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார். 

அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பாலைக் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது. 

காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது. 

இவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது. 

மறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.

இப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார். 

ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி.அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள். 

ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள். 

ஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.

“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.

அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.

இப்படியாகக் கதை முடிகிறது.

இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது. மனைவியிடம் கேட்டேன்.

“ஆமா அது எவ்வளவு பெரிய கொடுமை” என்று நிறையச் சொன்னார். நான் அவளிடம் கேட்டேன் “இது எனக்குத் தெரியாதே” என்றேன்.

“இதெல்லாம் சொல்லிட்டா இருப்பாங்க” என்ற பதில் கிடைத்தது.

அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன். 

அம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண்களுக்கு கொடுமையான விசயம் என்று விளக்கினார்.

நான் அம்மாவிடம் கேட்டேன் “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்த எனக்கு சொல்லவே இல்லை” என்றேன்.

யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும். 

அப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும். 

என்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன். 

ஒருவேளை இக்கதையைப் படித்தால்

 “பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள். 

அந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம். 

பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வரவேண்டும்.

விவாதிக்கப்பட வேண்டும். 

#Vijayabhaskar_vijay

மீண்டும் தொடரும் இம்சைகள்-50



Image result for எஜமான் வீட்டு உணவு




அன்று ஒருநாள் இதே மாலை வேளையில்... எனக்கு ஏற்ப்பட்ட மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக முன்பு  போல 50 ரூபா டிக்கெட் எடுத்துக் கொண்டு ஒரு நாள்  முழுவதும் தெரியாத இடத்துகெல்லாம் பயணித்ததுபோல.. இப்போது பயணிக்க முடியவில்லை காரணம். இப்போது50 ரூபா பயணசீட்டு ரத்தாகிவிட்டது.. அதனால் நகரத்து வீதிகளில் நடந்து கொண்டு இருந்தேன்.

ஒரு கட்டத்தில் சோர்ந்து போயி வீதிகளில் இருக்கும் மூடப்பட்ட கடைகளின் வாசல் திண்டில் அமர்திருந்த போது அந்தக் காட்சியைக் கண்டேன்

அருகில் இருந்த கடை ஒன்றில் தாயும் மகளும் வந்தார்கள். தாயானவர் தன் மகள் கேட்டதை..பிடித்த மானதை வாங்கிக் கொடுத்தார்.. மகளானவர் தாய் வாங்கிக் கொடுத்ததை ஆசையோடு சுவைக்கத் தொடங்கினார். வாங்கிக் கொடுத்த தாயானவர் தன் மகள் திண்பதை கண்டு உள்ளம் பூரித்தவராக..தன் நாக்கீல் எச்சில் ஊற.. தன் மகள் திண்பதில் கொஞ்சம் கேட்கிறார்.

அந்த மகளோ..போம்மா..என்று விட்டு முன்னே ஓடுகிறார். அந்தத்தாய் கெஞ்சிக் கொண்டே பின்னே ஓடுகிறார்.

அந்தத்தாய்க்கு மகளானவர் கொடுத்தாரா? அந்தத் தாய் மகளிடம் பெற்ற சுவைத்தாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்தக் காட்சி எனது வாழ்வின் சிறுவயதில் ஏற்பட்ட நிகழ்வையும் அதற் முதற் கொண்டு இன்றுவரை நான் கடைபிடித்துவரும் நடைமுறையை எனக்கு மீண்டும் நிணைவூட்டியது....

பிறந்த சில வருடங்களில் தந்தையை தூக்கி முழுங்கியவன் என்ற அவப் பெயர் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் என் தாய் சீராட்டி-பாராட்டி வளர்க்காவிட்டாலும்அடுத்தவர்களிடத்தில்கையேந்தாமல்..இல்லாததால் .கிடைக்காததை நிணைத்து ஏக்கம் கொள்ளாமல் வளர்த்தார்.

ஒரு நாள் என் தாய் தான் வேலை பார்க்கும் எஜமான் வீட்டில் நடந்த விழா நிகழ்ச்சியில் கிடைத்த சிறந்த உணவை..அதாவது இன்றும் என்னால் சாப்பிடாத சுவையான உணவை தான் உண்ணாமல் பத்திரமாக எனக்கு கொண்டு வந்து கொடுத்தார்

வீடு தங்காமல் ஊர் சுற்றி விளையாட்டு பிள்ளையாய் இருந்த என்னை தேடி கண்டுபிடித்து..அடிக்காமல் திட்டாமல் இழுத்து வந்து எஜமானர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை கொடுத்து உண்ணச் சொன்னார்

அடியும் திட்டும் விழாததால்  அச்சம் தஎன்வினைப்ர்த்தபோலவே நான் கையும் கழுவாமல் முகத்தையும் சுத்தம் செய்யாமல். விளையாட்டு ஆர்வத்தால் பசியை மறந்திருந்த எனக்கு அந்த சுவை மிகுந்த உணவை மிகவும் ஆவலோடு லபக் லபக்கென்று என் தாயாரின் வார்த்தையில் செல்வதென்றால் கொள்ளை போயிறுமோ என்ற பயத்தில் வயிற்றில் தள்ளிக் கொண்டு இருந்தேன்.

நான் ஆசை ஆசையாய் சாப்பிட்டு முடித்தது. என் தாய்க்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ,மனதில் சிறு வருத்தம் இருந்தது எனக்கு தெரியவில்லை.

பிற்பாடு  திருமணம் முடிந்து சென்ற என் சகோதரி சொன்ன பிறகுதான் என் தாயின் வருத்தம் தெரிந்தது.

அன்று சிறந்த..சுவை மிகுந்த உயர்தர உணவை பார்த்திராத..சுவைத்திடாத   என்னைப் போலவே..என் தாயாரும் பாரத்திராதவர், சுவைத்திடாதவர். அபூவர்மாக அன்று கிடைத்த உணவில்  சிறிதளவு என் தாய்க்கு  வைப்பேன் என்று நிணைத்திருந்தார். அந்த நிணைப்பில் நான்  தெரியாமல் மண்ணை அள்ளி போட்டுவிட்டேன்.

பசியிலும். சுவையிலும் என் தாய்க்கு எதுவும்  மிச்சம் மீதி எதுவும் வைக்காமல் நான் ஏமாற்றி விட்டதை  என் தாய்  என்னிடம் கூறவில்லை.

திருமணமாகி சென்ற என் சகோதரியை காணச் சென்றபோது அவரின் அருமை தம்பியைப் பற்றி வேடிக்கையாய் சொல்லியிருக்கிறார்.  

அய்யா வீட்டிலிருந்து கொடுத்த உணவைதொட்டுக் கூட பாரக்காமல் உன் தம்பிக்கு கொண்டு வந்தேன். கடைசியில் கொஞ்சுண்டு மிச்சம் வைப்பான் என்று அவன் கையையும் வாயையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். உன் தம்பி ஒரு பருக்கை கூட விடாமல் சாப்பிட்டு விட்டாண்டி என்றார்.

என் சகோதரி சொன்ன பிறகுதான் என் மண்டைக்குள் உரைத்தது. அக்காவிடம் மன்னிப்பு கேட்ட கையோடு அம்மாவிடமும் மன்னிப்பு கேட்டேன். என் தாய் தன் மகளை திட்டினார். அவள் பொய் சொல்கிறாள் நம்பாதிடா என்றார்.

அன்றிலிருந்து ஒரு முடிவு எடுத்தேன். அன்றிலிருந்து இன்றுவரை கடைபிடித்து வருகிறேன். என் வீடாக இருந்தாலும் வெளியிடமாக இருந்தாலும் என் தாய், மற்றும் சகோதரி, அவரின் பிள்ளைகள் என்று மற்றவர்களுக்கு உணவு இருப்பதை உறுதிப்படுத்திய பின்புதான் நான் உணவருந்வதையே பழக்கமாக்கி கொண்டேன்.

அதாவது பந்திக்கு முந்துவதல்ல....பிந்துவதையே வழக்கமாக்கிக் கொண்டேன்.


ஞாயிறு 22 2018

மீண்டும் தொடரும் இம்சைகள் 49







முக நூலில் வந்த ......ஒரு... ஏழைத்தாய் மகனின் பலவித  இம்சைகள்.....................



தானியங்கு மாற்று உரை இல்லை.





படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் உரை




படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை
#ஏழை மோடி அவா்கள் கிழிஞ்ச கோவணத்த 
கட்டிகிட்டு நாட்டின் பரம ஏழையான அம்பானி பொண்டாட்டி கையை அமுக்குன போது!


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், மீம் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், உரை








படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு
பாவம் #ஏழை_தாயின்_மகன் 
பசிக்கு அரைவயிறு கம்பங்கூல் 
குடித்த போது



படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்





படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், புன்னகைப்பவர்கள், உரை



படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு





படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை




படம் இதைக் கொண்டிருக்கலாம்: 9 பேர், உரை


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர்

தங்குறதுக்கு வீடு இல்லாமல் அதானியின் விமானத்தில் வாழ்கை நடத்தும் பரம ஏழை....

Image result for ஏழைத்தாயின் மகன்





படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி, தொப்பி மற்றும் உரை
ஏழை மகன் உபயோகப்படுத்தும் பொருட்கள். 

கோட் மதிப்பு 10 லட்சம்

BVLGARI கண்ணாடி குறைந்தபட்சம் ₹40000 ரூபாய்

MONT BLANC PEN ₹130000




.....நன்றி முகநூல் நண்பர்கள் அனைவருக்கும்..



இது இந்தியாவில் மட்டும்தான்...........

  நெய் எரிக்கப்படுகிறது பால் கொட்டப்படுகிறது  மூத்திரம் குடிக்கப்படுகிறது