எட்டு முழ ஆடையுடன்
ஆட்டுப்பால் குடித்து
வந்த ஒரு ஏழையை
ஏழையாக காட்டுவதற்கு
நிறையவே செலவு
செய்ய வேண்டியுள்ள
தென்று ஒரு கவிக்
குயில் கூவியது.
இந்த ஏழை ஒருநாள்
மார்க்சின் மூலதனத்தை
அரைகுறையாக படித்து
விட்டு-நான எழுதியிருந்தால்
மார்கசைவிட நன்றாக
எழுதியிருப்பபேனென்று
உளறி கொட்டியது.
கம்யூனிஸ்டுகளின்
சமூகத்தைவிட-என்
சமூகமான
ராமராஜ்ஜியம்
உயர்வானதென்று
தம்பட்டமடித்தது.