பக்கங்கள்

சனி 10 2011

தெரிந்த உடம்பும்,தெரியாத ஆன்மாவும்....

வலிகளை போக்குபவனுக்கு
 வலி ஒரு சான் வயிற்றுக்குள்
 இவ்வளவுகொடூரம் வலியினை
உணர்ந்ததால் துடிக்கிறேன்.

இந்த வலியினை எனக்கு
உணர்த்தியது எது?
சத்தியமாக ஏழாவது
அறிவு இல்லை!
அப்படியென்றால்
ஆறாவது அறிவா
கத்தான் இருக்குமோ?

ஆறாவது,ஏழாவது
எண்க்கும் அறிவுக்கும்
என்ன தொடர்பு என்பது
எனக்கு தெரியாது.

ஆதாரத்தைக் கொண்டு
அறிவதுதான் பகுத்தறிவு
 என்பது உங்களுக்கு
தெரியுமா? பராவாயில்லை
அறிந்து கொள்ளுங்கள்

மூடநம்பிக்கை என்பது என்ன?
ஆராயாமல் ஏற்றுக்கொள்வது
ஆராய்ந்து ஆதாரத்தை ஏற்றுக்
கொள்வது பகுத்தறிவுதானே!!

பகுத்தறிவு பெற்ற ஒரே
உயிரினம் மனிதான்.
பகுத்தறிவு பெற்ற மனித
மிருகங்கள் செய்யும்
அடாவடித்தனங்களை

சொல்லாலும் சொல்லி மாளாது
ஏட்டில் எழுதினாலும் தீராது

மனிதர்களில் ஒரு பிரிவினரை
தீண்டாமையில் ஒதுக்கி வைத்தாரே!

உடலில் தோன்றும் வலிகளும்
தீண்டாமை உடலென்று ஒதுங்கி
தான் போவதுயில்லையே............

அழியும் உடல் நிலையற்றது
நிலைக்கும் ஆன்மா என்பாரே!1

வலி எப்படியிருக்கும் தெரிந்த
உடம்புக்கு தெரிந்தது.தெரியாத
ஆன்மா எப்பிடி இருக்கும்
பகுத்தறிந்து சொல்வீரா,,,,,,,,,,,,???



வியாழன் 08 2011

இருக்கிறவன் செம்மையா இருந்தா..... சிரைக்கிறவன்.நல்லா சிரைப்பான்ல.

மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடியென்றால்தமிழனுக்கு நாலு பக்கமும் இடி,.இடைவெளி இல்லாமல் எட்டு திசையிலும் இடி என்பதுதான் பொருத்தமாயிருக்கும்.

தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகளும் சரி.ஆளாத கட்சிகளும் சரி.எல்லாமே கஞ்சிக்கு செத்த தமிழனுக்கு துரோகமே செய்துள்ளன. செய்து வருகின்றன.

நீதி.நேர்மை,தியாகம்.ஒப்புக்குக்கூட. இல்லை மாநில கட்சிகளும் சரி,
தேசஒற்றுமை,தேசப்பற்று வெண்ணெய்.வௌக்கெண்னெய் என்று சொல்லு
கின்ற தேசிய கட்சிகளுக்கும் மயிரளவு இல்லே என்பதுதான் உண்மை.

முல்லைபெரிய ஆறு பிரச்சினையில் அகில இந்திய கட்சிகளான காங்கிரசு,பிஜேபி,இடதுவலது கடசிகளின் பித்தலாட்டமே அதற்கு
சாட்சி. சாட்சியாவது புடலங்காயாவது எல்லாம் உங்களுக்கு தெரியும் என்றாலும் தெரிந்தும் மௌனமாக இருந்து மறந்து விட்டுறாங்கள
அவுகளக்கு சொல்லித்தானே ஆகனும்.

கேரள மக்களுக்காக.தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்து அனுப்பும் உணவு தானியங்கள்-காய்கறிகள் முதலானவற்றக்கு தேவையான
நீரின்அளவையாவது தமிழகத்துக்குதரவேண்டும் என்ற நியாய உணர்வு கூட  தேசியம் பேசும் கட்சிகளிடம் இல்லை.

மிகப்பெரிய வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளது என்று அறிக்கை கொடுத்தும் அனையில் நீர்கசிவுக்கான ஆதாரத்தை விளக்கி
யும் நான் பிடித்த முயலுக்கு மூனு காலுன்னு வாதம் செய்வதுதான்  இவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இவர்களே,ஏற்றி பாடும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு கூறிய பின்னரும் இரு மாநில அரசுகளும் இனைந்து இணக்கமாக பேசி தீர்க்கவேண்டும் என்று உபதேசம் செய்வது.எவ்வளவு பித்தலாட்டம். அலுத்து செலுத்து
வந்தவன,இழுத்து போட்டு சிரைப்பானாம் அந்த பழமொழிமாதிரிதான் இருக்குது. தேசியக்கடசிகள் சொல்லுவது.

ஊருக்கு இளைத்தவன் தமிழனாக இருப்பதால்தான் எட்டுதிக்கும்குத்துபட்டு.அல்லல் படுற நிலமை எற்பட்டுருக்குது. கல்தோன்றி
மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய தமிழினம் என்ற வீண் பெருமையில்தான் முக்கி இருப்பதால்தான் எட்டுதிசையிலிருந்தும இந்த லொள்ளு,

பச்சைதமிழன்.செந்தமிழன்.வீரத்தமிழன்புரட்டுதமிழன்.சாதிவெறித்தமிழன்.சுயநலத்தமிழன்.சிந்திக்க மறுக்கும் தமிழன். ஓட்டு போடுவதைத்தவிர வேறு எதையும் அறியாத தமிழன்.ஏமாற்றுவதையே தொழிலாக் கொண்ட
தமிழன்.ஏமாறுவதே தன் பிறப்புரிமை கொண்டதமிழன். இவற்றையேல்லாம் மூட்டைக்கட்டி இந்தீய பெருங்கடலில் பெட்ரோல் ஊற்றி
எரித்துவிட்டு.......உதப்பானுக்கு உதப்பனாக இருந்தா...உடனே வெளுப்பான்.. கோடி வெள்ளை என்பது மாதிரி.............................................

இருக்கிற நாம செம்மையாக இருந்தால்தான சிரைக்கிறவன் ஒழுங்கா சிரைப்பான் என்பதை நெஞ்சிலேற்றி.....நமது நியாய உரிமைகளை
மறுக்கிற கேரள மாநிலத்திற்கெதிராக.............

பரம்பிக்குளம்-ஆழியாறு-மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரள்த்துக்கு செல்லும் தண்ணீரை மறுப்பது..தமிழகத்து வழியாககேரளத்துக்கு
செல்லும் சாலைகள் சபரிமலை உள்பட மற்றும்  இரயில் போக்குவரத்தை மறிப்பது

கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் எவ்வளவு நமக்கு முக்கியமோ அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம்
அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை இனவெறியில் முழ்கிய கேரள மக்களுக்கு உணர்த்தவேண்டும்

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைபடுத்த மறுக்கிற,வக்கற்ற மத்திய அரசின் எந்த அதிகாரத்தையும் ஏற்காமல் மத்திய அரசின் அனைத்து அலுவலங்களையும் நீதிமன்றங்களையும் இழுத்து மூடவேண்டும்

மத்திய அரசுக்கான வரிகளை செலுத்த மறுப்பதன் மூலம் நாம் செம்மையாக
இருந்தால்தான். சிரைக்கிறவன் நல்லா சிரைப்பான் மாதிரி தமிழகத்தின் நியாய உரிமையை நிலை நாட்ட முடியும்

திங்கள் 05 2011

ஆசையே....அலை..போலே...,நாமம்தான் அதன் வேலே.....

பஜாஜ் ஆலியன்ஸ் இன்ஸ்சுரன்ஸ் 
கம்பெனிக்குஉழைத்த பணத்தையெல்
லாம் கட்டி.அக் கம்பெனிபோடும் நாமத்தைப்
பெற்று கவலையின்றி வாழ்வீர்என்று பணம் 
கட்டி ஏமாந்த அன்பர்களுக்கு பஜாஜ்
அலியன்ஸ் நிறுவனம் கூறும் அறிவுரை.

எனக்கு தெரிந்த ஒருவரு, அவரு,
அவருக்குதெரிந்தஒருவரின் மூலம் 
பாஜாஜ் ஆலியன்ஸ்முகவர் மூலம்அந்த
 முகவர் சொன்னதில் ஆசை கொண்டு.
வருடத்திற்குபணிரெண்டாயிரம் வீதம் 
எட்டு வருடத்திற்கு கட்டினால் முதிர்வு
 தொகைஒருலட்சத்து அய்ம்பது ஆயிரம்
கிடைக்கும் என்றார்.

எனக்கு தெரிந்தவரும் உழச்சு என்னத்த
கண்டோம்இதையாவது சேமிப்போம்.
ஆசையில் அடித்துசெல்லப்பட்டு,கஷ்டத்
தோடு மூன்றுவருட்ம்தொடர்ச்சியாக பாலிசி 
பணத்தை கட்டிட்டு வந்திருக்காரு.

இடையில் விலைவாசி ஏற்றம் ,வருமானம்
குறைவு போன்ற காரணங்களால் இரண்டு
வருடம் பாலிசி தொகையை கட்டாமல்
விட்டுட்டாரு,

குடும்பத்தில் செலவும் வறுமையும் அதிகரித்த
படியால். கட்டியவரையில் உள்ள பணத்தை
வச்சு சமாளிக்கலாம் என்ற திட்டத்துடன்
பஜாஜ் அலியன்ஸ் நிறுவனத்தை அனுகி
இருக்கிறார்.பாலிசி எடுத்த பாண்டு பத்தரத்தை
 சரண்டர் செய்தார்.காசோலை வீட்டிற்கு
வரும் என்று சொல்லியதைக்கேட்டு காசோலை
யை எதிர்பார்த்து காத்திருந்தார்.

ஒரு நாள் காசோலையும் வந்தது. மகிழ்ச்சிடன்
வாங்கிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி.பண்ணிரெண்
டாயிரம் வீதம் மூனறு வருடத்திற்கு கட்டிய
தொகைமுப்பத்தியாறாயிரம். காசோலையில்
வந்ததோ.பத்தாயிரம். அதிர்ந்து போயி,நிறு
வனத்தில் கேட்டபோது

தொடர்ச்சியாக கட்டாததாலும்.உங்க சேமிப்பு
பணம் சேர் மார்கெட்டில் டவுணாகி விட்டபடி
யாலும்.அதெல்லாம் போக மீதியை அனுப்பி
யிருக்காங்க என்றார்கள்

இவரும் விடாமல் சேர்மார்கெட்டப்பத்தி
புரிந்து கொண்டதால் பஜாஜ்ஆலியன்ஸ்
தமக்கு நாமம் போட்டதை புரிந்து கொண்டார்

பாலிசியில் சேரும் பணம் சேர்மார்கெட்டில்
இறக்கி விடப்படும்போது வீழ்ச்சியடைந்தால்
நிறுவனம் பொருப்பேற்காது என்றும் அந்த
விதிமுறையை ஏற்றுக்கொண்டு கையெழுத்தும்
போட்டுள்ளதால் தன்னால் ஒன்றும் செய்ய
முடியாது என்று தெரிந்து கொண்டார்.

நாமம் பெற்ற விபரத்தை என்னிடம் கூறி எதுவும்
செய்யமுடியாத என்று கேட்டார்.

போலீஸ் நிலையத்தில் அடித்து உதைத்து பெற்ற
வாக்குமூலமே செல்லாது என்று நீதீ மன்ற சட்த்
தில் இருந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை
சட்டமே இப்படிபட்ட கம்பெனிகளுக்கதான் இருக்
கிறது என்றும் அரசு துறையான எல்.அய்.சி 
கொள்ளைக்காரன் என்றால் தனியார் துறைகள்
பகல் கொள்ளைக்காரர்கள் என்று எடுத்துரைத்தேன்

தாராளமயமும்,தனியார்மயமும் எப்படியெல்லாம்
ஏழை,எளிய,நடுத்தர மக்களை ஆசை வலையில்
சிக்க வைத்து ஏமாற்றி கொள்ளையடிக்கின்றன
நாமும் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும்
ஏமாறாமல் இருக்க முடியாது..ஒரு தடவை
ஏமாந்து அனுபவப்பட்டவுடன் சுதாரிக்கமுடியும்
நீங்கள் மட்டும் ஏமாறவில்லை.பலர் ஏமாந்திருக்
கிறார்கள்.அதைக்கண்டு ஆறுதல் அடையலாம்
என் சொந்த பிரச்சினைகளில் நான் ஏமாந்த
விபரத்தை கூறினேன்.

முகவரரை தேடி விசாரித்தபோது முதலில்
சேர் மார்கெட் பற்றி எனக்கு எதுவும்.தெரியாது
பின்னர்தான் தெரிந்து கொண்டேன் என்றார்

நான் எதுவும் பாலிசி போட்டு ஏமாந்திருக்கனா
என்று கேட்டார்.

நான் பிறந்ததலிருந்து என் வாழ்க்கையே போராட்டம்
தான். நாளைய வாழ்க்கையை எண்ணி என்னால்
சேமிக்க முடியுமா? என் பிரச்சனையெல்லாம்
உங்களுக்கு தெரியுமே! எப்படிடா சமாளிக்கிற
என்று எத்தனை தடவை என்னை கேட்டு இருப்பீங்க
என்றேன்.

அவர் எதிர் கேள்வி எதுவும் கேட்காமல் தன் நெற்றியை
பலமாக துடைத்துக்கொண்டார்....

ஞாயிறு 04 2011

தனுஷ்மதியின் இறப்புக்கு காரணமானதை தண்டிக்க முடியுமா???

பரவை முனியம்மாவின் ஊரைச் சேர்ந்தவர்
சரவணன். இவரது எட்டு மாத குழந்தை மீது
புானை ஒன்று ஜன்னல்வழியாக புகுந்து
டீவி மீது தாவி குதித்ததால் டீவியானது
ஸ்டாண்டுடன் அருகில் படுக்க வைக்கப்
படடுருந்த குழந்தையின்மீது விழுந்தது
அலறி துடித்த குழந்தையின் சத்தத்தைக்
கேட்டு ஓடிவந்த பெற்றொர்கள் குழந்ததை
யை துாக்கிக்கொண்டு அரசு மருத்துவ
மனைக்குகொண்டு சென்றனர். வழியிலே
குழந்தை இறந்தது.அந்தக்குழந்தையின் 
பெயர் தனுஷ்மதி.

மனநிலைமற்றும் வலிப்பு நோய்பாதிப்பு 
உள்ளவர்கள் கொலையே செய்தாலும்
தண்டிக்கமுடியாது என்று உச்சநீதி மன்றம்
ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியிருக்கிறது.

எட்டுமாத குழந்தை தனுஷ் மதியின் 
இறப்புக்கு காரணமான புானையை(cat)
தண்டிக்கமுடியுமா????

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...