பக்கங்கள்

வெள்ளி 05 2025

இது எனக்கு தேவையா...?







 வேலையும் இல்ல

அதனால்..

தூக்கமும் இல்ல

சிறிது நேரம்

நடந்து வரலாம்

என்றால்

வெளியில் போக

அச்சமாக இருக்கிறது

ஆங்கங்கே நாலு

கால் படைகள்

கூட்டம் கூட்டமா

உலாவிக் கொண்டு

 இருக்கின்றன....

எவன் வந்து

மாட்டுவான் என்று

காத்துகிட்டு இருக்கின்றன..

வயதான காலத்தில்

இது எனக்கு

தேவையா....??????

ஞாயிறு 30 2025

இந்தியா திருடர்களாலும் சாதிவெறியர்களாலும் ஆளப்படுகிறது..

 



மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையர்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா். ”வங்கியில் உள்ள பணம் அரசுக்கு சொந்தமானது, ஆனால், உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்! அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள்.

அனைவரும் படுத்துவிட்டார்கள்..இதை மனதை மாற்றும் முறை என்றார்கள் . 

அதில் ஒரு பெண், கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையாகளில் ஒருவன் இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி,, அமர வைத்தான். 

இதைத் தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறார்கள் 

கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்" என்று. மற்றொருவன் சொன்னான், பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது. நேரம் அதிகம் செலவாகும். அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்.

 இதைத் தான், படிப்பை விட அனுபவம் சிறந்தது என்பார்கள்

கொள்ளை நடந்த போதே ,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது, அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார். வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்

 "காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ''என்பது இது தான்

.இதை கேட்ட மற்றொரு அதிகாரி" வருடம் ஒரு கொள்ளை, இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் என்றார்.

 இது தான் சுயநலமான உலகம்! என்று சொல்வது.

மறுநாள் செய்திகளில் வங்கியில் 111 கோடி, 

கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி. கொள்ளையாகள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து, பணத்தை எண்ணத் தொடங்கினர் .எவ்வளவு எண்ணியும்,அவர்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை 

கொள்ளையர்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து " நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். 

படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது. இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் என்றான்.


இந்தியா இப்படிப்பட்ட திருடர்களாலும், அமைச்சர்களாலும்  (கொலைகாரர்களாலும், சாதி மத வெறியர்களாலும் தான் ஆளப்படுகிறது!) 

பாவம் ஓட்டு போடும் அப்பாவி மக்கள் ( என்னையும் சேர்த்து)

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...