| ஜூலியஸ்பூசிக் http://ta.wikipedia.org/s/3r3t |
சிறைச்சாலை வழியாகத்தான் மனித நாகரிகம் வளர்கிறது என்று சொல்கிறார். “புறம்போக்கு” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான் ஜனநாதன்.
இதற்கு ஆதரவாக அவர், “தூக்கு மேடை குறிப்புகள்” என்ற நூலை எழுதிய ஜூலியஸ் பூசிக்-கை பற்றி சொல்கிறார்.செக்கோஸ்லோவோக்கியாவின் கம்யூனிஸ்ட் தோழர் ஜூலியஸ் பூசிக் இட்லரின் நாஜிக் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். ஜூலியஸ் பூஷிக் கொல்லப்பட்டவுடன் அவரின் சிறைக் குறிப்புகளை தேடி எடுத்து அவருடைய மனைவி ”தூக்கு மேடைக் குறிப்புகள்” என்று வெளியிடுகிறார்...
மனித நாகரிகம் சிறைச்சாலை வழியாகத்தான் வளருகின்றது என்று சொல்லியிருக்கிறார். நிலவுகின்ற (முதலாளித்தவ,பாசிச)அரசியலையும் அதன் தத்தவத்தை எதிர்த்தபோது .சிறை பிடிக்கப்படுகிறார். சிறையில் அடைக்கபட்டவுடன் அவருடைய தத்துவம் நடைமுறைப்படத்தப்படுகிறது. வரலாறு முழுக்க சிறைச்சாலை வழியாகத்தான் சமூகம் வளர்ந்து வந்திருக்கிறது என்று ஜூலியஸ் பூசிகக் சொன்ன குறிப்புகளின் ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் சொல்கிறேன் என்றார்.இயக்குநர்
கூடவே.....பகத்சிங் சிறையிலிருந்த போது நிகழ்ந்த சம்பவத்தையும் தன் “புறம்போக்கு” படத்தில் குறியீடாக பயன்படுத்தி இருப்பதாக சொல்கிறார்.
இந்தப்படத்திற்க்காக உண்மையான சிறைச்சாலையாக இரண்டு கோடி செலவில் 150 கார்பெண்டர்களுடன் முப்பது நாட்களில் அமைத்து 500 பேர்களுடன் 55 நாட்கள் சிறைச்சாலை படப்பிடிப்பு நடந்தது. கல்யாண நாள் மாதிரி இருந்தாக தெரிவித்தார்.
சிறைச்சாலைக்கு போகாதவர்களால் சிறைச்சாலை அனுபவம் தெரிய வாய்ப்பில்லை.என்றாலும் . தனியாக சிறைச்சாலை சென்று வந்தவர்களுக்கு சிறைச்சாலை அனுபவம் பற்றி “ புறம்போக்கு” படம் வந்தப்பிறகுதானே தெரியும். ஜனநாதனின் சிறைச்சாலை ரியாலிட்டியா??? சினிமாத்தனமா...? என்று......................
| http://puthucinema.com/ |

