பக்கங்கள்

வெள்ளி 17 2015

அய்யா..ஞானப்பிரகாசம் அவர்களே!!!

படம்-www.tutyonline.net

சட்டம் அனைவருக்கும்
சமமுன்னு தாங்கள் 
சொன்னதாக இந்தக்
குடிமகனிடம் அந்தக்
குடிமகன் ஔறிக்
கொட்டினான் அவனிடம்
சொன்னதை  தங்களிடம்
கேட்கிறேன்..அய்யா
 ஞானப்பிரகாசம் அவர்க்ளே!

இந்தக் குடிமகன்
ஏதோ ஔருகிறான் 
என்று எண்ண வேண்டாம்
குடிகாரன் உளறினாலும்
உண்மையைத்தான் சொல்வான்
 இது வாகை சந்திரசேகர்
உளறிய சினிமா
வசனமல்ல அய்யா
ஞானப்பிரகாசம் அவர்களே!!

சட்டம் எல்லோருக்கும்
சமம் என்று
சொன்ன தாங்கள்
தலைக்கவசம் அணிந்து
டூவீலரில் செல்லாமல்
ஹாய்யாக ஃபோர் 
வீலரில் செல்கிறிர்களே!
உங்கள் நரம்பில்லா
நாக்கு  அங்கும்
மிங்கும இப்படி
உளறி கொட்டுவதேன்
ஏன்? அய்யா
ஞானப்பிரகாசம் அவர்களே!!

வியாழன் 16 2015

சட்டம் அனைவருக்கும் சமமுன்னு நம்ம ஞானப்பிரகாசம் சொல்லிட்டாண்டி...

படம்-dailyceylon.com




மாப்ள.....

கோடி கோடியாய்  நீ
டாஸ்மாக்கில கொட்டிய
வள்ளலாக இருந்தாலும்ம்..
போதையில டூ வீலர்
ஓட்டினா... ஹெல்மெட்டு
மாட்டிதாண்டி நீ வண்டி
ஓட்டனும்மாண்டி ..  ஒனக்கு
 எந்த சலுகைளும் காட்ட
முடியாதாம்ண்டி சட்டம்
அனைவருக்கும்  சமமுன்னு
நம்ம ஞானப்பிரகாசம் சொல்லிட்டாண்டி...

புதன் 15 2015

மெல்லிசை மன்னர் திரு.எம்எஸ்வின் அஞ்சலிக்காக......




MS Viswanathan passes away
படம்-ஒன்இந்தியா
என்னையும் முனுமுனுக்க வைத்தவர்க்காக......




வந்த நாள் முதல் இந்த நாள் வரை  வானம் மாறவில்லை  வான் மதியும் நீரும் கடல் காற்றும்  மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)  நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்  நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்  ஜாதியும் பேதமும் கூறுவார் - அது  வேதன் விதியென்றோதுவார்  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  (வந்த நாள்)  பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)  பாயும் மீன்களில் படகினைக்கண்டான்  எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்  எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  (வந்த நாள்)  இன்பமும் காதலும் இயற்கையின் நீதி  ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி  பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  ம் ஹ்ம் ம் ஹ்ம் 

நன்றி!baskar paramasivam 

செவ்வாய் 14 2015

பிச்சை எடுத்தது பரபரப்பாம்டா...மச்சி......

படம்-www.dinamalar.com5



டேய் மச்சி,  நாம
நம்ம பொண்டாட்டி தாலிய
அறுத்து பிள்ளகளின் கொலுச
வித்து, வீட்டுல உள்ள அண்டா
குண்டாவ அடகு வச்சு
நண்பன் கிட்ட கடன்
வாங்கி தினமும் டாஸ்மாக்
கல்லாவ நிரப்பி ரோட்டுல
வாயப் பொளந்து கிடக்கிறது
பரபரப்பு இல்லயாம் டா...மச்சி.......

ஒளிபரப்புக்கு  ஒருநாள்
56 ரூபா பிச்சை எடுத்தது
பரபரப்பாம்டா...மச்சி......



செய்தி---மதுரை : நேரடி ஒளிபரப்புக்குப் பணமில்லை என தமிழக அரசு கூறியதைத் தொடர்ந்து பிச்சை எடுத்து ரூ. 106 ஐ தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள் 13 2015

மக்கள் குடிகெடுக்கும் அரசு.....

படம்-கதிர்நிலவன்


படம்-katir.nilavan

பெண்களின் தாலி அறுப்பதை
தடுக்கவும் மாணவர்-இளைஞர்
வாழ்வு இருட்டாவதை நிறுத்தவும்
அரசு நடத்தும் சாராய..
விற்பனையை நிறுத்தச் சொல்லி
நல்லவர்களும் பாதிக்கப்பட்டவர்களும்
அந்த அரசு பரப்பும் அகிம்சை
முறையிலே மனு கொடுத்தார்கள்
மன்றாடினார்கள் பட்டினி கிடந்தார்கள்.

எருமை போல் அசைந்து
கொடுக்காத அரசால் பலனில்லை
என்றதால் சாராயக் கடைக்கு
பூட்டு போட்டார்கள், சாராய
சம்ராஜ்ஜியத்தை ஆளும் புர்ர்ர்ச்ச்சி
தலைவியின் அரசோ..மனு
கொடுத்தவர்களை மன்றாடியவர்களை
பட்டினி கிடந்தவர்களை தன்
காவல் படையை ஏவி ஓட
ஓட விரட்டி துவம்சம் செய்து
கைது செய்து உங்களால் என்ன
செய்ய முடியும் என்று சவால்
விடுகிறது.. போராடும் மக்களை
நாயினும் கீழாக நடத்துகிறது.
சாராய விற்பனையிலும் மக்களின்
வரிப்பணத்திலும் வயிறு வளர்க்கும்
போலீசும் அதிகார வர்க்கமும்

இதனால்தான்..........

குடிகெடுக்கும் அரசிடம்
கெஞ்சியது போதும்!
மன்றாடியது போதும்!!
கெடு விதிப்போம்
ஆகஸ்டு 31  !!!

ஆள அருகதை இழந்த்து அரசு கட்டமைப்பு!
இதோ, ஆள வருகிறது மக்கள் அதிகாரம்!!
என்று சூளுரைக்கிறார்கள்.!!!
டாஸ்மாக்கை மூடு! மக்கள் அதிகாரத்தை நிறுவு!!

குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!
தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!!
மூடு கடையை, எவன் வருவான் பார்ப்போம்!!!

நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...