பக்கங்கள்

சனி 31 2021

குத்தாமல் குடலை உறுவும் கலை

 இன்று காலை 11மணி வாக்கில் என் வீட்டீற்கு நாலைந்து அதிகாரிகள் வந்தார்கள்.   அவர்கள் எல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் என்று பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது. வந்தவர்கள் என் பெயரைச் சொல்லி கேட்டார்கள்.

என்ன விபரம் என்று கேட்பதற்கு முன்னமே நான் ஊகித்துக் கொண்டன்.

ஒரு அதிகாரி வழக்கு போட்டு இருக்கீறீர்களா?? என்று கேட்டார்.

“ ஆமாம்” என்றேன்.

“ வெறும் மெமோதான் வந்திருக்கு .ஆதாரம் எதுவுமில்லை. உங்களின் ஆதாரங்களின் நகல்களை எங்களுக்கு தரவும் ” என்று கேட்டார்.

நான். மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் இருந்துதானே, தங்களுக்கு வந்திருக்கும் அவர்களிடம் கேட்டுப் பெறலாமே? என்று சொன்ன போது ஆதாரம் எதுவும் வரவில்லை நீங்கள்தான் தரவேண்டும் என்றார்.

ஒரிஜினல் ஆதாரம் கோரட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நகல் வக்கிலிடம் இருக்கிறது என்றபோது..... வழக்கில் உள்ளவர்கள் எல்லோரும் திங்கள்கிழமை நாங்கள் வரும்போது நகல்கள்மட்டும் எங்களிடம் கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

போலீஸ் ஸ்டேசன் ஆனாலும் மாநகராட்சி ஆனாலும் சரி, வட்டாட்சியர் ஆனாலும் சரி , என் தரப்பு ஆவணத்தை தரும்போது  பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் சீட்டு எதுவும் எனக்கு வழங்கப்படுவது இல்லை. நான் அலைந்து திரிந்து வாங்கும் ஆவணம் எல்லாம்..குத்தாமல் குடலை உறுவுவது போல என் எதிராளிகள் கைளில் கிடைத்துவிடுகிறது.

இதனால் வெறுத்து போன நான்... வந்த அதிகாரிகளின் ஒருவரிடம் தொலைபேசியில்  உங்கள் வக்கிலிடம் கேட்டு பெறலாமே?? என்றபோது

அந்த ஆதிகாரி..“ எங்க வக்கிலிலுக்கு இதுதான் வேலையா? என்றார். மனதுக்குள் சிறிது கோபம் பொத்துக்கொண்டு வந்தது. எனக்கு...வக்கிலின்..வேலையே அதுதானேய்யா....

சரி, நான் தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது... அதற்கு அவர், தரவில்லை என்றால்.  நாங்கள் திருப்பி அனுப்பி விடுவோம்.என்றார்.

சரி, அப்படியே! செய்யுங்கள் என்றேன்..

பிறகு, நானா புலம்பினேன். ஆமய்யா....என் ஆவணத்த வாங்கி... என் எதிராளிடம் தர...  நீங்க கேட்டவுடன்...தந்துவிட்டுதான் மறுவேலை பார்க்கனும், பொது மக்களிடம் வாங்கும் மனுவுக்கு உடனே நடவடிக்கை எடுப்பது மாதிரி,என் அப்பன் பெயரிலுள்ள வரியை என் பெயருக்கு மாற்ற ஆறு ஏழு வருடங்களாக அலையவிட்டவனுகல்ல  நீங்க....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

செவ்வாய் 27 2021

அது ஒரு தனி இனம்.


 உரிய வாரன்ட் இல்லாமல் அரசு பேருந்துகளில் போலீசார் இலவசமாக பயணிக்க கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை

"போலீஸ்காரர்கள் எல்லா அரசு ஊழியர்களைப் போலத்தான்! மற்ற அரசு ஊழியர்கள் எல்லாம் டிக்கெட் எடுக்கும் பொழுது, போலீஸ் மட்டும் டிக்கெட் எடுக்க மறுப்பது ஏன்? ”தாங்கள் தனி இனம்” என்கிற திமிர் தான்! டிக்கெட் எடுக்கச் சொல்லி ஏகப்பட்ட இடங்களில் தகராறு! ஒரு பேருந்தின் ஓட்டுநரை கொன்ற பிறகு, மனித உரிமை ஆணையம் வழக்கை எடுத்து நடத்திய பிறகு இப்பொழுது டிக்கெட் எடுத்து பயணிக்கவேண்டும் என உத்தரவு போடுகிறார்கள். போலீஸ்க்கு கடுமையான கண்டனங்களை அனைவரும் தெரிவிக்கவேண்டும்.”
- வினைசெய்
சென்னை: உரிய வாரன்ட் இல்லாமல் போலீசார் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கூடாது, என்று காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஒரு வழக்கில் போலீசார் பேருந்தில் கட்டணம் எடுக்காமல் சென்றபோது, பேருந்து நடத்துனர் மற்றும் காவலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், போலீசார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உரிய வாரண்ட் இல்லால் பயணம் செய்ய கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்று தெரிவித்திருந்தது. எனவே, அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் கருத்தை உறுதி செய்ய வேண்டும். உரிய வாரண்ட் இல்லாமல் போலீசார் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கூடாது.
- தினகரன் நாளிதழ்
 















ஞாயிறு 25 2021

124ஏ தேச துரோக சட்டமும்..வழக்குரைஞர்களின் கருப்பு கோட்டுக்களின் வரலாறும்.

 

இந்தச் சட்டத்தை 1837-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதியும் வரலாற்று ஆசிரியருமான தாமஸ் மெக்காலே உருவாக்கினார். 1860-ம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது, இந்தச் சட்டம் முதலில் அதில் சேர்க்கப்படவில்லை. பின்னர், 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா இயற்றப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தில் இது இணைக்கப்பட்டது. இந்தியாவிலேயே, பழைமையான சட்டத்தில் இதுவும் ஒன்று. இந்திய தண்டனைச் சட்டத்தில் 124ஏ பிரிவுதான் தேசத்துரோகத்தை வரையறுக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேசத்துரோகமாகக் கருதப்படுகின்றன. 

அந்த சட்டம் அப்படியே வாழையடி வாழையாக வாழ்வாங்கு சுதந்திர இந்தியாவிலும் இந்திய தண்டனை சட்டத்தில் தொடர்ந்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


இதே போல..

கி.பி.694-ம் ஆண்டில் இங்கிலாந்தின் இரண்டாவது மகாராணி மரணம் அடைந்த போது எழவு துக்கம் அனுசரிக்கும் விதமாக, பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் உள்ள வழக்குரை்ஞர்கள் கருப்பு கோட்டு அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அன்றிலிருந்து அதுவே வழக்குரைஞர்களின் உடையாகிப்போனது.

பிரிட்டீஷ் சாம்ராச்சியம் எங்கெல்லாம் காலூன்றியதோ, அங்கெல்லாம் வழக்குரைஞர்களின் உடையாகிப்போனது. இந்த கருப்பு கோட்டும் (124ஏ யை போல) இன்றுவரை இந்திய வழக்குரைஞர்களின் அடிமைச் சின்னமாகவும் நிலைத்து கொண்டு வருகிறது.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...