பக்கங்கள்

சனி 06 2011

ஆகா,ஆகா,இவரல்லவோ பறக்கும் அரசியார்!!

சென்னை  சமுத்திரத்தில் குப்பைகளும் கூளங்களும்
துாசிகளும் கிடக்குது..அதை சுத்தம் செய்யக்கூடிய
வழிகளை  ஆராய அரசியார் கிளம்பிட்டாங்கய்யா!
கிளம்பிlட்டாங்க!!

முன்னால் அரசர் ஆட்சியில் மூத்தவர் இருக்க
,இளையவர் பட்டத்து இளவரசர்சென்னை மா
சமுத்திரத்தை அழகுபடுத்துவதற்காக  நான்கு கால
குதிரைகளானஏ.சி டாடா சுமொவிலும்,குவாலிக்ஸிலும்
ஏரியா,ஏரியாகவாக வலம் வந்து குதிரை செல்லமுடியாத
இடஙகளில் வீர நடை போட்டும் பார்வையிட்டு அழகு
படுத்த ஆய்வு செய்தார்.

மகா சமுத்தரத்தின் பேரலையால் அரசரின் செங்கோல்
கீழே விழ..பட்டத்து இளவரசர்  பதவியிழந்தார்.

இதற்காகவே,காத்திருந்த முன்னால் அரசியும் அவர்தம்
தோழியும்புசைகள்என்ன,பரிகாரங்கள்என்ன,அத்தனையும்
சலிக்காமல்பலசெய்து.உள்ளமெல்லாம் பேரானாந்தம் பொங்க
மிக்க களிப்புடன் ஆட்சி கட்டிலேறினார்.

அரசரின் ஆட்சியில் அரசர் கட்டிய அரன்மனையை
புறந்தள்ளியது போன்று பலவற்றை மாற்றிய அரசியார்


பட்டத்து இளவரசர் சென்னை சமுத்திரத்தை அழகாக
மாற்றுவதை மாற்றாமல்குப்பையும் கூழமும் நிறைந்து
கிடக்கும் சென்னை சமுத்திரத்தை துாய்மையாக்க

அம்மாம்,பெரிய பட்டத்து இளவரசரைப்போன்று
நாலுகால் குதிரையில் செல்வது, குப்பையின்
வாசனையை நுகர்வது அரசியார்க்கு பிடிக்காத ஒன்று.
.வீறு நடைபோட்டால் அரசியாரின் பாதம் என்னாவது..
சுனாமி வந்து மக்கள் பிணக்காடனா போதே அரசியார்
நடந்தா போனார்..

அப்பேர்பட்ட அரசியிரின் பாதமும்,நாலுகால் குதிரைகளால்
உடலும் நோகலாமா? சே! சே! சே!

யாரெங்கே? கொண்டு வாருங்கள் வான்வெளி ஓடத்தை
,சூரியனின்பகல்ஒளியில் சர்ரென பறந்து வானிலிருந்து
அழுக்குகள் நிறைந்த சென்னைசமுத்திரத்தை கீழே பார்த்து
ஆய்வு செய்யப்போகிறார்.

ஆகா,ஆகா,இவரல்லவா மதிநுட்பம் நிறைந்த அரசியார்.
டிஸ்கவரி சேனலில்வான்வெளி ஓடத்திலிருந்து ஓடும்
மானையும் முயலையும் பார்ப்பது போல்அரசியாரும்.
ஓடத்திலிருந்து பறக்கும் குப்பைகளையும் பரவும்
துாசிகளையும்அல்லவா?பார்த்து ஆய்வு செய்ய போகிறார்.
எப்பேர்பட்ட ஒளி ஊடுறுவும் பார்வை. இப்படிபட்ட
பார்வைக்கு கொடுத்து வச்சிருக்கனும்மைய்யா!

முன்னால்அரசரையும் பாரு எப்பப்பார்த்தாலும் கருப்பு
கண்ணாடி போட்டுகிட்டு.

மதிநுட்பம் கெட்ட இளவரசரு, எப்பப்பார்த்தாலும்
குதிரையிலும் வீரநடையிலும் படைசூழ சென்று
அல்லாரையும் வெயிலில் அலைக்களித்தாரு்

ஏ.......ஏ.............சென்னை சமுத்திரத்தின் துாய்மையை
கெடுக்கும் குப்பைகளே!கூளங்களே!துாசிகளே!
அரசியார் வான்வளிஓடத்தில் தவழ்ந்து வரும்போது
எல்லாரும் ஓடி மறைந்து கொள்ளுங்கள்.
அரசியார் களைப்படையாமல்
ஆய்வு செய்யட்டும்.

ஜால்ரா (தின)மணியின் மக்கள் கருத்தாம்பா??

தேசிய தரத்தில் சமச்சீர் புத்தகங்கள் இல்லை என்ற  தமிழக அரசின் விளக்கம்
என்ற நேற்றைய கேள்விக்கு

உண்மை----------------53.86./.
அரசியல்----------------43.09./.
கருத்து இல்லை------ 3.05./.--ஆகவும் கருத்து பதிவானதாம்பா?

அப்போ,தமிழ்நாட்டுல சமச்சீர் கல்வியை அமுல்படுத்து,சமச்சீர் புத்தகத்தை
வழங்குன்னு சிறிரங்கத்து ரங்கநாயகியின் போலிசிடம் அடி வாங்கி சிறை
சென்று போராடினவங்கெல்லாம் கேனையர்களாக்கும்

சமச்சீர் புத்தகத்தை வழங்கு,வழங்குன்னு உயர்நீதி மன்றமும் உச்ச நீதி
மன்றமும் உத்திரவு போட்டதெல்லாம் கிறுக்குதனமாக்கும்.

சமச்சீர் கல்வியை பாடுபட்டு ஆராய்ந்து கொண்டுவந்த கல்வியாளர்களெல்லாம்
மடையர்களாக்கும்.

எந்த நீதிக்கும்,சட்டத்துக்கும் அடங்காத,கீழ்படியாத இம்சை அரசியும் நீங்களும்
அதிபுத்திசாலிகளாக்கும். நல்லாயிருக்குப்பா உங்க ஞாயம்.

சோழியன் குடுமி சும்மாவும் ஆடாது.
நாயின் வாலையும் நிமிர்த்த முடியாது.

இதுக்கு ஒரே வழி. சோழியனுக்கு முடி வளராத மொட்டையும்
நாயின் வாலை கட்டிங்  பண்ணினாதானப்பா சாரிப்படும். எல்லாம் உருப்படும். 

வியாழன் 04 2011

பொதுவுடமையாளர்கள்! என்பவர்கள் யார்?

பொருளின் வாழ்வையும்
அப்பொருளின் வளர்ச்சியையும்
நெறிப்படுத்தும் நிகழ்ச்சியையும்
புரிந்து கொண்டவர்கள்

இயங்கியலை பருண்மையாக
அறிந்து கொண்டவர்கள்
முதலாளி வர்க்கத்தின்
அறிவாளிகளைவிட மதி
நுட்பம் கொண்டவர்கள்


சமூகத்தின் நிலையினை
தொலை துாரம் பார்க்கக்
கூடியவர்கள்!

மொத்தத்தில்
சிந்திக்க துணிந்தவர்கள்
பேசத் துணிந்தவர்கள்
செயல் படத் துணிந்தவர்கள்
அவர்கள்தான பொது
உடமையாளர்கள்!!!

புதன் 03 2011

புரிந்தது........இப்போது புரிந்தது.

உலக பாட்டாளி வர்க்கத்தின் ஆசானே!
பாராளுமன்றம்  பன்றித்தொழுவம்
என்று அன்று சொன்னது
இன்றுதான் புரிந்தது.

இந்தியனின் பன்றித் தொழுவத்தில்
பன்றிகளின் கூச்சலும் குழப்பமும்
புரிந்தது........இப்போது புரிந்தது
பாராளுமன்றம் பன்றித்தொழுவம்

செவ்வாய் 02 2011

போராடடத்தில் தோழர்கள்.............................

தமிழகத்து கார்பரேட் கல்வி முதலாளிகளின் காவல்தெய்வம்,
சிறிரங்கத்து ரங்கநாயகி, சமச்சீர்கல்வி தெடர்பான எந்த சட்டத்தையும்
நீதியையும்,உத்திரவையும் மதித்து அமுல் படுத்த மறுக்கும்
அடங்காபிடாரி,நாய்தின்ன மறுக்கும் ரேஷன் அரிசியை
இலவசமாக்கியதால் பெயரெடுத்த அன்னபுரணி

சும்மா விளையாட்டுக்கா சொன்னார்கள் வினவு தோழர்கள்
முன்னது பேயாட்சி,பின்னது பிசாசு ஆட்சிஎன்று!

நாற்காலியில் அமர்ந்து முதுகை சாய்ந்து கொள்வதற்கு
முன்னமே பிசாசு தன் ஆட்டத்தை தொடங்கி விட்டது.
பேய்க்கும் பிசாசுக்கும் மக்களை ஏயப்பதிலும் ஏமாற்றுவதிலும்
ஒடுக்குவதிலும் ஒற்றுமை இருந்தாலும் நேரடியாக பேய்க்கும்
பிசாசுக்கும் பிடிக்காது.ஜென்மப் பகை.

முன்பு  இருண்ட காலத்தில் பிசாசு போட்ட ஆட்டம் பிடிக்காமல்
பேயனாது பிசாசை உலுக்கோன்னு  உலுக்கிவிட்டது. இன்று
நாற்காலியில் பிசாசு அமர்ந்தவுடன் பழைய காட்டுவாசி
ஆட்டம் போடாமல்  டவுன் ஆட்டம் போடுகிறது.

இந்த ஆட்டத்துக்கு பலியாவது படிக்கும் கல்வி மாணவர்களும்
படிக்க வைக்கும்பெற்றோர்களும்தான்.

படிக்கும் மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைகழிக்கும்
பிசாசு ஆட்சிக்கு எதிராக.புரட்சிகர மாணவர் இளைஞர் முண்னனி
மனித உரிமை பாதுகாப்பு மையமும்,பெற்றோர்மாணவர்சங்கமும்
சமச்சீர் கல்வியை அமுல்படுத்து! உச்சநீதிமன்ற உத்திரவின்படி
சமச்சீர் புத்தகத்தை வழங்கு என்று போராடுகிறார்கள்

போராடினால் அமைதிபுங்காவான பிசாசுக்கு பொறுக்காதே!
காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடிக்கும்
ஏவல் மூலம் போராடும் தோழர்களை அடக்குகிறது.

கல்யாணம் செய்து நாலுனென்ன,ரெண்டு பிள்ளய பெத்து
படிக்க வச்சா,கல்வி வள்ளல்களின் கொள்ளை  தெரியும்
செல்வியா இருக்கும் பிசாசுக்கு எப்படி புரியும். பிசாசு
படித்து வந்ததோ அதி உயர்ந்த கான்வெண்ட் பள்ளி.
நாய்க்கு தெரியுமா? இது நல்ல நாள் பனை என்று!
கழுதைக்கு தெரியுமா? கற்புர வாசனை! உழைக்கும்
மக்களுக்குத்தான சமச்சீர் கல்வியின் அவசியம் தெரியும்

இந்த கல்வியில்கூட சமத்துவம் வந்துவிடக்கூடாது.
என்பதற்குத்தான் செல்வி பிசாசு அடங்க மறுத்து
அத்து மீறுகிறது.

உலக நீதி பேசும் உச்சி (அ)நீதி மனறமோ, சட்டத்துக்கு
முன் அனைவரும் சமம் என்று மக்களிடம் போதனை
சொல்லி , பல்லை கடிக்காமல்,எச்சிலை சத்தமில்லாமல்
விழுங்கி,செம்பை எடுத்து வெளியில் வைக்கிறது.

போராடும் தோழர்களோ!  மக்களை உடனே புரட்சி
செய்ய வாங்க என்று அழைக்கவில்லை.மாணவர்களை
அறிவுள்ள மனிதனாக ஆக்குவதற்கு, கல்வி ஆய்வாளர்கள்
பலர் ஒன்றுகூடி ஆராய்ந்து படைத்த சமச்சீர்கல்வியை
அமுல்படுத்து என்று கோரி போராடுகிறார்கள்.

சமச்சீர்கல்விக்கு உத்திரவிட்ட பேயாட்சியோ! சமச்சீர்
கல்வியை முழுவதுமாக அமுல்படுத்தாமல். அடுத்தும்
நாம்தானே! என்ற மப்பில் இருநததினால் மாணவர்களின்
கல்வி இழு இழு ன்னு இழுத்து செல்கிறது.

பிசாசோ,சட்டத்தின் சந்து பொந்துகளில் சென்று கறாராக
அமுல்படுத்த மறுக்கிறது. சமச்சீர் கல்வியை நான்தான்
கொண்டுவந்தேன் என்று பெருமை பேசும் பேயோ போராடாது.
அது பிசாசின் சாட்டையடிக்கு  தப்பிப்பதுக்குத்தான் போராடும்

குள்ளநரி கூட்டமும் ஓரிரு ஊளையுடன் நின்றுவிடும்.
அடுத்து சொரி நாய்களும் அடுத்த தேர்தலுக்கு ஆதாயமாக
குரைத்துவிட்டு அடங்கிவிடும்

விடாப்பிடியாக போராடுபவர்கள் யாரென்றால் தோழர்கள்தான்
பத்திரிக்கை துாண்கள் எல்லாம் தங்கள் சுதந்திரத்தை போலீஸ்
அறிக்கையைக் கொண்டு வெளியிடும்.;மெத்த படித்த மே தாவிகளோ
அமைதிப்புங்காவை குழப்புவதற்காகவே  போராடுகிறார்கள் என்று
கருத்துரை வழங்குவார்கள்.செயல் வீரர்களோ வேலை வெட்டி
இல்லாததால் இப்படி என்பார்கள். அட மடசாம்பிரானிகளே!!!

நீதி வேண்டும் என்றால் போராடவேண்டும்,சமச்சீர்கல்வி
வேண்டுமென்றால் போராடவேண்டும்..அச்சம்,அறியாமை
அகல வேண்டுமென்றால் போராடவேண்டும்.அநீதிகளை
எதிர்க்க வீரம் வேண்டும். வீரம் வேண்மென்றால் போராட
வேண்டும். போராட்டமே! வாழ்க்கையின் விதி!

அந்த விதியால் சமச்சீர் கல்வி போராட்டத்தில் 
தோழர்களுடன்  குதித்தேன். காலையில் கைது செய்து
மாலையில் விட்டுவிடுவார்கள் என்று நினைத்து அல்ல
அச்சமும்.ஒதுங்கும்போக்கும் அகல......

மாலையில் விடவில்லை. அடைத்தார்கள.சென்ட்ரல்
சிறையில் அதிகாலை மூன்று மணிக்கு. சிறை வாயிலில்
முழக்கம் போட்டதற்க்காக காவல் நாய் ஒன்று முழக்கமிட்ட
தோழரை கடிக்க பாய்ந்தது. கூட்டாக தோழர்கள் பாய்ந்ததால்
பதுங்கி ஓடிவிட்டது.அஞசாத தோழர்களின் முழக்கத்தால்
சிறை அதிர்ந்தது.மூன்று இரவும் நான்கு பகலும் சிறையில்
படிப்பதிலும் விவாதிப்பதிலும். வழக்கறிஞர் தோழர்களால்
பினையில் வந்தபோது  அச்சம் அகன்றது. போராட்ட வீரம்
விளைந்தது. அடுத்த போராட்டத்தில் தோழர்கள்.............................
நர்னும்தான் !



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...