பக்கங்கள்

செவ்வாய் 05 2013

அய்யரை மணந்து மாமியாக வாழந்து மடிந்த மதுரை சண்முகவடிவு மகள் சுப்புலெட்சுமி........


மதுரை சண்முகவடிவு மகள் சுப்பு லட்சுமி இசை வேளாளர் சாதியில் பிறந்தாலும், சதாசிவம் அய்யரை சாதிமாறி மணந்து ஒரிசினல் மாமிகள் வியக்கும் வண்ணம் அப்பழக்கற்ற மாமியாகவே வாழந்து மடிந்தார். இதனால் பல பதக்கங்கள் பெற்றார்.

கணவர் சதாசிவம் அய்யரின் கட்டுப்பாட்டிலேயே இவரது வாழ்க்கை கழிந்தது.சதாசிவம் அய்யரின் அனுமதியில்லாமல் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளையும் ஒப்புக்கொண்டதில்லை. சதாசிவம் அய்யர் தேர்வு செய்து தரும் பாடல்களை மட்டுமே நிகழ்ச்சியில் பாடுவார்.

மதுரை சண்முக வடிவு மகள் சுப்புலெட்சுமி நடத்தும் கலை நிகழ்ச்சியில் மேடை எதிரில் முதல் ஆளாக அமர்ந்திருக்கும் சதாசிவம் அய்யரின் தலை அசைவுக்குப் பிறகே, இவரின் கச்சேரியில் கலந்து கொள்ளும் இரசிகர்களின் வேண்டுகோளின்  பாடல்களை பாடுவார். மாமியாகவே வாழந்தற்கு இவைகளும் காரணமாகும்.

ஒரிசினல் மாமிகள் தோற்று போகுமளவுக்கு தென்னிந்திய மாமியாகவே சாதனை படைத்த இவர், பத்மபூஷன்,ராமோன் மாகசேசே,பத்மவீபூஷன், காளிதாஸ்சன்மான்,பாரதரத்னா,இந்திரா காந்தி போன்ற விருதுகளை பெற்ற ஒரே தென்னிந்திய மாமி ஆவார்.

மதுரை சண்முகவடிவு மகள் சுப்புலெட்சுமி மாமியும் ஒரு சிறந்த பெண்னடிமையாக,பார் போற்றும் சதாசிவம் அய்யரின் மனைவியாகவும் வாழ்ந்து மாமியாகவே மடிந்தார். இவரின் பிறந்த நாளிலும்.இறந்த நாளிலும் சிறந்த தென்னிந்திய மாமியாகவே நிணைவு கூறப்படுகிறார்.

ஞாயிறு 03 2013

ஆணாதிக்கம் நிறைந்த கஞ்சபிரபு திருவள்ளுவர்.!!!!



ஒலகப் பொது மறையாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் இவருடைய மனைவிபெயர் வாசுகி.

திருவள்ளுவர் உணவருந்தும்போது ஒரு சொம்பு நிறைய நீரும்  சொம்புக்கு அருகில் ஒரு குண்டுசீயும் வைத்துவிடவேண்டும். அதன்படி  உணவருந்தும்போது கூடவே இவைகளை வைத்துவிடுவார்..வாசுகி.

உணவருந்தும்போது தண்ணீர் தேவை சரி, கூடவே ஒரு குண்டூசியும் வைக்கச் சொல்லுகிறாரே?..... குண்டூசி எதற்கு? என்று வாசுகி மண்டையை போட்டு குழப்பிக் கொள்வார்.. அதைப்பற்றி வள்ளுவரிடம் கேட்பதற்கு  வாசுகிக்கு பயம்.

திருவள்ளுவரின் ஆணாதிக்க அச்சத்தின் காரணமாக குண்டூசி சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முன்வரவில்லை. வாசகி  மனதில் புழங்கிய வண்ணம் நீடித்து வந்தது.

அம்புட்டு பாட்டு எழுதின திருவள்ளவரும் குண்டூசியைப்பற்றி தன் மனைவியான வாசுகியிடம் ஒப்புக்குக்கூட சொல்லவில்லை,“ பொட்டச்சிக்கு தெரிந்து என்ன ஆகப்போகுதுன்னுஅவரும் சொல்லவில்லை.

கடைசி காலத்தில் திருவள்ளுவர் சாகும் தருவாயில் இருந்தபோது. வாசுகி அம்மையார் தன் கணவரின் மேல் பயம் நீங்கியவராக, வள்ளுவர்க்கு அருகில் அமர்ந்து...

என்னவரே, எனக்கு ரெம்ப நாளா ஒரு சந்தேகம்.அந்த சந்தேகத்தை இப்பாவது தீர்த்து விடுங்கள் என்றார். நீங்கள் உணவருந்தும்போது குண்டூசியை வைக்கச் சொல்லியிருந்தீர்களே! நானும் தங்கள் கோபத்துக்கு ஆளாகமல் பணிவிடை செய்து வந்தேன். உணவருந்தும்போது குண்டூசி எதற்கு என்று கேட்டார் வாசுகி.

பேசுவதற்குகூட தெம்பில்லாமல் படுத்துக்கிடந்த வள்ளுவர்,“ ஓ....அதுவா,.........நான் உணவருந்தும்போது சிதறும் பருக்கைளை குண்டூசியால் குத்தி சொம்பு நிறைய உள்ள நீரில் கழுவி தட்டில்போட்டு திரும்பவும் உணவருந்துவதற்குத்தான் என்றார்.

வாசுகியோ,வள்ளுவர் கூறிய பதிலைக்கேட்டு பிரமையடித்ததுபோல் ஆனார். பிறகு. நிதானத்துக்கு வந்து.“ அட கஞ்ச பிரபுவே, ஓங் கஞ்ச தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? நீ எழுதின  ஒன்றயடி பாட்டுலயேயும் . கஞ்சதனத்த காட்டிட்டிங்கிளே என்னவரே—என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...