கஞ்சி ஊத்த வக்கில்ல
என்னடா அரசாங்கம் நாட்ட
வெளி நாட்டுக்கு வித்துபுட்டு
என்று பாடினார்கள் புரட்சிப்
பாடகர் கோவனும் அவர்தம்
கலைக் குழு தோழர்களும்
பசி வந்தால் பத்தும்
பறந்து போகும் என்றார்கள்
பசியால் பட்டு அறிந்தவர்கள்
எயிட்ஸ் ஏபோலா போன்ற
உயிர்க் கொல்லி நோய்களை
விட பசியால் மாண்டவர்கள்
ஏராளம் என்கிறது அய்க்கிய
நாட்டு அமைப்பு 2013-ல்
வெளியிட்ட அறிக்கை ஒன்று
அன்றைய இந்தியாவில் 1970ல்
இருந்தே வறுமையை ஒழிப்போம்
ஒழிப்போம் என்று குயிலாகவும்
கூவினார்கள் காக்கையாகவும் கரைந்தார்கள்
இன்றுவரை பசியும் ஒழியவில்லை
வறுமையும் ஒழியவில்லை இன்றுவரை
தேர்தல் திருடர்கள் மொழியில்
பசியும் வறுமையும் வளர்வதைத்தான்
அவர்கள் வளர்ச்சி வளர்ச்சி
என்று அவர்கள் மேடைதோறும்
கூவுகிறார்கள்.கரைகிறார்கள் பிதற்றுகிறார்கள்.
எயிட்ஸ் ஏபோலா போன்ற
உயிர்க் கொல்லி நோய்களை
விட பசியால் மாண்டவர்கள்
ஏராளம் என்கிறது அய்க்கிய
நாட்டு அமைப்பு 2013-ல்
வெளியிட்ட அறிக்கை ஒன்று
அன்றைய இந்தியாவில் 1970ல்
இருந்தே வறுமையை ஒழிப்போம்
ஒழிப்போம் என்று குயிலாகவும்
கூவினார்கள் காக்கையாகவும் கரைந்தார்கள்
இன்றுவரை பசியும் ஒழியவில்லை
வறுமையும் ஒழியவில்லை இன்றுவரை
தேர்தல் திருடர்கள் மொழியில்
பசியும் வறுமையும் வளர்வதைத்தான்
அவர்கள் வளர்ச்சி வளர்ச்சி
என்று அவர்கள் மேடைதோறும்
கூவுகிறார்கள்.கரைகிறார்கள் பிதற்றுகிறார்கள்.



