பக்கங்கள்

சனி 15 2011

ஓட்டு பிச்சைக்காரர்களின் வேண்டுதல்களும்,பிச்சையிடதாவர்களின் முழக்கங்களும்....

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்லபபடுத்திய
எம்பெருமான் டாக்டரு சு்ப்பிர மணியின்
ஆசி பெற்ற உங்கள் வேட்பாளர் ஆகிய
நான் உங்கள் பாதம் தொட்டு பணிவுடன்
கேட்கிறேன் எனக்கு வாக்கு அளியுங்கள்

14 வயதில்பொதுஉடமை இயக்கத்தில்
பணியாற்றி பல சமூக போராட்டத்தில்
பங்கேற்று 27 முறை இரத்த தானம்
செய்துள்ளேன்.சட்டம் பயின்று மாணவர்
பெருமன்றத்தில் தமிழ் மாநில செயலராக
பணிஆற்றுகிறேன்.உங்களுக்கும் பணி
ஆற்ற எனக்கு வாக்களித்து அமோக வெற்
றியடைய உங்கள் பாதத்தை தொட்டு
வேண்டுகிறேன்.

நாட்டை காப்பது இராணுவம்
நாட்டை ஆளுவது காங்கிரஸ்
முன்னால் இராணுவ வீரன்
ஆனநான் உங்களை காக்க
மக்கள் நல திட்டத்திற்கு நிதி
உதவி பெற உள்ளாட்சியில்
நல்லாட்சி அமைய உங்கள்
பொன்னான வாக்கை கை
சின்னத்திற்கு முத்திரையிடுங்கள்

பெரியார் அணைக்கு குரல் கொடுத்த
விவசாயிகளின் தோழன்.ஸ்டெர்லைட்
நச்சு ஆலையை அகற்றிட்ட காவலர்
தமிழரின் உரிமையை மீட்டெடுக்க
அண்ணன் புரடசி புயல் வைகோ வின்
சின்னத்தக்கு வாக்கு அளியுங்கள்

தமிழகத்தில் உள்ள திராவிடகடசிகளை
ஒழித்து கட்டிட ஊழல் இல்லாத உண்மை
யான நேர்மையான பாட்டாளி மக்கள்
கட்சி வேட்பாளர்க்கு ஓட்டளியுங்கள.

எவர் துணையில்லாமல் மக்களை நம்பி
துணிந்து போட்டியிடும் விடுதலை சீ......
சிறுத்தை வேட்பாளர்க்கு ஓட்டளித்து
வெற்றி பெறச் செய்யுங்கள்

வெற்றிக்கு கை கொடுத்து எம்ஜியார்க்கு
உதவியது போல் எனக்கும் மா. கம்யுனி
கட்சி உதவுவது போல் கேப்டனின் அன்பு
தம்பிமார்களுக்கும் வாக்கு அளித்து
வெற்றி பெற உதவ வேண்டும்

உள்ளாட்சியில் மக்கள் பணி ஆற்ற
மீண்டும் தங்களுக்கு சேவை ஆற்ற
அதிகார ஆணவத்தை ஆட்டம் காண
வைக்க ஆதரிப்... பீர்...உதய சூரியன்

ஏழை எளிய மக்களக்கு இலவச அரிசீ
ஆடு,மாடு,கிரைண்டர்,பேன்,மிக்ஸி
தாலிக்கு தங்கம் தொடர்ந்து கிடைத்திட
15 ஆண்டுகால அராஜக கங்கலிருந்து
உள்ளாட்சீயை மீட்டிட, மக்களின் அடிப
படை பிரச்சினையை தீர்த்து கட்டிட
அம்மாவின் ஆசி பெற்ற நிரந்தர
வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு
அளியுங்கள்

இந்தியாவின் ஊழல் வளர்ந்தது
யாரால்? ஊழலை சமூக குற்றமாக
நினைக்காத மக்களால் அஞ்சு வருஷம்
ஆட்சியில் இருந்தார் நல்லா சம்பாதித்தார்
அஞ்சு வருஷம் திருடினார் என்று சொல்
வதில்லை. கட்சி காரங்க வந்தால்
பெரிய அளவில் மாற்றம் இருக்காது
சுயேச்சைதான் போராடி வருவார்கள்
சுயேச்சை ஜெயித்தால் நல்லது நடக்கும்
ஆகவே,இந்த சுயேச்சைக்கு சுயேச்சையாக
நீங்கள் வாக்களித்தால் நீங்கள் வெற்றி
பெறுவீர்கள்

உங்கள் வாக்கை விற்பனையாக்கதீர்கள்
வாக்காளிக்காமல் இருந்துவிடாதீர்கள்
வாக்களிப்பது நம் ஒவ்வொரு குடி மகனின்
கடமை.அந்தக் கடமையை நிறைவேற்ற
மறவாதீர்கள்.ஊராட்சீ,நகராட்சீ,மாநகராட்சீ
உள்ளாட்சி நிர்வாகங்கள்

உள்ளுரை கொள்ளை அடிக்க
ஒரு ஏற்பாடு உள்ளாட்சி தேர்தல்
ஜனநாயகத்தை பரவலாக்குவது
என்பது பம்மாத்துதான்
ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சி
யாராட்சி வந்தாலும் நாறித்தான்
கிடக்குது ஏழைகளின் பொழப்பு
புறக்கணியுங்கள் உள்ளாட்சி
தேர்தலை..............................
தேர்தல் பாதை திருடர் பாதை
நக்சல் கிராம பாதையே
விடுதலைக்கான புரடசி பாதை

செவ்வாய் 11 2011

யார் விவரமானவர்கள்?

ஒருமுறை மூன்று நண்பர்களுக்கிடையே காரசாரமான
விவாதம் நடந்தது.

அதில் ஒருவர் சொன்னார். மக்கள் எல்லாம் முட“டாள்கள்
இல்லை. அவரவர் வளர்ச்சி மட்டங்களுக்கு தக்கப்படி விவர
மாகத்தான் இருக்கிறார்கள்.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
அவர்கள் கொடுக்கிற இலவசங்களை வாங்கிக் கொண்டு சந்
தர்ப்பகேற்றபடி வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள்.
சுயநலமே.தன் நலம் என்று பிழைக்க தெரிந்தவர்களாகத்தான்
இருக்கிறார்கள் என்றார்.

மற்றொருவர் சொன்னார்.படித்தவர்கள்தான் விவரமாக
இருக்கிறார்கள். படிக்காதவர்கள் இன்னும் அடி முட்டா
ளாகத்தான் இருக்கிறார்கள்.எந்தக் கட்சி ஆளுது.விலை
வாசி,அடக்குமுறைதெரியவில்லை. இவர்களை வைத்து
தான் எல்லா ஊழல் கட்சிகளும் தங்களுடைய ராஜபாட்டை
செவ்வனே நடத்துகின்றன.இந்த மக்களும் செக்குமாட்டுத்
தனமா. ஓட்டையும்போட்டுவிட்டு பேசாமல் வெந்ததை
தின்டு விதி வந்தால் சாவோம் என்ற கணக்கில்தான் தங்கள்
வாழ்நாளை ஓட்டுகின்றனர்.இவர்களுடைய அறியாமையை
யும் மடத்தனத்தையும் ஒவ்வொரு கட்சி வேட்பாளாரும்
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
எனவே வேட்பாளர்கள்தான் விவரமானவர்கள் என்றார்.

மூன்றாமவர். வாக்காளர்களில் எல்லோருமே அறிவாளிகள்
கிடையாது.தற்குறிகள்தான் அதிகம்.வேட்பாளர்களில் ஒரு
சிலரைத்தவிர பெரிய அறிவாளிகள் கிடையாது. அவர்களுக்கு
சேவை மனப்பாண்மையெல்லாம் எதுவும் கிடையாது.பதவி
யும் புகழும்தான். சொத்து சேர்ப்பதற்கும் சேர்த்த சொத்தை
பெருக்குவதற்கும்தான் தேர்தலை பயன்படுத்திக் கொள்கி
றார்கள் என்றார்.

இந்த மூன்று பேர்கள் சொல்வதில் எது உண்மை? யார் விவர
மானவர்கள். எனக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருக்குங்க.
நீங்க என்ன சொல்ல வரீங்க. கொஞ்சம் விளக்கு மாத்துல
விளக்குங்களே!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...