பக்கங்கள்

சனி 31 2011

ஆங்கில புத்தாண்டே உன் வரவு எனக்கு போராட்ட நாளே...!!!


















வா...என்றால் வந்து விடுவாயா?
போ..என்றால் போய் விடுவாயா?
நில்..என்றால் நின்று விடுவாயா?
ஆங்கில புத்தாண்டே?????????????

பகல், இரவு என்று..............................
வருவதும் போவதும் உன் வேலை
நீ வராமல் போனால் என்னாகும்?
கடல்அலை நின்றால் என்னாகும்?

கடல்அலை நின்றால் என்னாவேன்
தெரிந்தும அனுபவத்தில்லை!
 நீ எப்பொழுது தோன்றினாய்?
நீ எந்நேரம் பிறப்பிக்கபட்டாய்?

ஜனவரி ஒன்னு நள்ளிரவு பணிரெண்டு
மணிக்கு பிறந்ததாக.................சூரியன்
அஸ்தமிக்கும்முன் தோன்றியவர்கள்
கண்டு சொன்னார்கள்............................

ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்
(பல நாடுகளை அடிமைபடுத்தி ஆண்டவர்கள்)
 அடக்கியாண்ட வெற்றி களிப்பை
கொண்டாட உன்னை பிரசவித்தார்கள்

வருவதும் போவதும் உன் வேலை
ஒழுங்காக நீ செய்கிறாய்............

குரங்கிலிருந்து தோன்றி ஆறறிவு
ஒன்றைப்பெற்று ஏழாவது அறிவுக்கு
அலைபவர்கள.....புதியன கழிதலும்
பழையன புகுதலுமாக வழமையாகக்
கொண்டு வாழ்கிறார்கள்.

உன் பிறப்பு எப்படியிருந்தாலும்
உன் வரவு எனக்கு போராட்ட நாளே..!!
கடல்அலையும் ஓயப்போவதில்லை
சமத்துவத்துக்கான போராட்டமும்
ஓயப்போவதில்லை.....எப்படியிருந்தாலும்
உன் வரவு எனக்கு போராட்ட நாளே......!!!


வெள்ளி 30 2011

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு?

அடேங்கப்பா,.........கூடங்குளம் அனு உலையை திறக்கச் சொல்லி கூப்பாடு போடும் ஆதரவாளர்களே!

இதுக்கு என்னையா பதில் வச்சுருக்கிங்க, சப்பான் நாட்டில் புகுஷிமா நகரில் ஆழிப் பேரலையால் சிரழிந்து போன அனுஉலையில் சிக்கியுள்ள எரி பொருளை பக்கவமாக வெளியெ எடுப்பதற்கு 40 ஆண்டுகளும். 78,400 கோடிகளும் தேவைப் படம் என்று அனுஉலை நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

சுற்றுபுறத்துக்கு ஆபத்தில்லாமல் அப்புறப்படுத்துவதற்கு இனிமேல்தான் வழி வகைகள் கண்டுபிடிக்க வேண்டுமாம். கண்டபிடிப்பதற்க்கான ஏற்ப்பாடுகளை   செய்வதற்கே. பத்து ஆண்டுகள் ஆகுமாம். அந்த வேலையைச் செய்வதற்கு இனிமேல்தான் ரோபட்டுகளை தயாரிக்க வேண்டுமாம்.

கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளக்கு மேலும் நீடிக்குமாம். அதிலும் 78,400 கோடியானது அனுஉலை எரிபொருளை எடுப்பதற்கு மட்டும்தானாம். மற்ற செலவுகளெல்லாம் தனியாம். என்னங்கப்பா....இதெல்லாம் .......
.சொல்றதெல்லாம் சுரைக்காய்க்குஉப்பு இல்லைங்கிறகணக்கா........
அனுஉலைக்கு ஆபத்து இல்லை.அனுஉலை மின்சாரம் மலிவானது.கதிரியக்கம் ஏற்பட்டாலும் சிகிச்சை செய்து தடுத்துவிடலாம் என்றும்...அண்டப்புளுகு,ஆகாசபுளுகுன்னு புளுகித் தள்ளிவிட்டு “ முளச்சா முளைக்கட்டும் முளக்காட்டி போகட்டும்” என்ற கணக்கா இன்னமும் விதைக்கிறேங்களப்பா?.

சாதாரன காய்ச்சலுக்கே தர்ம ஆஸ்பத்திரியில மருந்து இல்ல,ஊசி
இல்லேன்னு சுகப்படுத்த முடியல, இதுல கதிர்வீச்ச சிகிச்சை செய்து தடுத்துவிடலாமுன்னு காதுல ஒரு முலம் புவ வேற சொருகிறிங்களேய்யா?

இதுல. எங்க சூத்து காயுது, குண்டி குறையுதுன்னு அனு உலையை திறக்கச் சொல்லி உண்ணாவிரதம் வேறு,  நேர்மை திறன் எதுவுமில்லாம.போராட்ட
உறுப்பினரை கைது செய்ய சொல்லி வழக்கு வேறு.இந்த வழக்கு பேரு பொது
நலவழக்குன்னு பெத்த பேரு வேறு.................

இந்த எழவுல,டீ.வியில “ கூ்டங்குளம் அனுமின் திட்டம் நாட்டுக்கு நல்லதோர் திட்டமுன்னு” விளம்பரம் மற்றும்“ பிரபஞசத்தின் பெருமை கூடங்குளம்” பத்திரிக்கையில புளுகினித்தனம் வேறு இதுக்கெல்லாம் பஞ்சமேயில்லப்பா?

 சுனாமி வந்த பாதிப்பையே சரி செய்ய முடியாம வக்கத்து இருக்கிற நீங்க....
அனுஉலையைப்பத்தி எப்படியெல்லாம்  என்னனென்ன வழிகளெல்லாம்புளுகித் தள்ளுங்க..இந்த கெட்டிக்கார புளுகு எத்தனை நாளைக்கு??தான்னு நிலைக்குன்னு பார்க்கத்தானே போறோம். நீங்க இல்லேன்னாலும் உங்க வாரிசுக பாக்கத்தானே போகும்..

புதன் 28 2011

மொட்டை போட்டு நாமம் போடுவது எப்படி?




 நாமம் , காந்தி கணக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமால் இருக்காது. அதிலும் மொட்டையும் போட்டு நாமம் போடுவது எப்படி என்று சேது- பாலாவிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பின்னனியாக வைத்து சைக்கோ பாலா புதிய படத்தை இயக்கப்போகிறாராம்.இந்தப் படத்திற்க்காக 200 துனைநடிகைகளை தேர்ந்தெடுத்து அனைவரையும் மொட்டையடிக்கச் சொல்லி படம் முடியும்வரை மொட்டைத்தலையுடன்தான் இருக்க வேண்டும் என்றாராம்
(தேயிலை தோட்ட முதலாளிகள் தொழிளாலர்களுக்கு நாமம் போட்ட மாதிரி)

எற்கனவே. பாலா.பல நடிகர்களுக்கு மொட்டைபோடாமல் நாமம் போட்ட கதையை தெரிந்து கொண்ட 200 துனை நடிகைகள்,ஆகா.......நமக்கு மொட்டையும் போட்டு நாமம் இல்ல போடப்போறாரு என்று சுதாரித்துக் கொண்ட துனை நடிகைகள்.

மூன்று படங்களுக்கான. சம்பளத்தை மொத்தமாக தந்து விடுங்கள். படம் முடியும்வரை நாங்கள் மொட்டையுடன்  இருக்கிறோம் என்று துனை நடிகைகள் சங்கத்தின் மூலமாக கேட்டுள்ளனர்.

பாலாவும் வழியில்லாமல் மொட்டையுடன் நாமம் போடுவதற்கு வேறு வழியில் யோசித்துக் கொண்டு இருக்கிறாராம்.

செவ்வாய் 27 2011

எட்டாவது அதிசியம் என்னான்னு தெரியுமா?





என் நண்பர் பேச்சின் ஊடே உலக அதிசியம்
ஏழு என்னான்னு தெரியுமா? என்று கேட்டார்.
நான் முழித்துக்கொண்டு இருக்கையில்
இன்னொருத்தர் இடையில் புகுந்து,  

ஓ......ஓ...... தெரியுமே, தாஜ்மகால்,
சீனப்பெருஞ்சுவர்,சாய்ந்தகோபுரம்,
பிரான்ஸ் டவர்,எகிப்து பிரமிடு............
இப்படி வரிசையாகஓப்புவித்தார்.

நண்பர்,அவரிடம் எப்படித் தெரியும்.
எங்க பார்த்திங்க என்று கேட்டார்.
அவரும் கே.டீவியிலதான் பார்த்தாகவும்.
 டைமன்முத்துவின் “அதிசியமே அசந்து
 போகும் அதிசியமே” என்ற பாடலில்
“.வந்ததே மூத்தரம்” என்று ஓலமிட்ட
 ரகுமான் இசையில் ஏழு ஒலக
அதிசியத்தை பார்த்த அதிசியத்தை குறிப்பிட்டார்.

என்னைப் பார்த்த நண்பர்., என்ன.
 பாத்தீங்களா? என்றார்.அந்த ஏழு அதிசியத்தை
பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை.
இனி கே.டீவியில் போடுவார்கள்ள
அப்போது பாத்துக்கலாம். என்றேன்

ஏழு அதிசியத்தை சொன்ன நண்பரோ,
எனக்கு கேட்காதளவுக்கு நக்கல் அடித்து
 ஏளனமாக பார்த்தார்.இருவரையும்
 பார்த்து ஏழாவது அதிசியம் என்னனென்பது
தெரியவில்லை என்பதை ஒத்தக்கொள்
கிறேன் என்றேன்.

ஏழு அதிசியங்கள் தெரிந்திருக்கிற
 உங்களுக்கு. “எட்டாவது அதிசியம்
” என்னான்னு தெரிஞ்சு இருக்கனுமே,
அது என்னான்னு சொல்லுங்க என்றேன்.

நண்பர்கள் இருவரும். வேறு எதை
எதையோ சொன்னார்கள். அவர்களுக்கு
எட்டாவது அதிசியம் என்னாதுன்னு
தெரியவில்லை.அந்த அதிசியம்
உங்களுக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. நானே சொல்லவா? என்றேன்.

நண்பர், எட்டாவது அதிசியம் ஒன்னு
 இருப்பதாக தெரியவில்லையே என்றார்.

இருக்கு என்றேன். உலகத்திலுள்ள எல்லா
 ஊடகங்களும் சொல்லியிருக்கிறது
எழுதியிருக்கிறது. அந்த அதிசியத்தை
பார்ப்பதற்காக தவமும் இருக்கிறது என்றேன்.


அப்படியென்ன, அதிசியமுன்னு,
எங்களுக்கு தெரியலையேன்று,யார்
யாருக்கோ செல்- அடித்துக்கேட்டார்கள்.
யாரும் சரியாக எட்டாவது அதிசியத்தை
சொல்லவில்லை..

படிக்கும் நீங்களாவது அந்த எட்டாவது
 அதிசியம் என்னான்னு சொல்லுங்க
பார்க்கலாம்.

ஞாயிறு 25 2011

தேனி மாவட்ட வானிலை அறிக்கை!

முல்லை பெரியாறு அணைக்காக ஒரு லட்சம் பேர் பேரணி

தமிழகத்தின் மேற்கு எல்லைகளான லோயர்கேமப்,கூடலுார், கம்பம் போன்ற பகுதிகளில்,சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் ஜார்ஜ் என்ற கேரள சனி பகவானும், தென்மண்டல காவல்துறை தலைவராக இருக்கும் ராஜேஸ்தாஸ் என்ற வடமாநில சனி பகவானும் பெரும் எண்ணிக்கையில் தடி, கண்ணீர்புகைக்குண்டுகள்,துாப்பாக்கி போன்றவற்றுடன் மையம் கொண்டுள்ளதால்  பெரியாறு அணைக்காக போராடும் மக்கள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே, பரமக்குடியிலிருந்து நகர்ந்து கேரள எல்லையை ஒட்டி நிலை கொண்டுள்ளதால் பொது மக்கள் இவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...