பக்கங்கள்

சனி 21 2019

இது ஆசையில்லை பெரும் பேராசை....



பேராசை பிடித்த காக்கா க்கான பட முடிவு




வணக்கம் நண்பரே..... என்ன இந்தப் பக்கம்....!!!

உங்களை பார்க்கத்தான்..இந்த பக்கம்..

என்ன விசயம் சொல்லுங்கள்...

ஒன்றுமில்லை.. இந்த செல்லில் வந்த பேச்சைக் கேளுங்கள்..


சரி..கொடுங்கள்...கேட்கிறேன்....

.....................
.......................

.......................


யாரு  இது  இப்படி வசவு....உங்களுக்காக...??!!!

ஆம்..எனக்குத்தான்.... யாரதுஎன்று எனக்கு தெரியவில்லை... அந்த வசவின் சாரத்தை அதாவது விளக்கத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும்.. அதற்குத்தான் உங்களை பார்க்க வந்தேன்.. என்னைப்பற்றி  நன்றாக அறிந்தவர்கள் அல்லவா தாங்கள்......!!!!!!!!!

அப்படியா...???? செல்லை கொடுங்கள் திரும்பவும் ஒரு தடவை கேட்டுச் சொல்கிறேன்....

இந்தாருங்கள்.....

............................

..................................

.....................................


நண்பரே..! இந்த வசவு உங்களுக்கு அல்ல.... வேறு ஒருத்தனுக்கான வசவு நம்பர் மாறி வந்துவிட்டது.... மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் அந்த ரிக்கார்டு பதிவை அழித்துவிடுங்கள்.... நானே அழித்துவிடட்டுமா...?
விபரத்தை சொல்கிறேன் பொறுங்கள்...

சரி..அழித்துவிடுங்கள்....

நண்பரே... இது கள்ளக் காதலால் வந்த.... சாரி..சாரி... உங்கள் பாசையில் காதலன் காத்திருந்த காதலியை தவிக்கவிட்டு விட்டதால் வந்த கடுங்கோப வசவு நண்பரே !

அப்படின்னா....!!!

இதுக்குத்தான் நான் உங்களுக்கு அடிக்கடி சொல்றது.... ஒன்னு நீங்க காதலிக்கனும் இல்ல .கலியாணம் பன்னியிறுக்கனும்.. அப்படி பன்னியிருந்தா  உங்களுக்கு நான் சொல்வது புரியும்...

உங்களுக்கு  கிடைச்ச டிமாதிரியான வாய்ப்பும் வசதியும் எனக்கு கிடைக்கலையே  தலீவா....

இப்படிச் சொன்னா எப்படி...நண்பரே!!

உண்மையைத்தானே சொன்னேன்..வயசாயிடுச்சு ...என்னை நம்பி பத்து டிக்கெட் இருக்கு.... தொழில் வேற..அவ்வளவு சிறப்பா  இல்ல..இதுல காதல்....கல்யாணமுன்னு   ......

இத ஒன்ன சொல்லிருங்க  நண்பரே..!   அப்ப பாத்திங்க....  இப்பவுமா....???அவுக அவுக சுமைய அவுக அவுககிட்ட  ஒப்படச்சிடனும் நண்பரே...!.. உடனே..என்ன உதாரணமா காட்டி சொல்லாதிீங்க....

சரி.சரி...உங்க பாதையிலே வரேன்... வீட்டோட மாப்பிளையாக இருக்கிற மாதிரி ஒரு பொண்ண பாருங்க... என் தொழிலு..வீடு எல்லாத்தையும் அவுக அவுகட்ட விட்டுட்டு போயிடுறேன்...


இது பேராசை நண்பரே.....!!


ஆசையே படதாவனை ஆசை படுங்கன்னு சொல்றிங்க  ஆசை பட்டா பேராசைங்கிறீங்க....

இது ஆசையில்ல நண்பரே..! பெரும்.. பேராசை... உங்கள் பேராசை நீராசையாகிடும் நண்பரே...!!!

(எதையோ கேட்க..எங்கயோ  போகுதே)

திங்கள் 16 2019

கனவல்ல நிஜம்.....




உளைச்சல் க்கான பட முடிவு



தொழில் முடக்கம் கடன் பிரச்சினை, இடப் பிரச்சினை,உடல் பிரச்சினை இப்படி.... இப்படி பல பிரச்சினைகளில் அல்லாடி வந்தநிலையில் ஓரளவுக்கு அஞ்சாமல் சிறு நடைபோட்டு தெம்பு வந்த நிலையில்....கணினியை திறந்து என்ன செய்யலாம் எதை பதிவிடலாம் என்று யோசிக்கையில்  ஒன்னுமே நினைவுக்கு வரவில்லை..நேற்றைய தினத்திலிருந்து ஒவ்வொன்றாக யோசித்தபோது காலையில்  ஊர் பேர் முகம் தெரியாதவரிடம் சம்மதமே இல்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டது வந்து நின்றது... சரி ..அதை எழுதுவோம். என்று  தோன்றியது.. தோன்றியதை உடனே செயல்படுத்தினேன். அப்புறம் எழுதுவோம் என்றால். மறந்துவிடும். அதோடு கணினியில் உட்கார இடம் கிடைக்காது.. என்பதால் சூட்டோடு சூட்டாக எழுத ஆரம்பித்தேன்

காலையில் விடாமல் அடித்த செல்போனின் ஒலிகேட்டு கண் விழித்தபோது
சிறுநீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது...எழுந்து அவசரமாக வந்த சிறு நீரை கழித்துக் கொண்டு இருக்கும்போதே சாமி வேறு இரண்டாவதாக அருள் வந்து நின்றது.( சாமி என்பது  மலம்) அருள் வந்து சாமி வந்தால் அதை அடக்ககூடாது என்பது ஐதீகம்,  எந்த சிக்கல் வந்தாலும் மலச்சிக்கல் வரக்கூடாது என்று ஆறு அடி,ஏழு அடி உயரமுள்ளபெரியோர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு... கோயில் கருவறையான  கழிப்பிட அறைக்குள் சாமியையும் கும்பிட்டு தண்ணீர் ஊற்றி அலம்பிவிட்டு வருவதற்குள் சத்தம் எழுப்பிய போன் ஒலி நின்றுவிட்டது. செல்போனை நோண்டி  பார்த்தால் பத்து தடவை ஒலித்ததை காட்டியது..யாரென்று தெரியவில்லை.யாரா இருக்கும் என்பதும் தெரியவில்லை போனில் சேமிக்காத எண்ணாக இருந்தது..ட்ரு காலர் அப்பீ என் போனில்இல்லை..

பத்து  தடவை சலிக்காமல் அடித்திருக்கிறார்கள்... நாம் திரும்ப அடித்து கேட்போம் ஏன்? எடுக்கவில்லை என்று கேட்டால் .இருக்கவே இருக்கிறது..ரெடிமேட் பதில்” எனக்கு காது அவுட்டு ”என்பது, இந்த பதிலை ஏற்கவில்லை என்றால்..போனில் சார்ச் இல்லை என்று இப்படி ஒன்றிரண்டு பதிலை தயாரித்துக் கொண்டு..வந்த மிஸ்டு கால் நம்பரை தொடர்பு கொண்டேன்.

சட்டென்று எடுத்தார் ஒரு பெண்... நான் யாரென்று கேட்பதற்குள் சரமாறியான வசவுகள்...  நான் பேசுவதை கேட்க தயாரில்லை...கடைசியாக வசவுகளுக்கு பின் அந்தப் பெண் சொன்னதுதான் என் மண்டைக்குள் நின்றது. அதாவது. உன் உறவும் வேணாம் உன் ஒட்டும் வேணாம்.நான் ஏமாந்தது போதும்.. இனிமேல் என் வீட்டுக்கு  பல்ல இளிச்சிகிட்டு வந்திடாதே!... மீறி வந்தே! உன் மானத்த வீதிக்கு வந்து நாறடித்துவிடுவேன்.. .வைய்யிடா  போன... என்றுவிட்டு இணைப்பை துண்டித்தார்..

என்னடா..இது.... இருக்கிற உளச்சல்ல . இருந்து இப்பதான் மீண்டு வரேன்.இதுல கண் காணதா உளச்சல் வேறா.... என்று நானும் எனக்குள்ளே சிறிதுநேரம் என்னை திட்டிய பெண்னை நானும்  திட்டி புலம்பி  என் கோபத்தை  அடக்கிக் கொண்டேன்...கோபத்தை அடக்க கூடாது என்பதால் நானாக திட்டிக் கொண்டேன் நல்லவேளை... வீட்டில் உள்ளவர்களுக்கு நான் திட்டியது கேட்கவில்லை... இன்னும் கோபம் அடங்காமல் நம்மளைத்தான் . திட்டுகிறேன் என்று நிணைக்கவில்லை...

கடந்த மாதங்களில் இருந்து அக்கா. மச்சான் மருமகன் மருமகள் எல்லாருக்கும்  இறந்து போன என் அம்மாவுக்கும் சேர்த்து டோஸ் விட்டு கோபத்தில் எல்லாரையும் திட்டிக்  கொண்டு இருந்தேன்... கடனும் செலவும் அவர்காளல் அதிகமானதால் வந்த ஆத்திரம்......கெட்டு போன பிறகுதான் புத்தி வரும் என்பது மாதிரி  வரவு-செலவில் நான் கறார் காட்டாமல் விட்டதால் வந்த வினை...

அதில் ரிலாக்ஸ் ஆகி வந்தால்....கனாக்கடி மாதிரி..கனா வசவு  போல......அடுத்த ஒரு உளச்சல்....ஏற்கனவே..மோடி..அமித்சா...ஆட்சியில் பல  புற உளச்சலை ஏற்படுத்தியது போல..இது அக உளச்சலு போல............






ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...