பக்கங்கள்

சனி 15 2012

ஊழலின் ஊற்றுக்கண்களே அதிகாரிகள்தான்........................




 இந்திய நாட்டின ஊழலை ஒழிக்க வராது வந்த மாணிக்கம் என்று சொல்கின்ற தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பதினோறாவது மாநாட்டில் மத்திய தலைமை ஆணையர் சத்யனந்தா மிஸ்ரா என்பவர் ஊழலுக்கு ஊற்று கண்ணாக விளங்கும் அரசு அதிகாரிகளை பற்றி குற்றஞ்சாட்டினார்.


தகவல் அறியும் உரிமைச்சட்டம்  அமுலுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,அதிலுள்ள நல்ல அம்சங்களை அரசு அதிகாரிகள்  சரிவர செயல்படுத்தவில்லை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நாலாவது பிரிவையே அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்றார்.
தகவல் ஆணையருக்கு,  அமுல்படுத்தும் அணைத்து அதிகாரமும் கொடுத்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை  விதிவிலக்கு இல்லாமல் உண்மையாக முழுமையாக அமுல்படுத்தினால். இந்தியாவின் அரசு அதிகாரவர்க்கத்தின் தூண்கள் அணைத்தும் “டாமால்டுமால்ஆகி காலி பெருங்காய டப்பாவாக ஆகிவிடும்.

65 ஆண்டுகால சுதந்திர நாட்டில் அரசியல் சட்டத்திலும் நீதிமன்ற சட்டத்திலும் இருக்கக்கூடிய சட்டத்தையே அமுல்படுத்தினாலே “ஏழு மலைக்கு அப்பால், ஏழுகடலுக்கு அப்பால் ஊழல் ஓடிவிடும்.
ஆனால், இந்திய சு(சூ) தந்திரம் துரோகத்தினால் விளைந்த காரணத்தினால் இந்திய அரசியல் சட்டங்களும் துரோகத்தனமாக ஓட்டைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன.இதேபோல்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் …………

ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாய் இருப்பதும் அரசு அதிகாரிகள்தான், இந்நாட்டை ஆளுவதும் அதிகாரிகள்தான். தங்களுக்கு தேவையான சட்டங்களை மக்களை வாட்டும் சட்டங்களை அமுல்படுத்துவதும் அதிகாரிகள்தான்.

ஊழிலை ஒழித்தால் அதிகாரிகளை ஒழிப்பதற்கு சம்ம். அதிகாரிகளே அதிகாரிகளை ஒழித்துவிடுவார்களா? பேருக்கு சில பூச்சாண்டி காட்டி சில ஊழல் செய்த அதிகாரிகளை தண்டிப்பதாக காட்டிக் கொள்வார்கள். ஆகவே, எந்த கட்சி ஆண்டாலும் எந்த அதிகாரி வந்தாலும் ஊழலை ஒழிக்கவும் முடியாது ஊழல் அதிகாரிகளை ஒழிக்கவும் முடியாது. இருக்க கூடிய சட்டத்தை பயனபடுத்தி நல்ல அதிகாரிகளையும் நல்ல கட்சிகளையும் வாயை மூட வைக்கலாம், கஞ்சா கேஸ்,அவதூறு கேஸ் இப்படிபொய் கேஸ்களை போட்டு மற்றவர்களை பயமுறுத்துவதும் அதிகாரிகள்தான.

புதிதாகவரவிருக்க்க்கூடியகொடியசட்டத்தையும்அமுல்
படுத்தக்கூடியவர்கள் அதிகாரிகள்தான். அவர்களால் நல்ல சட்ங்களை அமுல் படுத்தவே முடியாது பத்து பேரில் ஒன்பது பேர் நல்லவராக இருந்தால் கெட்டவரை அடக்கி நல்லவற்றை செய்வார்கள் என்று நம்பலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை. பத்துப்பேரில் ஒன்பது பேர் கெட்டவர்கள் ஒருத்தர் மட்டும் நல்லவராக இருந்தால் அவரால் தலைமுடியைக்கூட புடுங்கமுடியாது.

தகவல் அறியும் சட்டம் வருவதற்கு முன் ஏகப்பட்ட ஊழல்கள்.அதிகாரமுறைகேடுகள் வெளி வந்து சந்தி சிரித்தன. அந்த வழக்குகளில் ஒருவராவது தண்டிக்கப்பட்டதாக வரலாறு கிடையாது.
 அதே மாதிரிதான் வராது வந்த மாமனியாலும் ஊழலின் ஒரு கிளையைக்கூட ஆட்டவோ. அசைக்கவோ முடியாது.ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் .டிஸ்மிஸ்ஸோ,தண்டனையோ எதிர்பார்க்க்கூடாது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் என்ன பலன் என்றால்.முன்பெல்லாம் மனு போட்டால் மனு என்னாச்சு என்றே தெரியாது. கேட்டாலும் முறையான பதிலும் கிடைக்காது. தகவல் அறியும் சட்டத்தினால் கொடுத்த மனு என்னாச்சு என்று தெரிஞ்சுக்கலாம், பத்து தடவை மனு போட்டு பதினோறாவது தடவையாக ஒரு நடவடிக்கையில் ஒரு  உத்தரவு மூலம் ஆறுதல் அடையலாம்.அவ்வளவே!! நடவடிக்கை சரியில்லையென்று நீதிமனறத்துக்கு போனால் அடுத்த நூற்றாண்டுவரை காத்து இருக்கவேண்டும். 

தகவல் அறியும் சட்டத்தில்கூட முடியும் முடியாது
என்று தகவல் தருவது கிடையாது, காலம் கடந்தது என்றும், 
விதி 8ய் சுட்டிக்காட்டுவதும் தலையை சுத்தி மூக்கை தொடும் தில்லாங்கடி போன்ற திசை திருப்பும் வேலையே அதிகம் நடக்கிறது. 

இரண்டாவது மேல் முறையீட்டில் தகவல் ஆணையரிடம் ஒரு பேச்சும், மனுதார்ரிடம் ஒரு பேச்சுமாக அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள்.தகவல்ஆணையரின்உத்தரவை மதித்தாகவோ,
மதிக்காத காரணத்தால் தண்டனை பெற்றதாகவோ ஒரு வரலாறோ, ஒரு துண்டு துக்கானி நடவடிக்கையோ  செய்தியோ இல்லை.

ஒரு நல்லவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால்,.அதில் அதிகாரிகள் பத்து கெட்டவற்றை கண்டு பிடித்துவிடுவார்கள். அந்த நல்லவைகள் இருந்தஇடமே இல்லாமல் அழிக்கப்பட்டுவிடும் இதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது இதில் அரசியல் வாதிகளுக்கு ஊழல் வழிகளையும் தப்பிக்கும் வழிகளையும் சொல்லிக் கொடுப்பதே அதிகாரிகள்தான்,நல்லவற்றை ஒழித்து கட்டுவதில் அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் இரட்டைகுழல் துப்பாக்கிகளாக செயல்படுகிறார்கள்.


 






வெள்ளி 14 2012

அவனொரு.........................

அவன்........

சிரிக்கத்தான்
முயன்றான்
சிரிப்புத்தான்
வரவில்லை

சிந்தித்தால்
வருமாமே...
சிந்தித்தான்
முடியவில்லை!

சிரிக்கவும்
சிந்திக்கவும்
தெரிந்தவன்
மனிதனென்றால்.......

சிரிக்கவும்
சிந்திக்கவும்
முடியாத....

சினிமா,
பொறுக்கிஅரசியல்
போதை மிகுந்த
அவனொரு..........டாஸ்மாக் குடிமகன்



புதன் 12 2012

வல்லரசு கனவு கானும் இந்தியாவில் மாதம் பதிணைந்து ரூபாய் சம்பளம் தரும் மாநில அரசு..??????????





அகில உலகம் மதிக்கும் பேரு பெற்ற பணக்கார சாமி அருள்பாலிக்கும் கர்ர்நாடக மாநிலம். அந்த மாநிலத்தில் உள்ளது. உடுப்பிநகர்நகர். அந்த நகரில் அமைந்துள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக 1971ம் ஆண்டில் அக்கு,லீலா என்ற இரண்டு தாய்மார்கள் வேலைக்கு சேர்ந்தார்கள்

இந்தியா வல்லரசாக நெருங்கி கொண்டு இருக்கும் இருபத்தியோர்ராம் நூற்றாண்டான இன்றுவரைக்கும். அந்தத் தாய்மார்கள் இருவரையும் பணி நிரந்தரம் செய்யாமலும்,அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்தி கொடுக்காமலம். அவர்களை கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது கர்நாடக அரசு.

அந்த இரு தாய்மார்களும் இந்திய சட்டத்தின்படி தங்களுக்குப தர வேண்டிய ஊதியத்திற்க்காக 2001ம் ஆண்டில் கர்நாடக மாநில நிர்வாக ஆணையத்திடம் முறையிட்டனர். அந்த நிர்வாக ஆணையத்திடம் முறையிட்டதினால்  வழங்கி வந்த பதிணைந்து ரூபாய் சம்பளத்தையும், ரவடியைப்போல் மாறி பழிவாங்கும் நோக்கத்தில் நிறுத்திவிட்டது மாநில அரசு.

அக்கு,லீலாவும் தங்களுக்கு கொடுத்து வந்த சம்பளம் நிறுத்தப்பட்டாலும் வேலையை விட்டு விலகாமல்.கடந்த பணிரென்டுகாலமாக தொடர்ந்து சம்பளமில்லாமல் துப்பரவு வேலைகளை செய்து கொண்டு வருகிறார்கள்.
சமூக அக்கறை கொண்ட சிலர் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவ வந்த்தை மறுத்து.பணஉதவியேயா, பச்சாதாபமோ எங்களுக்கு வேண்டியதில்லை எங்களுக்கு தேவை நீதி!! என்றார்கள்.

பணக்கார கடவுளும்,காசுக்கார சாப்டவேர் கம்பெனிகளும் நிறைந்த  கர்நாடகா மாநிலத்தின் அரசின் வக்கிரமும் அற்பபுத்தியும் அடவாடித்தனமும் நிறைந்ததே வல்லரசு கனுவு கானும் இந்தியாவும்........

நன்றி! புதியஜனநாயகம் நவம்பர்2012



செவ்வாய் 11 2012

நிஜ வில்லன்... கதாநாயகனாக.................



 குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த தேர்தலிலும் நரவேட்டையாடிய மோடியே  முதல் அமைச்சராக அமருவதற்கு வாய்ப்பும் வசதியும்  பிரச்சாரமும் இருக்கிறது. அதனால்தான அத்வானி,சுஷ்மா போன்றவர்கள் மோடிக்கு பிரதமராக வருவதற்கு தகுதியும் இருக்கிறது என்று தோசையை மாற்றி போட்டு இருக்கிறார்கள்.

அந்த வாய்ப்புகளின் ஒன்றுதான் நிழலை நிஜமாகக் காட்டும் சினிமா..அந்த சினிமாவை காட்டித்தான் தமிழ்நாட்டை  ஒன்று சாகும்வரைக்கும் ஆண்டு மடிந்தது. மற்றொன்று இரண்டாவதாக இருண்டஆட்சி நடத்திக் கொண்டு  இருக்கிறது .

இந்திய சினிமா படங்களில் வில்லன்களாக நடித்தவர்கள் கதாநாயனக மாறியது மாதிரியே... நிஜத்தில் வில்லனாக இருந்து நரவேட்டையாடிய கொலைகாரர்கள் நல்ல மனிதராக.நிழலை நிஜமென்று காட்டப்படுகின்றன என்பதற்க்கான சான்றுகளில் ஒன்று கோலேகிராப்என்ற தொழில் நுட்பத்தில் உருவானமோடியின் தேர்தல் பிரச்சார வீடியோ”.......

கோலேகிராப் என்ற தொழில் நுட்பமானது 3டியின் அடுத்த கட்டம். இந்த டிஜிடல் கேமராவில் மோடி பேசுவதை படமாக்கி திரையிட்டபோது. மோடியே திரையில் நேரடியாக வந்து வாக்காளரிடம் வாக்கு கேட்பது போல் இருக்கும்.

இந்த தொழில் நுட்பத்தை இந்தியாவில் முதன்முறையாக நரவேட்டையாடிய கொலைக்கார மோடிக்காக பயன்படுத்தி உள்ளார்கள். மோடியின் தமிழ்நாட்டு வாரிசுகள்.

குஜராத்தி மொழியில் மோடி பேசியதை படமாக்கி மோடிக்கு திரையிட்டு காண்பித்தபோது மோடியே நம்பமுடியாமல் அசந்து போனாராம். அந்த நர வேட்டையாடிய கொலைக்காரனின் பாரட்டை பெற்று புளகாங்கிதம் அடைந்தார்கள் அதன் இயக்குநர்ரும் ஒளிப்பதிவாளரும்.

எல்லாவகை தொழில் நுட்பங்களும் சினிமாநுட்பங்க்களும் ஏழைக்கு 
பயன்பட்டதாக வரலாறு இல்லை. அது கொலைக்காரகளுக்கு கொலைக்கும் கொள்ளைக்குமே பயன்படுகிறது பயன்படுத்தப்படுகிறது.
என்பதே இந்தியாவில் வரலாறு...................


ஞாயிறு 09 2012

பரதேசிக்கு மூன்றாம் உலகப்போரின் பக்கவாத்தியம்.......................




பக்கவாத்தியத்தின் மறுபெயர் ஜால்ரா என்று பெயர். ஜால்ரா எததெக்கு போடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். யார்யார் எப்படி பக்கவாத்தியம் செய்தார்கள் என்பதுதான் தெரியாத விசயம் அதில் ஒன்றுதான் கருவாச்சி காவியம் படைத்த ஒலகமகா கவிஞர், மூன்றாம்  உலகப்போர்படைத்தவர்  இந்திய அரசின் விருதுகளை அள்ளிக் குவித்தவர் அவராவது பக்கவாத்தியம் போடுவதாவது  எல்லாரும் அப்படித்தான் நிணைப்பீர்கள் மூன்றாம் உலகப்போரின் வார்த்தை ஜாலங்களை படித்துப் பாருங்கள்

சேது படமெடுத்த பாலா சேது பாலான்னு பேரெடுத்தவர். தேயிலை தோட்டத் தொழிலாளர்களைப்பற்றி “பரதேசிஎன்ற பெயரில் படம் எடுத்து,அந்தப்படத்தின்  பாடல் மற்றும் டிரைலரின் விளம்பர நிகழ்ச்சியின் வெளியீட்டு விழா நடத்தினார். அந்தப்  நிகழ்ச்சியில் மூன்றாம் உலகப் போரின் பக்கவாத்தியம்தான் ரெம்ப ருசிகரமாக இருந்தது.
பரதேசி பாலா படத்தை திரையிட்டு காண்பித்தார். படத்தை பார்த்ததும் எல்லாருக்கும்போல அல்லாமல்  கவிக்கு மட்டும் ஒரு அதிர்வு ஏற்ப்பட்டது அந்த அதிர்விலிருந்து கோல்டன் உதிர்த்த பக்க வாத்தியங்கள்

தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படம் யாரும் தவறவிட்டுவிடக்கூடாது பஞ்சம் பிழைக்க போகும் ஒரு கூட்டத்தின் வாழ்க்கை இதில் பிம்பப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாத்தியத்தோடு நிற்காமல்“ பரதேசி பாலா தன் படங்களில் மனிதனின் மறுபக்கத்தை பார்க்க ஆசைபடுபவர், பரதேசி படத்திலும் அவர் இப்படித்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நீரோட்டத்துடன் ஓடுவது செத்த மீன் (அட) நீரோட்டத்தை எதிர்த்து ஓடுவது உயிருள்ளமீன்(அடடா) அந்த மீன்தான் பரதேசி பாலா, அவரது படத்துக்கு பாடல் எழுதியது வித்தியாசமான அனுபவம் என்று தன் பக்கவாத்தியத்தை  தொடர்ந்தார்.

பஞ்சம் பிழைக்க போகும் கூட்டத்தைப்பற்றிய வலி எனக்கு தெரியும். வாழ்க்கையில் தான் பெற்ற அனுபவங்களே எழுத்துகளாக வருகின்றன
சினிமாவில் எழுதி குவித்த காமரசம் சொட்ட சொட்ட ததும்பும் பாடல்கள்  காதல் பாடல்கள் குத்துப்பாடல்கள் எல்லாம் அவருடைய  அனுபவம்தான். ப கவி எழுதிய பாடல்களின் வரிகளை மாற்றாத ஒரே இயக்குநர்ரு பாரதிராஜா மட்டும்தானாம். பரதேசி பாலா கூட பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்றபோது நன்றாக இருந்தால் மாற்றிக் கொல்லுங்கள் என்று விட்டு பாடல் வரியை மாற்றி விட்டால் சொல்ல வந்த கருத்து மாறிவிடும் என்றவுடன் பரதேசிபாலா அதைப்புரிந்து கொண்டு கவியின் பாடல் வரிகளை மாற்றமால் பயன்படுத்தியதில் பாரதிராஜாவக்கு அடுத்த இடத்தில் இருக்கிறாராம்.

 தாம் எழுதும் பாடல்களை தன் அனுபவமாக்கூறும் கவிராயர். தான் பிறந்தமண்ணில்நிலவும்சாதிவெறியையோ,இரட்டைகுவளைப்பற்றியோ,
சாதிமறுப்பு திருமணகொடுமையை பற்றிய அனுபவத்தை பாடவில்லை. இவர் தூக்கி வைத்து ஆடும் இரு இயக்குநர்களுக்கும் அது பற்றி வாயே திறக்கவில்லை   

இதே பரதேசி பாலா  மூன்றாம்உலகப் போரின் பக்கவாத்திப்படி மனிதனின் மறுபக்கத்தை பார்த்த்தினால்தான். நான் கடவுள் படத்தில்   நடித்த மாற்று திறனாளிகளுக்கு பேசியபடி ஊதியத்தை தராமல் பட்டை நாமம் போட்டார்.  பிதாமகனில் நடித்த விக்ரமுக்கு ஊதியத்தை குறைத்து கொடுத்து மொங்கா போட்டார். பரதேசி படம் வந்த பிறகுதான் அதில் நடித்தவர்களில் எத்தனை பேரை பரதேசியா ஆக்கியிருப்பதும் தெரிய வரும்.

முன்னொரு காலத்தில் அரசர்கள் நாட்டை ஆண்டபோது மன்னனின் கொடுங்கோல்  கொடுமையின் அவலத்தை பாடாது  அதை மறைத்து இல்லாததை ஏற்றி போற்றி மன்னனை  புகழ்ந்து வாழ்த்திபா பாடி வயிறு வளர்த்து புகழ் பெற்றார்கள்.  இந்தக் காலத்து கவிப் புலவர்கள்.அவர்களின் அடியோற்றி  சமூகத்தில் நிலவுக்கூடிய உண்மைகளை மறைத்து பொய்யாக திரித்து  நிழலை நிஜமென்று காட்டி மாயையில் ஆழ்த்துபவர்களை வாழ்த்தும்  பக்கவாத்தியங்களாக  புலவர்களும், மூன்றாம்  உலகபோர் கவிராயர்களும்  வாழ்த்துப்பாடி தானுண்டு,தன்கவியுண்டுமாய் சொத்தும் புகழும் சேர்த்து ஒலக பிற்போக்குத்தனமும் சீரழிவும் நிறைந்த கவி உலகில் கவி பேரரசுகளாக.கவி சக்ரவத்திகளாக,காட்டிலே வாழும் சிங்கங்களாக.புலிகளாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.




உலகப்போர்,பக்கவாத்தியம்,

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...