வெள்ளி 19 2021
வியாழன் 04 2021
படித்த..படிக்காத மூடர் கூட்டமே...!!!
படித்த படிக்காத மூடர் கூட்டமே!!
வருகிற தேர்தல்ல நீங்கள்
செய்யப்போற சம்பவம்தான்..
தமிழ்நாடு தமிழ்நாடா இருக்கனுமா.....
இல்ல உத்தர பிரதேசம்மா மாறனுமா.ன்னு.
தெரியப்போகுது ......நாங்க
அதுக்கு மேல.... ன்னா இதுதான்
சண்டையிட்டு சாகப்போறீங்களா....???
மண்டியிட்டு வாழப்போறீங்களா...???
உங்க சாயம் வெளுக்க போகுதடி.....
.
ஞாயிறு 21 2021
கொல்லப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள் பழித்தீர்ப்பார்கள் | caa | mathimara...
திங்கள் 08 2021
தமிழக தேர்தலில் பாஜகவின் தேர்தல் வியூக காட்சிகள்
நடக்கும் சம்பவங்களும் கிடைக்கும் தகவல்களும் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்துகிறது.
பாஜக திட்டத்தின்படி...
காட்சி-1
சொத்துகள் முடக்கப்பட்டு நெருக்கடி கொடுக்கப்பட்ட சூழலிலும், தினகரனோடு டெல்லியில் பாஜக தலைவர்கள் பேசிய பின்னணியில் பிப்-7 சென்னை வருகிறார் சசிகலா.
காட்சி-2
அதிமுக கட்சி சார்ந்த நீதிமன்ற வழக்கு விரைவு படுத்தப்படும்.
காட்சி-3
எழுதிக் கொடுக்கப்பட்ட அடிப்படையில் காட்சிகளை நகர்த்துவதற்கும், ஒழுங்கா எங்க சொல்படித்தான் நடக்கணும் என்று ஸ்கிரிப்ட்டை இறுதிப்படுத்துகிறார் பிப்-14 சென்னை வரும் மோடி.
காட்சி-4
சசிகலாவை ஏற்க முடியாது என, திட்டத்தின்படி சொல்லிக் கொண்டே இருப்பார் பழனிசாமி.அவரோடு ஊழல் பெருவெளிச்சத்தில் இருக்கும் மந்திரிகள் உடன் இருப்பார்கள். இது ஏனெனில் ஆட்சிக்கு எதிராக கோப மனநிலையில் உள்ள மக்களுக்கு, இவர்கள் வெளியேற்றப்பட்டு காட்டப்பட வேண்டும் என்பது திட்டம்.
காட்சி-5
அண்ணன்-தம்பிகளுக்குள் சண்டை இருக்கும், மீண்டும் இணைவோம் என்ற ஓபிஎஸ்க்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வசனத்தின் படி, ஓபிஎஸ் சார்ந்தோர் சசிகலாவுடன் இணைவார்கள். இதற்கு முக்கிய காரணம் தேவர் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஏற்பாடு மட்டுமே.
காட்சி-6
இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனு மூலம் தான் இரட்டை இலை கிடைத்தது. மீண்டும் இருவரும் பிரிகிற சூழல் உருவாகுவதால், இரட்டை இலை முடக்கப்படலாம். இல்லையேல் சசிகலாவுக்கு இரட்டை இலை வழங்கப்படலாம். அதிமுகவை பாஜக விழுங்குவது தான் திட்டத்தின் அடிப்படையாக இருப்பதால் இரட்டை இலையை முடக்கவே முனைவார்கள். ஏற்கனவே குக்கர் பொதுச்சின்னமாக வழங்கப்பட்டுள்ளது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
காட்சி-7
காட்சி அமைப்பின்படி கோபப்படுத்தப்பட்ட இபிஎஸ் தனிக்கட்சி தொடங்க வாய்ப்புண்டு. அதற்கு எம்.ஜி.ஆர்.அதிமுக எனப் பெயர் வைக்கப்படலாம்.
காட்சி-8
சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என்பதாலும், தினகரனோ அல்லது ஓபிஎஸ்ஸோ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். இதுவரை செய்யப்பட்ட பின்னணி ஏற்பாடுகளை பார்த்தால் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவே வாய்ப்பு அதிகம்.
காட்சி-9
கவுண்டர் சார்ந்தவர்களில் செங்கோட்டையன் உள்ளிட்டோர் சசிகலா-ஓபிஎஸ் சார்ந்த அதிமுகவில் இணைக்கப்பட்டு சமன் செய்யப்படுவார்கள். முதல்வர் ஓபிஎஸ்- துணை முதல்வர் செங்கோட்டையன் என்ற திட்டமும் உண்டு.
காட்சி-10
இந்தக் காட்சிகளில் மந்திரிகளுக்கும் வசனங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது. ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 8 பேர் இபிஎஸ் பக்கம் நிற்பார்கள். 15 க்கும் மேற்பட்டோர் சசிகலா-ஓபிஎஸ் பக்கம் நிற்பார்கள். ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட இருவர் நேரடியாகப் பிஜேபிக்கு செல்ல வாய்ப்புண்டு.
காட்சி-11
இந்த சண்டைக்காட்சிகளை மக்கள் பார்த்து ரசிப்பதற்காகவும், தயாரிப்புகள் செய்து கொள்ளவும் தான், பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாவது வாரம் அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும்.
காட்சி-12
திமுகவை வீழ்த்த சசிகலா என்ற சாக்கடையையும் பயன்படுத்த வேண்டும் என்ற முன்னறிவிப்பின் படி, சசிகலா-ஓபிஎஸ் அதிமுகவுடன், பாஜக, அன்புமணி வழக்கால் மிரட்டப்பட்ட பாமக, பணம் கொடுத்தால் போதும் தேமுதிக, பாஜகவின் கொள்கைகளை ஏற்கனவே பரப்பிக் கொண்டிருக்கும் புதிய தமிழகம், 60 இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தின் படி அறிவுசார் அர்ஜூனமூர்த்தி கட்சி, இன்னும் சில உதிரிகளோடு கூட்டணி ஒப்பந்தம் செய்யப்படும்.
இந்தக் கூட்டணி "வழக்கு மிரட்டல் கூட்டணி" என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும்.
காட்சி-14
கூட்டணி என்று பெயர் இருந்தாலும் பெரும்பாலான எல்லாக் கட்சி வேட்பாளர்களும், பாஜக சித்தாந்த ஆதரவு மனநிலை கொண்டவர்களே நிறுத்தப்படுவார்கள். ஏன்னா பாஜக உருட்டு அப்புடி.
காட்சி-15
வழக்கு மிரட்டல் கூட்டணி தேர்தலில் படு தோல்வி அடையும். ஆனால் அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் பாஜக வலைக்குள் வந்து சேரும். இதுவே அவர்கள் திட்டம்.
மொத்தத்தில் 2021 தமிழக தேர்தலானது,
வழக்கு மிரட்டல் கூட்டணிக்கும்,
தமிழகம் மீட்போம் கூட்டணிக்கும் இடையே நடக்கும் போராட்டம்.
பாஜகவின் அரசியலை புரிந்து கொண்டால், நடக்கப்போவதை எளிதில் புரியலாம்.
பொறுத்திருந்து பார்க்கலாம்..
இறுதியாக,
ஆட்சியை திமுக பிடிக்கிறது.
அதிமுகவை பாஜக பிடிக்கிறது
செவ்வாய் 17 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -79.....
ஓட்டு போடும்....மனிதர்க்கு.....
தேர்தல் என்ற பெயரில் தாங்கள்
இனியும் நீங்கள் முட்டாளாக ஆக வேண்டாம்
உங்களின் வரி பணத்தை கோடி
கோடியாக செலவு செய்து
இனி வரும் தேர்தலிலும் செலவு
செய்து வீணடிப்பார்கள் என்பதை
தெரிந்து கொள்ளுங்கள்......
நீங்கள் ஓட்டு போட்டாலும்
போடா விட்டாலும் EVM மே
ஒருவரை தேர்ந்தெடுக்கும்..
இனியும் இந்தியா ஒரு
ஜனநாயக நாடு என்று
உங்கள் ஜனநாயக கடமையை
ஆற்றுங்கள் என்று ஊதி
பெறுக்கும் செய்தியை
நீங்கள் நம்ம வேண்டாம்
நீண்ட வரிசையில் நின்றாலும்
நீண்ட நேரம் காத்திருந்து
ஓட்டு போட்டாலும் உங்களுக்கு
கிடைப்பது என்னவோ
கையில் கருப்பு மைதான்
பல தேர்தலிலும் ஓட்டு
போட்ட உங்களுக்கு போடப்பட்டதோ
அடக்கு முறை சட்டங்கள்தான்..
நீங்கள் மாற்றத்துக்குதான் ஓட்டு
போட்டேன் என்று சொன்னாலும்
இதுவரை மாறவில்லை என்பதுதான்
உண்மை... அதனால்..
உங்கள் ஓட்டுக்கு எந்த
வலிமையும் இல்லை. அப்படியே
இருந்தாலும் EVM ஆல்
அந்த வலிமை உங்களுக்கு
இல்லாமல் ஆக்கப்படுகிறது..
ஆளுவதோ அதிகாரி
தீர்மானிப்பதோ அதிகாரி
இந்தியா ஒரு ஜனநாயக நாடு
என்று சொல்லிக் கொள்ள
இடையில் நீங்களும் உங்களின்
வாக்கு சீட்டும்......
முடிவு எல்லாம் அவர்கள்
கையில் இருக்கும்போது
உங்களுடைய வாக்கு
சீட்டு என்ன செய்துவிட முடியும்...
EVMயை எதிர்த்து................
சனி 07 2016
. பேய்களும், பிசாசுகளும் போட்டியிடும் தேர்தலில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
| நன்றி! வினவு |
செவ்வாய் 25 2014
எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்?
எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்?
“ நாம எல்லாம் இண்டியன்ஸ் தேர்தல் வரும்போது ஓட்டுப்போடனுமில்ல”
கடவுளுக்கும் அந்த கடவுளின் ஏஜென்டுகளான பார்ப்பனர்களுக்கே ஓட்டு போடுவது எதுக்குன்னே தெரியல.... இதுல பக்தர்களுக்கு ஓட்டு போடுவது எதுக்குன்னு தெரியவா போகுது. ( ஓட்டு போடங்கன்னு சொல்றவங்களும் ஏதோ தெரியுற மாதிரி பீத்திக்கிறாங்க....)
செவ்வாய் 04 2014
மழுங்கடித்துவிட்ட சிந்தனையை, ஆளாளுக்கு சிந்தியுங்கள் என்கிறார்கள்.
..மழுங்கடிக்கப்பட்டவர்கள் சிந்திக்கதான் முடியுமா??????????????........................
தமிழ்நாட்டில் அதிமுக நடத்துவது ஆட்சி அல்ல. காட்சி, அதற்கு விரைவில் வரப்போகிறது வீழ்ச்சி-அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்---- ------------திமுக பொருளாளர்
ஏழ்மை,வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக.தற்போதைய அட்சியாளர்கள் மதுவை கொடுத்து ஏழைகளின் வாழ்வை சீரழித்து விட்டார்கள். பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால் மதுவை ஒழிக்க முடியாது.. பணமா? மானமா?பெண்களே முடிவு செய்ய வேண்டும்----------அனைத்து சாதிவெறி சமுதாய தலைவர்-பாமக..
மதுரை மாவட்த்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். பெண்களின் பங்களிப்பு இருந்தால் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். எனவே,பெண்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற,நல்லவர்களை தேர்வு செய்ய சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.------மதுரை மாவட்ட ஆட்சியர்
ஜனநாயக உரிமையை செயல்படத்தாமல் யாரையும் கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. நண்மை செய்யக்கூடியவர்கள் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும்----------------------மதுரை மாவட்ட காவல் கண்கானிப்பாளர்
தேர்தலில் வாக்களிப்பது அனைவரது அடிப்படை கடமை. வாக்காளர்கள் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும். முதல் முறையாக வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளர்கள் குறுகிய கண்ணோட்டத்தில் வாக்களிக்காமல் நன்கு ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்-------------------- குடி அரசு தலைவர்.
வியாழன் 30 2014
வாய்ச் சொல்லில் ஏமாற்றும் வேட்பாளர்கள்..........
எனக்கு கிடைத்த
உரிமை என்ற
வோட்டை விலைவாசியை
குறைப்பதாக வாக்களித்த
கட்சிக்கு வாக்கு
அளித்தேன்...........
அடுத்த தேர்தல் வரும்
வரை விலை வாசி
குறையவே இல்லை
இருபத்தியாரு வயதில்
எனக்கு வழங்கிய
உரிமை என்ற
வோட்டை இலஞ்சத்தை
அடியோடு ஒழிப்பதாக
வாக்களித்த வேட்பாளர்க்கு
என் வாக்கை போட்டேன்.
அந்த வேட்பாளர்
திரும்பவும் வாக்கு
கேட்டு வந்த
பின்னும் இலஞ்சம்
ஒழியவே இல்லை.
முப்பத்தியோரு வயதில்
மீண்டும் கிடைத்த
உரிமையான வோட்டை
வேலை வாய்ப்பை
பெருக்குவோம் என்று
முழங்கிய தலைவருக்கு
திரும்பவும் என்
வாக்கை பதிந்தேன.
சீக்கிரமாக வந்த
இத்தினியாவது
தேர்தல் முடிந்து
அடுத்தக் கட்சி
நாற்காலி பதவியில்
அமரும் வரை
எனக்கு வேலை
கிடைக்கவே இல்லை.
முப்பத்தியாறு வயதில்
தொடர்ந்து கிடைத்த
உரிமையான என்
வோட்டுக்காக........
ஓட்டு வாங்கும் போது
ஓடி வந்து ஏமாத்தி
உத்தமனைப் போல் வாய்ச்
சொல்லில் பறை சாற்றி
சென்றவர்களின் உதிர்ந்த
மயிரைக் கூட புடுங்க
முடியாது என் ஓட்டால்
என்று பட்ட அனுபவத்தால்
உணர்ந்து கொண்டேன.
என்க்கு கிடைத்த
வாக்கு எனும்
உரிமைச் சீட்டால்
பேண்ட குழந்தையின்
மலத்தைக் கூட
அப்புறப் படுத்த
முடியா யென்பதை
கண்டுணர்ந்தேன்.........
வரும் தேர்தல் என்ன?
எத்தினியாவுது தேர்தல்
என்று பீத்தீனால் என்ன?
என் வாக்குக்கு அதிகாரம்
கிடைக்கும் வரை..........
.
எவனுக்கும் எவளுக்கும்
அவர்கள் கொள்ளை அடித்து
சுகபோகமாய் வாழ
நான் வாக்களிப்பதில்லை
என்று..முடிவெடுத்தேன்.
நான் வாககு அளிப்பதும்
வாக்கு அளிக்காமல்
இருப்பதும்....... என்து
உரிமை.........
செவ்வாய் 22 2013
வன்னியர் ஓட்டு,அந்நியர்க்கல்ல.புதிய சாதிவெறி கூட்டமைப்பு..அறிவிப்பு.!!!
| படம். வினவு. |
மீண்டும் அணைத்து சாதிவெறித் தலைவர்களையும் கூட்டி ஒருங்கிணைத்து புதிய சாதிவெறி கூட்டமைப்பை தொடங்கி உள்ளார் சாதிவெறியர்
இந்த புதிய சாதிவெறி கூட்டமைப்பு சார்பாக பழைய முழக்கத்தையே.“ வன்னியர் ஓட்டு அந்நியர்க்கல்ல” என்பதை தூசு தட்டி மக்களவைத் தேர்தல் பட்டியலை வெளியிட உள்ளார்.
இதனால்.தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளார். கட்சியை பின்னுக்கு தள்ளி,சங்கத்தை (சாதியை) முன்னுக்கு தள்ளும் வகையில், சங்கத்தின் குரு ஓய்வுஎடுக்கும் புழல் சிறையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய சாதிவெறி கூட்டமைப்பின் மூலமாக சாதிவெறித்தலைவர்கள் சிலரை போ்ட்டியிட வைக்கவும், முதல்வேட்பாளர் பட்டியலில் அவர்கள் பெயர்கள் இடம் பெறவும் புதிய சாதிவெறி கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதை. கூட்டமைப்பின் தலைவர் அறிவிக்க உள்ளார்.
எனவே.அந்நியர்கள் எதுக்கும் ஓட்டுப்பிச்சை பாத்திரத்தை பத்திரமாக பாது காத்துகொள்ள எச்சரிக்கப்படுகிறார்கள்.
ஞாயிறு 02 2013
தேர்தலை புறக்கணிக்கும் ஒரு நீதிபதி........
செவ்வாய் 11 2012
நிஜ வில்லன்... கதாநாயகனாக.................
ஞாயிறு 18 2012
திலகமிட்ட நெற்றியுடன் ஒரு போலியின் உள்ளேயும்.....வெளியேயும்..............
சனி 15 2011
ஓட்டு பிச்சைக்காரர்களின் வேண்டுதல்களும்,பிச்சையிடதாவர்களின் முழக்கங்களும்....
எம்பெருமான் டாக்டரு சு்ப்பிர மணியின்
ஆசி பெற்ற உங்கள் வேட்பாளர் ஆகிய
நான் உங்கள் பாதம் தொட்டு பணிவுடன்
கேட்கிறேன் எனக்கு வாக்கு அளியுங்கள்
14 வயதில்பொதுஉடமை இயக்கத்தில்
பணியாற்றி பல சமூக போராட்டத்தில்
பங்கேற்று 27 முறை இரத்த தானம்
செய்துள்ளேன்.சட்டம் பயின்று மாணவர்
பெருமன்றத்தில் தமிழ் மாநில செயலராக
பணிஆற்றுகிறேன்.உங்களுக்கும் பணி
ஆற்ற எனக்கு வாக்களித்து அமோக வெற்
றியடைய உங்கள் பாதத்தை தொட்டு
வேண்டுகிறேன்.
நாட்டை காப்பது இராணுவம்
நாட்டை ஆளுவது காங்கிரஸ்
முன்னால் இராணுவ வீரன்
ஆனநான் உங்களை காக்க
மக்கள் நல திட்டத்திற்கு நிதி
உதவி பெற உள்ளாட்சியில்
நல்லாட்சி அமைய உங்கள்
பொன்னான வாக்கை கை
சின்னத்திற்கு முத்திரையிடுங்கள்
பெரியார் அணைக்கு குரல் கொடுத்த
விவசாயிகளின் தோழன்.ஸ்டெர்லைட்
நச்சு ஆலையை அகற்றிட்ட காவலர்
தமிழரின் உரிமையை மீட்டெடுக்க
அண்ணன் புரடசி புயல் வைகோ வின்
சின்னத்தக்கு வாக்கு அளியுங்கள்
தமிழகத்தில் உள்ள திராவிடகடசிகளை
ஒழித்து கட்டிட ஊழல் இல்லாத உண்மை
யான நேர்மையான பாட்டாளி மக்கள்
கட்சி வேட்பாளர்க்கு ஓட்டளியுங்கள.
எவர் துணையில்லாமல் மக்களை நம்பி
துணிந்து போட்டியிடும் விடுதலை சீ......
சிறுத்தை வேட்பாளர்க்கு ஓட்டளித்து
வெற்றி பெறச் செய்யுங்கள்
வெற்றிக்கு கை கொடுத்து எம்ஜியார்க்கு
உதவியது போல் எனக்கும் மா. கம்யுனி
கட்சி உதவுவது போல் கேப்டனின் அன்பு
தம்பிமார்களுக்கும் வாக்கு அளித்து
வெற்றி பெற உதவ வேண்டும்
உள்ளாட்சியில் மக்கள் பணி ஆற்ற
மீண்டும் தங்களுக்கு சேவை ஆற்ற
அதிகார ஆணவத்தை ஆட்டம் காண
வைக்க ஆதரிப்... பீர்...உதய சூரியன்
ஏழை எளிய மக்களக்கு இலவச அரிசீ
ஆடு,மாடு,கிரைண்டர்,பேன்,மிக்ஸி
தாலிக்கு தங்கம் தொடர்ந்து கிடைத்திட
15 ஆண்டுகால அராஜக கங்கலிருந்து
உள்ளாட்சீயை மீட்டிட, மக்களின் அடிப
படை பிரச்சினையை தீர்த்து கட்டிட
அம்மாவின் ஆசி பெற்ற நிரந்தர
வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு
அளியுங்கள்
இந்தியாவின் ஊழல் வளர்ந்தது
யாரால்? ஊழலை சமூக குற்றமாக
நினைக்காத மக்களால் அஞ்சு வருஷம்
ஆட்சியில் இருந்தார் நல்லா சம்பாதித்தார்
அஞ்சு வருஷம் திருடினார் என்று சொல்
வதில்லை. கட்சி காரங்க வந்தால்
பெரிய அளவில் மாற்றம் இருக்காது
சுயேச்சைதான் போராடி வருவார்கள்
சுயேச்சை ஜெயித்தால் நல்லது நடக்கும்
ஆகவே,இந்த சுயேச்சைக்கு சுயேச்சையாக
நீங்கள் வாக்களித்தால் நீங்கள் வெற்றி
பெறுவீர்கள்
உங்கள் வாக்கை விற்பனையாக்கதீர்கள்
வாக்காளிக்காமல் இருந்துவிடாதீர்கள்
வாக்களிப்பது நம் ஒவ்வொரு குடி மகனின்
கடமை.அந்தக் கடமையை நிறைவேற்ற
மறவாதீர்கள்.ஊராட்சீ,நகராட்சீ,மாநகராட்சீ
உள்ளாட்சி நிர்வாகங்கள்
உள்ளுரை கொள்ளை அடிக்க
ஒரு ஏற்பாடு உள்ளாட்சி தேர்தல்
ஜனநாயகத்தை பரவலாக்குவது
என்பது பம்மாத்துதான்
ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சி
யாராட்சி வந்தாலும் நாறித்தான்
கிடக்குது ஏழைகளின் பொழப்பு
புறக்கணியுங்கள் உள்ளாட்சி
தேர்தலை..............................
தேர்தல் பாதை திருடர் பாதை
நக்சல் கிராம பாதையே
விடுதலைக்கான புரடசி பாதை
செவ்வாய் 11 2011
யார் விவரமானவர்கள்?
விவாதம் நடந்தது.
அதில் ஒருவர் சொன்னார். மக்கள் எல்லாம் முட“டாள்கள்
இல்லை. அவரவர் வளர்ச்சி மட்டங்களுக்கு தக்கப்படி விவர
மாகத்தான் இருக்கிறார்கள்.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
அவர்கள் கொடுக்கிற இலவசங்களை வாங்கிக் கொண்டு சந்
தர்ப்பகேற்றபடி வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள்.
சுயநலமே.தன் நலம் என்று பிழைக்க தெரிந்தவர்களாகத்தான்
இருக்கிறார்கள் என்றார்.
மற்றொருவர் சொன்னார்.படித்தவர்கள்தான் விவரமாக
இருக்கிறார்கள். படிக்காதவர்கள் இன்னும் அடி முட்டா
ளாகத்தான் இருக்கிறார்கள்.எந்தக் கட்சி ஆளுது.விலை
வாசி,அடக்குமுறைதெரியவில்லை. இவர்களை வைத்து
தான் எல்லா ஊழல் கட்சிகளும் தங்களுடைய ராஜபாட்டை
செவ்வனே நடத்துகின்றன.இந்த மக்களும் செக்குமாட்டுத்
தனமா. ஓட்டையும்போட்டுவிட்டு பேசாமல் வெந்ததை
தின்டு விதி வந்தால் சாவோம் என்ற கணக்கில்தான் தங்கள்
வாழ்நாளை ஓட்டுகின்றனர்.இவர்களுடைய அறியாமையை
யும் மடத்தனத்தையும் ஒவ்வொரு கட்சி வேட்பாளாரும்
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
எனவே வேட்பாளர்கள்தான் விவரமானவர்கள் என்றார்.
மூன்றாமவர். வாக்காளர்களில் எல்லோருமே அறிவாளிகள்
கிடையாது.தற்குறிகள்தான் அதிகம்.வேட்பாளர்களில் ஒரு
சிலரைத்தவிர பெரிய அறிவாளிகள் கிடையாது. அவர்களுக்கு
சேவை மனப்பாண்மையெல்லாம் எதுவும் கிடையாது.பதவி
யும் புகழும்தான். சொத்து சேர்ப்பதற்கும் சேர்த்த சொத்தை
பெருக்குவதற்கும்தான் தேர்தலை பயன்படுத்திக் கொள்கி
றார்கள் என்றார்.
இந்த மூன்று பேர்கள் சொல்வதில் எது உண்மை? யார் விவர
மானவர்கள். எனக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருக்குங்க.
நீங்க என்ன சொல்ல வரீங்க. கொஞ்சம் விளக்கு மாத்துல
விளக்குங்களே!
வியாழன் 14 2011
புருஞ்சா........ புருஞ்சுகோங்கோ.............
புதன் 30 2011
சிறுதுளி பெருவெள்ளம்
அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.
உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
மேலும்- பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படத்தின் விபரங்களுக்கு காப்பி அடிப்பதிலும் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட இயக்குநரின...

