பக்கங்கள்

சனி 09 2014

இப்போதும்-எப்போதும் கனவுலகூட நடக்காது

படம்-deviyar-illam.blogspot.com




ஜம்மு-காஷமீரின் பஞ்ச் மாவட்டத்தில்,இந்திய துருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர்  அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தினர் .அதற்கு இந்தியத் தரப்பில்  தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்தச் செய்தியை  ஒருவர் வாசித்துக் கொண்டு இருந்தபொழுது  அருகில் நின்றவர் இப்படிக் கேட்டார்.


இலங்கை ராணுவத்தினர்  தமிழக மீனவர்களுக்கு பதிலா ,இந்தியத் துருப்புகள் மீது அத்துமீறி தூப்பாக்கி சூடு நடத்தினால்தான். இந்திய துருப்பு பதிலடி கொடுக்கு மாக்கும் என்றார்.

அதற்கு செய்தியை வாசித்துக கொண்டு இருந்தவர் . ஒருக்காலமு்ம் இலங்கை துருப்பு,  இந்திய துருப்பு மீது அத்துமீறி தூப்பாக்கி சூடு நடத்தாது. அப்படியே நடந்தாலும் இந்தியத் துருப்பு பதிலடியும் கொடுக்காது.

ஏன்னா, இந்திய கோடிஸ்வரர்களுக்கு இலங்கையில் ஏகப்பட்ட வருமானம் சொத்து சுகமெல்லாம் இருக்கு.. அதனால  , இந்திய துருப்பு  இலங்கை துருப்புக்கு பதிலடி கொடுப்பது என்பது உங்க கனவுல கூட நடக்காது என்றார். இந்திய துருப்பு  உங்களச் சேர்ந்த உழைப்பாளி சொந்தங்கள பாதுகாக்குமா?ஃஃ கோடீஸ்வர உறவுகள பாதுகாக்குமா?? 

 அப்போ  இந்திய துருப்பு உழைப்பாளி சொந்தங்களை பாதுகாக்காத  ? அவர் திரும்ப நம்பிக்கை யில்லாமல்  என்று கேட்டபோது.....

அட.    கனவு கண்டுதான் பாருங்களேன். இப்போதும்.எப்போதும் கனவுலகூட நடக்காதுன்னு நீங்களே வந்து சொல்லுவிங்க என்றார்.

வெள்ளி 08 2014

தேங்காயைக கொண்டு உடைத்தும் பொளக்காத மர மண்டைகள்....


படம்-http://www.dinakaran.com/




திண்டுக்கல் மாவட்டம்  சாணார்பட்டி அருகே உள்ள கமபிரியம்பட்டி கிராமத்தில்

ஆண்டியப்பட்டி மகாலெட்சுமி அம்மன், சென்னப்பன்,வீரபத்திரன்,கருப்பசாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவில் முக்கிய நிகழ்வாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்க்காக மரமண்டைகள் ,கோயில் மைதானத்தில் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர்.

நல்ல நேரம் நெருங்கியவுடன் ,ஆணியுள்ள செருப்பை அணிந்து வந்தார் பூசாரி. வந்தவர், வரிசையாக உட்கார வைக்கப்பட்டுருந்த மர மணடைகளை சுற்றி சுற்றி வந்து ஆராய்ந்தார்.

பின்,சிறிது நேரத்தில் உட்கார்ந்து இருந்த 50க்கும் மேற்ப்பட்ட மர மண்டைகளில் தேங்காயை உடைத்தார்.

மரமண்டைகளில் தெய்வ அருள் பெற்ற பூசாரியால் தேங்காய் உடைக்கப்பட்டதால்  தெய்வக் குற்றம் என்று சொல்லாத அளவுக்கு மண்டைகள் எதுவும் பொளந்ததாக செய்திகள் வரவில்லை, மருத்துவமனையிலும் வருகையில்லை.........

அற்ப மனிதனுக்கும் மேல.அந்தத் தேங்காய்க்கும் மேல ஒரு புடலங்கா இருக்குதுண்ணே..................ஒத்துக்கிறலாம்ண்ணே......... புடலங்காய் இருக்குதுன்னு................

வியாழன் 07 2014

தண்ணீர்க்காக நடு ரோட்டில் போராட்டம் நடத்திய குடிமகன்!!!


படம்redhillsonline.blogspot.com


காக்கி சட்டையும்,கைலியும் அணிந்த ஒருவர். ரோட்டு வழியாக மொபைட்டில் வந்தார். வந்தவர் மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை கண்டார். கண்டதும் தன் வாகனத்தை விட்டு இறங்கினார். வாகனத்தை நடுரோட்டில்  குறுக்காக நிறுத்திவிட்டு, வண்டியின் அருகிலேயே  நின்று எஸ.பி. அலுவலகத்தை உற்றும் முறைத்தும் பார்த்துக் கொண்டு நின்றார்.

நடு ரோட்டில் நின்று கொண்டு இருந்ததால் போக்குவரத்து சிக்கல் ஏற்ப்பட்டது. ரோட்டின் ஓரமாக உள்ள கடைகளில் நின்று கொண்டு இருந்தவர்கள் “ஏய்....ஓரத்துக்கு வாய்யா...” என்று சவுண்டு கொடுத்தனர். ரோட்டில் போய்க் கொண்டு இருந்த வாகன ஓட்டிகளும் திட்டி சவுண்டு கொடுத்தனர்.

அவர்களின் சவுணடைக் கேட்டதும் அவரும் சவுண்டு விடத் தொடங்கினார்.

“ஊருக்கே தண்ணீர் தரும் மாநகராட்சியின் ஊழியரான தன் வீட்டிற்கு தண்ணீர் இல்லை வேண்டும், வேண்டும்,தண்ணீர் வேண்டும் என்றார். பிறகுதான் தெரிந்தது. அவர் கோஷமிட்டு போராட்டம் நடத்துகிறார் என்று...

 அவரின் போராட்டம் குறித்து எஸ்.பி. அலுவலகத்துக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் பரவியது.

தகவல் பரவியதால்  வந்த புதூர் போலீசு, கோஷமிட்டு போராட்டம் நடத்தியவரை  மோப்பமிட்டு ஆராய்ந்தது.  அப்படிமோப்பமிட்டதால் கோஷமிட்டவர் டாஸ்மாக் குடிமகனாக இருப்பதை  தெரிந்து கொண்டது.

டாஸ்மாக் வாடிக்கையாளர் என்பதால் அவருக்கு அருகில் சென்று அறிவுரை கூறி நகரச் சொன்னது. அந்தக் குடி மகன் நகராமல் கோஷமிட்டவாரே இருந்தார்..

தன் கொள்கை கோட்பாட்டின் படி குடிமகனை  இலேசாக கவனிக்கத் தொடங்கியது போலீசு,. போலீசின் கவனிப்பை கண்டவுடன் போதை தெளிந்த குடிமகன் அவ்விடத்தைவிட்டு  பறந்தார்.

இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் வரை பரபரபரப்பாக  இருந்தது. 


இந்த செய்தியை தினகரன் பத்தரிக்கை சொல்லிச்சி.....அத நான் உங்களுக்கு சொல்லீச்சீ..

புதன் 06 2014

ஒரு மரம் மூன்று மரங்கொத்திகள்..

படம்-srbc2010.blogspot.com


பதவுரை-- 

வேறு ஒரு  மரங்கொத்திக்கு உரிமையான மரத்தை , உரிமையை இல்லாத மூன்று மரங் கொத்திகள்  அந்த மரத்தின் முழுச் சம்மதத்தோடு  பயன்படுத்தி வந்து கொண்டு இருந்தன்.

அப்போது அந்த மரத்தை பயன்படுத்திக் கொள்ள நான்காவதாக ஒரு மரங்கொத்தி வந்தது. அந்த மரத்துக்கு தொ்ல்லை கொடுத்து வந்தது. 

நான்காவதாக  சொந்தம் கொண்டாட வந்த மரங் கொத்தியானது மரத்துக்கு  உறவு முறையில் உடன் பிறப்பாக இருந்ததால், நான்காவது மரங்கொத்திக்கு மரம் சம்மதிக்கவில்லை .. 

நான்காவதாக வந்த மரங்கொத்தியும் மரத்தை விடாமல் தொல்லை கொடுத்து வந்தது..  

இதனால் கோபம் கொண்ட மரம் மூன்று மரங்கொத்திகளை அழைத்து. நான்காவதாக வந்த மரங்கொத்தியின் தொல்லையை சொல்லி.. போட்டுத்தள்ள உத்தரவிட்டது. 

மரத்தின் உத்தரவை தலைமேல் ஏற்ற  மூன்று மரங்கொத்திகளும் நான்காவதாக சொந்தம் கொண்டாட வந்த மரங்கொத்தியை  போட்டுத் தள்ளியது.

செத்த மரங்கொத்தியை பரிசோதனை செய்த போது மரங்கொத்தி கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. , 

கொண்டு போட்ட மூன்று மரங்கொத்திகளை கைது செய்து விசாரித்து போது... 

மூன்று மரங்கொத்திகளும் தங்கள்  வாக்குமூலத்தில் மரத்தின் உத்தரவால்தான் நாங்கள் அந்த  நான்காவதாக வந்த மரங்கொத்தியை கொண்டு போ்டடோம் என்று தெரிவித்தன.

இதனால் மூன்று மரங்கொத்தியுடன் மரமும் கைது செய்யப்பட்டடு சிறையில் அடைக்கப்பட்டது.


  தெளிவுரை-------

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி,சடைமுனியன்வலசையை சேர்ந்த நாகராஜன் மனைவி அனிதா. இவரிடம் சடைமுனியன்வலசையைச்சேர்ந்த பிரபாகரன், சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த கரணாகரன், இளங்கோ ஆகிய மூவரும் அனிதாவிடம் காதல் தொடர்பு வைத்திருந்தனர்.

இதற்கிடையே சடைமுனியன்வலசையை சேர்ந்த பால கிருஷ்ணன் நாலாவதாக அனிதாவிடம் காதல் தொடர்பு வைக்க முயன்றார்.

இவர் அனிதாவுக்கு  உடன்பிறப்பு முறை என்பதால் காதல் தொடர்பை தவிர்த்து வந்தார். இருந்தபோதும் பாலகிருஷ்ணன் அனிதாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார்.

இந்தத் தொந்தரவை தாங்க முடியாத அனிதா, தன் காதலர்கள் மூன்று பேரிடம் பால கிருஷ்ணன் தொந்தரவைப் பற்றி கூறி, போட்டுத் தள்ளுமாறு உத்தரவிட்டார்.

காதலியின் உத்தரவை கேட்ட மூன்று காதலர்களும் கோபத்தடன் கொதித்தெழுந்து பாலகிருஷ்ணனுக்கு தண்ணி வாங்கி கொடுத்து ஏமா்ற்றி பாலகிருஷ்ணனின் கதையை முடித்துவிட்டார்கள்.

 கதையை முடித்தவர்கள் பிடிபட்டபோது, தங்கள் வாக்குமூலத்தில் கதை முடிக்க உத்தரவிட்டது அனிதாதான் என்று சொல்ல...

கதை முடிக்க உத்தரவிட்டவரும்,கதையை முடித்தவர்களும் இப்பொழுது ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

செவ்வாய் 05 2014

ஏ.மயிலே, ஏ..செவ்வல்லியே, ஏ...தாமரையே............


படம்-pavithulikal.blogspot.com












ஏ....

மேகத்தை கண்டு

ஆடும் மயிலே!

ஆடாதே! உன்

ஆட்டத்தை கண்டு

விட்டு கலைந்து

சென்று விடுவான்.


ஏ...........

சந்திரனை காணாமல்

மலராமல் இருக்கும்

செவ்வல்லியே! நீ

மலர்ந்ததும் மேகத்துடனே

மறைந்து விடுவான்.


ஏ...........

சூரியனை பார்த்ததால்

மலரும் தாமரையே!

அவன்  உன்னைப்

பார்த்தால் தண்ணீரை

சூடாக்கி விடுவான்

திரைப்பட வீரர்கள் புழுதி பறக்க விட்ட தூசி வசனங்கள்..


முதல்வர் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் திரையுலகம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசும் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன். (உடன்) நடிகர்கள் சூர்யா, சிவகுமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் சீமான், நடிகர் விஜய், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், நடிகர்கள் விநய், மனோபாலா, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், நடிகர்கள் வையாபுரி, குண்டு கல்யாணம் உள்ளிட்டோர்.
படம்-www.dinamani.com

தமிழைப் பழித்தவனை ,தாய் தடுத்தாலும் விடேன் என்றுதான் கவிஞர் பாடினார். அந்தக் கவிஞரின் கவிதைக்கே திரைக்கதை வசனம் அமைத்து புழுதி பறக்க தூசி வசனம் பேசுபவர்கள்தான் திரைப்பட வீரர்கள். அதுவும் தமிழ்பட வீராதி வீரர்கள்.

இத்தனை நாட்களாக பதுங்கி இருந்து  தூங்கி குறட்டைவிட்டுக் கொண்டு இருந்த வீரர்களை ராஜ பட்சி எழுப்பிவிட்டது. அதனால்தான் பாய்ந்து வந்துவிட்டார்கள்.

இந்தத் தழிழ் திரைப்பட வீரர்களுக்கு,  சமஸ்கிருத்தை புகுத்தி  தமிழை,தமிழ் கல்வியை ஒழித்து  கட்டப்போவததோ தமிழ் ஒழிக்கப்படுகிறது என்பது பற்றியெல்லாம்  தெரியாது. ஆனால் இவர்கள் எல்லாம் தமிழ் திரைப்பட வீரர்கள்,

நீதி வெல்லும், என்று படமெடுப்பார்கள். மேடைகளிலோ பேசுவார்கள். ஆனால் நீதி வழங்கும் நீதி மன்றத்தையே , ஆட்டி படைத்து வாய்தா ராணி என்று பட்டம் வாங்கியவைரை தெரியாது. இலங்கை தமிழர் நலன்.தமிழக மீனவர் நலன் பற்றி பேரரசர் மோடி ஆட்சிக்கு வந்த அறுபது நாளில்  நாற்பதுக்கு மேல் கடிதம் எழுதி. கோரிக்கை வைத்தது மட்டுமே தெரியும். 

 அந்தக் கடிதத்தினால் ராஜபட்சியின் இழி செயலைக் கண்டு, தாயே என்று வாழ்த்தி வணங்கி வீழ்ந்து விடாமல் ராஜபட்சிக்கு எதிராக படை எடுக்குகிறார்கள்.  அறிவள்ள மடையனே கண்டு அதிசயக்கும் அளவுக்கு  திரை நடிப்புக்கும் நிஜ நடிப்புக்கும் வித்தியாசம் தெரியாதளவுக்கு நடிக்கிறார்கள்.


இவர்களின் சினிமா வழி வந்த தாய்க்கு ஆதரவாக , இலங்கையின்  சமஸ்தானத்தை ஆளும் ராஜபட்சிக்கு எதிராக..திரைப்பட வீரர்கள் படைகளில் புழுதி பறக்க விட்ட துாசி வசனங்களில் சில..

பாலூணர்வைத் தூண்டுகிற விதத்தில் இலங்கை அரசு வெளியிட்டு்ளள கருத்துக்கள் மன்னிக்க முடியாத வக்கிரச் செயலாகும்.

இது தாயை தவறாக பேசியது போல் இருக்கிறது. இது ஒட்டு மொத்த உலக தமிழரின் வருத்தம்.

இதயத்தில் ரத்தம் வழிகிறது. இதுக்கு மன்னிப்பு போதாது, தண்டனைதான் வேண்டும்.

இலங்கை துணை தூதரகம் இருக்கும் சாலைக்கு.தமிழ் ஈழச்சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்..

இந்தத் திரைப்பட வீரர்களின் அதாவது இந்த வீரர்களின் தாயாவனவர்.  தனது  நிரந்தர ஆட்சியில் 000விதியின் கீழ் தனது சபையில் திரைப்பட வீரர்களின் வசனங்களை  நிறைவேற்றுவாரா என்று பாருங்கள்.

திங்கள் 04 2014

கடுமையாக உழைத்தால் அல்லாரும் கோடீஸ்வரர் ஆகலாம்.????

படம்-tamil.webdunia.com



இந்தியாவுல ஏன்? அல்லாரும் ஏழையாக இருக்கிறார்கள் என்று கேட்டால் அறிவுள்ள அறிவியலார்கள் என்ன சொல்வார்கள். அவர்கள் எல்லாம் கடுமையாக உழைக்காததினால்தான் ஏழையாக இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்

அம்பாணி,. டாட்டா, பிர்ர்லா, சிந்தாலலு, மீட்டேல்லு இவுக எல்லாம் கடுமையாக உழைத்ததினால்தான் இந்தியாவில் கோடீஸ்ஸ்வரர்களாக இருக்கிறார்கள் என்று நீண்ட  சரடுகளை அவிழ்த்து விடுவார்கள்.

இப்படித்தான்  அந்தா மொக்கா.. இந்தா மொக்கான்னு படித்த அறிவாளிக எல்லாம் தாங்கள் பேசுகிற மேடையிலே முழுங்குகிறார்கள்.  கடுமையாக உழைத்தால் எல்லாரும் எல்லாத்திலேயும் வெற்றி அடையலாம் என்று  ஒரு சிலர் கோல்மால் செய்து உயர்ந்ததை சுட்டி காட்டி பினாத்துவார்கள். 

உதாரணத்துக்கு ஒரு டீ வித்தவர் இந்திய பிரதமரா வந்திட்டாருப்பே என்று வாயும் பல்லும் கூசாமல் சொல்லுவார்கள். பல்லு குத்திக் கொண்டு இருந்த பில்லு கேட்சையும் இழுத்து வந்து காட்டுவார்கள்.


அவர்கள் சொன்ன மாதிரியே,  எல்லாரும் கடுமையாக உழைத்தால்,  சுலபமாக கோடீஸ்ஸ்வரர்களாக ஆகலாம்... என்று ஒரு நண்பர்  எனக்கு மட்டும்   கோடீஸ்வரராக ஆகும்  அந்த  ரகசியத்தை  சொன்னார்.

நான் கேட்ட ரகசியம் பலருக்கு போய்  சேர வேண்டும்  என்று  என்னிடம் கேட்பவர்களுக்கு மட்டும் இந்த ரகசியம்.

ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும் . ஆயிரம் அடி  அளவுக்கு பள்ளம் தோண்ட வேண்டும்.

அதில்  மேற்படியாளர்களை எல்லாம் புதைக்க வேண்டுமா? ......என்று முந்திரிக் கொட்டைத் தனமா..முந்திக் கொ்ண்டு கேள்விக் கேட்கக்கூடாது. சொல்வதை மட்டும் கவனமா கேட்க வேண்டும்.

என்ன சொன்னேன்.   ஆ...ங்..... ஆயிரம் அடிக்கு பள்ளம் தோண்ட வேண்டும் தோண்டியாச்சா.....சரி. அடுத்து , எடுத்து வைத்திருக்கும் கரித்துண்டை் அந்த ஆயிரம் அடி தோண்டிய பள்ளத்தில் போட்டு  பாதுகாப்பாக மூட வேண்டும்.

 மூடிய பிறகு, ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து. அந்த ஆயிரம் அடியை தோண்டி எடுத்தால்   வைரம் கிடைக்கும். பிறகு என்ன .நீங்கள் கோடீஸ்ஸ்வரர்தான்.



குறிப்பு -- போங்கய்யா... வெண்ணைய்களா....“என் அப்பன் கால்த்துல கட்டிய கூரை வீட்டை மேய்வதற்க்கு  இரவும் பகலுமாக கடுமையாக  உழைத்தும் மாத்த முடியாமா? நாற்பது வருடம் கழித்துதான் கூரையை மாத்தி ஓடு போட்டு  வீட்டையே சரி செய்தேன்”.. இதுக்கே, சுத்தியிருந்த பாசக்கார பயபிள்ளகளின்  பாசப்போராட்டம்  வேற..இதுல் கடுமையாக உழைத்தால் புண்ணாக்க ஆகலாமாம்.. சும்மாருங்க..இல்ல...வாயில  நல்லாவே வந்துரும். (இத நான் சொல்லலப்பா என் மனசாட்சி சொல்லிச்சி)

ஞாயிறு 03 2014

ஒரு கும்மாளமும் அந்த கும்மாளத்தில் ஒரு கூத்தும்!!!

படம்-www.eegarai.net

 தமிழக சட்டப்பேரவை கும்மாளத்தின்போது “ மதுக்கடைகளால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி வருவதாகவும், அதனால் மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று ஒப்புக்கு ஒருவர் கேட்டார்.

அதற்கு மதுவிலக்குக்கு அத்தார்ட்டி ஆனவர் இப்படி பதில் அளித்தார்.

அண்டை நாடுகளான புதுச்சேரி, கேரளம்,கர்ர்நாடகம்,ஆந்தீரா போன்ற நாடுகளில்  மதுவிலக்கு அமுல் படுத்தவில்லை.

அந்தந்த நாடுகளில் மது விலக்கை அமுல் படுத்தினால் தமிழ்நாட்டிலும் பூரண மதுவிலக்கை அமுல் படுத்த தயராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆமமா...சாமீகளா...!!!............ அத்தார்ட்டிகாரர் சொல்வதும் சரிதான். நாள் ஒன்றுக்கு குறைந்தளவில் சம்பாதிக்கும்  பணத்தைக் கொண்டு குடிமகன்கள். பஸ ஏறி,ரயில் பிடித்து, அண்டை நாட்டுக்கு சென்று குடித்து விட்டு வந்தால் தமிழ்நாட்டுக்கு நஷ்டம் ஏற்ப்படுமல்லவா???

காசுக்கு காசும் போயி, கிக்கே இல்லாத சரக்கை குடித்து விட்டு வந்தால் அதை தமிழகம் எப்படி பொறுத்துக் கொள்ளும்.  அந்த குடி மகன்களின் கோபத்தைத்தான் அடக்க முடியுமா???   சொல்லுங்கோ..........

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...