பக்கங்கள்

சனி 03 2015

தெரிந்த பிசாசும்...தெரியாத தேவதையும்...


மஹிந்த ராஜபக்ஷ மைத்ரிபால சிறிசேன
படம்- BBC தமிழ்
ஈழத் தமிழரின் ரத்ததை குடித்த  பிசாசு ... மீண்டும் மிச்சம் சொச்சமுள்ள ஈழத்தமிழரின் ரத்தத்தை குடிக்க தினவெடுத்து  கொலைகளத்தில்  குதித்து உள்ளது.

அந்த காட்டேறி தான் செய்த பஞ்மா பாதகங்கான இலங்கையின் கொலைக் களங்கள்-2 பற்றி எந்தவொரு பயமும் இல்லாமல் திமிராக  ஈழத்தமிழர்களிடம் வந்து உங்களுக்கு தெரிந்த இந்த பிசாசுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுள்ளது.

அந்த பிசாசு ஒரு பொன்மொழியையும் கக்கி உள்ளது. தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு மேல் என்று தனக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள எதிர்க்கட்சி வேட்பாளர்களை பற்றிக் கூறியுள்ளது.

தெரிந்த பிசாசு தெரிந்தே கொல்லும், தெரியாத தேவதை தெரியாமல் கொல்லும் என்பதே ஈழத்தமிழரின் மொத்த அனுபவமாக இருக்கிறது.

வெள்ளி 02 2015

ஒங்க கட்சிக்கு வந்தா. எங்களுக்கு.என்ன கிடைக்கும்.....???


படம்--adirainirubar.blogspot.com
நாங்க.........டாஸ்மாக்க குடிச்சு.. ஈரக் கொல அழுகி செத்தாலும், போலீசுகிட்ட நாய் அடி. வாங்கி.....நான்டுகிட்டாலும்  ஓங்க கட்சிக்கு வர மாட்டோம்...

................?????????????????

ஏன்னா...ஏன்னா... ஓங்..கட்சிக்கு வந்தா.... டாஸ்மாக்கும்.....பிரியாணியும் கிடைக்காதே....

வியாழன் 01 2015

ஆங்கில புத்தாண்டில் இந்த சாமனியனின் புத்தாண்டு வாழ்த்துரை.



படம்--www.thenkoodu.in


அன்பு நண்பர்களே..!
எல்லா வளமும்
பெற்று பெரு
வாழ்வு வாழ
தாங்கள் புத்
தாண்டு வாழ்த்து
கூறி உங்கள்
கடமையை முடித்து
விட்டீர்கள்.................

தங்களின் வாழ்த்துகளில்
வெறுமனமே பலிக்காத
நிகழாத அந்த
வாழ்த்துக்களை போல்
நானும் புத்தாண்டு
வாழ்த்துக்களைச் சொல்லி
முடித்துக் கொள்ள
 விரும்பவில்லை..அதனால்
தான் புத்தான்டு
வாழ்த்துக்கள் கூறவில்லை.

இந்தப் புத்தாண்டில்
தமிழ்நாட்டு தமிழர்களுக்கு
தமிழ்நாட்டு அரசு
புத்தாண்டு பரிசு
ஒன்று வழங்கியிருப்பது
தெரியுமா...??

இருந்தாலும் அரசு
வழங்கிய  புத்து
ஆண்டு பரிசு
என்ன என்று
தெரியுமா...??






15 சதம் மின்
கட்டணம் உடனடியாக
அமுலுக்கு வந்துவிட்டது.
3400 கோடி கூடுதல்
பணம் உங்களைப்
போன்ற என்னைப்
போன்ற மக்களின்
தலையில் புத்தாண்டு
பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் கூடுதல்
விலைக்கு வாங்கி
தனியார் மின்
நிறுவனங்களை கொழுக்க
வைக்கவே இந்த
மின்கட்டன உயர்வு
என்பது உங்களுக்கு
தெரியாமல் போனது
 தகவல் தொடர்பு
வளர்ச்சியின் கோளாறு
என்று தெரிகிறது.

இதில் தனியாரிடம்
அதிக விலைக்கு
வாங்கி கார்பரேட்
நிறுவனங்களுக்கு
நம்மைவிட குறைந்த
விலையில் தடையற்ற
மின்சாரம் வழங்குகிறார்கள்.

இதில் ஒரு வேடிக்கை
என்ன என்றால்
மின்சார ஒழுங்கு
முறை ஆணையம்
என்று ஒன்று.........

அது .......
மக்களிடம் கருத்து
கேட்பு  நாடகத்தை
நடத்தி மின் கட்டணத்தை
வருடம் தோறும்
உயர்த்து விற்பதற்க்காகவே
அது இயங்குகிறது.

இப்படி.....
ஒவ்வொரு முறையும்
மின்கட்டன உயர்வு
ஏற்றப்படும் போது
எல்லாம் மற்ற
நண்பர்களின் வழி
காட்டலின் படி
மின் தேவையைக்
குறைத்து மின்
சிக்கனத்தை கடை
பிடித்த போதும்...

பாழாய்ப் போன
கொசுக்களின் வகை
யாறக்களும் கும்மிருட்டு
கோவிந்தர்களுக்கும் என்
மின்  சிக்கனம் பற்றி
தெரியவது இல்லை.

புகை மூட்டம்
போட்டும் கொசு
வலையில் புகுந்தும்
சிக்கனத்தை கடை
பிடித்தாலும் மின்
கட்டண உயர்வால்
தாக்கு முடியவில்லை.

நிரந்தர வருமானமோ
தாய்தந்தை வருவாயோ
எதுவும் இல்லாததும்
பல வித அத்தியா வசிய
தேவைக்கும் அல்லல்
படுவதும்  வாடிக்கையாகி
விட்டது............

இதனை தவிர்க்க
 கற் காலத்துக்கு
மீண்டும் திரும்பிப்
போக முடியுமா..??
நிணைத்தாலும் முடியாது
முயன்றாலும் முடியாது.
 குறுக்குவழியும் இல்லை
நேர் வழியும் இல்லை
என்பதால்.............


கல்வி, சுகாதாரம்,
மருத்துவம் என
இப்படி அனைத்தும்
தனியார் கொள்ளைக்கு
திறந்து  விடும அரசையும்
தனியார்மய தாராள மயத்தை
எதிர்த்து போராடும்
மக்களோடு மக்களாய்
நானும் வீதியில்
இறங்கப் போகிறேன்
இதுதான் இந்த
புத்தாண்டில் இந்த
சாமானியனின். புத்
தாண்டு வாழ்த்துக்கள்
நண்பர்களே,...!!!!

கோவன்
படம்-www.vinavu.com





புதன் 31 2014

பழையன புகுதலும் ....புதியன கழிதலும்...

படம்-radiopetti.com

2014ம் ஆண்டு முடிந்து 2015ம் ஆண்டு துவங்கிறது. உலகத்திலுள்ள  அய்ந்தடி ஆறடி உயரமுள்ள ரெண்டு கால் பிராணிகள் எல்லாம் பழைய ஆண்டுக்கு விடை கொடுத்து, புதிய ஆண்டை வரவேற்று வாழ்த்துவார்கள்.

இந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் சடங்கும் தவறாமல் நடக்கும். பத்திரிக்கைகளும் ,தொலைக் காட்சிகளும் தங்கள் பங்குக்கு பழைய ஆண்டில் நடந்த வற்றை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டு விலாவரியாக எழுதியும் காட்டியும் மனப்பாடமாக ஒப்பிப்பார்கள்.


 இந்தப் புதிய ஆண்டுக்கு ரெண்டுகால் பிராணிகளின் தலைவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் “எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்க!”  என்று ஒப்புக்கு வாழ்த்துவார்கள் .


படம்-www.tamilmurasu.org
உறவினர்களும் நண்பர்களும் கூட இந்த ஆங்கில புத்தாண்டில் தங்கள் நண்பர்களுக்கிடையே வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.. இந்த வாழ்த்துக்களின் படி பெரும்பாலான் மக்களும் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்வு அமைந்து விடுவதில்லை. அமையப்போவதுமில்லை.

இது  வாழ்த்து சொல்பவர்களுக்கும், வாழ்த்துப் பெறுபவர்களுக்கும் உள்ளங்கனி செல்லிக்கனி போல தெரிந்த உண்மை. இருந்தாலும் வாழ்த்துச் சொல்லாமல் இருப்பதுமில்லை.

 இந்தப் புத்தாண்டின் போது “ பழையன கழிதலும், புதியன புகதலும்” என்று சொல்லும் ஒரு வாசகம் ஒன்று உள்ளது. ஆனால்

நடப்பு நிகழ்வுகளைப் பார்த்தால் “ பழையன புகுதலும், புதியன கழிதலும்” மாகத்தான் நடை பெற்று வருகின்றன.  கீதா உபதேசமான இன்று உன்னுடையது அது நாளை மற்றொருவருடையதாகிறது என்று நான்கு வர்ணங்களை படைத்த பரமத்மா சொன்னது மாதிரி...

காங்கிரசின் சொத்தாக இருந்த இந்தியா, இனி பாரதீய ஜனதாகட்சியின் சொத்தாக மாறிவிட்டது. அந்த பரமத்வாவின் உபதேசப்படி அடுத்து அது  வேறு ஒரு வருக்கு சொத்தாக மாறவிடக்கூடாது என்பதற்க்காக.............

காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில்  என்னென்ன செய்யாமல் விட்டதோ.என்னென்ன செய்யத் தயங்கியதோ, அதையெல்லாம் தயங்காமல்  வீரமுடன் தீரமுடன் செயல்படுத்துகிறது பாரதீய ஜனதாகட்சி... இனி இந்தியா 25 ஆண்டுகளுக்கோ அல்லது அதற்கு மேலாகவேர் .இந்தீயா   பாரதீய ஜனதாவின்  தலைமையான் ஆர் எஸ்எஸ்-ன் சொத்தாகவே  நீடிக்க வகை செய்யுமளவுக்கு.....

 அதற்க்கான அடித்தளங்கள் மு்ம்மரமாக போடப்பட்டு வருகின்றன. அதற்க்கான அடையாளம்தான்  நீதித்துறை, நிதித்துறை,. நிர்வாகத்துறை , தகவல் துறை, என்று அணைத்து துறைகளிலும் உள்ள அதி உயர் பதவிகளில் ஆர் எஸ்எஸ்-யை சேர்ந்த அதிகாரிகளே நியமிக்கப்படுவது இதோடு சமஸ்கிருத்ம்,இந்தி திணிப்பு, குருஉத்சவ், தாய்மதமாற்றம், கோட்சேவுக்கு சிலை, மாவியாவுக்கு விருது, இன்ன பிறவைகள்,

இவைகள் கண ஜோராக மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறும். இதில்  ஒன்று. தமிழ்நாட்டில் தமிழ் சாமுதாயத்தை சீரழித்த சதிகாரியும் கொள்ளையடித்த குற்றத்திற்க்காக தண்டனை பெற்று பினையில் இருக்கும் கொள்ளைக்காரியும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதும் நடக்கும்.


எவையெல்லாம் பழையவை என்று ஒழிக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதோ அவையெல்லாம் மீண்டும் அரங்கேற்றப்பட்டு நிலை நிறுத்தப்படும்.

இந்த புத்தாண்டில் புதிய பயணமாக தமிழ்நாட்டில் .. தேவலோகத்தின் தேவபானமான மதுவை காப்போம், மக்களை ஒழிப்போம். இப்படியும் புத்தாண்டு  சங்கல்பமும் இருக்காலாம்.


படம்-aambalmalar.blogspot.com








செவ்வாய் 30 2014

கோட்சேவுக்கு சிலை..பிறகு கோயில்..!!!






சுடப்பட்டு செத்தவர்க்கு சிலை வைக்கும்போது..சுட்டவர்க்கு சிலை வைக்கக்கூடாதா..? என்று ஒரு கேள்வி....

சுடப்பட்டுச் செத்தவரும் வ்ர்ணாசிரமத்தை ஆதரித்தார்..சுட்டவரும் வர்ணாசிரமத்தை ஆதரித்தார். முன்னவர் வர்ணாசிரம கொள்கையில் மிதவாதியாய் இருந்தார். பின்னவர் தீவிரவாதியாய் இருந்தார்


முன்னவருக்கு பல இடங்ககளில் சிலை வைத்து சுதந்திரத்துக்காக பாடுபட்டவர் என  ஏட்டில் எழுதியும் சினிமா படம் பிடித்து  காட்டிக் கொண்டு ,அவருக்கு ஒளி வட்டம் கொடுத்து  வந்தது அவரது சார்பான கூட்டம்.
Image result for கோட்சே சிலை

பின்னவரின் கூட்டத்தாருக்கு  வராது வந்த மாமணியான ஆட்சியதிகாரம் கிடைத்தவுடன். சுட்டவருக்கு புகழ்மாலை சூட்டி சிலை வைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சாதிவெறி குலதெய்வத்துக்கு  சிலை வைத்து அந்த சிலைக்கு அரசே சாதிவெறிக்கு பத்தி கொளுத்தி வருடந்தோறும் தங்க காப்பு அணிவித்து  சாதிவெறியை மூட்டி    தாழ்த்தப்பட்டவர்களை பலி கொடுப்பது போல்.....




 வர்ணாசிரமத்தை காத்த தியாகி கோட்சேவுக்கும்  இந்துஸ்தானில்  ஆட்சியை பிடித்தவர்கள் இந்துஸ்தானில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் கோட்சேவுக்கு சிலை வைப்பார்கள்...

சிலை வைத்து  சில நா்ட்கள் கோட்சேவின் பிறந்த நாளில் முன்னோட்டம் பார்த்துவுிட்டு ,கோவிலே கட்டி அந்தக் கோவிலுக்கு சூலாயுதம் கொண்டு  நாத்திகர்களையும், முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் பலி கொடுப்பார்கள்.


திங்கள் 29 2014

அடிமைகளுக்கு சோறு போட வக்கில்லாத வர்க்கம்.


படம்-- 

தனது அடிமைகளான உழைக்கும் வர்க்கத்துக்கு சோறு போடுவதற்குக்கூட வக்கில்லாத வர்க்கம் எதுவென்றால் முதலாளி வர்க்கதம்தான் என்றார் தோழர் மார்க்ஸ்.

இதோடு  தனது அடிமைகளின் சோற்றுப் பானையில் கையைவிட்டு வயிறு வளர்க்கும் வர்க்கமும் முதலாளிவர்க்கம்தான்.

தமிழ்நாட்டில் இந்த முதலாளிகளின் கௌவரத்தை காக்கும் பொருட்டுதான் திருடியதில் இலவசமாகவும் ? மலிவு விலையில் உணவுமாக  அந்த அடிமை வர்க்கத்துக்கு வழங்குகிறது.


ஞாயிறு 28 2014

புதைக்கப்பட்ட மொழியை..தோண்டி எடுத்து உயிர் கொடுத்த அறிஞர்.


 ராபர்ட கால்டுவெல்    http://ta.wikipedia.org/s/7s7

சூத்திரர்கள் மொழி தமிழ்.  இதை அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்கள் ஆரியர்கள் என்றார் அறிஞர் கால்டுவெல்

இன்றைய நூற்றாண்டைப் போலவே, 18ம் நூற்றாண்டிலும் ஆங்கிலம் படித்தால்தான் பிழைக்க முடியும், சமஸ்கிருதம் படித்தால்தான் தெய்வத்தின் அருள் கிட்டும்  என்ற நிலை இருந்தது.

இன்றைக்கு மத்திய-மாநில அரசுகள் மாதிரிதான்  தமிழகத்தை ஆண்டவர்கள் மன்னர்களான ராஜராஜன் காலத்திலும் பல்லவர்கள் காலத்திலும் சமஸ்கிருதம் படிப்பதற்கு மானியம் கொடுத்தனர்

அதனால் அன்றைய காலத்தில் தமிழை படிக்கவோ, வளர்க்கவோ ஆளே இல்லாத நிலைமை இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் 18ம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் அறிஞர் கால்டுவெல் தமிழகத்திற்கு வந்தார். கால்டுவெல் மட்டுமல்ல அவரின் நண்பர்களான வெள்ளைக்காரர்கள் அனைவரும் தமிழ் அறிஞர்கள்.

பவர் என்ற பிரஞ்சுக்காரர்தான் சீவக சிந்தாமணியை கொண்டுவந்தார். இவர் மூலம்தான் உ.வே.சா. பல நூல்களைத் தேடிச்சென்றார். முர்டோக் என்ற அறிஞர்தான் தமிழ் நூல்களின் அட்டவனையைத் தொகுத்தவர். முதன் முதலில் தமிழ் கல்வெட்டை படித்துச் சொன்னவர் ஏ.ஜி. பர்னல் என்பவராவார். இவரைப் போன்றவர்களிடம் தமிழ் பயின்று வந்தவர்கள்தான் ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்கள்.

தமிழ் மொழியும் கலாச்சாரமும் உன்னமானவை. என்னுடைய ஆய்வு தமிழ் மொழியின் மதியப் பொழுதிலிருந்துதான் தொடங்குகிறது என்றார் கால்டுவெல்.

ஆரியர்-பார்ப்பனர்களின் வேதப் புராணங்களின் புளுகு புரட்டையும் இந்தியாவின் மூல மொழி சமஸ்கிருதமே என்ற வரலாற்று அயோக்கியதனங்களை தகர்த்தது கால்டுவெல்லின் தமிழ் ஆராய்ச்சிதான்.

தமிழை விற்று வயிறு வளர்த்த மன்னர்களும்  (கவி)பேரரசர்களும், தமிழை இளித்தும் பழித்தும் பேசிய நாற வாய்  ஒன்று.  தமிழை வாழ்த்தியது என்று சிலிர்த்து எழுந்து விழா எடுத்தார்கள்.

புதைக்கப்பட்ட தமிழ் மொழியைத் தோண்டி எடுத்து உயிர் கொடுத்து உலா விட்டவர்கள்  கால்டுவெல்லும் அவருடைய சம காலத்து மனிதர்களும்தான்.

அவர்கள்தான்  தமிழ் மரபு குறித்த அடையாளத்தையும் பெருமிதத்தையும் வழங்கியவர்கள்.

தமிழ் மொழியை எனது தாய்மொழி என்றும் , என்னை வாழ வைத்த மொழி என்று சொல்லிக் கொள்பவர்கள் கால்வெல்லை மறப்பது நன்றிக் கெட்டத்தனமாகும்.



நன்றி!!--புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014
தலைப்பைச் சேருங்கள்



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...