ஞாயிறு 24 2017

மீண்டும் தொடரும் இம்சைகள்..1..

காவல் நிலையத்தில்  சென்று பெயரைச் சொல்லி..புகார் கொடுத்தவனின் பெயரை அவர் சொன்னபோது.... எஸ் ஐ ரவுண்டுக்கு போயிருக்கார் வெயிட் பன்னுங்கள் என்று சொன்தைக் கேட்டு  எதிரே உள்ள கடையில் நின்று கொண்டு இருந்தார் அவர்.

அப்போது அவர் தெருவில் முன்னால் குடியிருந்த ஒருவர்.. அவர் நிற்பதைக் கண்டு ” அண்ணே என்னண்ணே..இங்கே  என்றான்...

அவர், அவனைப் பார்த்து நீய்ய் எங்கய்யா இங்கே என்று அவர் கேட்டார். 

அவன்..புகார் கொடுத்த  குருசாமி மகன் செல்லமணியை  சுட்டிகாட்டி அவர் கூட வந்திருக்கேண்ணே என்றான்...

அவனா...? அவன்தாண்டா என்மேல புகார் கொடுத்து இருக்காண்டா....அதுக்குத்தாண்டா வந்திருக்கேன் என்றார்.

அண்ணே...என்ன மன்னிச்சுடுண்ணே...நீய்யின்னு தெரியாம வந்துட்டேண்ணே என்றான்..

பராவாயில்லடா.....அவன் மூலமாகதான் நீ குட்டியாணை லோன் வாங்கியிருக்க....அவன் கூப்பிட்டு நீ வரலைன்னா..அது நன்றி கெட்ட தனமா போயிடும்..நா....ஒன்னும் உன்னை தப்பா நிணைக்கலடா என்று விட்டு செல்லமணியின் அப்பா குருசாமி ஐம்பது வருடமாக இடத்து பிரச்சினையை காரணமாகக் கொண்டு இரண்டு முறை அவர் வீட்டுக்கு தீவைத்த கதையையும் அவர் வீட்டுக்கு போற தெருபாதையை தனது இடம் என்று சொல்லி சிமெண்ட்தளம் போட விடாமல் தடுத்ததமாக அவர் அவர்களிடம் தோத்த கதை..ஜெயிச்ச கதையை அவனிடம் சொல்லிக் கொண்டு இருக்கும்போது  தகவல் சொல்லி அழைக்க வந்த காவலர் அவரிடம் வந்தார்

சார். எஸ்ஐ வர்ரதுக்கு பதினோறு மணியாகும்... அதனால..நாளைக்கு இதே டயத்துக்கு வந்திருங்க சார்.

அவரும் நல்லது சார் என்று சொல்லிவிட்டு பேசிக் கொண்டு இருந்தவனிடம் விடை பெற்று வீட்டுக்கு வந்துவிட்டார். மறுநாள் இரவு ஏழு மணிக்கெல்லாம் காவல் நிலையத்துக்கு சென்றபோது... எஸ்ஐ செல் போன் பேசிக் கொண்டு இருந்தார்.அவர்  அவரிடம் தன்னை அறிமுக செய்து கொண்டு தான் கொண்டு சென்ற மனுவை கொடுத்தார்.

எஸ் ஐ வாங்கியவர் மனுவின் முடிவை படித்துவிட்டு, செல்லமணி புகார் மனுவின் விபரத்தை சொன்னார். அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது புகார் கொடுத்த செல்லமணி வந்தான். வந்தவன் எஸ்ஐக்கு வணக்கம் சொல்லி விட்டு அவன் தரப்பை சொன்னான்.

இரண்டு தரப்பு சொல்வதைக் கேட்ட எஸ்ஐ...இது சிவில் சம்பந்தபட்ட வழக்கு இதில் நான் தலையிட முடியாது... இருவரும் நான் சொல்வதைக் கேளுங்க என்று விட்டு செல்லமணியைப் பார்த்து சர்வேக்கு பணத்த கட்டி அளங்க... அதுல ஒங்க இடம் கணேசன் இடத்தில் இருந்தால்  கணேசன் விட்டு கொடுத்திடனும் கணேசன் இடம் உங்க இடத்தில் இருந்தால் நீங்க விட்டு கொடுத்திடனும்.. அளக்கும் போது சொல்லுங்க  காவலுக்கு ரெண்டு பேரை அனுப்புறேன் என்றார்.

கணேசன் சரி என்றார்...செல்லமணி ஒரு பேப்பரை காட்டி 1996லே நாங்க அளந்தோம் . கணேசன்  காசு கொடுத்து அளந்திங்க ஒத்துக்க மாட்டுறான் என்றான்.

அளப்பதற்கு நோட்டீஸ் விட்ட பேப்பரை பார்த்துவிட்டு கணேசன் கையேழுத்து போட்டு இருக்கிறார்.. நீங்க அளந்து கல் ஊண்டியதை படம் பிடித்து வைத்திருக்கலாம்ல  என்றார்.

சார், செல்லமணியின் அப்பா குருசாமி  எந்த சமயத்திலும் அவர் இடத்து பத்திரத்தை காட்டுவதே இல்ல சார்...நீங்க அந்த பத்திரத்தை காட்ட சொல்லங்க சார்... என்றார் கணேசன்... 

எஸ் ஐக்கு போன் வந்தது.சிறிது நேரம் பேசிவிட்டு  கணேசனை மட்டும் வெளியில் சிறிதுநேரம் நிற்கச் சொன்னார். கணேசன் வெளியில் வந்து நின்றபோது.. எஸ்ஐயும் செல்லமணியும் பேசினர். அவர்கள் பேசி முடித்தப்பின் எஸ்ஐ கணேசனை கூப்பிட்டு.... நான் சொல்ற மாதிரி எழுதிக்கொடுங்க என்றார்.

எஸ் ஐ சொல்வதை கேட்டுவிட்டு கணேசன் எழுதினார்.... அனுப்புநர் பெறுநர் அய்யா குருசாமி மகன் செல்லமணி கொடுத்த புகார்க்கு நாளது தேதியில் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனேன். புகார் சம்பந்தமாக சர்வேக்கு பணம் கட்டி அளந்து வரும் முடிவினை ஏற்றுக் கொள்கிறேன் . பத்திரத்தைக் கொண்டு அளக்கும்போது வரும் அளவுகளை ஏற்றுக்கொள்கிறேன். பின் நீதிமன்ற வழி காட்டுதல் படி நடந்து கொள்கிறேன். அதுவரை நான் எந்த பிரச்சினையும் செய்யமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். தங்கள் உண்மையுள்ள என்று கையெழுத்துபோட்டு அதனுடன் தன்னுடைய மனுவையும் பின் இணைப்பாக கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.. இந்த பிரச்சினைக்கு பின் இரண்டு நாள்கள் அமைதியாக இருந்தவர்கள்.. திரும்பவும்  குருசாமி செல்லமணி குடும்பத்தார்கள் தங்கள் இம்சையை தொடர்ந்தார்கள்...

அடுத்த..இம்சைகள் ..............

1 கருத்து:

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...