பக்கங்கள்

சனி 17 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-16






 அண்ணே..நீங்க...ஏண்ணே....கலியாணமே..பன்னிக்கல......

“அது  பெரிய கதையடா...”

“ பெரிய கதையா... பராவாயில்லைண்ணே.... விட்டு விட்டு சொல்லுங்கண்ணே...”

“நான் ஏன்? கலியாணம் முடிக்கலைன்னு.. கண்டிப்பா... நீங்க தெரிஞ்சுருகனுமா...?? ”

“பழகிட்டோம்..தெரிஞ்கிட்டா....நாள பின்னக்கி..” உதவுமில்லண்ணே...”

“ ஒனக்குதான் ரெண்டு, மூணு இருக்கே..! பின்னே எதுக்கு என் கதைய கேட்குற..”


“அய்யோ..அவன  விடுப்பா....கேட்கத்தெரியாம கேட்குறான்...நா..தெரிஞ்சுக்றேன்... எனக்கு சொல்லு,  ”

நீங்க தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க..”

என்கிட்டேயே...ஒன்னப் பத்தி தப்பா பேசுகிறவன்கிட்டயிம்.. பேசுகிறவ கிட்ட எதித்து பேசுவேன்ல....”

”நீங்கசொன்னா...நம்பவா போறாங்க.....”

“நம்புறாங்களோ... நம்பலயோ....நாங்க  உண்மையை சொல்வோம்ல...”

“ ஏண்ணே... காதல் தொல்வியாண்ணே....”..

டேய்...காதல்  தோல்விண்ணா......அண்ணே..நம்கிட்ட  பேசிகிட்டு..இருப்பாராடா...”

“ நீ எத வச்சுடா..அண்ணன காதல் தோல்வின்னு சொல்ற...”

“ அண்ணே..தாடியும் மயிறுமா... காட்சி யளிக்கிறத பாத்துதான்  ”

“ அண்ணன் தாடி வச்சயிருக்கிறது காதல் தோல்வி இல்லடப்பா....”அது வேற இரகசியம்டப்பா...”


“ அந்த ரகசியம் என்னவோ்்்?ஃ

“அத அண்ணனிடமே ...கேளுங்கடா....”

“ இந்தா...அய்யா.... நீங்களா..எதையாவது நிணச்சு  தெருக்காரங்கே..இம்சை சொடுக்கிற மாதிரி.... நீங்களும் எனக்கு இம்சை கொடுக்காதீங்கப்பா...” நான் தாடி வச்சுயிருக்கிறதுக்கு காதல் தோல்வியும் இல்ல..கீதல் தோல்வியும்...இல்ல.... மாநகராட்சி கொழாயில... நாலு நாளய்க்கு ஒரு தடவைதான் தண்ணி விடுறான்...அதனால டெய்லி குளிக்க முடியல.... எங்காவது அவுட்டருல போகும்போது தண்ணிய கண்டா குளிப்போம்ல...., அப்படி கண்ட தண்ணியில  குளிக்கும்போது சலதோசம் பிடிக்காம இருக்கிறதுக்குதாண்ய்யா..நா....தாடி வச்சுருக்கேன்... வேறு ஒரு இரகசியம் இல்ல அய்யா...”

“ நிஜமாகவா..அண்ணே.....”

“ ஏ...சத்தியம் அடிச்சு சொன்னாதான்  நம்புவிய்யா...”

“டேய்  தாடி வச்சா..சேவிங் பன்ற வேல மிச்சமிடா.....”

“ அதோட காசும் மிச்சடா...”

“ அண்ணனுக்குத்தான் எந்த செலவும் கிடையாதே...”


“பீடி, சிகரெட், காபி, டீ, எதுவும் சாப்பிடுவது கிடையாது...

” என்ன வலி... அவ்வளவு  கஞ்சனா..நீ...?

என்னண்ணே.... நான் டீ குடிக்காலாட்டியும் உங்களுக்கு வாங்கித்தரலையா..? மற்றவர்களுக்கு நா... எதுவும் வாங்கித்தரலியா....?ஃஃ” சொல்லுங்க.....”

“ சே..சே..... சும்மா. ஒன்னய சொல்லி இவன.லந்து செய்தேன்...”

“ யாரு இவனா.... போண்ணே...போ... நல்ல கதைய கெடுத்த போ....” வயித்த வலிய போக்குவதற்கு  ஒருத்தி கிட்டே ஆயிர ரூபா கொடுத்து ஏமாந்திருக்காண்ணே....”

” அட....அப்பேர்பட்ட வள்ளலாடா.... வயித்த வலிக்கு ஆஸ்பத்திரிக்கு போகாம.. ஏன்டா..அவட்ட கொடுத்து ஏமாந்த.....”

“ அது பெரிய கதண்ணே....”

சரி....அவனோட வயித்த வலி கதைய..கேட்கவா... இவரோட கலியாணம் முடிக்காத கதைய கேட்கவா...?.... 

“அண்ணேனுக்கு..இவனோட கத தெரியும்.....”

“ எப்படிடா...”
நாங்கதான் சொன்னோம்... அண்ணன் கதையாகவே..பிளாக்கருல எழுதிட்டாரு..”....

“என்ன..”

“ ஆமண்ணே.... வயித்த வலி தீர மருத்துவம் சொன்ன மருத்துவர் அல்லாத பெண்” என்ற தலைப்புல” இவரு ஆயிரம் ரூபா கொடுத்து ஏமாந்த கதய  எமுதியிருந்தண்ணே....”

“ ஆ...அப்படியா... பத்தியா.... ஓங்கதைய சொல்லாம.... அடுத்தவன் கதைய சொலல்லுறியே அண்ணே.......”

“எங்க ஓடிடப்போறேன்.... நாளப்பின்ன சொல்றேன்...”

“ ஆமா..அப்படித்தான் சொல்லுவீங்க... ஒரு வாரம் கழிச்சு  பார்க்றகுப்போ...கேட்டா வேலை அதிகம் அதனால வர முடியல...என்பிங்க...”

வேல இல்வேன்னா  வரமலா போறேன்... சொல்லுங்க..... இப்ப வந்து இவ்வளவு நேரமா..உங்ககிட்ட பேசல...... நீங்கதான் என்னக் கண்டவுடன்  ஆளுக்கு ஒரு திசை பக்கமா  ஓடுறிங்க......”  என் கதைய அடுத்து சொல்றேன்... வயித்து வலி தீர..அயிரம் ரூபா  கொடுத்து ஏமாந்த.கதைய. அண்ணனக்கு சொல்லங்கப்பா..சொல்லங்க....


....!!!!!!........???????.......,?ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ










ஞாயிறு 11 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-15

தெருவின் முகப்பில் உள்ள கோயிலுக்கு சற்று தள்ளி உள்ள கடையின் முன் அவர் பேசுவதை நாலைந்து பேர் கூட்டமாக நின்றும் அருகில் அமர்ந்தும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தனர்..இடைஇடையில் கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் அப்படி செய்திருக்கலாமே... இப்படி செய்திருக்கலாமே.... என்று  தங்கள் தரப்பு யோசனையை  தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்த யோசனையை செயல்படுத்த முடியாத தன் இயலாமையையும் தெரிவித்து  பேசிக் கொண்டு இருந்தார்.

எனக்கும் ஏரியா நாட்டாமையும், தெருவை மறித்து புறம்போக்கில் கட்டியுள்ள கோயிலின் பூசாரியுமான குருசாமிக்கும்  இடப்பிரச்சியைானது என் அப்பன் காலத்திலிருந்து தொடங்கி என் அம்மாவிடம் வளர்ந்து கடைசியாக என்னிடம் முட்டிமோதிக் கொண்டு இருக்கிறது..  நடப்பு சம்பவம் என்னான்னா... என் வீட்டிக்கு எதிர் வீடு அந்தாளு வீடு...அந்தாளு வீட்டின் கழிப்பறை கதவை திறந்தால் நான் வரும் பாதையை மறைக்கும்...சிறிது நேரம்தானே.. என்று எதுவும் சொல்லாமல் சற்று ஒதுங்கி வருவேன்...எப்போதும் போல அதை சகித்துக் கொண்டு சைக்கிளில் போய்கொண்டு இருந்தேன்.  

அந்தத் தெருவில் வசித்தவர்களில் முதல் நபராக என் தொழிலுக்கு உதவியாக டிவிஎஸ்50 டூவீலர் ஒன்று வாங்கினேன். , என்னவைிட வாய்ப்பும் வசதியும் இருந்தவர்களுக்கு பயன்படுத்த வழியில்லாத, தேலையில்லாத காரணத்தால் அவர்கள் வண்டி வாங்கவில்லை.

அவர்களைவிட பணபலத்தில் ஆள்பலத்தில் கீழ் நிலையில் உள்ள நான் வண்டி வாங்கியது அவர்களின் கண்களை உறுத்தியது.. தெருவில் உள்ளவர்கள் ஒரே சாதியாக இருந்தாலும் எனக்கு நெருங்கிய உறவினர்கள் கிடையாது..“ பறையன் முறை பல முறை” என்று சொல்லும் பழமொழியைப் போல..அண்ணன்.தம்பி, மாமா. என்று அழைத்துக் கொள்வது உண்டு. ஆனால் அவர்களை அப்படிமுறை சொல்லி நான் அழைத்தது கிடையாது.....ஆண்களை “சார்” என்றும்பெண்களை “மேடம்” என்றுதான் அழைப்பேன் .எனக்கு கீழ் உள்ள நாலைந்து வயதுள்ள மூத்தவர்களை  வேடிக்கைகாக சிலரை தலைவரே, அண்ணா. தம்பி, என்றுஅழைப்பேன்.அதுவே அவர்களுக்கு என் மேல் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நிணக்கிறேன்.

நான் வண்டி வாங்கிய முதல் நாளில் தெருவுக்குள் வண்டி ஓட்டிய பயிற்சி இல்லாததால் தெருவில் உருட்டிக் கொண்டு வந்தேன்.அதையே பாப்பாபட்டி,கீரிப்பட்டி மாதிரி என்னை தெருவுக்கள் வண்டி ஓட்டி வரக்கூடாதுன்னு கோயில் பூசாரியாக இருக்கும் நாட்டாமை அன்றே உத்தரவு போட்டார்..நானும் நான் வண்டி வாங்கிய பொச்சு காப்பில் இருக்கிறார்கள் என்று சில நாள்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்தேன்..

ஒருநாள் அந்த பூசாரியின் வீட்டுக் கழிப்பறை கதவு பல வேளைகளில் திறந்தே இருந்தபோதும் சாத்திவிட்டு அதன் அருகில் உள்ள சாக்கடையை கால்வாயை சிறிது கஷ்டப்பட்டு வண்டியை உருட்டிக் கொண்டு வந்தேன்..அந்த இப்போ இருப்பதற்கு முன்பு  அதாவது பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதற்கு முன்பு இருந்த சாக்கடை....சில வேளைகளில் வண்டியில் சுமை வைத்திருந்தபோதும் தெருவின்  மெயின் ரோட்டிலிருந்து உருட்டிக் கொண்டு வந்தாலும் சுமையுடன்  சாக்கடை கால்வாயை கடப்பதற்கு  பெரும் சிரமமாக இருந்தது. அந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு ஒரு சின்ன பலகையை அந்தக் கால்வாயில் மேல் போட்டு வண்டியை உருட்டிய போது... பூசாரியும் அந்த தெருவின் பொம்பள நாட்டாமையான பென்னர் ராஜேந்திரன் மனைவியும் விடுதலை சிறுத்தையின் முகாம் தலைவனின் தாயாருமான காமாயி , தன் மகள் மருமகள் மற்றும் உறவினர்கள் அடங்கிய படையுடன்.வந்து வண்டிக்காக போட்டிருந்த பலகையை போடக் கூடாது என்று என்னுடன் சண்டையிட்டார்கள் போட்ட பலகையை   பயன்படுத்தாதவாறு உடைத்துவிட்டார்கள்....நான் என் நிலமையை சொல்லியும் அவர்கள் தங்கள் காதில் ஏற்றுக் கொள்வதாக இல்லை... 

சண்டை ஓய்ந்த சில மணி நேரங்களில். சிறு குழந்தைகள் தெருவில் விளையாடுவதால் ..நான் தெருவில் வண்டி ஓட்டி குழந்தைகள்    மீது வண்டியை ஏற்றிவிட்டதாக என் மீது போலீசில் புகார் செய்தார்கள். 

இரண்டு போலீஸ்காரர்கள் லத்தியுடன் வந்தார்கள்..அவர்கள் பின்னே..பெண்கள் கூட்டமாக வந்து. என் வீட்டை காட்டினார்கள்.அவர்கள் கூப்பிடுவதற்கு முன்ப வெளியே வந்து நான்தான் என்று போலீஸ்காரர்களிடம் அறிமுகமானேன். நான் நடந்த விபரத்தை சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுதே...ஒவ்வொரு பொம்பளையும் இடை மறித்து என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தினார்கள். காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள்.

காவல் நிலையத்தில் என்னை டாட்புட் என்று திட்டினார்கள். நான் சொல்வதை எவரும் கேட்பதாக இல்லை....சப்பு இன்ஸபெக்டர் வந்தபிறகு என்னை .. இனிமேல் தெருவில் வண்டி ஓட்டி செல்ல மாட்டேன்.. சிறு குழந்தைகள்  விளையாடுவதால் உருட்டிக் கொண்டே செல்கிறேன் என்று எழுதி கொடுக்கச் சொன்னார்கள்..இப்போது அதைத்தானே செய்து கொண்டு இருக்கிறேன் என்று சொன்னபோது..சொன்னதை எழுதிக் கொடுக்கப்போறியா..? ஜெயிலுக்கு போறீயா என்று கர்ஜித்தார்கள். செலவு பன்ன காசு இல்லாததால் அவர்கள் சொல்லிய படி எழுதி கொடுத்துவிட்டு வந்தேன்...

தெருக்காரர்கள் எல்லாருக்கும் ஒரே சந்தோசம்.....நான் தோற்றுப்போனாலும் அதை வெளிக்காட்டாமல் வழக்கம்போல் சுமையுடன் வந்தாலும் சாக்கடை கால்வாய்க்கு அருகில் வண்டியை நிநுத்தி வண்டியிலுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தூக்கிக் கொண்டு என் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு பின்வண்டியை என் மருமகன்தள்ள உருட்டிக் கொண்டு என் வீட்டு முன் நிறுத்தி விடுவேன்.

பாதாள சாக்கடை திட்டம் வந்தபோது..... இடம் சம்பந்தமாக எனக்கும் . சாராய கடை இருக்கும் இடத்துக்காரன் ஜெயராமன் அப்பனுக்கும் வழக்கு நடக்கும் இடத்திற்குள் 20 அடிக்கு மேல் குழாய் பதிக்க  முயன்றபோது.. வந்திருந்த அதிகாரியிடம் இந்த இடத்தின் உரிமை சம்பந்தமாக எனக்கும்  முன்னால் பஞ்சாயத்து தலைவரும் இன்னால் காந்தி மன்ற பிரமுகருமான அய்யணன் அம்பலம் என்பருக்கும் வழக்கு நடக்கிறது. வழக்கு நடக்கிறது என்பதற்க்கான ஆதாரத்தை கொடுத்து இந்த இடத்தை விட்டு அடுத்த இடத்தில் தொடங்குகள் என்ற போது... பூசாரியின் கழிப்பறை கதவுக்கு அருகில் இருந்த கால்வாயில் இருந்து தோண்ட முற்படும்போது.. பூசாரி குருசாமி... இந்த தெரு எனது சொந்த இடம். எனக்கும் காமாயி என்பவர்க்கும் சொந்தமான இடம்.ஆளுக்கு ஐந்து ஐந்தடி போட்டதால் எங்களுக்கு மட்டுமே உரித்தான இடம் . இந்த இடத்தி்ல் பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டாம் என்று தடுத்தார்கள்.


நான் அதிகாரிடம் சார், வழக்கு நடக்கும் இடத்தில் அவர்கள் சொல்லும் 20 அடிவரை போட்டால் பின் எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் பாதாளசாக்கடை குழாயை எடுக்க முடியுமா? என்று கேட்டபோது...“ அப்படி எல்லாம் எடுக்க முடியாது போட்டது போட்டதுதான் என்றார். நானும் வழக்கு நடக்கும் இடத்தில் போட வேண்டாம் என்று தடுத்தேன். இருவரும் சண்டையிட்டதால். எனது வீட்டுக்கு வரும் தெரு பாதையில் சாக்கடை குழாய் பதிப்பதை வேண்டுமென்றே தடுத்துவிட்டாரகள்.

பாதாள சாக்கடை குழாயும் சிமெண்ட் தளமும் மற்ற தெருவில் போட்டுவிட்டு என் வீட்டுக்கு செல்லும் பாதையில் போடாததால் என் வீட்டுக்கு செல்லும் பாதை பள்ளமாகவும்  பூசாரியான நாட்டாமையின் கழிப்பறை கதவு அருகில் தெரு உயரமாகவும் இருந்ததால்  அந்த இடத்தில் வண்டியை ஏற்ற முடியவில்லை. 

டிவிஸ்.50 வண்டி லோனை கட்டி முடித்துவிட்டு டிவிஸ் சுசிகி பைக் ஒன்றையும் எனது பயன்பாட்டுக்காகவும் வாங்கினேன்... ஏற்கனவே, பொறாமையில் இருந்தவர்களுக்கு மேலும் பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த இரு வண்டிகள் செல்வதற்காக பள்ளமாக இருந்த இடத்தில் சிறிது மண்ணை அள்ளி கொட்டினேன். கொட்டினததான்  தாமதம் பூசாரி பயங்கரமான வசவுடன் வந்தான் . அவனை தொடர்ந்து காமாயியும் அவளது மருமகள்கள் மகள்கள் கூட்டமாக வந்து நான் கொட்டிய மண்ணை அகற்றினார்கள். நான் மண்ணை அகற்றவிடாமல் மறித்தேன். அந்த சமயத்தில் கூட்டத்தில் இருந்தவள்களில் இருவர்  என் ஆண்குறியை அழுத்தி பிடிக்க இன்னொருத்தி என் விதைக் கொட்டயை நசுக்க என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை... நீங்கள் சொல்வது மாதிரிய காலால் எத்தவோ. எட்டி உதைக்கவோ.அவள்களிடம் இருந்து விடுவிக்கவோ என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. என் ஆண்குறியை பிடித்தவர்கள் சொன்ன வற்றைக்கு எல்லாம் நான் பேசமுடியாமல் தலையாட்டியதால்தான்..அவள்கள் எண் ஆண் குறியையும் விதைக் கொட்டயையின் பிடித்த பிடியை விட்டார்கள். 

அதன்பின் என்ன... அவள்கள் நான் கொட்டிய மண்ணை அள்ள... நான் தலையாட்டி ஒப்பக் கொண்டபடி அமைதியாக எழுந்து வீட்டுக்குச் செல்ல வழக்கம் போல 100க்கு போன் அடித்து போலீஸ் வேண்டி வர,  என் தரப்பில் நானும் மருமகனும், எதிர்தரப்பில் பூசாரி குருசாமியும்   அவனின் தொடுப்பு காமாயியும்ஆக நால்வரும் வண்டியில் ஏற்றப்பட்டு காவல் நிலையம் செல்ல.. அங்கு இரவு வரை உட்கார வைக்கப்பட்டு மறுநாள் மதியம் ரயில்வே ஸ்டேசன் இருகில் மொபைல் கோர்ட்டில் ஆளுக்கு 300 ரூபாய் அபதாரம் கட்டி வந்தவரை இன்னும் பிரச்சனை முடியாமல் இருக்கிறது.  இதுதான் இந்த தெரு பொம்பளைகளைக் கண்டால் ஒதுங்கி செல்வதற்கு காரணம்...

நீங்க  சொன்ன மாதிரிதான் வண்டியில ஏத்திக்கிட்டு போன போலீசுகிட்ட என் சூத்த பிடிச்சு கொல்ல பாத்தாங்கன்னு சொன்னேன் அந்தாளு “யோவ் பொம்பள சூத்த பிடிச்சான்னு சொன்னா நம்ப மாட்டஙகய்யா..உனக்கு ரெம்ப கேவலமாகிவிடும்ய்யா..என்று சொன்னதாலே....அத சொல்லல....

பின் உறுப்பு வீங்கிப் போயிருச்சு.....யார்கிட்டேயும் சொல்லாம ஆஸ்பத்திரியில ரெண்டு ஊசிய போட்டு மாத்திரை போட்ட பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக வீக்கம் வத்தி சகஜமாயிருச்சு........அப்படி..செஞ்சிருக்க வேண்டியதானே..இப்படி செஞ்சிருக்க வேண்டியதானேன்னு நீங்க செல்லுறது மாதிரி ...  என் தெரு பொம்ளகிட்ட சிக்கி பாருங்க அப்ப தெரியும் உங்களுக்கு நான் பட்ட வலி.....

   பொம்பளைகளா..அவள்க....???

அப்படித்தான் சொல்றாங்க.....

மணி 12 ஆச்சுண்ணே....

இனி அடுத்த இம்சையை அடுத்த சந்திப்பில்...... கிளம்புக.. அவுகஅவுக வீட்டுக்கு....
ஸ்கூட்டி டூவிலரில் செல்ல மு்டியாதவாறு பள்ளமாக்கப்பட்ட தெரு.



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...