பக்கங்கள்

சனி 19 2011

அதிகாரம் அவர்கள் கையில்!!!

கார்த்திகை மாதம்
பனியும் துவங்கிவிட்டது
அய்யயோ அப்பனுக்கு
விரதமிருக்கும் காலமும்
துவங்கிவிட்டது.

பனிக்கும் விரதத்திற்கும்
கதகதப்பாக தமிழகத்து
ஆத்தா ரங்கநாயகியின்
அருளும் துவங்கி விட்டது

ஆடு மாடு,பேன்,மிக்ஸி
கிரைண்டர் இலவச அரிசி
அருளாக பெற்றவர்கள்
பால்,பஸ் விலை உயர்வை
அருளாக பெற்றனர்.

பெரும்போது இருக்கும் இனபம்
கொடுக்கும்போது இருப்பதில்லை
இது தமிழகத்து மக்களின்
நீங்கா நிலை.

இப்போது குமுறினாலும்
மறித்தாலும் ஒன்னும்
ஆகிவிடப்போவதில்லை
 குமுரலையும் மறியலையும்
விரட்டியடிப்பதற்குதான்
எப்போதும் ஒரு பட்டாளம்
தயராக இருக்கிறது.

ஒவ்வொரு திருவிழாவின்
போது மதி மயங்கித்தான்
போய்விடுகிறீர்கள்
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
என்றுலில்லாமல்
மீண்டும் பழையனவற்றையே
புகுத்தி விடுகிறீர்கள்

அய்ந்து வருடத்திற்கோர்முறை
வரும் திருவிழாவில்-அவர்களின்
புாசாரித்தனமும் வேண்டாம்
அவர்கள் கொடுக்கும் பொங்கச்
சோறும் வேண்டாம்- மறுத்திடுங்கள்
என்று புரிந்தவர்கள்.அறிந்தவர்கள்
நல்லவர்கள் சொன்னபோது

ஒருநாள் பொங்கின பொங்கச்
சோற்றுக்காக வரிசையில் நின்று
அங்கீகாரம் கொடுத்தீர்கள்
பெருவெள்ளமாய் இல்லாமல்
சிறுதுளியாய் இருந்தவர்கள்
சொன்னார்களே! அங்கீகாரம்
வழங்குவதை புறக்கணியுங்கள்
என்று ! சொன்னதைபுறக்கணித்ததால்
இத்தனைக் கொடுமைகள்

இன்னும் கொடுமைகள் தொடரும்
அரங்கேரும் அங்கீகாரம் கொடுப்பது
நிறுத்தாதவரை...... இதை புரிந்து
திடமனதுடன் செயலில் இறங்கும்
வரை... அதிகாரம் அவர்கள் கையில்
.............................


வியாழன் 17 2011

நீதி அரசர்களின் உத்திரவை.கப்பல்படை தளபதிகள் நிறைவேற்றுவார்களா?

உச்சநீதி மனற உத்திரவாக இருந்தாலும்சரி உயர்நீதிமனற உத்திரவாக இருந்தாலும் சரி, அந்த உத்திரவு சாமானிய மக்களுக்கானதாக இருந்தால் அந்த உத்திரவு மலம் துடைக்கும் காகிதமாக அரசு அதிகாரிகளால் பாவிக்கப்படும்.அந்த உத்திரவே மேல் சனங்களுக்கோ அல்லது அரசு எந்திரத்துக்கோ சாதகமாக இருந்தால் அந்த காகிதத்துக்கு பெரிய சக்தி இருப்பதாக காட்டப்படும்.அந்த காகிதத்தைக் கண்டு நீதிமனற உத்திரவுக்கு கீழ்படிந்து பயந்து நடுங்குவது போல் ஒரு பம்மாத்து வேலையே நடக்கும் வேசியின் ஊடகங்களும் வானத்துக்கும் எம்பி எம்பி குதிக்கும்.

இவர்கள் சொல்லிக்கொல்லுகிற சனநாயக ஆட்சியில் யார் அதிகாரம் படைத்தவர்கள், ஓட்டு பெருக்கி அதில் வெற்றியடைந்து அதன்மூலம் அமைச்சர்களாக எம்பி,எம்எல்ஏவாக வருகிறவர்களா? தலையாரிலிருந்து மாவட்ட ஆட்சியர்வரை இருக்கும் மாவட்ட நிர்வாகமா? சட்த்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதாக சொல்லும் போலீஸ் துறைய்யா? அல்லது எல்லா பிரச்சைகளுக்கும் ஒரே தீர்வாக தீர்ப்பு சொல்லும் நீதிமன்றமா? இவர்களில் யார் அதிகாரம் படைத்தவர்கள் என்பது பற்றிய சர்ச்சைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை தீர்வும் ஏற்ப்படுவதாகவும் இல்லை.

இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது அன்றாட நிலைமையாகிவிட்டது.
தமிழகத்தில் ஆத்தாவால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
பிரதமருக்கு பல கடிதங்கள் போட்டும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

தற்போது. மதுரை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக உத்திரவு
பிறப்பிக்கப்பட்டள்ளது. அது இந்திய கப்பல் படையும்,கடலோர காவல்
படையும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று.

இந்த உத்திரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு,மத்திய தேசிய ஆலோசகர் சிவசங்கர்மேனன் மற்றும் 5அதிகாரிகளால் மலம் துடைக்கும் காகிதமாக
பாவிக்கப்பட்டதால். அவர்கள் அடாது இருப்பினும் இவர்கள் விடாது மனு
செய்து நீதி மன்ற அவ மதிப்பு தொடங்கப்பட்டு வழக்கு விசாரனைக்கு
வந்தது.

இந்நிலையில்தான் இந்த உத்திரவை ரத்து செய்யக்கோரி கடலோர காவல்
படை ஜெனரல் மனுதாக்கல் செய்துள்ளார். “ஏனைய்யா,இந்த உத்திரவ அமுல்
படுத்தல என்று கேட்டால்.படகில் கடலில் சுற்றி வருவது மாதிரி தலையை
சுத்தி மூக்கை தொடுகிறார்.

எல்லை தாண்டி செல்லும் மீனவர்களின் படகுகளை பயன்படுத்தி தீவீரவாதிகள் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும், எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது.மீனவர்களிடம் அதிநவீன தொடர்பு சாதனங்கள் இந்தபோதும் தங்களை. அழைப்பதில்லை.. எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தக்குதலுக்கு உள்ளாகும்போது இந்திய கடற்படை சென்றால் அது பிற நாட்டின் இறையான்மையில் தலையிடுவதாகும் என்கிறது..இதோடு விட்டார்களா?
என்றால் அதுதான்இல்லை. கடைசியாக முத்தாய்ப்பாக.மீனவர்களின் வாழ்வுதாரங்களிலே கைவைக்கிறார்கள்.. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டுமானால் “மீன்பிடி இல்லாத மண்டலம் உருவாக்கி, மீனவர்கள் நுழைவதை தடுக்கலாம். இது எப்படி இருக்கு.பட்டு.கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டபாக்குக்கு விலை சொன்ன கதை மாதிரி..

அதாவது விவசாயிகளை விவசாயத்தை விட்டு துரத்தியடித்தது மாதிரி மீனவர்களை மீன்பிடி தொழில்ல இருந்து விரட்டியடித்து மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து காப்பாற்றிவிடலாம். இதைத்தான் நரித்தனமுன்னு சொல்லுவாங்க.

ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் ஒரு எல்லைக்கோடு வைத்திருப்பார்கள். அந்த ஊரிலிருந்து இந்த ஊரு வரைக்கும்  இந்த போலீஸ்
நிலையத்துக்குன்னு பிரித்து இருப்பார்கள். ஏதாவது பிரச்சினை என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு சென்றால் இது எங்க எல்லை இல்லை அந்த போலீஸ் நிலையத்துக்கு செல்லுங்கள் என்று இரு போலீஸ் நிலையங்களும் அலைய வைத்திருப்பார்கள்.கடைசியாக ஒரு நிலையத்தில் புகாரை பெற்றுக்கொள்வார்கள். மக்களை அடக்குவதில் மட்டும் இந்த எல்லை
பிரச்சனையை தொடமாட்டார்கள்.இதே மாதிரி குடியிருக்கும் வீட்டிற்க்கும் நான்குமால்கள் என்று சொல்லப்படுகின்ற எல்லைக்கல் இருக்கும்.
அடையாளத்துக்காக குத்துக்கல் ஊன்றப்பட்டு இருக்கும் அதற்கான ஆவனம் மற்றும் புலப்படம் இருக்கும். இந்த மண்தரையில் இவ்வளவு அடையாளம் இருந்தும் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தீர்க்கப்படாமல் குவிந்து கிடக்கும் நிலையில்

பரந்துவிரிந்த கடலில் எந்த அளவு குத்துக்கல்லை நட்டு வைத்து மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்..ஆளும் கும்பலுக்கும் சாதகமாக இருந்தால் சர்வதேசகடல் பிரச்சினையாவது எல்லை பிரச்னையாவது. எந்த விதியும் கிடையாது. அதுவே சாமானிய மக்களாக இருந்தால் விதி,எல்லை அளவு என்று எல்லா மயிறும் களத்தில் வந்து நிற்க்கும்.

ஏற்கனவே, தமிழக மீனவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என்று மனித உரிமை பாதுகாப்ப மையம் மதுரை கிளை இதே மன்றத்தில் வழக்கு போட்டது. ஓரிரு விசாரனைக்குப்பின் அவ்வழக்கு கிடப்பில் போடப்பட்டது சமாதி கட்டுவதுதான் பாக்கி இருக்கிறது. இதே மாதிரி ஒவ்வொரு வழக்கிலும் உத்திரவு போடுவது.அதை அமுல் படுத்தாத அதிகாரிகளுக்கு மறு உத்திரவு போடுவதும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமுல்படுத்த மறுத்து திசை திருப்புவது ஒத்தி போடுவது இப்படியே ஒத்தி போட்டு வழக்குகள் தேங்குவதும்.  பிறகு மலத்தைவிட மலம் துடைக்கும் பேப்பர்கள் பெருகுவதும்தான் தீராத நிலையாக உள்ளது.பிறகு இந்த மலம்துடைக்கும் பேப்பர்களின் எண்ணிக்கையை வைத்து இந்தியா வல்லரசாகிறது என்று கூப்பாடு போடுவதுமதான் நடக்கிறது..

செவ்வாய் 15 2011

டாஸ்மாக்கின் அருமைகளும்,பெருமைகளும்!!!

உறவுக்கார மணமகனுக்கு
பெண் பார்க்க சென்றதில்
மணப்பெணணுக்கு மாப்
பிள்ளையை பிடிக்கலையாம்

எந்த கெட்ட பழக்கமுமில்லாத
நலழொழுக்கம் நிறைந்த மாப்
பிள்ளையை பிடிக்காத காரணத்தை
கேட்டபொழுது நல்ழொழுக்கம்
இருந்தென்ன பயன் டாஸ்மாக்
குடிமகனாக இல்லாதது பெருங்
குறையாம்.

இது கேட்டு விரக்தியடைந்த மாப்
பிளளையோ, வெகுண்டெழுந்து
சென்றார் டாஸ்மாக்கை நோக்கி
குடிமகனாகவதற்க்காக..................

                         ---------------------

அயல்நாடு சென்ற பயணியிடம்
எந்நாட்டு குடிமகன் என்று
வினவினார் அந்நாட்டு அதிகாரி
பயணியோ நெஞ்சை நிமிர்த்தி
சொன்னார் பெருமையாக யாம்
டாஸ்மாக் குடிமகனென்று!!!!
                           ----------------

திருடன் ஒருவன் சக திருடனிடம்
கேட்டான்.அவனை ஏன்?
காவலர்கள் அடித்து இழுத்து
செல்கிறார்கள்.திருடியதில்
பங்கு கொடுக்காததினாலா ?

சக திருடன் சொன்னான்.
இல்ல மச்சி. டாஸ்மாக்
இருக்கும் தெருவில் குடிக்காமல்
நெஞ்சை நிமிர்த்தி சென்றனாம்
அதற்க்காகத்தான் நம் பங்காளிகள்
அடித்து இழுத்து செல்கிறார்கள்

ஞாயிறு 13 2011

முன்னால் உலக வங்கி அதிகாரியின் அறிவுரை

மாணவர்களே!
                              என்னைப் போல் நீங்கள் உலக வங்கியில் பணியாற்றி பின் இந்தியாவில் நிதியமைச்சராக இருந்து பின் பிரதமராக பணி செய்து வருகிறேன்
நான் நிதியமைச்சராக இருந்த காலந்தொட்டே நான் பணியாற்றிய உலக வங்கிக்கும் அதன் தலைமை பீடமான அமெரிக்காவுக்கும் மிகவும் விசுவாவமாக நடந்துள்ளேன்.அப்படி நடந்ததினால் இன்றைக்கு பிரதமராக இருந்து உங்களுக்கு அறிவுரை கூறும் பிரதமராக என் வாழ்க்கையை வளமாக்கியுள்ளேன் .என் விசுவாசத்துக்கு அறிகுறியாக ஒருநல்ல அடிமைக்கு
அறிகுறியாக அமெரிக்காஅங்கு மூச்சுவிட்டால் நான் இங்கு தும்முவேன்.என் பிறந்த நாளை வானிலே கொண்டாடி மகிழ்ந்தேன். மாவீரன் பகத்சிங் பிறந்த
மண்ணில்தான் நானும் பிறந்தேன. அவர் வேறுவழியில் மாவீரானார்.நான்
உலக வங்கிக்கும் அமெரிக்காவுக்கும் நம்பகமான விசுவாசமான அடிமையானேன். ஆகவே,மாணவர்களே! நன்கு படித்து வளமான வாழ்க்கையை உறுதி செய்து கொள்ளுங்கள். நான் இந்தியாவின் அனைத்து
வளங்களையும் தனியார்க்கு தாரைவார்த்து உலகமயமாக்கல் எனும் அத்தியாயம் படைத்துவிட்டேன்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...