பக்கங்கள்

வெள்ளி 18 2013

ஓடாத படத்தை ஓட வைத்த ம.க.இ.க...............



நரித்தனத்தையே நாட்டுப்பற்றாகவும் டாக்குமெண்டரி படத்தை சினிமா படமாகவும் எடுக்கும் வல்லமை மிக்க நாட்டுப்பற்றுமிக்க டைக்ரக்டர் மணியான ரத்தினமும்

தாய் மண்ணே............... என்று உளையிடுவதையே  இசையாக மாற்றி முதன்முதலாக அறிமுகமாகி  புயலாக  பேரெடுத்த ரகுவான மானும்.......

ஆக. ரெண்டு நாட்டுப்பற்றுலார்களும் இணைந்து உருவாக்கி வெளியிட்ட படம் “ரோஜா”

இந்தப் படம் உரிமைக்காக போராடும் காஷ்மீர் போராளிகளை கொலை காரர்களாகவும்.இந்துக்களை கொல்லும் மதவெறி பிடித்த படுபாதக கொலை காரர்களாகவும்   இந்திய இராணுவம் அப்பழுக்கற்ற தியாகச்செம்மல்கள் நிறைந்த நேர்மையான படையாகவும் ,சித்தரித்து முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதையாகவும் அந்தப்படம் வெளிவந்தது.

வெளிவந்த நாளிலிருந்து ஒரு வாரத்துக்கு மேல் ஓடியும்  கூட்டமில்லாமல் வசூலில்லாமல்  இருந்தது. இந்நிலையில் படத்தை துாக்கிவிட்டு மறுபடத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு நாளைக்கு “ரோஜா” பிலிமை பெட்டியில் மூட தயாரானபோது....

அன்றைய மதியக் காட்சியிலும் இரவுக் காட்சியிலும் தியேட்டரில் திடீரென்று கூட்டம் எக்கியது.. இந்த திடீர் கூட்டத்துக்கு காரணம் என்னவென்று விசாரித்தால்........

அந்தப்படத்தில் வரும் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பதை எதிர்த்து மக்கள் கலை இலக்கியக்கழகம்-தமிழ்நாடு  சார்பாக தமிழ்நாடு முழுவதும் அந்தப்படம் ஓடும் தியேட்டர் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக போஸ்டர் இயக்கம் நடத்தியது. ஒருசில இடங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியும் பல இடங்களில் அனுமதிகேட்டு மனு கொடுத்த தோழர்களை தேடித்திரிந்தது போலீசு.......

திடீர் கூட்டமும் திடீர் வசூலையும் கண்ட தியேட்டர்க்காரர்கள் வியப்படைந்து இந்தப்படத்தை எதிர்த்து தியேட்டர் வாயிலில் ஒட்டிய போஸ்டர்களை படம் தியெட்டரிலிருந்து  துாக்கும்வரை அதன்மேல் வேறு போஸ்டர்கள் ஒட்டாதாவாறு பாதுகத்தனர்.

பிறகுதான் பத்திரிக்கையிலும். டீவிக்களிலும் விவாதிக்கப்பட்டு “ரோஜா” என்ற டாக்குமெண்டரி படம் சினிமாகவும், இந்திய அரசாங்கத்தின் செய்திப் படமாகவும் மாறியது.

இப்படித்தான் ஓடாத படத்தை ஓட வைக்கும் ம.க.இக. என்ற பேரும் கிடைத்தது.

உதவி...  சினிமா..........திரை விலகும்போது --- புதியகலாச்சாரம். வெளியீடு

வியாழன் 17 2013

கோயில் காளையர்கள்..........

அவள் யாரென்று
தெரியாது.............
என்னருகில்
வந்து நின்றாள்...

மூச்சு வாங்கியபடி
என்னிடம் பேச்சு
கொடுத்தாள்.......

அக்கா.............
எவ்வளவு நேரம்
நிற்பாய் என்று.......

குரல் கேட்டு
திரும்பியபோது
அவள் திரும்பி
இருந்தாள்.........

அவள் பார்த்த
திக்கை பார்த்த
போது..................

எனக்கும் திக்
கென்றது..........

துாரத்தில் கோயில்
காளையர்கள்..........??????

செவ்வாய் 15 2013

நல்ல குடிமக்கள்..........




ஒரு பெரிய பேரரசுக்கு உட்பட்ட ஒரு சிற்றரசாக ஒரு நாடு இருந்து வந்த்தது. அந்த நாட்டை ஒரு அரசரும்.ஒரு அரசியருமே மாறி மாறி ஆண்டுவந்தனர்..

இந்த நாட்டை ஆண்ட அரசருக்கும் அரசியருக்கும் எப்பவுமே ஒத்து போகது. வேறு நாட்டு அரசர்களோ, பெரும் தொழில் வணிகர்களோ, இவர்கள் ஆளும் போது தொழில் தொடங்க வந்துவிட்டால் விழுந்து விழுந்து தனித்தனியாக உபசரிப்பார்கள்.

அரசர் பதவிக்கு வந்தால், அரசியார்.- வெறுப்புற்று காட்டுப் பங்களாவுக்கு போய்விடுவார். 

அரசியார் ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசர் கூத்து பார்ட்டிகளுக்கு கதை எழுத போய்விடுவார்.

அரசியார் ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசரால் கஜனா காலியாகவிட்டது என்று புகார் சொல்வார். அரசரோ, கதை எழுதுவதோடு முன்னொரு காலத்திலே என்று புகார்க்கு பதிலையும் கதையாக  சொல்வார்.

அரசர் ஆட்சிக்கு வந்தால் அரசியாரை ஊழல் குற்றச்சாட்டில் வழக்கு தொடுப்பார். அதே மாதிரி அரசியார் ஆட்சிக்கு வந்தால் பதிலடியாக அரசரின் கைத்தடிகளை ஊழல் புகாரில் உள்ளே தள்ளி கம்பி எண்ண வைப்பார்.

இப்படியாக அந்த நாட்டிலே ஒருவர் மாற்றி ஒருவர் குற்ற்ம் சொல்லிக்கொண்டும் தங்கள் தங்கள் கஜனாக்களை நிரப்பிக் கொண்டு  ஆண்டு வந்தனர்.

அந்த நாட்டு மக்களோ, தானுன்டு தன் வேலையுன்டு என்று,  அரசியாரும் அரசரும்  மக்களுக்காக போட்டி போட்டு கொண்டு வந்த குடி கெடுக்கும் தீர்த்த்ததை பருகி எல்லா வகையான ஆடல்.பாடலில் திளைத்து உலகமே போற்றும் நல்ல குடி மக்களாக வாழ்ந்து வந்தனர்.




ஞாயிறு 13 2013

அட,போங்கய்யா! நீங்களும் உங்கள் பொங்கல் வாழ்த்துக்களும்.......

 

ஏமாந்த தமிழர்க்கும்
ஏமாற்றும் தமிழர்க்கும்
தமிழர் திருகுநாளின்
இனிய பொங்கல்
வாழ்த்துக்கள்.........

மாதம் மும்மாரி பொழிந்து
காடு வயல் செழித்து
தொழில்வளம் பெருகி
போட்ட முதல் எடுத்த
தமிழர்க்கும் பொங்கல்
வாழ்த்துககள்...........

மின்கட்டணத்தையும்
பேருந்து கட்டணத்தையும்
ஏற்றிவிட்டு இருண்ட
தமிழகமாக மாற்றிய
இருண்ட காலத்தை
மூன்றாதாகவும்
,மானாடமயிலாட தந்த
ஒரேதமிழனை அய்ந்தாகவும்
ஆட்சியில்அமர ஓட்டு போட்ட
வாக்காள தமிழர்க்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்..............

வருடத்தில் 11மாதம் அயோக்கியர்களாக
இருந்துவிட்டு 1மாதம் யோக்கியர்களாக
வேஷம் போடும்  டாஸ்மாக்
தமிழர்க்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்.....................

இருபோக சாகுபடியும் பொய்த்து
ஒருபோக சாகுபடியும் பொய்த்து
விலை உயரும் அரிசியை வாங்க
முடியாமல் அல்லல்படும் தமிழர்க்கும்
 பொங்கல் வாழ்த்துக்கள்.................

 வானம் பொய்த்தாலும்
வயல்கள் பொளந்தாலும்
எவன் குடல் சரிந்து செத்தாலும்
 உச்ச நீதிமன்றம் சென்று வெற்றி
கொடி நட்டுவிட்டு  ஜல்லி பய
விளையாட்டை வீரவிளையாட்டாக
காது குத்தும் வீரத் தமிழர்க்கும்
வாய்பொளந்து கூட்டம் சேரும்
வெட்டித் தமிழர்க்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்..........................

வாழ்வதற்கும் வழியுமில்லை
வழி பிறக்க போராடினால்
 போராடுபவர்களை உள்ளே
தள்ளி ஒரு வருடம் கஞ்சிக்கு
வழி கண்ட குண்டர் சட்டம்
கொண்டு வந்த குண்டாந்(தி)
தடியர்களுக்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்.............

வாழ்வதற்கு வழி சொல்லாமல்
வாழும்வழியை பறித்து அணு
அணுவாக சாகடிக்கும்
அணுஉலைநிறுவும்
கொலையா கொலையா
முந்திரிகளுக்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்..................

வெந்ததும் கிடைக்காமல்
வேகாததை தின்று-சதி
மூலம் விதி வந்து அமைதி
இல்லாமல் சாகும்
 தமிழர்க்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்.....................

 மொத்தத்தில்
கல் தோனறா
மண் தோனறா
காலத்துக்கு முன்
தோன்றிய சாதி
வெறி கொண்ட
தமிழ் ஈனத்துக்கும்
 இனிய பொங்கல்
பொங்கல்  வாழ்த்துக்கள்...




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...