பக்கங்கள்

சனி 28 2012

இந்தியாவின் மோசடி தந்தை.......................

ஒரு கதை சொல்வார்கள். “எதிரே வந்தவனை.அய்யா கும்பிடுறேனங்க”
என்று ஒருவன் சொன்னானாம். அதுக்கு எதிரே வந்தவன்.“ ஒங்கப்பன்
பட்ட கடன அடையுடா என்றானாம். வணக்கம் சொன்னவனும் அப்பன்
பட்ட கடன அடச்சனாம். மரியாதைக்காக  ஊர் பேர் தெரியாத வணக்கம் சொன்னவன். தெரிந்தோ தெரியமாலோ தன் அப்பன் பட்ட கடனை அடை
த்து நேர்மையாக இருந்தான். ஆனால் உலகம் போற்றுவதாக சொல்லப்
படும் ஒரு தந்தை தன் மகன் பெற்ற கடனை அடைக்காமல் முயலாமல்
செய்த மோசடி தனத்தை பாருங்கள்........


அரிலால் என்று பெயர். அரிலாலுக்கு படிப்பு சரியாக வரவில்லை. அதனால் டாஸ்மாக கடை வருவதற்கு முன்னமே அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது
இதனால் அவர் தன் தாயிடமும் ககோதரனிடமும் பண உதவி கேட்பார்.


இந்த அரிலால் சோலாப்பூரில் ஒரு மில்லில் வேலை செய்தார். அந்த வேலை
பிடிக்காமல், “சுயராஜ்ய ஸ்டோர்” எனற் பெயரில் ஒரு கடையை நடத்தினார்.
அதில் எதிர் பார்த்தபடி வருமானம் இல்லாததால் கடையை இழுத்து மூடினார்.


அரிலாலுக்கு கடன் உதவி செய்த ஒருவர். அரிலாலுவின் தந்தைக்கு ஒரு
கடிதம் எழுதினார். அய்யா, உங்களுடைய நேர்மையையும் கட்டுப்பாட்டை
யும் கண்டுதான். தங்களைப் போலவே தங்கள் மகன் இருப்பாரென்று 
எண்ணிஅவர் கடைக்கு  தாமதமானாலும் எப்படியும்  வாங்கிய கடனை 
திருப்பி கொடுத்து விடுவார் என்று நம்பி கடன் கொடுத்தேன்..இப்பொழுது கடையை மூடிவிட்டார். ஆகையால் தாங்கள் தங்கள் மகன் பெற்ற கடனுக்கு ஒரு வழி சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


ஆனால், துரோகத்துக்கு பேர்போன அந்தத் தந்தையோ,அந்த கடிததுக்கு
பதில் எதுவும்  தெரிவிக்காமல்,தன்னுடைய பத்திரிகையான“யங்
இந்தியா”வில்...........இப்படி...


எனக்கும் அரிலாலுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனை நம்பி
யாரும் கடன் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால். அதற்கு நான்
பொருப்பல்ல... இப்படிக்கு.என்று ஒரு செய்தி வெளியிட்டார் அந்தத் தந்தை
அறிக்கைக்கு முன் கொடுத்த கடனுக்கு வழி என்ன என்று அந்த வக்கீல்
தந்தை  பதில் ஒன்றும் சொல்லாமல் மழுப்பிவிட்டார்.


அரிலாலின் தந்தையின் அகிம்சை வழியும் மாலைப்பொழுதினில் நடத்தும்
பஜனையும் பகவத்கீதையின் உபதேசங்களுமே  ஆங்கிலேயேடமிருந்து
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் தந்தாக பீற்றிக் கொள்ளும் நேரத்தில்
தன் மகன் பெற்றக் கடனுக்கு ஒரு வழி சொல்லாமல் அறிக்கை வெளியி
யிட்டு  மோசடி செய்த ஒரு“ மோசடி தந்தை” இந்தியாவுக்கு சுதந்திரம்
வாங்கித் தந்த  தேசந்தந்தை  என்று சொல்லுவதும் மோசடிதான். இந்திய  சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த மோசடி தந்தையாகத்தான்
 இருந்திருக்கிறார்.

   

புதன் 25 2012

கடவுளைப் பற்றி கடவுள் பக்தர்கள் சொன்னது?.....


இந்த உலகத்தில் வாழம்போது ஒரு வேளை உணவு தர முடியாத கடவள்
இறந்தபின் சொர்க்கத்தில் நிரந்தரமாக ஆனந்தம் தருவார் என்பதை நான்
நம்பவில்லை.....







பசித்திருப்பவன் மன்னால் கடவுள் ரொட்டி ரூபத்தில் வந்ததால்தான் கண்டு
கொள்வான்........................................................






வாழ்நாள் முழுவதும் யாகங்கள் செய்வதிலும்,கற்பனையில் பிறந்த கடவுளை
கண்டறிவதில்,காலத்தை கழித்து அதிலே கரைந்து போனார்கள்.நானோ மனிதனை தேடும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ளேன்.......
                                                                                         






சுத்த அறிவே! சிவமென்று கூறுஞ்தருதிகள் கேளீரே.......

செவ்வாய் 24 2012

சுழி பிடித்த பிள்ளையாரே.............




கற்பகக் கடவுளே,விருச்சிகமே!
கருனைக் கணபதியே!
இந்த ஒலகம் முழுவதும் ஆட்சி
செய்பவனே! வேண்டும் வரம்
அருள்பவனே!

 மாட்சிமை  தாங்கியவர்கள்
செய்யும்  சமூக
விரோததொழில் யாவும் 
சிறப்புடன் நிகழ்த்திடச் 
செய்பவனே!.................

தாமரை முகத்தில் அமர்ந்திருக்கும் ஆனை
முகத்தானே! உன் திருவடியே சரணம்
எனஅடைக்கலம் அடைந்துவிட்டவர்களை
காத்தருள்பவனே!

வாழ்வில் பல குற்றங்குறைகளை செய்துவிட்டு
உன்னை  நாடி வருவோர்க்கு  பாது காப்பு
கொடுப்பவனே!

நல்லோரையும்,வல்லலேரையும்
மதிக்காதவனே!

எல்லோரும் ஒருநாள் சாகும்போது. கடலில்
 கரைத்தாலும் சாகாமல் இருப்பவனே!!!.

ஆஸ்பத்தரியும் மருத்துவ மனையும்
இல்லாத காலத்திலே முக மாற்று
அறுவை சிகிச்சை செய்தவனே!

உண்ணாமல் பேளாமல் இருப்பவனே!
நான்  சாமி கும்பிடுவதற்கு ஒரு கழிப்பறை
வேண்டும். உன்னால் தர முடியுமா???
சூழி பிடித்த பிள்ளையாரே.............

குறிப்பு--  கக்கூஸ்க்கு போவதுதான் சாமி கும்பிடுவது
                  என்பதின் அர்த்தம்

திங்கள் 23 2012

“காகோரி ரெயில் கொள்ளை வழக்கும்” போரிட்டு மாய்ந்த மாவீரர் சந்திரசேகர்ஆசாத்தும்.......

மாவீரர் சந்திர சேகர் ஆசாத்

“காகோரி” என்ற ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி அதிலிருந்த
பிரிட்டீஸ் அரசாங்கத்தின் கஜானாவை இந்திய விடுதலை போராளிகள்
கொள்ளையடித்ததால்“காகோரி ரெயில் கொள்ளை வழக்கு” என்று
பிரபலமாகிவிட்டது. அந்த வழக்கை தொடர்ந்து புரட்சிகாரர்களை பிரிட்டீஸ்
போலீஸ் காரர்கள் வலைபோட்டு தேடிவந்தார்கள்.

அந்த வழக்கில் வெள்ளை போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்
பனிரெண்டு பேர்கள். அவர்களால் பிடிக்க முடியாமல் தவிக்கவிட்டு
தலைமறைவானவர் மாவீரர் சந்திரசேகர் அசாத்

மாவீரர் சநந்திரசேகர் ஆசாத்தை உயிருடனோ,பிணமாகவோ பிடித்து
கொடுப்பவர்களுக்கு 5000-ரூபாய் பரிசு வழங்கப்படும்.என்று அறிவித்து
விளம்பரம் செய்யப்பட்டும் அவரை பிடிக்க முடியவில்லை.

இதோடு, லாலாலஜதிராயின் கொலைக்கு பதிலடியாக ஆங்கிலேயே
போலீஸ் அதிகாரிக்கு பதிலடி கொடுத்த வழக்கிலும்,  பிரிட்டிஸ் போலீ
சால் பிடிக்க முடியவில்லை.

மாவீரர் சந்திரசேகர் ஆசாத்துக்கு 27 வயதாகும்போது. அவர்மீது 28
வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. பிரிட்டீஸ் போலீசாரால் அவரது
வாழ்நாள்  முடியும் வரை ஆசாத்தை பிடிக்க முடியவில்லை.

லாகூர் நீதிமன்றத்தில் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ்  மூவருக்கும்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆசாத், சிறைக்
கதவுகளை உடைத்து தோழர்கள் மூவரையும் விடுதலை செய்து
விடவேண்டும் என்ற சிந்தனையிலே குறியாய் இருந்து அதற்க்கான
செயல்களில் ஈடுபட்டு கொண்டுயிருந்தார்.

அந்த வேலையின் நிமித்தமாக. முன்னால் தோழனும் நண்பனுமான
ஒருவனை சந்திக்க சென்றபோது, அந்த நண்பன் அலகாபாத் ஆல்பிரட்
பூங்காவில் பேசுவோம் என்று சொல்லிவிட்டு பிரிட்டீஸ் போலீசுக்கு
 ஆள்காட்டி வேலையை செய்துவிட்டான். பழைய விடுதலை போராட்ட
நண்பனை நம்பி மாவீரர் ஆசாத்  அவனுடன் பூங்காவுக்கு போனார்.

1931ம்ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் காலை 10 மணிக்கு பூங்காவிலுள்ள
மரம்,செடி உள்ள மறைவிடங்களில் எல்லாம் 60,70 போலீஸ் ஒளிந்து
கொண்டு இருந்தார்கள்்

நிலமையை புரிந்து கொண்ட மாவீரர் ஆசாத் ,நம்பி வந்த நண்பன் காட்டி
கொடுத்துவிட்டு ஓடிவிட்டாலும். அச்சப்படாமல்.ஒரு பெரிய மரத்தின்
பின்னால் ஒளிந்து கொண்டார்..அவர் ஒளிந்து கொண்டதைக் கண்டதும்
60.70 போலீசுகாரர்களும் சரமரியாக சுட்டார்கள். மாவீரர் ஆசாத்தும்
பதிலுக்கு சுட்டதால் பல போலீசார். காயம்பட்டு வீழ்ந்தனர்.

 வெறிக்கொணட் போலீஸ்  ஆசாத்தை சுற்றி வளைத்து சரமரியாக
சுட்டது. தொடையில் குண்டடிபட்ட ஆசாத் சரிந்தபோதும், சரிந்தவரை
சல்லடையாக துளைத்து எடுத்தார்கள்..

அப்படி சல்லடையாக குண்டுகளால் துளைக்கப்பட்டும் ஆசாத் உடல்
அருகே செல்ல போலீஸ் படைகள் அஞ்சி நடுங்கியது. திடீரென்று
எழுந்து சுடத் தொடங்கி விடுவாரோ என்று பயந்து நடுங்கிய அச்சத்
தால் நெருங்க அஞ்சினார்கள்.

 காலை 10 மணிக்கு சுடப்பட்டு சாய்ந்த மாவீரர் ஆசாத்தை மாலை
5மணி வரையிலும் பிரிட்டீஸ் போலீஸ் படை நெருங்கவில்லை.
அந்தப் பயத்தினால் உயிர் பிரிந்த அவரது சடலத்தின் மீது மீண்டும்
பலமுறை சுட்டார்கள். துப்பாக்கி கூர்வாளால்  ஆசாத்தின் மார்பை
பலமுறை குத்தினார்கள். அப்போது்ம் அவர்களுக்கு பயம் தெளிய
வில்லை.


பயமும் ,வெறியும் அடங்காத வெள்ளை போலீஸ் அதிகாரி ஒருவன்
தனது நாயை ஏவி விட்டான். அந்நாய் மாவீரர் ஆசாத்தின் உடலில்
இருந்து வழிந்த இரத்தத்தை நக்கிய பின்பே, போலீஸ்காரர்கள் அவரது
உடலை தொட்டார்கள். பயத்தின் விளைவாகவும் ஆசாத்தின் உடலை
பூட்சு காலால் உதைத்தார்கள்.பின்னர்தான் அவரது உடலை தொட்டு
தூக்கி போலீஸ் வண்டியிலே தூக்கி போட்டார்கள்.



மாவீரர் ஆசாத்தின் பத்து ஆண்டுகால புரட்சி போராட்ட வாழ்க்கையில்
 ஒருநாள்கூட போலீஸ்காரர்களால் பார்க்கவும்முடியவில்லை,தொடவும்
முடியவிலலை. பிடிக்கவும் முடியவில்லை, ஆல்பிரட் பூங்காவில் 80
குண்டுகளை தாங்கி சாய்ந்த பிறகுதான். வெள்ளை பயங்கர போலீஸ்
அவரது உடலை தொடமுடிந்தது.   


ஆசாத் மீது இருந்த 28  பிடிவாரண்டு வழக்குகளிலும், போலீசார் அளித்த
வாக்குமூலம் என்ன தெரியுமா????

சந்திரசேகர் ஆசாத்தை இந்தியநாடு பூராவிலும் தேடிவிட்டோம். அவரை
கண்டு பிடிக்க எங்களால் முடியவில்லை.. என்பதே!!!!!!!!!

அதே வழியில் வந்த இந்திய போலீசும் ஆசாத் பெயர் கொண்ட  நக்சல்பாரி
தோழர்களை எண்கவண்டரில் சுட்டுத்தள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
 மாவீரர் சந்திரசேகர் ஆசாத் தோன்றி கொண்டே இருப்பார். பரங்கிய போலீசும்
சரி, அவர்கள் வழி வந்த இந்திய போலீசும் சரி சந்திரசேகர் ஆசாத் என்ற பெயரை அழித்து விடவே முடியாது.
தோழர் ஆசாத்( வினவு)

ஞாயிறு 22 2012

ஒலகம் உருண்டை................



எனக்கு நீ.........
உனக்கு அவன்.............
அவனுக்கு அவள்.................
அவளுக்கு நான்.............................



இப்பொழுதாவது புரிந்து கொள்..
உலகம் உருண்டைன்னு......................................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...