பக்கங்கள்

சனி 31 2014

தண்ணீரை உறிஞ்சும் மாபாதகர்கள்.......




மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !
















பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கெதிராய் போராட்டம் நடத்தி.அடிமை தலை அறுத்து இந்திய குடி மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்க்காக அரசியல் சட்டம் அறிமுகப்படுத்தியதாக பெருமையாக கூறப்படும் ஆண்டு 1950.

இதே ஆண்டில்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய  அடிமை தனத்தின் திரவமான கோகோலா இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்கடுத்தப் பட்டது.

1977ல் இந்தக் கோகோலா வெளியேற்றப்பட்டு சிரித்தே அறியாத மண்மோகனின் மூதாதையரான நரசிம்மராவால் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயமான “காட்” ஒப்பந்தத்தின் மூலமாக 1993ல் புத்தம் புதிய காப்பியக் அறிமுகம் செய்யப்பட்டு, இன்று இந்தியா முழுவதும் உள்ள சந்தையை கைப்பற்றி கோலோச்சும் கம்பெனியாக திகழ்கின்றன. கோகோலாவும் பெப்சியும்.

அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக  இந்தியாவில்தான் அதிகமாக முதலீடு செய்து இருக்கின்றன. கோகோலாவும் பெப்சியும்.

இந்த மாபாதக நிறுவனங்களால்  இந்தியாவில் ஆண்டுதோறும் உறிஞ்சும் நிலத்தடி நீரின் அளவு சுமார் 5310 கோடி லிட்டர்.

இந்திய ஜனநாயக அரசியல் சட்டம். இந்திய குடி மக்களை மாக்காளக மாற்றிவிட்டு ,இந்த மாபாதகர்களைத்தான்   வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது .

வெள்ளி 30 2014

மேற்கே உதித்து கிழக்கே மறையும் சூரியன்.!!!

படம்.சூரியன்















இரண்டு கால் பிராணிகள்
வாழும் பூமி என்ற கோள்
ஆனது..................

தன்னைத்தானே
சுற்றிக் கொள்வதால்
இரவும் பகலும்
ஏற்ப்பட்டன...........

அதே பூமி சூரியனை
சுற்றி வருவதால்
மழையும் வெயிலும்
வறட்சியும் வெள்ளமும்
ஏற்ப்படுகின்றன............

தன்னைத்தானே சுற்றும்
பூமி இடது புறமாக சுற்றுவதால்
சூரியன் கிழக்கே தோன்றி
மேற்கே மறைகிறது..........

பிராணிகளே இல்லாத
வீனஸ் என்ற கோள்
தன்னைத்தானே வலது
புறமாக சுற்றுவதால் .....

அங்கு சூரியன் மேற்கே
உதித்து கிழக்கே மறைகிறது.

இதன் காரணமாகத்தான்
பூமி கோளில் வாழும்
இரண்டு கால் பிராணிகள்
ஏட்டிக்கு போட்டியாக..

ஒன்று கிழக்கு பக்கமாகவும்
மற்றொன்று மேற்கு பக்கமாகவும்
தொழுதுகிறதோ...............??????

வியாழன் 29 2014

நாட்டுப்பற்று இல்லாத அதிகாரிகள்,,,.!!!



குளோரேட் மூலம் பட்டாசுகள் தயாரிக்கவோ,விற்பனை செய்யவோ கூடாது என்று இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தை மீறி குளோரேட் மூலம் தயாரிக்கப்பட்ட சீன பட்டாசுகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டவைகள் . பறிமுதல் செய்யப்பட்டன.

அப்படி பறிமுதல் செய்யப்பட்ட சீன பட்டாசுகளை முறையாக அழிக்க வேண்டும் என்றும். பறிமுதல் செய்யப்பட்ட சீன பட்டாசு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியும் தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கு ஒன்று  தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு விசாரனைக்கு வந்த போதுதான் நீதி அரசர்கள் அதிகாரிகளைப் பார்த்து இப்படிக் கேட்டார்கள்.

சீன பட்டாசு இந்தியாவிற்குள் எப்படி வந்தது.? சீன பட்டாசை பறிமுதல் செய்தபின் நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்? சம்பந்தபட்டவரை கைது செய்யாதது ஏன்? இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு நாட்டுப்பற்று வேண்டாமா???  என்று சரமாரியாக கேட்டார்கள்.


கடமைக்கு வேலை செய்யும் அதிகாரிகளால்தான் நீதி மன்றத்திலே வழக்குகள் பெருகுவதும். அந்த வழக்குகளில் வழக்குரைஞர்கள் வாய்தா வாங்கியே வழக்கறிஞர்களாக ஆவதும். அத்தகைய வழக்குகளை தள்ளி வைத்து வாய்தா கொடுத்தே  வாய்தா  மன்றங்களாக ,வாய்தா
ராஜக்களாக பேர் வாங்குவதும்..

 அபூர்வமாக ஒரு சில  நீதி ராஜாக்கள்  உத்தரவிட்ட பின்பும் அந்த உத்தரவை அமுல் படுத்தி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்காத பல வாய்தா ராஜக்கள் இருக்கும்போது..................

அதிகாரிகளுக்கு நாட்டுப்பற்றா வரும்.............????????????


புதன் 28 2014

உலகை ஏமாற்றிய ஜனநாயக கொலைகாரர்கள்.



43,44 வருடங்களுக்கு முன்   ரஷ்யாவுக்கு போட்டியாக உருவான்  நிலவுப் பயணத்தில் ..சந்திரனில் அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இறங்கி,தங்கள் நாட்டு சாதனையாக அமெரிக்க நாட்டு தேசியக் கொடியை பறக்கவிட்டார்கள்.

 வளி மண்டலம் இல்லாத,காற்றும் இல்லாத அந்த நிலவில் அமெரிக்காவின் கொடி பட்டொளி வீசி பறப்பது மாதிரி காட்டினார்கள்

ஒட்டு மொத்த உலகே வாய் பொளந்து பார்த்து இருந்த நேரத்தில் காற்றே இல்லாத இடத்தில் கொடி மட்டும். அதுவும் அமெரிக்க கொடி எப்படி அசைந்து ஆடி பறக்கிறது.என்று சிந்திக்க மறந்தார்கள், கேட்கப் பயந்தார்கள்.

நிலவில் பறந்த அந்தக் கொடி வயர்களால் பின்னப்பட்டு,கொடி காற்றில் அசைந்து பறப்பதுபோல் காட்டி உலகையே சிலிர்க்க வைத்து ஏமாற்றினார்கள். உலக ஜனநாயகத்தை காப்பவர்கள். 

செவ்வாய் 27 2014

நடுவுல ஒரு நந்தி... புகைப்படங்கள்

பேஸ்புக். டிவிட்டர்  மற்றும் கூகுள் ஆண்டவர் போன்ற உலகை ஆளும் ஆண்டவர்களே !!  தங்கள்  திருவிளையாடல்களை, அவதாரங்களை  தமிழில்   நடத்தும்போது.....  தில்லை நடராஜனை தரிசிக்க சென்ற நந்தனுக்கு நந்தியாக இருந்தது போல் இருக்கிறது.  தமிழ்நாடு உயர்நீதிமன்றங்களில் ஆங்கில மொழி என்ற நந்தி. இப்படிபட்ட கொடுமைகள் எல்லாம் தமிழ்நாட்டுலதான் நடக்கும்

பார்க்க படங்கள்.

புகைப்படம்
புகைப்படம்: Demand for make the TAMIL as High Court Official language

புகைப்படம்: MESSAGE TO ALL
நன்றி!
Karuna Nidhiபதிவிட்டார்Vanchi Nathan




திங்கள் 26 2014

அது வேற வாய்..இது வேற வாய்..மொத்ததில் நாறவாய்.

நரவேட்டை அரசு
படம் வினவு

















காணாததை கண்ட அற்பனைப்போல் தனது முடிசூட்டு விழாவுக்கு குறுநில மன்னர்களை அழைக்கும் சக்கரவர்த்தியைப் போல  தெற்காசிய நாடுகள் அணைத்திற்கும், அழைப்பு விடுத்திருக்கும் இந்த வாய்--. இது வேற வாய்

தேர்தல் திருவிழாவின் போது இந்தவாய் “பாகிஸ்தான் இராணுவம் இந்திய சிப்பாயின் தலையை கொய்து அனுப்பும்போது, அவர்களுக்கு பிரியாணி போட்டு விருந்து வைக்கிறார் மன்மோகன் சிங் என்று பேசியது. அது வேற வாய்.

ஈழத் தமிழ் மக்களுக்கு சம உரிமை பெற்றுத்தரப் போவதாகவும்  சவாடல் அடித்த   நாற வாய் .

ஆக, அது வேற வாய், இது வேறவாய் ,மொத்தத்தில் இந்த வாய் நாறவாய்.

ஞாயிறு 25 2014

வாய்ச்சொல்லில் பறைசாற்றிய மகான்கள்....

படம்











“தனி ஒருவனுக்கு உணவுவில்லையெனில்( தனக்கு உணவு கிடைக்காததை கண்டு) ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார்.




அருட்ஜோதி வள்ளலாரோ, ஒரு படிமேலே போயி. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார்.

 இத்தகைய மகான்கள் வாழ்ந்தபோது உணவுகள் கிடைக்காத காரணத்தை அறிந்து, அதை களைய முற்படுவதற்க்கான வழிகளை  காட்டாமல் அழித்திடுவோம்,வாடினேன் என்று வாய்ச் சொல்லில் பறை சாற்றியே வாழ்ந்து மறைந்து  போனார்கள்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...