பக்கங்கள்

வெள்ளி 25 2012

மகானின் உப...தேசமும், மக்களின் வேண்டு....கோலும்.(சிறுகதை)

மகான் என்ற சொல்லிக் கொள்கிற ஒருவர் தன் பணிஆடகளான
சிடர்களுடன் வேற்று நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்திருந்தார்
வந்த மகான் முதல் காரியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு உபதேசம்
 செய்தார்.
தமிழ் நாட்டு மக்களும். ஆட்சியாளரின் வரிவசூல்.கொள்ளை
போன்றகெடுபிடிகளால். விலைவாசி ஏற்றத்தாலும்,வேலை
வாய்ப்பு குறைவாககிடைப்பதாலும் வயிற்றில் ஈரத்துணியைக்
கட்டிக்கொண்டு வாழ்ந்துவந்தார்கள். 

இந்தக் கஷ்டங்களால் அவதிப்பட்டுவந்தவர்களுக்கு மகான்வந்தது சற்று மகிழ்ச்சியாக  இருந்தது. கஷ்டங்களை தாங்கிக் கொள்வதற்குஏதாவது
வழியும்.பரிகாரமும் சொல்வாருன்னு மகானின் உபதேசத்தை
கேட்க குழுமிவிட்டனர். பெருங்கூட்டத்தைக்கண்டு ஆட்சி
யாளர்களின்படை அதிகாரிகளும் வீரர்களும் கூட்டமாக
 சேர்ந்துவிட்டனர்.

கூடியிருந்த கூட்த்தைக்கண்ட மகான் பிரமித்துப்போனார்
 ஆ.....நம்உப தேசத்தை கேட்க இவ்வளவு கூட்டமா.........என்று.
......மாகனுக்குஅருகில் வந்த ஆட்சியாளரின் படை அதிகாரி ,
அவரிடம் குசுகுசுத்தார்

மகான் உப தேசத்தை தொடங்கினார். அரியின் புதல்வர்களே!
பெருங்குடி மக்களே!

நீங்கள் இந்த லோகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையில் காணப்
படும் துன்பங்களும் துயரங்களும் முற்ப்பிறப்பில் உங்கள்
முன்னோர்கள்செய்த தீவிணையின் பயனைத்தான் நீங்கள்
 அனுபவிக்கிறீர்கள். எவ்வளவுஎவ்வளவுக்கு எவ்வளவு
 கஷ்டங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டு ,
தேவைகளை சுறுக்கிகக்கொண்டு சாந்த சொருபியாக -
எதையும் தாங்கும் இதயமாக இருக்குறிர்களோ,
அவ்வளவுக்கு நீங்கள் சாகாவரம்பெற்றவர்களாக
சொர்க்கத்தில் வாழ்வீர்கள என்றார்.

அப்போது. கூட்டத்திலிருந்து ஒரு விடலைப்பெண் எழுந்து
 மகானைவணங்கி,   “ எங்க நாட்டிலுள்ள ஆட்சியாளர்களும்,
பணக்காரர்களின்பெண்கள் எப்போதும் அழகாக இருக்கிறார்களே,
அவர்கள் குழந்தைகள் அமுல் பேபியாக இருக்குதெ. அதன்
காரணமென்ன சாமி........தெரிந்தால் நாங்களும் ......இழுத்தாள்.

மகான்.புன்னகைத்து நல்ல சந்தேகம் என்றுவிட்டு மக்களைப்
 பார்த்துபேசினார்.    ஆட்சியிலுள்ளவர்கள்.பணக்கார வீட்டுப்
 பெண்களும்குழந்தைகளும் அழுகாக இருப்பதற்கு,அவர்களின் முன்னோர்களின்நற்பண்புள்ள கிர்த்திகளால் அவர்கள் இந்த
லோகத்தில் அழகுள்ளவர்களாக,கவலையற்றவர்களாக
வாழ்கிறார்கள். இந்த அழகும்சந்தோஷம் நிலைப்பதற்கு
அவர்கள். நாட்டிலுள்ள எல்லா கோயில்குளத்திற்கும் சென்று வழிபடுகிறார்கள்.கோயில் குளத்தை படைவீரர்களை நிறுத்தி பாதுகாக்கிறார்கள்.மக்களை காப்பாற்றி வழி நடத்திச்செல்வதற்கு ஆடசியாளர்கள் அல்லும் பகலும் சிந்திக்கிறார்கள் என்றார்.

 சீடர்ஒருவர், பெப்ஸி அக்வுவா வாட்டர் கேனை நீட்டியவுடன்
 மகான் அதை வாங்கிமூனு,நாலு மடக்கு தண்ணீரை பருகினார்.

கூட்டம் அமைதிப்பூங்கவா இருந்தது. மஞ்சள்,காவி, பச்சை, கருப்பு
நிற ஆடைகள் அணிந்த பெண்களும்,ஆண்களுமாக சிலர் வரிசையாக
எழந்து நின்றனர்.பெண்கள் பேச ஆரம்பித்தனர்.

நீங்க சொல்கிறபடிதான் சாமி நாங்க இருந்து வருகிறோம் சாமி,
ஆட்சியில இருக்கும். புர்ர்ர்ட்சி தலைவி அம்மாவின் சதானை
யாக பால்வில.பஸ்டிககெட் வில, கரண்ட் பில்லெல்லாம் ஏத்து
னாங்க,அதுக்கெல்லாம் பொறுமையாகத்தான் இருக்கோம் சாமி
அதுக்கு பரிகாரமா, விலையில்லா அரிசீ.மேய்க்க ஆடுமாடு, மேய்ச்ச
களைப்பு தீற பேன்,  அரைக்க மிக்ஸி. கிரைண்டர் கொடுத்தாங்க
சாமி.என்றபோது...... கூட்டத்தின் கடைசியில் சலசலப்பு ஏற்ப்பட்டது.

மகானின் சீடர்களும் படைவீரர்களும் விரைவாக சென்று திரும்பினர்
ஆடசியில் இருக்கும் புர்ர்ர்ட்சி தலைவி அம்மாவுக்கு தானாம் ஓட்டு
போட்டார்களாம். அவுகளுக்கு இன்னும் ஆடுமாடு,பேன் மிக்ஸி
 எதுவும் தரலியாம் என்றார் சீடர் ஓருவர்.

இடையில் நிறுத்திய பெண்களை இடைமறித்து ஆண்கள் பேசினர்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி பெட்ரொல் விலையையும் ஏத்தின போது
 எங்களிடமும் வண்டிகள் இருந்தபோதும் எந்தவித போராட்டத்திலும்
கலந்துக்காம.எங்க முன்னொர்கள் செய்த கரும தீவின பலன்களே,
இதற்கெல்லாம் காரணமுன்னு ஒதங்கிய வருகிறோம் சாமி, போதா
குறைக்கு கஷ்ட நஷடங்களுக்கு விடிவு பிறப்பதற்க்காக,
ஆண்டுதோறும்பெண்கள் விரதமிருந்து.அக்னிசட்டி, மாவிளக்கு,
மண்சோறு,பூக்குளி,நி்.பூஜை.அங்கப்பூசைகளும்,ஆண்கள்காவடி,
வேல்குத்துவது,இருமுடி என்ற அணைத்துவித வேண்டுதல்களையும்
 மரபு மாறாமல் செய்துவருகிறோம்சாமி.இந்தப்பிறவில் அனுபவிக்காத கொடுமையெல்லாம்ஆனுபவிச்சுட்டோம் சாமி.....இதோடு விரதம்
 இல்லாத நாட்களில்,விரதம் இருந்த நாட்களுக்கம் சேர்த்து ஆட்சி
யாளர்களின் டாஸ்மாகபானத்தை பருகி நாட்டுக்கு அதிகமான வருமானத்தையும் கொடுத்துஓட்டாண்டிகளாகி வருகிறோம் சாமி..... சொர்க்கத்தில் சாகாவரம்பெற்று பெரு வாழ்வு வாழ உதவி பரியனும் சாமி....என்று ஆள்ஆளுக்கு ஒருவழியாக பெசி முடித்தனர்.

மகான்.தன் இடுப்பில் இருந்த கடிகாரத்தை ஒருமுறைக்கு இருமுறை
யாக பார்த்துக்கொண்டு சீடரிடம் குசுகுசுசத்தார்

உங்கள் விரதங்களும், வேண்டுதல்களம், ஆடசியாளர்க்கு செய்கின்ற
வருவாய் பெருக்கத்தையும். பகவான் நன்கு அறிவார். நானும் சொர்க்
கத்தில் இடம் கிடைப்பதற்க்காக பகவானிடம் சிபாரிசு செய்கிறேன்என்றார்

படை அதிகாரி மணியைப்பார்த்தவாறே மகானிடம் வந்து நின்றார்.
மக்கள் கூட்டமும் கொஞ்சமாக கலைவதற்கு முன்னமே மகானும்
சீடர்களும் சிட்டாய் பறந்துவிட்டார்கள்..




































































































வியாழன் 24 2012

இந்தியக்கனவுக்கன்னியை ஒருதலையாக காதலித்த டாப் ஸ்டார் நடிகர்.....

பன்னைபுரத்து இளையராஜா கலை(இசை) சேவைக்கு வருவதற்கு
முன்னால்,தமிழகத்தில், மலையாளப்படங்கள் அணிவகுத்து வந்தது
போல்,இந்தியாவின் இந்திமொழிப்படங்களும் தமிழகத்து திரையரங்
களில் ஓடி கல்லாவை நிரப்பிக் கொண்டுருந்த காலம்.

இன்றைக்கு வரும் உளநாட்டு.வெளிநாட்டு பன்னாட்டு படங்களில்
ஜேம்ஸ்பாண்டும்,ஜாக்கிஜானும் தமிழ்பேசுவது மாதிரி அன்றைக்கு
வந்த இந்திப்பட நடிகர்கள் தமிழ்பேசவில்லை. நேரிடையாக தயாரித்த
மொழியிலே படங்கள் வந்தன.

அப்படிபட்ட.அந்தக்காலத்தில் வெயிவந்த படங்களில் வெற்றி வாகை
சூடி வெள்ளிவிழா கொண்டாடிய படம் “ஷோலே” என்ற இந்திப்படம்
அந்தப்படத்தில் தர்மேந்திராவும்,இந்திய சூப்பரும் ஒலக அழகியின்
மாமானாரும் கதாநாயகர்களாக நடித்திருப்பார்கள். அந்தப்படத்தில்
தர்மேந்திராவுக்கு ஜோடியாக காதலியாக நடித்திருப்பவர்தான்.
இந்தியக்கனவுக்கன்னி.

இந்த நடிகைக்கு அழகில்லை,உடல் வனப்பு இல்லை என்று தமிழகத்
திலிருந்து ஓரங்ககட்டப்பட்டவர்.உயர்குடி பிறப்பின் தகுதியுடன்
இந்தி திரையுலகத்தில் புகுந்து அகில இந்திய சினிமா ரசிகர்களின்
கனவுக்கன்னியானார்.

அன்றைய இந்தக் கனவுக்கன்னியை அன்றைய டாப் ஸ்டார்களான
சஞ்சீவ்குமார்,ஜிசேந்திரா,தர்மேந்திரா போன்றவர்கள் விரும்பினார்கள்
இந்தக்கனவுக்கன்னியோ.மூவரில் இருவருக்கு கடுக்காய் கொடுத்து
விட்டுமுன்னணியில் இருந்த. ஏற்கனவே திருமனமாகி புள்ள குட்டி
இருந்ததர்மேந்திராவை கைப்பிடித்தார். சினிமாக்காரர்களின் காதலும்
சுயநலக்காதலாகத்தான் அன்றைக்கும் இருந்தது.
Posted Image

ஜிஜேந்திராவோ, மனதைமாற்றிக்கொண்டார்.ஆனால் சஞ்சீவ் குமாரோ
பல படங்களில் பழுத்த அனுபவசாலியான பாத்திரங்களில் நடித்தும்
பகுத்தறியும் ஆற்றலை இழந்து இந்தக் கனவுக்கன்னியை ஒருதலையாக
காதலித்து,இறுதிவரை மனதை மாற்றமுடியாமல் கனவக்கன்னியின்
நிணைவாக இருந்து திருமணம் செய்து கொள்ளாமல்.அன்றைய
ப்்பாரீன் டாஸ்மாக்கு அடிமையாகி மறைந்தார்.

இந்த சஞ்சீவ்குமார் “ஷோலே” படத்தில் வில்லன் அம்ஜத்கானால்
இரண்டு கைகளும் வெட்டப்பட்டவராக நடித்திருப்பார் தமிழகத்தின்
லிட்டில் ஸ்டாரின் அப்பாகூட,ஒருதலைராகம் பெயரில் ஒருபிலீம்
எடுத்து கதாநாயகன் செத்து போவதாக காட்டியிருப்பார்.

என்ன இருந்தாலும் நம்ம சினிமா ரசிகர்கள்.சாதிவெறிகொண்ட.பணத்
தாசை கொண்ட சுயநலமிக்க கல்நெஞ்சர்களாக இருந்தாலும், சினிமாவில்
காட்டும் பிலிம் காதலுக்கு தங்களை அறியாமல் கண்கலங்கித்தான்
விடுகிறார்கள்..






செவ்வாய் 22 2012

பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..

தமிழகத்தை மாவோயிஸ்ட் களமாக்க திருமண நிகழ்ச்சிக்கு
வந்த மாவோயிஸ்ட்ன் தமிழக தலைவர்கைது. தமிழகத்தலைவர்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் கொடைக்கானல்
சிறுமலை,முருகமலை பகுதிகளில் நக்சலைட்கள் பதுங்கி
உள்ளனரா என்று தீவிர தேடுதல் வேட்டை.

மதுரைச்சிறையில் தமிழக தலைவரும்,நக்சல் இயக்கத்தின்
இன்னொரு தலைவரும் ஆக இரண்டு நக்சல் தலைவர்கள்
அடைக்கப்பட்டதால் சிறையைச்சுற்றி போலீசு ரோந்தும்
இரவுப்பணிக்கு கூடுதல் பொலீசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறைக்குள் செல்லும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்
விதிப்பு,தமிழகத்தலைவரை சந்திக்க வழக்குரைகளுக்கு தடை

மாவோயிஸ்ட்தமிழக தலைவர்.மற்ற கைதிகளை பார்க்கவோ,
பேசவோ,அறையைவிட்டு வெளியே வரவோ அனுமதியில்லை
தமிழக பிரிவு தலைவரின் உறவினர்கள்.மற்றும் நண்பர்களிடம்
தீவிர விசாரனை.

மேற்கண்ட விவரங்கள் அணைத்தும் தமிழக அரச பயங்கரவாதிகள்
பீதியடைந்து பீதியூட்ட வெளிப்படுத்தும் நடவடிக்கைகள். ஜன
நாயகத்தின் நாலாவது தூண் அலறி வாந்தியெடுத்தவைகள்.

வில்லாதி வில்லன்,வீராதி வீரன் போலீசின் செய்திகளை படிக்கும்
போது ஒரு கதைதான் நிணைவக்கு வருகிறது.

அஞ்சா நெஞ்சன்( கருனாநிதியின் மகன் அல்ல) மாவீரன் என்று
சொல்லப்படுகின்ற நெப்பு என்ற நெப்போலியன், பூனையை கண்டு
நடுங்கும் பயந்தாங்கொல்லி.

இப்பேர்பட்ட பயந்தாங்கொல்லியை. மெல்லக்கொல்லும் விஷத்தை
கொடுத்துதான் கொன்றார்களாம்.

அதுமாதிரி.படைபலமும் அதிகார பலமும் பண பலமும்உள்ள போலீசு ,
 படைபலமும் பணபலமும் ஆள்பலமும் இல்லாத கம்யூனிச
 தலைவர்களின் சிந்தனை ஒன்றை வைத்துதுக்கொண்டு செயல்பட்டு
வருபவர்களை தீவிரவாதிகளாக,கொலைகாரர்களாக தமிழ்நாட்டு
இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அதன் மூலம்
இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாடு கம்யூனிசநாடாக
மாறிவிடுவது மாதிரி பெரிய பூச்சாண்டி காட்டி அதை தடுப்பதாக
வேஷம் கட்டி தங்கள் பவரைகாட்டி வருகிறார்கள்.

ஊழலும்,அதிகார முறைகேடுகளும் விலைவாசி உயர்வும் வேலை
இல்லா கொடுமையும் பெருகி கிடககும் நாட்டில் இதுக்கெல்லாம்
காரணமானவர்கள் யார் என்று தெரிந்திருந்தும் அவர்களின் நிழலை
கூட தொடமுடியாத மத்திய உளவுப்படையும் மாநிலப்படையும் கீறல்
விழுந்த பழைய ரிக்கார்களையே திரும்பத் திரும்ப ஒலி-ஒளி பரப்பி
வருகிறார்கள் என்பது அ..ஆவன்னா படித்தவர்களும்,படிக்காத
பாமரர்களும் அறிந்தும் புரிந்தும் வந்துள்ளார்கள். பரபரப்பாக செய்தி
வெளியிட்டாலும். இவர்களுக்கு வேறு வேலையில்லை என்றே
புறந்தள்ளுகிறார்கள்.

குண்டாஞ்சட்டியில் குதிரை ஓட்டவேண்டுமென்றால் கக்கியதை
நக்கி கக்குவதை தவிர வேறு வழியில்லை..அதனால்தான் இப்படி பீதி
ஊட்டுவதும், பத்திரிக்கைகள் வாந்தி எடுப்பதும், பொது மக்கள் கண்டு
கொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக நீள்கிறது.







திங்கள் 21 2012

முத்தத்தினால் புகழ்பெற்ற தேசிய நடிகை...

இந்தியாவுக்கு தேசிய தந்தை யாரென்று கேட்டால் இந்திய
ரூபாநோட்டில் மொட்டைத்தலையுடன் உருளை வடிவ
கண்ணாடியுடன் பொக்கைவாயை பொளந்தபடிசிரிக்கிறா
அழுகிறரா என தெரியாபடிக்கு இருக்கும் உருவம்தான் தேசிய
தந்தை என்று கருவில் வளரும் சிசுகூட சொல்லிவிடும்

காந்திப்படம் போட்ட பணத்துக்குத்தான் செத்த பொணம்கூட
சுடுகாட்டுக்கு நகரும்நிலை இருக்கும்போதும்சரி வந்தவன்
நின்றவன் போனவன் எல்லோரும் அந்த உருவத்தை தூக்கி
கராகாட்டம் ஆடும்போது  அந்த உருவம்தான் இந்தியாவின்
தேசிய தந்தை என்று தெரியாமல் இருப்பதற்கு சான்சே இல்லை.

இந்த தேசிய தந்தைமாதிரியே, தேசிய கவிஞர்,தேசிய பறவை,தேசிய
கொடி,தேசியபறவை,தேசிய மிருகம், தேசியபடை,தேசியவீரர்,
இப்படி.ஒவ்வொரு துறைக்கும் தேசிய ம் இருக்கும்போது,தேசிய
நடிகை என்ற பெயரைப்பெற்றவர் இந்த நடிகை.

எதுக்கெல்லாம் தந்தைகள் இருந்தது மாதிரி.சினிமாவுக்கும்
ஒரு தேசியதந்தை இருந்தார்.அந்த தந்தை தாதா பால்கே என்பவர்.
இந்த தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதமாக.தாதா பால்கே விருது
ஒன்றைத்தொடங்கி அதன் முதல் விருதை முதன்முதலாக இந்திய
தேசிய திரைப்பட வரலாற்றில் முத்தம் கொடுத்து புகழ் பெற்ற
இந்த நடிகைக்கு வழங்கி தேசிய நடிகையாகக்கிவிட்டனர்.

இந்த தேசிய நடிகை நடித்த படங்கள் 14 என்றாலும் முத்தம்
கொடுத்து நடித்த நடிகை என்ற பெயரே அவருக்கு பெரும்
புகழைச் சேர்த்தது.

இருபத்திநூற்றாண்டு நடிகைகளுக்கு குளியல்சீன்,படுககறைசீன்
 கனவுசீன், தொப்புளில் பம்பரம் விடும்சீன் இது மாதிரி கலைச்சேவைக்கு
பயன்படும் அத்தனை சீன்களில் நடிக்கவும்.கதைக்கு தேவையென
கூலூக பேட்டி அளிக்கவும் என் முதன்முதலில் பிள்ளையார் சுழி
போ்டடவர் இந்த தேசிய நடிகைதான்.

இருபதாம் றூற்றாண்டின் தொடக்கத்தில் 1934-ல் வெளிவந்த “கர்மா”
என்ற திறைப்படத்தில்தான்.கதாநாயனுக்கு முத்தம் கொடுத்து
நடிக்கும் கலைச்சேவையை  துவக்கி வைத்தார் இந்த நடிகை.

இவருடைய தாத்தாவான ரவீந்திரநாத் தாகூர் எப்படி இந்தியாவின்
தேசியக் கவிஞராக   மேட்டுக்குடி மற்றும்  ஊடகங்களால்தூக்கி
 வைத்து கொண்டாடப்படுகிறாரோ,அதேபோல இந்த தேவிகா
ராணி என்ற இந்ததேசிய நடிகையும் கொண்டாடப்படுகிறார்.

தேசியநடிகை தேவிகாராணி

































திற

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...