பக்கங்கள்

சனி 28 2017

எழுந்து நின்ற தமிழகமே! எதிர்த்து நில்!!...


ன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்,
தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லிக்கு எதிராக தமிழகமே எழுந்து நின்றது. பணிந்தது பன்னீர் அரசு. தற்காலிகமாக ஜல்லிக்கட்டில் வென்றோம். வங்கக் கடற்கரையில் சீறி எழுந்த மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை பீதியடைய செய்தது. போலீசின் அதிகாரம் செல்லக் காசானது. காளை போராட்டம் காவிரி, விவசாயிகள் தற்கொலை என விரிவடையக் கூடாது என்ற போலீசின் அச்சம் தான் மாணவர்கள் – மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலுக்கு காரணம்.
ஆட்டோக்களை கொளுத்தியது. மீன் மார்க்கெட்டை வெண்பாஸ்பரஸ் மூலம் எரித்தது. வாகனங்களை அடித்து நொறுக்கியது. வீடுகளில் புகுந்து பெண்களை ஆபாசமாக பேசி, ஆண்களை அடித்து இழுத்து சென்றது என போலீசாருக்கு எதிரான ஆதாரங்களை நாள்தோறும் மக்கள் அள்ளி வீசுகிறார்கள். இதுவரை எந்த போலீசார் மீதும் விசாரணை நடவடிக்கை இல்லை.
காவல்துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷ்னர் ஜார்ஜ், கோவை கமிஷ்னர் அமல்ராஜ் மற்றும் வன்முறை சம்பவத்திற்கு காரணமான, தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரியுள்ளனர். நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசோ பொய் மேலும் பொய் என்ற மோடி வித்தையை தமிழகத்தில் செயல்படுத்த முயன்று மூக்கறுபட்டு நிற்கிறது.
மாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவி விட்டனர் என்று சில அமைப்புகள் பெயர்களை சொல்லி பழிபோடும் போலீசார், ஊடுருவி என்ன செய்தார்கள்? என்பதைச் சொல்ல முடிய வில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்., பாஜக, ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சிலர் ஊடுருவி மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க முயன்றதாக இணையதளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை பற்றி போலீசார் பேச மறுக்கின்றனர்.
கலவர தினத்தன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மெரினாவில் இருந்தார்கள். ஜல்லிக் கட்டு நடத்த நிறைவேற்றப்பட்ட சட்ட நகலை தாருங்கள், கலைந்து செல்ல இரண்டு மணி நேரம் அவகாசம் வேண்டும் என போலீசு அதிகாரிகளிடம் கேட்டனர். ஏழு நாள் பொறுத்தவர்கள் இரண்டு மணிநேரம் பொறுக்க முடியாதா?
மாலையில் செய்த வேலையை காலையே செய்திருக்கலாமே. ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தமனை முன்பே அழைத்து வந்து பிரச்சினையை சுமூகமாக தீர்த்திருக்க முடியும் அதை விட்டு தடியடி ஏன் நடத்த வேண்டும்? கர்ப்பிணி பெண் வயிற்றில் ஏன் உதைக்க வேண்டும்? உணவு கொடுத்த மீனவர்களை ஏன் குப்பத்தில் புகுந்து தாக்க வேண்டும்? மாணவர்களுக்கு வந்த உணவு பெட்டியை போலீசார் ஏன் பறித்து திண்ண வேண்டும்? எதற்கும் காவல்துறையில் பதில் இல்லை. ஆனால் காக்கியின் உடம்பில் காவி புகுந்துள்ளது போலிசு அதிகாரிகளின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
தீர்ப்புகளால், சட்டங்களால் சாதிக்க முடியாததை மெரினாவில் மாணவர்கள் முன்னின்று நடத்திய மக்கள் போராட்டம் சாதித்தது. தினம்தோறும் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் கூடினர். மாணவர்களே தங்களை ஒழுங்குபடுத்தி கொண்டனர். பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. காரணம் அங்கு போலீசு அதிகாரம் இல்லை. ஒருவார காலம் அதிகார போதையை இழந்தபோலீசார் அதிகாரத்தை மீண்டும் சுவைக்கவும் மக்களை அச்சுறுத்தவும் நடத்தப்பட்ட கலவரம் தான் இது.
குடி போதைக்கு அடிமையானவன் குடிப்பதற்கு எதையும் செய்வான்..6 வயது சிறுமியா..? 60 வயது மூதாட்டியா...? என பார்க்க மாட்டான்.ஒருவார காலம் அதிகார போதையை இழந்தபோலீசார் அதிகாரத்தை மீண்டும் சுவைக்கவும் மக்களை அச்சுறுத்தவும் நடத்தப்பட்ட கலவரம் தான் இது.
பண்பாட்டு அடையாளங்கள், இயற்கை வளங்கள், வாழ்வுரிமைகள், வாழ்வதாரங்கள், தாய் மொழி மீதான தாக்குதல் என அனைத்தையும் எதிர்த்துப் போராடி திகைத்த தமிழகத்தில், அனைவரும் பங்கேற்க நடந்த அமைதிப் போராட்டம், நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது. சாதி மத பேதமின்றி, ஆண் பெண் அனைவரும் ஒற்றுமையாக போரடியதன் பலத்தை பங்கேற்ற அனைவரும் நேரடியாக உணர்ந்தனர். அதை கருக்கும் முயற்சி தான் போலீசாரின் தாக்குதல்.
காவிரி தொடங்கி கல்வி உரிமை வரை தமிழக மக்கள் போராட வேண்டிய பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கின்றன.
காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது. உரிமைகளுக்காக தொடரும் உறுதியான மக்கள் போராட்டம், போலீசு ராஜ்ஜியத்தை வீழ்த்தும் !

போலீசு ராஜ்ஜியம்…

எழுந்து நின்ற தமிழகமே ! எதிர்த்து நில் !

ஆர்ப்பாட்டம்

நாள் : 30.01.2017
நேரம் : காலை 10.30  மணி
இடம் : ஜெயம் தியேட்டர் அருகில்,  பழங்காநத்தம், மதுரை.
தொடர்புக்கு --85089 35536.. மக்கள் அதிகாரம் மதுரை மாவட்டம்

காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது.

வெள்ளி 27 2017

ஒரு மாடு பிடி வீரரின் கர்ர்ர்ஜனை....



ஏய்... நா..யாருன்னு
தெரியுமா...? ஒனக்கு
அடங்காத மாட்டை
எல்லாம் ஒத்த
ஆளா..நின்னு
அடக்கிய வெள்ளையத்
தேவன்............டா....

இன்னொன்னு தெரியுமா..??
சொல்றேன்   கேளு....
சல்லி கட்டு  போராட்டம்
நடத்தினாங்களே  போராட்டம்
அந்தப் போராட்டத்துல..
இந்த வெள்ளையத்தேவன்
கலந்துக்கவே  இல்ல....
இதிலிருந்தே என்
வீரத்தை.. தெரிஞ்சிக்கோ.....

போடா.....போடா...
என்ன முட்டிட்டு
முறைக்க  வேறா
செய்யிற...... போடா.....

வியாழன் 26 2017

உண்மையான சமூக விரோதிகள் யார்....???

அந்த டீக் கடையை ஒட்டிய இடத்தில்   மூன்று நான்கு பேர் அன்றைய செய்திப் பத்திரிக்கையில் வந்த விபரத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்.அவர்களின் பேச்சு  மெரினா போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் யார் ? என்ற கேள்வியிலிருந்து தொடங்கி...  உண்மையான சமூக விரோதிகள்  யார்?? என்று கண்டுபிடிப்பிதில் முடிவுறா நிலையில் சென்று கொண்டு இருந்தது...

அவர்களின் அறிவு மட்டத்திற்கு சமூக விரோதிகள் என்றால். திருடர்கள், கொள்ளையர்கள் என்ற கணிப்பில் இருந்தது... இருந்தாலும் அவர்களுடன் வேறு யார் சமூக விரோதிகள் என்று கண்டபிடிக்க முடியாத..தெரியாத நிலையே  நீடித்தது..

தெரியாத அந்த உண்மையான சமூக விரோதிகள் யார் ?? என்று தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் ஏற்பட்டதால்... தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது வீதி வழியே பொகிறார்களா..?  என்று கவனித்தனர்.


நெடு நேரத்திற்கு பிறகு ..வீதிவழியே சென்ற ஒரு தோழரை தவறிவிட்டு..பின் அதில் ஒருவர் ஓடிச் சென்று கையோடு கூட்டி வந்து... அவரிடம் தன் சந்தேகத்தை கேட்டனர்.....

அவரோ....என்னைவிட.... நம்ம கணேஷ்  தோழர்...உண்மையான சமூக விரோதி யாருன்னு உங்களுக்கு விளக்கமாக சொல்வார்...  இருங்கள்... அவரை கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று விட்டு.... அவர் சொன்ன  அந்த கணேஷ் தோழரை அழைத்து வந்தார்.


 வந்தவர்  சந்தேகம் எழுப்பியவர்களைப் பார்த்தார்.. அவரின் அனுபவத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள் அனைவரும்  த்ண்ணிவண்டி பார்ட்டிகள்....என்று தெரிந்து கொண்டார்.

அவர்களின் பார்வையில்.. தான் தோழர் என்ற தகுதியில்... இருப்பதால்  அவர்களுடைய  சந்தேகமான  உண்மையான சமூக விரோதிகள் யார் ??என்று
அவர்களுக்கு  சுருக்கமாக அவர் விளக்கினார்..

அய்யா  நான் கேட்கிறேன்னு  நீங்க என் மேல் கோபப்படக்கூடாது... சரிங்களா
என்று ஒரு பீடீகையுடன் தொடர்ந்தார்.

அய்யா.... உங்க அப்பா  அம்மா..காலத்துல..... சாராயம் காய்ச்சுறவன்... விக்கிறவன்...ஊறுக்கு சற்று தள்ளி ஒதுக்குப்புறமாக இந்தாங்கே அதை குடிக்கிறவன் எல்லாம்  அவுக விட்டாளுக்கே தெரியாம  ஏன்? ஊறுக்கே தெரியாம போயி குடிச்சுகிட்டு வருவாங்க.. என்பது தெரியுமா...? என்று தோழர் கேட்டதும்....

எல்லோரும் ஒரே குரலில் தெரியும் என்றார்கள்...ஏன்? அப்படி..?அவர்கள் தெரியாமல் வித்தார்கள். குடிப்பவர்கள் ஏன்? தெரியாமல் குடித்தார்கள் என்று கேட்டபோது  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்தை கூறினார்கள்.

அவர்கள் சொன்னதை திரும்பக் கூறி..அசிங்கம். அவமானம்.. விறபவன் ஊறுக்கு கேடு விளைவிக்கிறான்.என்றும். குடிப்பவன் குடும்பத்துக்கு கேடு.விளைவிக்கிறான் என்று.அவர்களசொன்னதெல்லாம் சரி என்றார்.

இப்படியான ஊறுக்கும்  குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும் சாராயத்தை ஊறுக்கு ஒதுக்குப்புறமாக விறபனை செய்ததை  நல்ல சாராயம் என்று   தெரு தெருவுக்கு தெரு திறந்து வைத்து பெண்களின் தாலியை அறுத்து எறிந்த... .நீங்க எல்லாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கமும்.... சமூகத்தையே சிரழிக்கும் சாராயக் கடையை மூடச் சொல்லி போராடும் மாணவர்களையும் பாதிக்கப்பட்டப பெண்களும் போராடும்போது... மெரினாவில் போலீஸ. அடித்தது  மாதிரி...போராடியவர்களை அடித்து துவம்சம் செய்து... சாராயக்கடையை இராப் பகலா காவல் காக்கும் போலீஸ்சும்தான்   உண்மைான முதல சமூக விரோதிகள்.... என்று கூறி முடித்தார் ... சந்தேகம்  கேட்டவர்கள்  யாரும் மறு பேச்சு எதுவும் பேசவில்லை.....

என்ன நான் சொல்வது  சரிதானா..... என்று   கேட்டபோது.... தலையை மட்டும் ஆட்டினார்கள்.அவர்கள்.  இவரை அழைத்து வந்தவர் மட்டும் ஒரு கேள்வியைக் கேட்டார்..

அப்போ அந்த சாராயத்தைக் குடிப்பவர்கள்....???

குடிப்பவர்களும்... அந்த உண்மையான சமூக விரோதிகளுக்கு பக்க வாத்தியம் வாசிக்கும் மூன்றாமதர சமூக விரோதிகள்  என்றார்........ சரி  நான் சொல்வது தவறு என்றால்....பேசலாம்  என்ற போது...யாரும்  எதுவும் பேசவில்லை...

தமிழ் சமூகத்தின் உண்மையான சமூக விரோதிகள் இவர்களேதான் அதில் எந்த மாற்றமில்லை  என்று கூறிவிட்டு அழைத்து வந்தவரிடம் இருந்து.. விடைபெற்றார்....








புதன் 25 2017

வெறி நாயில.ஆணென்ன..பெண்னென்ன....தோழர்..

வணக்கம்....தோழர்.....!

வணக்கம்..தோழர்...!!

உடம்பு சுகமாகிவிட்டதுங்களா.....தோழர்...??.

ம்.ம்....சுகமாக்கிவிட்டார்கள்  தோழர்....

நாட்டு நடப்புகள் மற்றும்  மாணவர்கள் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தெரியும்தானே........தோழர்..

தெரிந்து கொண்டேன் தோழர்...ஜல்லிகட்டு போராட்டத்தின் முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் தோழர்... தொண்டை கிழிய கோஷம் மிட்டதாலும்...பசியை போக்க தண்ணீரைஅடிக்கடி குடித்ததாலும் அன்று இரவில்  உடம்புக்கு  முடியாமல்.. நோயில் படுத்துவிட்டேன் தோழர்... மற்றபடி தோழர் என்றால் தேச விரோதி என்று  ஏவல் அதிகாரி சொன்னது வரை நடந்த நிகழ்ச்சிகள் அணைத்தும் தெரிந்துகொண்டேன்.. தோழர்.

அப்படியா...? மகிழ்ச்சி..தோழர்.

மெரினாவில் ஏவல் துறை நடத்திய வன்முறையில்.. பெண் என்றால் பேயும் இறங்கும் என்று சொல்லிக் கொல்கிற பெண் போலீசும். தன்னுடைய ஏவல் சேவையை கச்சிதமாக செய்திருக்கிறதே..தோழர்...

தோழர்...வெறி நாயில..ஆணென்ன... பெண்னென்ன தோழர்.. ரெண்டும்.. பாய்ந்து கடித்து குதறும் தோழர்...அதுகளின்  ரேபிஸிருந்து யாரும் தப்பிக்க முடியாது தோழர். இதோ இந்த வீடியோவுல. அவர்கள் திரும்ப வருவார்கள் என்று மெரினா தாக்குதல் பற்றி குமுறும்  ஒரு பெண்ணின் குமுறலை  பாருங்க........






மேலும் ..படிக்க.....






செவ்வாய் 24 2017

மெரினாவில் புகுந்த சமூக விரோதிகள்......

என்ன...அண்ணே...அஞ்சாறு நாளா....ஆளையே...காணோம்... மெரினா போராட்டத்துக்கு போயிட்டிங்களா.....???

ஏன்டா....டேய்...என்னப் பாத்தா...அப்படியாடா...தெரியுது....????

பின்னே..... தமிழ்நாடே..... பத்தி எரிஞ்சுகிட்ட இருக்கருப்பா... உங்கள காணோம்ண்ணே...........இதுல வேற.. மெரினா கூட்டத்துல  சமூக விரோதிக புகுந்திட்டாங்கன்னு..பரபரப்பா டிவியில பேட்டி கொடுத்தாங்களா  அதே நேரத்துல... உங்கள வேற காணோமா...???? நீங்கதான் மெரினாவுல புகுந்திட்டிங்களான்னு நிணச்சண்ணே...

 அப்படியாடா ..சரிடா...  மதுரை கே...ஆஸ்பத்தரியில... குளுக்கோசு ஏத்திகிட்டு பெட்டுல படுத்துகிடந்தப்போ..என்ன . வந்து பாத்தவன்க  யாருடா...அவிங்க.....???


அவிங்களாண்ணே....அவிங்க  சமூக விரோதிகண்ணே.....

என்னது சமூக விரோதிகளா...??இப்பத்தானடா என்ன சமூக விரோதின்னு சொன்ன .......

சமூக விரோதிய பாக்க சமூக விரோதிக  வருவது நட்புகாகத்தாண்ணே


அடேங்கப்பா  நட்பு நிறைந்த அந்தசமூக விரோதிக யாருடா.....???

அவிங்களாண்ணே.. ஹிப் ஹாப் ஆதி, ஆர்ஜே பாலாஜி, ராகவா லாரன்சு, கெமிசனர் ஜார்ஜ் ண்ணே....

ஏலே....வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்னு இவுகள்ல சொல்றாங்க.....

என்னண்ணே..  நீங்க. புரியாம  கேக்குறீங்க..... ஆத்தா போலீச பத்தி இன்னும் புரியாம இருக்கீங்க..... .....

ஏலே.ஒன்னவிட எனக்கு நல்லாவே புரியும்டா...  ஆமா.... ஆத்தாதான் செத்து போச்சுலடா.... ...

ஆத்தா செத்து போச்சுன்னா... சின்ன ஆத்தா... இருக்குல.... இந்தா இந்த வீடியோவ பாருங்க.....மெரினாவில் புகுந்த சமூக விரோதியாருன்னு. உங்களுக்கு தன்னாலயே   புரியும்....









ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...