பக்கங்கள்

சனி 22 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...54

 


குடியரசு தின அணிவகுப்பு நாடகம்
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு ராஜபாட்டையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவதை - மாநிலங்களின், பொதுத்துறை நிறுவனங்களின் அலங்கார ஊர்திகள், ராணுவ வலிமையைக் காட்டும் வாகனங்கள், கொடியேற்றம், இவற்றை எல்லாம் - தொலைக்காட்சியில் எல்லாருமே பார்த்திருப்பீர்கள். தில்லியில் வசிப்பவர்கள் ஒரு முறையாவது நேரில் போய் பார்த்திருப்பீர்கள். (ஒருமுறை நேரில் பார்த்தவர்கள் மீண்டும் நேரில் போக விரும்ப மாட்டார்கள். அது வேறு விஷயம்)
என்னைப் பொறுத்தவரையில், இந்த குடியரசு தின அணிவகுப்பு என்கிற நாடகமே தேவையில்லாத ஆணிதான். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு வைக்கும் ஆணி. ஏன் இப்படிச் சொல்கிறேன்?
குடியரசு தினத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே ராஜபாட்டையின் இருபுறமும் மக்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டு விடும். வேலி போடுவது, மக்கள் அமர்வதற்கான அடுக்கடுக்கான படிகள் போன்ற இருக்கைகளை பலகைகளால் அமைப்பது போன்ற வேலைகள் நடக்கும். அப்புறம், குடியரசு தினத்துக்கு முந்தைய பத்து-பதினைந்து நாட்களில் மூன்று நாட்கள் ஒத்திகை நடைபெறும். அதில் கடைசி முறை முழுமையான ஒத்திகை – குடியரசுத் தலைவர் இருக்க மாட்டாரே தவிர, அவர் இருப்பதுபோலவே ஏற்பாடு செய்யப்பட்டு ஃபைனல் ரிகர்சல். ஒத்திகை நடக்கும்போதெல்லாம் அந்த வழியாக யாருமே போக முடியாது. வாகனங்கள் எல்லாம் திருப்பி விடப்படும். அதன் விளைவாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கேஸ்கேடிங் விளைவு போல தில்லி முழுவதையும் பாதிக்கும். பல்லாயிரம் வாகனங்கள் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு போக வேண்டியிருக்கும். அதனால் அவரவருக்கு பெட்ரோல் செலவும் கூடும், சுற்றுச்சூழல் மாசும் அதிகரிக்கும்.
குடியரசு தினம் முடிந்ததும், அமைக்கப்பட்ட வேலிகள், இருக்கைகள் எல்லாம் அகற்றப்பட இரண்டு மாதங்கள் ஆகும். அந்தப் பலகைகள் முதலானவை அவற்றுக்கான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, உடைந்தவை அகற்றப்பட்டு, மீண்டும் பச்சை வண்ணம் பூசப்பட்டு, அடுத்த குடியரசு தினத்துக்குத் தயாராக்கும் வேலை நடைபெறும். ஆக, இதற்கு மட்டுமே ஒரு துறையும் பலநூறு கோடிகளும் ஆண்டு முழுவதும் செலவாகிக் கொண்டேஇருக்கும்.
இதுதவிர, அலங்கார ஊர்திகள் நிறுத்துவதற்கான இடங்கள், வந்தவர்களைத் தங்க வைப்பதற்கான டென்டுகள், அவர்களுக்கு உணவு ஏற்பாடுகள், போக்குவரத்து ஏற்பாடுகள், அணிவகுப்பு ஊர்வலத்தில் எப்படி பங்கேற்க வேண்டும் என்பதற்கான பயிற்சி ஏற்பாடுகள், பயிற்சியாளர்கள் என பல நூறு கோடி ரூபாய் காலியாகும்.
அது தவிர, நீங்கள் பார்த்திருப்பீர்களே ராணுவ அணிவகுப்பில் வரும் வீரர்கள். அவர்களும் அந்த ஒரு மாதமும் தமது வேலையை விட்டுவிட்டு இந்த அணிவகுப்பில்தான் இருப்பார்கள். அதற்கு முன்பேகூட அவர்களில் யார் யாரைத் தேர்வு செய்வது என்பதற்கான ஏற்பாடுகளிலும் கணிசமான நேரமும், அவர்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகளும் விரயமாகும். அவர்களும் குடியரசு தினத்துக்கு முன்பாகவே தில்லிக்கு வந்து தங்கியிருப்பார்கள். எத்தனை ரெஜிமென்ட்டுகளிலிருந்து எத்தனை ஆயிரம் பேரின் உழைப்பும் நேரமும் இதில் வீணாகும்? எத்தனை கோடிகள் இதில் போகும்?
இதுதவிர, ராணுவ வலிமையைக் காட்டுவது என்ற பெயரில், ராணுவத்துக்கு புதிதாக என்ன வாங்கப்பட்டதோ அதுவும் கொண்டு வரப்படும். அதற்கான ஏற்பாடுகள், அதற்கான சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள், சும்ந்து செல்வதற்கான வாகனங்கள், அதற்கான ஊழியர்கள், ராணுவத்தினர்... அவர்களுக்கான சம்பளம் எனப் பல கோடிகள்.
குடியரசு தினத்தன்று குதிரைப்படை வரும் பார்த்திருப்பீர்கள். அந்தக் குதிரைகளுக்கு வேறு வேலையே கிடையாது. இந்த ஒரு நாள் கூத்துக்காக சுமார் இருநூறு உயர் ஜாதிக் (!) குதிரைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றுக்கென ஊழியர்கள், பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், ராணுவத்தினர், அலுவலகம், இன்ன பிற என ஆண்டு முழுவதும் செலவாவது எத்தனை கோடிகளோ தெரியாது. அதுதவிர, அணிவகுப்பில் நடந்து செல்லும் அந்த குதிரைகள் போடும் விட்டைகளை உடனுக்குடன் அள்ளுவதற்கு ஒரு நூறு பேர்! அவர்களுக்கான சம்பளம், பயிற்சி, ஏற்பாட்டுச் செலவுகள்!
அணிவகுப்பின் இடையிடையே கலைக் குழுக்கள் கலைநிகழ்ச்சிகளை வழங்குவதயும் பார்த்திருப்பீர்கள். அந்தந்த மாநிலத்திலிருந்து வந்தவர்கள், தில்லியில் உள்ள அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள என ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு திறமையைக் காட்டியபடி ஆடிக்கொண்டு வரும். அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி உடையணிந்திருப்பார்கள். அந்த ஆடைகளுக்கான செலவு, பயிற்சிகளுக்கான செலவு, ஒத்திகைக்கு வந்து போவதற்கான செலவு! இதில் ஒரு பகுதி செலவு அவரவரே செய்ய வேண்டியும் இருக்கலாம்.
குடியரசு தினத்தன்று ராஜபாட்டையின் இருபுறமும் – தார் சாலையின் இருபுறமும் இருக்கிற மண்பகுதியைப் பார்த்திருப்பீர்கள். அது சிவப்பாக இருக்கும் என்பதைக் கவனித்தது உண்டா? அந்த சிறப்பான ‘சிவப்பு மண்’ கொண்டு வந்து பரப்பப்படுவதற்கு எத்தனை கோடி போகுமோ தெரியாது.
மாநிலங்களின் ஊர்திகளின் வடிவமைப்பு அந்தந்த மாநிலத்தின் செலவு. அதற்கும் பல கோடி ரூபாய் செலவாகும். அதைக் கொண்டு வருவதற்கு, அதைப் பராமரிப்பதற்கு என அதற்கென ஊழியர்கள், அவர்களுக்கான செலவுகள்!
பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்கள், அவற்றின் வடிவமைப்பு, நிர்வாகம் என சில கோடிகள்.
பைக் சாகசங்கள் செய்வதற்கென ஒரு ராணுவக் குழு. அதற்கான பைக்குகளின் பராமரிப்பும் செலவுகளும். சிவப்பு வெள்ளை பச்சை நிறங்களில் வானில் பொடிகளைத் தூவிக்கொண்டு போவதற்கான விமானங்களுக்கான செலவுகள்.
இத்தோடு முடிகிறதா? வெளிநாட்டிலிருந்து ஒரு தலைவர் சிறப்பு விருந்தினர். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள். தங்குமிட வசதிகள். ஒபாமா போன்ற அமெரிக்கத் தலைவர்கள் வந்தால் சாணக்கியபுரியின் பெரியதொரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை மொத்தமாக அவர்கள் தம் கையில் எடுத்துக் கொள்வார்கள். ‘உன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் மயிருக்கு சமானம்... நான் எல்லாவற்றும் என் ஆட்களைக் கொண்டுவருவேன்’ என்று ஹோட்டல் மொத்தமும் அவர்கள்தான் இருப்பார்கள். ஆனாலும், காந்தி சமாதிக்குப் போகும்போதோ, பக்கத்தில் தாஜ் மஹால் பார்க்கப் போனாலோ அவர்களுக்கான பாதுகாப்பையும் நம்முடைய அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். என்னதான் அவர்களுடைய தனி விமானத்தில் வந்தாலும், ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டலுக்கு 20-25 கிமீ சாலையில்தான் வர வேண்டும். அந்தச் சாலையில் இருபுறமும் 50-100 மீட்டருக்கு ஒரு போலீஸ்காரர் – மழையோ, குளிரோ, வெயிலோ – துப்பாக்கியைப் பிடித்தபடி நின்றிருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் போலீஸ்காரர்கள்! அவர்களுடைய ஊதியம்?! அவர்களை அங்கங்கே கொண்டு போய் இறக்குவதற்கு எத்தனை வாகனங்கள்! விஐபி போன பிறகு அவர்களை திரும்ப அழைத்துப் போகவும் வாகனங்கள் வர வேண்டும். அதற்கு தில்லி போலீஸ் தரப்பில் ஆகும் செலவுகள் எத்தனை கோடிகள்!
குடியரசு தின நாடகம் எல்லாம் அரங்கேறிய பிறகு இன்னொரு நாடகம் நடக்கும். அதன் பெயர் Beating Retreat. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ஆம் தேதி இந்த நாடகம் அரங்கேறும். இதைப் பார்ப்பதற்கு அழைப்பிதழ் கிடைப்பது மிகவும் கடினம்.
ராஜபாட்டையின் ஆரம்பத்தில் உள்ள விஜய் சவுக்கில் (வெற்றிச் சதுக்கம்) இது நடைபெறும். பக்கத்திலேயே இருக்கிற குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குடியரசுத் தலைவர் அதற்கென இருக்கும் பாரம்பரிய அலங்கார வண்டியில் வந்து இறங்குவார். பிரதமரும் இருப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை. (ஆளில்லாத குகைக்கே கையாட்டுகிற பிரதமர், அங்கே கொஞ்சம் கூட்டத்தையும் பார்த்துவிட்டால் சும்மா இருப்பாரா...? சுற்றிச்சுற்றி வந்து கையாட்டுவார்)
இதிலும் ராணுவ வீர்ர்கள், குதிரைகள், ராணுவ பாண்டு வாத்தியக் குழுக்கள் இடம்பெறும். (கூகிள் அடித்துப் பார்த்தால் வீடியோக்கள் கிடைக்கும்.)
சரி, Beating Retreat என்பதன் பொருள் என்ன தெரியுமா? போரில் இறங்கிய ராணுவம் மாலையில் போரை நிறுத்திவிட்டு முகாமுக்குத் திரும்புவதுதான் Beating Retreat.
17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரிட்டிஷ்காரர்கள் துவக்கி வைத்து வழக்கத்தை இப்போதும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கே எங்கே போருக்குப் போனார்கள்? எங்கிருந்து திரும்பினார்கள்?
இதற்கு எத்தனை கோடிகள் செலவு?!
இதையெல்லாம் நீங்கள் ஆர்டிஐ-யில் கேட்டால்கூட பதில் கிடைக்காது. ஏனென்றால், பல்வேறு அமைச்சகங்கள் தனித்தனியாக செலவு செய்யும். பாதுகாப்புத்துறை, உள்துறை, பொதுப்பணித்துறை, என ஒவ்வொன்றும் தனித்தனி தலைப்புகளில் செய்யும். சிலசெலவுகளை குடியரசு தினச் செலவாகவே காட்ட மாட்டார்கள், வேறு கணக்குகளில் காட்டுவார்கள்.
2015இல் யாரோ ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின்படி கேட்ட கேள்விக்கு 350 கோடி ரூபாய் செலவானதாக பதில் கிடைத்திருக்கறது. அது பொதுப்பணித்துறை செலவு.
மேலே நான் குறிப்பிட்ட விவரங்களின்படி, ராணுவம், ராணுவத்தினர் ஊதியம் என எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால், என்னுடைய உத்தேச மதிப்பீட்டில் குறைந்த்து 2000 கோடி ரூபாய் இந்த ஒரு நாள் கூத்தில் போகும் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டின் குடியரசு தினத்துக்கு 2000 கோடி செலவாவது பெரிய விஷயமா என்று சிலர் கேட்கலாம்.
குடியரசு தின விழாவில் குடியரசு என்கிற கொள்கைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா, அதில் குடியரசு தினம் என்ற வகையில் என்ன காட்டப்படுகிறது என்று யோசித்தால், ஏதும் இல்லை என்பது புரியும். குடியரசுத் தலைவர் உப்புச்சப்பில்லாத ஓர் உரையாற்றுவார். அத்தோடு சரி. குடியரசு தினத்துக்கும் ராணுவ வலிமையைக் காட்டுவதற்கும் என்ன தொடர்பு?
சீனா, கொரியா, இந்தியா இந்த மூன்று நாடுகள்தான் இப்படிப்பட்ட நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். வேறெந்த நாடுகளிலும் இப்படி நடப்பதாகத் தெரியவில்லை. அப்படியே சில நாடுகளில் நடப்பதாகவே இருந்தாலும், இப்போதும் பலகோடிப்பேர் வறுமையில் இருக்கும் நம் நாட்டில் இதுபோல சில ஆயிரம் கோடிகளை வீணடிப்பது தேவையற்றது.
பி.கு. - அலங்கார ஊர்திகள் சர்ச்சை குறித்து அடுத்த பதிவில் வரும்.
எவனும் தேசபக்திப் பாடம் எடுக்க வரத்தேவையில்லை.

வியாழன் 20 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...53

 




இயக்குனர் பாசில், மலையாள தேசத்திலிருந்து வந்து நல்ல பல தமிழ் படங்களை இயக்கியவர்...

அவரது படங்களில் பெரும்பாலும் மனித உறவுகளின் பாசப் போராட்டங்களே கதையாக இருக்கும். அவர் இயக்கியது மொத்தம் 10 தமிழ்படங்களே, அவற்றில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட்..
1. பூவே பூச்சூடவா - பாட்டிக்கும் பேத்திக்கும் இடையேயான பாசப்போராட்டமே கதையின் கரு. அதற்கு முன்பும் சரி அதன் பிறகும் சரி அப்படியான கதையம்சம் கொண்ட படம் வந்ததே இல்லை எனலாம். படம் சூப்பர் ஹிட்.
2. பூவிழி வாசலிலே- குடும்ப உறவுகளை இழந்த ஒரு குடிகாரனுக்கும் தாயை இழந்து வாடும் குழந்தைக்கும் இடையேயான பாசப் போராட்டம். படம் ஹிட்.
3. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு- குழந்தைச்செல்வம் இல்லாத ஒரு தம்பதியினர் தத்தெடுக்கும் குழந்தையின் உண்மையான தாய் தந்தையினர் வந்துவிட அவர்களுக்கு இடையே நடக்கும் சிக்கலான போராட்டங்கள் கதை.
4. வருஷம் 16- கூட்டுக்குடும்பத்தில் வாழும் மனிதர்களுக்கு இடையேயான சிக்கல்களைப் பற்றியது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்
5. அரங்கேற்ற வேளை- வேலை வெட்டியில்லாத மூன்று நபர்கள் தங்களின் நம்பி இருக்கும் குடும்பங்கள்/பிரச்சனைகளுக்காக ஒரு ஆள் கடத்தல் சம்பவத்தால் இப்படி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொன்னார். பாடல்கள் சூப்பர் ஹிட்.
6. கற்பூர முல்லை- அடையாளம் தெரியாத தாயை தேடி அலைந்து பின்னர் தாய்க்கும் மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டாமே கதை. பூங்காவியம் பேசும் ஓவியம் என்று ஜேசுதாஸ் பாடிய பாடல் மிக பிரபலம்.
7. கிளிப்பேச்சு கேட்கவா- வேலையில்லாத இளைஞர் வாத்தியார் வேலைக் கிடைத்து கிராமத்திற்கு வந்து பேய் பங்களாவில் தங்க, அந்த பேய் பங்களாவை சுற்றி நடக்கும் கதை.
8. காதலுக்கு மரியாதை- விஜய் பல படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்தத் திரைப்படம். இரு வேறு மதத்தை சேர்ந்த இருவரிக்கிடையே காதல் வர, அவர்களை சுற்றியுள்ள உறவுகளுக்கு அதை ஏற்க மனமில்லாமல் அவர்களுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டங்கள் தான் கதை. கிளைமேக்ஸ் அனைவராலும் பாராட்டப்பட்டது. இசைஞானியின் இசை என்றென்றும் அவரே இசையுலகின் ராஜா என்பது போல் இருந்தது. படம் மெகா ஹிட்.
9. கண்ணுக்குள் நிலவு-விஜயை வைத்து பாசில் இயக்க இரண்டாவதுத் திரைப்படம். மனநிலை பாதிக்கப்பட்ட கதாநாயகனை மீட்டெடுக்கும் கதாநாயகி. பாடல்கள் நன்றாக இருந்தது.
10. ஒரு நாள் ஒரு கனவு- இலக்கை நோக்கி பயணிக்கும் ஒரு இளைஞனை காதலிப்பதாகக் கூறி சவால் விட்டு அவனது வீட்டுக்கு சென்று அவனது உறவுகளை சந்திப்பது போன்று கதை நகரும்..'காற்றில் வரும் கீதமே' என்கிற பாடல் மனதை வருடிச் சென்றது..
பாசிலின் அனைத்துப் படங்களுக்கும் இசைஞானி இளையராஜாவே இசை என்பது கூடுதல் தகவல்.
பாசில் மலையாளத்தில் இயக்கிய 'மணிசித்ரதாழ்' திரைப்படம் தான் பின்னாளில் சந்திரமுகியாக தமிழில் வந்தது.

திங்கள் 17 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...52

 

கீதையைப் புறக்கணி!
திருக்குறளை உயர்த்திப் பிடி!
ஜனவரி 15 திருவள்ளுவர் தினம்
இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய சமூக அமைப்பில் நிலவும் கேடான ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை அப்படியே நீடிக்க செய்யும் வகையிலும், பார்ப்பன மேலாதிக்கத்தையும், சனாதன தர்மத்தையும் நிலைநாட்டுகின்ற வகையிலும் கொடூரமான பார்ப்பன பேரரசை நிறுவ ஆர் எஸ் எஸ் கும்பல் ஒரு நூற்றாண்டு காலமாக நமது நாட்டில் வெறித்தனமாக செயல்பட்டு வருகிறது.
இளம் மழலைகள் துவங்கி முதியவர்கள் வரை அனைவரையும் படிநிலை அடிப்படையிலான சாதிய பிற்போக்குத்தனமான சிந்தனையை தூண்டி வெறியூட்டுகிறது. இதன் மூலம் இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றுபட விடாமல் தடுக்கின்ற சதிச் செயலை செய்து வருகிறது இதன் மூலம் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை பாதுகாத்து பெரும்பான்மை மக்களை ஏழ்மையிலும், வறுமையிலும் தொடர்ந்து வாழ்வதற்கும், சூத்திர அடிமைகளாக வாழவும் பழக்கி வருகிறது.
இந்த இழிவான பார்ப்பன (இந்து) மதத்தை நம் தலையில் தூக்கி சுமப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் பார்ப்பன இந்து மதத்தின் புனித நூலாக கருதப்படுகின்ற பகவத்கீதை “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்று மகாவிஷ்ணு கொக்கரிப்பதையும், “எதிரில் இருப்பவரை கொலை செய்வதற்கு அஞ்சாதே! ஆன்மாவிற்கு மரணமில்லை, உடலைத்தான் கொல்கிறோம்” என்ற தத்துவத்தையும் முன்வைக்கின்றது. இதை மீண்டும், மீண்டும் பல வடிவங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் வெட்கப்படுவது இல்லை.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்று உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும், தாவரங்களையும், மனித இனத்தையும் பாதுகாப்பதை பற்றி தெளிவாக விளக்குகிறது.
அதே சமயம் உலகப் பொதுமறையான 170 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தனிச் சிறப்பு வாய்ந்த பெருமை கொண்ட திருக்குறள் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயர்ந்த சிந்தனையை போதிக்கிறது. அதுமட்டுமல்ல “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்று உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும், தாவரங்களையும், மனித இனத்தையும் பாதுகாப்பதை பற்றி தெளிவாக விளக்குகிறது.
திருக்குறளின் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளில், 133 அதிகாரங்களில் முன்வைக்கப்படும் 1330 குறளும் ஒவ்வொரு நெறியை முன்வைக்கிறது. இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரால் எழுதப்பட்டது. சனாதனத்திற்கு எதிரான சமத்துவ நெறியை போதித்த வள்ளுவருக்கே பட்டை போட்டு, காவி உடை தரித்த ஆரிய-பார்ப்பன சாமியாராக்க துணிகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். வருடந்தோறும் திருவள்ளுவரை முன் வைத்து பிரச்சாரம் செய்வதன் மூலம் தமிழர்களையும், ஒட்டு மொத்த இந்திய மக்களையும் ஏய்த்து விடலாம் என துணிச்சலுடன் செயல்படுகின்றனர்.
இந்தியா முழுவதும் இசுலாமியர், கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் மீது வெறுப்புணர்ச்சியையும், சாதி ஆணவத்தையும், ஆதிக்க சாதி வெறியாட்டங்களையும் முன் வைத்து பெரும்பான்மை மக்களை அடக்கி ஒடுக்கும் பார்ப்பன சனாதன மரபுகளை ஏற்க முடியாது. அதனை வீழ்த்த நம் கையில் உள்ள வரலாற்று பொருள்முதல்வாத மரபில் உள்ள அனைத்து ஆயுதங்களையும் இரண்டு கையிலும் ஏந்தி போராட வேண்டிய தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எனவே திருக்குறள் மன்றங்களை உருவாக்குவோம்! மாணவர்கள்-இளைஞர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் திணிக்கப்படும் சாதிய இழிவை போக்குவதற்கும் சமத்துவ உணர்வை ஊட்டுவதற்கும் திருக்குறள் நமக்கு முன் வைக்கிறது என்ற உண்மையை பெருமிதத்துடன் உயர்த்திப் பிடிப்போம். மக்களுக்குள் பிளவை போதிக்கும் பகவத் கீதையை புறக்கணிப்போம்.

சண்.வீரபாண்டியன்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...