பக்கங்கள்

சனி 16 2016

காரியக்...கார...கன்வர்


படம்-www.tamilstar.com


படம் பார்ப்பவர்களின் சூட்டை கிளப்பிவிடும் ஒரு ஆபாச படத்தில் தன் மனைவியான நடிகை நடித்த...

படத்தின் விநியோக உரிமையை ஏழு கோடிக்கு வாங்கி இருக்கிறார். அந்த ஆ...பாச படித்தில் நடித்த  நடிகையின் காரியக்கார கனவரான நடிகர்.....

 ஏண்டா..... குமாரு...நீ சும்மா இருக்க......

வெள்ளி 15 2016

தமிழர்களுக்கு வாழ்வளிக்க வாழ்ந்தவர்.....

Mullapperiyardam.jpg
படம்-https://ta.wikipedia.org/s/9hh-


"இப்புவியில் நான் வந்து செல்வது ஒரு முறைதான்
எனவே நான் இங்கு ணுர் நற்செயல் புரிந்திட வேண்டும்
அதனை உடனே நிறை வேற்ற வேண்டும்...
தள்ளி வைப்பதற்கோ அல்லது
தவிர்ப்பதற்கோ இடமில்லை......
ஏனெனில் மீண்டும் ஒரு முறை நான்
இப்புவியில் வரப்போவதில்லை”

---                                                  ---கர்னல் பென்னிகுக்

படம்-பென்னிகுக்

அய்ந்துமாவட்டமக்களுக்கு வாழ்வளிக்க வாழ்ந்த கர்னல் பென்னிகுக் ( பிறப்பு 15 /1/ 1841-) அவர்களின் 175 வது பிறந்தநாள் .

வியாழன் 14 2016

புழுதி பறக்குது! மாடு பிடிப்பது தமிழர் கலாச்சாரமென்று







Image result for மாடு பிடிப்பது தமிழர் கலாச்சாரம்
தமிழறிவு!

பொங்க வேண்டியதற்காய் பொங்குவோம் !

யல் வெடிப்பெங்கும்
ரியல் எஸ்டேட்
முளைக்குது.
கால்நடைகளின்
பட்டுப்போன வாயில்
பாலித்தீன் நுரைக்குது!
பொட்டுத் தண்ணியும்
தட்டுப்படாமல்
சிட்டுக்குருவிகள்
கண்கள் எரியுது!
அரிசி களைந்தெறியும்
ஈரம்
தேடித்தேடி ஏமாந்து
கோழி குஞ்சுகளுடன்
நெஞ்சு வேகுது
ஊற்றுக் கண்ணை
இழந்த துயரில்
ஆற்று மணல்
காற்றில் அழுவுது
துத்திப்பூவின் முகத்தில்
மணல் லாரிச்சக்கரம்
ஏறிக் கிடக்குது
அத்தனைக் கட்சிகள்
கொள்ளைக்கு சாட்சியாய்
காட்டாமணக்கு
மண்டிக் கிடக்குது
மீனவர் இரத்தம்
கலந்து
கலந்து
கடல்
தன் நிறத்தை இழக்குது!
புத்தம் புதிதாய்
ஊருக்கே விளைவித்துக் கொடுத்த கைகளில்
ரேசன் அரிசியின்
வீச்சம் அடிக்குது
பையப் பைய
விவசாயத்தையே
ஒழித்துக் கட்டும்
கார்ப்பரேட் கொள்கை
பொங்கல் பரிசாய்
ரேசன் பையில் தெரியுது
ஆதாரவிலை போதாமல்
கணுக் கணுவாய்
கரும்பு விவசாயி
வாழ்க்கை கருகுது!
பூந்தாது
ஒன்று கிடைக்காமல்
வண்ணத்துப் பூச்சி
பாழுங்கிணற்றில்
வீழுது
களிமண் ஈரம்
காணாமல்
கைத்தொழில்
சக்கரத் திருகைச் சுற்றாமல்
கடனில் சுழன்று சுழன்று
குயவர் கைகள்
காய்ந்து இருகுது
மாடு பிடிப்பது
தமிழர் கலாச்சாரமென்று
ஊரே புழுதி பறக்குது!
மணி பிடிக்க
கோயில் கருவறைக்குள்
போனால்
சாதி கொம்பு முட்டுது
மனுதர்மம் அடக்க
முடியாதவன் ‘வீரத்தை’
மாடு
ஏற இறங்கப் பார்க்குது
அய்வகை நிலமும்
அருந்தமிழ் வாழ்வும்
தரிசாய் கிடக்குது
அநியாயமாய்
எரிசாராயத்தில்
ஒரு இனமே எரிந்து கிடக்குது
உற்றுப் பார்த்தால்
வட்டி பொங்குது
ஆன்லைன் கரும்பில்
சீழ் வடியுது
எட்டிப் பார்த்தால்
எல்லா வீட்டிலும்
கலர் கலராய்
டி.வி. பொங்குது
தமிழரை இழந்த
தமிழர் திருநாள்,
உழவரை இழந்த
உழவர் திருநாள்
எனும்
உண்மைகள் விரியுது!
ஒருபோகமும் வழியில்லா
தமிழர் தெருக்களில்
முப்போகமும்
டாஸ்மாக் பொங்குது!
உள்ளூர் சோடா, கலரை
ஒழித்த வேகத்தில்
பெப்சி, கோக்
பீறிட்டு பொங்குது.
சில்லறை வணிகம்
புதைத்த இடத்தில்
டாடா, ரிலையன்சு
ஊற்று பொங்குது!
கடைசியில்,
உள்ளதை எல்லாம்
இழந்து
உதிரம் சுண்டும்
கடின உழைப்பில்
காண்ட்ராக்ட் தொழிலாளிகள்
கண்களில்
தனியார்மயத்தால்
எரிந்த இரவுகள்
தகித்து, கொதித்து பொங்குது!
நல்ல சோறில்லை…
நாட்டில் மதிப்பில்லை…
விவசாயி வாழ்க்கை
அலங்கோலமாகிக் கிடக்குது!
ஒரு நாளைக்கு மட்டும்
வேட்டியைக் கட்டி
புடவையைச் சுற்றி
காசுள்ள வர்க்கம்
கலர் கோலங்கள் காட்டுது.
விவசாய வர்க்கமோ
மங்கலோ… மங்கல்
அவர்கள்
வேண்டும் மாற்றத்திற்கு
சேர்ந்து குரல் கொடுக்காமல்
பானையை பார்த்து மட்டும்
போதுமா?
பொங்கலோ… பொங்கல்!
காணும்
அநீதிகளுக்கு எதிராக
களத்தில் பொங்குவோம்
மகிழும் மாநிலம்!
– துரை சண்முகம்

செவ்வாய் 12 2016

தமிழர் என்றோர் இனமுண்டு...???..


Withdraw Jallikattu ban plea or resign: Govt tells animal board
படம்-ஒன்இந்தீயா



“என்னடா,....ஆளையே! காணோம் எங்க போயிருந்த....”

“டீவி பாத்துகிட்டு இருந்தேண்டா...” சல்லிக்கட்டுக்கு தடை விதிச்சிட்டாங்க தெரியுமா...”

“ உடனே , அலங்காநல்லூரில் வீரத்தமிழர்கள் எல்லாம் வானத்துக்கும் பூமிக்கு குதித்திருப்பாங்களே....!!டா....”

“ஆமாடா,...எல்லா செய்தி செனல்காரன்களும் அங்கதாண்டா   குவிஞ் கிடந்தாங்கே...”டா.....

“ அவிங்க பொழப்பே ...அதுதானேடா....”


என்ன இருந்தாலும் சல்லிகட்டு வீர விளையாட்டு தான்..அதுக்கு தடை விதித்தது சரியில்லடா   ”

அடப்போடா, கிறுக்கபய தமிழா..... சல்லிப்பய விளையாட்டுக்கு தடை என்றவுடன் வருத்தமாகி விட்டதோ...”

பின்னே, இல்லீயா,... சல்லிப்பய விளையாட்டுக்குத்தாண்டா, அனைத்து கட்சி காரங்களும்  ஆதரவு தெரிவிச்சது எல்லாம் கிறுக்குதனமாடா...”

“கிறுக்கு தனமில்லடா....காரியத்தனம்டா.......”

“என்னடாச் சொல்ற.........”

ஆமாடா,....... சல்லிப்பய விளையாட்டுக்கு தடை என்றவுடன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற வீரத் தமினுக்கு குடிக்கவும் ,,, குண்டி கழுவவும் தண்ணி இல்லேண்ணா என்ன பன்னுவான்.....”


“ என்ன பன்னுவான்”......

“ ஒன்னக் கேட்டா...... என்ன பன்னுவான்னு என்னையே கே்க்குறீயா....???”

“ என்ன பன்னுவான்னு  தெரியலைடா...” நீயே சொல்லு.... என்ன பன்னுவான்....!!!

அய்ந்து மாவட்டத்துக்கு நீர் ஆதாரமாகவும், விவசாயத் தொழிலுக்கு அடிப்படையாகவும் இருப்பது எந்த அணை டா...”

பெரியாறு அணைதாண்டா...”

“ அந்தப் பெரியாறு அணை , உறுதியாக இருக்குன்னு பல வருசமா இழுத்தடித்து  ஒரு தீர்ப்ப... சொன்னாங்கே தெரியுமா....????”

“   ஓ...... தெரியும்டா.......”142 அடிவரை தண்ணீர தேக்கலாமுன்னு  போட்ட உத்தரவுப்படி ரெண்டு தடவை  தேக்கி இருக்காங்கல.....”

“ பராவாயில்லையே படித்த படிப்புக்கு  தெரிஞ்சு வச்சு இருக்கிற...அத்தோட நான் சொல்றதையும் சேத்துக்க....”அணை உடையப் உடையப் போகுதுன்னு சொன்னவிங்க வாயில மண்ணு விழ..... வேறு வழியில்   வீரத் தமிழனுக்கு ஒரு ஆப்பு வச்சுட்டாங்கடா...”

“என்ன..ஆப்புடா...”

“ பொரியாறு அணைக்கு பாதுகாப்பு வேண்டி மத்திய தொழில் பாதுகாப்பு கேட்டு மத்திய அரசுக்கு மனு கொடுத்தா....... வெளி மாவட்டத்திலிருந்து வேலைக்கு வந்து இங்கு குந்தியிருக்கிற நீதபதிங்கஉயர் நீதிமன்றத்துக்கும் மாவட்ட நீதிமன்றத்துக்கும் பாதுகாப்பு வேண்டி மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுவிட்டாங்கடா....” இதப்பாத்த அடவாடி காரான கேரளத்து அரசியல் கட்சிக் காரனுங்களில் ஆளுங் கட்சிக்காரன்....பெரியாறு அணைக்கு பாதுகாப்புன்னு , 142 சிற்ப்பு போலீசாருன்னு சொல்லி குமளியில புதுசா ஒரு காவல் நிலையத்த ராத்திரி 8 எட்டுமணிக்கு திற்ந்து வச்சுருக்காங்கேடா...”

“ அதுல எதுவும் உள் குத்து இருக்குமோ...?????”

“ இருக்குமாவா.... உள் குத்து தாண்டா...” தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்நாட்டு போலிசால பாதுகாப்பு இல்லாதபோது    142 கேரள போலீசுகாரன்  எப்படிடா தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பா இருப்பான்...”


“ ஆமா...”

“ சல்லிப்பய விளையாட்டுக்கு தடை என்றவுடன் குதியாய் குதிக்கிற வீரத் தமிழன்களுக்கு   , குடிக்கவும்,  பேண்ட குண்டி கழுவவும் தண்ணீயும் , விவசாயத்துக்கு நீரும்  இல்லேண்ண...என்ன செய்வாங்கே.....”“

“ என்ன செய்வாங்கே..... ஒரு ரூபாய்க்கி வாங்கி 15 ரூபாய்க்கி விக்கிறாங்களே அத வாங்கி குடிபாங்கே.....”

“சரிடா.... பேண்ட குண்டி கழுவ....????ஃ”

பேழாம இருப்பாங்கே....... அப்படியே பேண்டா  இருக்கவே இருக்கு நியூஸ் பேப்பரு.... அதுல தொடச்சிகிடுவானுங்கடா.....””

“சரி.... விவசாய   வேலைக்கு....”

“.............................”

என்னடா.... பேசு.........”

“ என்னத்த சொல்ல.......”

விவசாயம்  செழித்தாண்டி.... அந்த மப்புல... சல்லிக்கட்டு விளையாட முடியும்டா...... ஆக ..சல்லிப்பய விளையாட்டுக்கு காரணமாக இருக்கிற விவசாயம் செய்யுறதுக்கு தண்ணீ வேண்டுமடி வீரத் தமிழா..... அந்தத் தண்ணீருக்கான பெரியாறு அணையில்  அதே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா அடவாடி செய்யும் கேரளத்து அரசியல்காரனை எதிர்த்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்து  முதலில் நம் உரிமையை மீட்டெடுப்பதை விட்டுட்டு சல்லிபய விளையட்டுக்கு குதித்து ... தமிழர் என்றோர்  இனமுண்டு பெருமைபட எந்தத் தகுதியும் இல்லைடா.... 







திங்கள் 11 2016

தொடை நடுங்கிகளுக்கு மத்தியில்........

படம்-நக்கீரன்
ஜெ. அரசு என்றாலே பலரும் தொடை நடுங்கும்போது அவரது பேனரை அகற்றிய நீங்கள் யார்? உங்கள் பின்னணி என்ன?

அக்தர் : நான் இந்த நாட்டின் பாமரக் குடிமகன். துணிச்சல்தான் என் பின்னணி.
-சட்ட அனுமதியை மீறி வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பேனர்களை அகற்றியதற்காக அ.தி.மு.கவினரால் தாக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் அக்தர். (அவருடன் ஜெயராமன், சந்திரமோகன ஆகியோரும்)
சிறையில் அவர்கள் இருந்தபோது நக்கீரன் நிருபர் அரவிந்த்Arvind Arvi எடுத்த பேட்டியிலிருந்து.. (தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்)


நீங்கள் அதி.மு.க.வுக்கு எதிரானவர்களா?

அக்தர் : இல்லை. மக்களுக்கு ஆதரவானவர்கள். இதற்கு முன் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் பேனர்களைக் கூட அகற்றியிருக்கிறோம். அவர்கள் யாரும் இப்படி அராஜகமாக நடந்துகொள்ளவில்லை.


தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இப்படி களத்தில் இறங்கியிருக்கிறீர்களே? உங்கள் உள் நோக்கம்தான் என்ன?

அக்தர் : அநீதியை எதிர்ப்பது தவிர, வேறு எந்த உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை. அ.தி.மு.க. அரசின் அராஜகப் போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எவ்வ ளவு நாள்தான் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப் பது? மழை வெள்ளத்தில் சிக்கி, மக்கள் தங்கள் உறவுகளையும் உடமைகளையும் இழந்து கண்ணீருடன் பரிதவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இதைப்பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல், பொதுக்குழு என்ற பெயரில் ஆடம்பரத் திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள். செய்யாத, செயல்படாத திட்டத்தையெல்லாம் சாதனை என்று சுயதம்பட்டம் அடிக்கிறார்கள்.
மேலும் சில பதில்களுக்கு..http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=158574

ஞாயிறு 10 2016

கொடுத்தவளே....பறித்து கிட்டா...க்கா ....

படம்-Oneindia Tamil

அக்கா......என்னக்கா...... எங்க பையொட கிளம்பிட்டீங்க.....”

“வேற எங்க போவேன்.... ரேசன் கடைக்கு தாண்”...

அங்க என்னக்கா விசேசம்...”

“உனக்கு தெரியாதா.....ஸ்டிக்கர் ராணி, இந்த பொங்கலுக்கு. பச்சை அரிசியும்,வெல்லமும், கூடவே ஒன்றையடி கரும்பும், 100ரூபாயும் தாராலாம்.... அத வாங்கிட்டு வர... உங்க மாமா போயிருக்காரும்மா... காலைல போன மனுசன் இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் வரலீயே ன்னு போயி பாக்கலாமுன்னு போறேன்ம்மா.......


ஓ....பொங்கல் பரிசு வாங்கப் போறேன்னு சொல்லுக்கா.......”


“ஓமா.....பொல்லாத பொங்கள் பரிசு...... ஏங்கன்னு நீயுதான் படிச்சுட்டு வேலை இல்லாமா இருக்க..... ஒனக்கு ஒரு வேல கிடைச்சா .....  நீ இந்த பொங்கல் பரிச வாங்கவா போற.......

“ சத்தியமா.... வாங்க மாட்டேன்க்கா...ஆனா நிலம அப்படி இல்லக்கா...... ஸ்டிக்காரி தர்ர 100ரூபாய்க்கு இருக்கிறவனுங்களும்....இல்லாதவங்களும் பிச்சைகாரனாக மாறிவிடுறாங்க........ எ ங்க அப்பா போயி பாத்துட்டு வந்து கூட்டமாக இருப்பதாக சொன்னார்க்கா.......

“ஏதுக்கும் நான் போயி பாத்துட்டு வந்துடுறேனே....”

“ சரிக்கா...போயிட்டு வாங்க்கா....”

.....................................


என்னக்கா......போன வேகத்துல...திரும்பி வந்துட்டீங்க....... ரேசன் கடையில கூட்டமக்கா.....”

“ஆமாக் கன்னு பொம்பள கூட்டம் அதிகமாக இருக்கு, ஆம்பிள கூட்டம் கொஞ்சம் குறைவாக இருக்கு....”

“ அப்போ....மாமா.....ரேசன்ல வாங்கிட்டாரா.....”

அந்த கூத்த ஏன்? கேட்குற.......ரேசன் கடையில  கொடுத்த  100ரூபாய்க்கு உன் மாமன். சரக்கு வாங்கி ஊத்திகிட்டு போனதா...... அந்தாளு கூட நின்னாளு ஒருத்தரு சொன்னாரும்மா......என்  பொழப்ப பாத்தீயாம்மா....”

இல்லக்கா......கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு கொடுத்தவங்களே...பறித்துகிட்டாங்கக்கா..........

“ என்னா செய்யிறதுகொடுக்கிற ஆளும் சரியில்ல.......  வாங்குற என் வீட்டாளு சரியில்ல....இந்தக் கொடுமை என்னிக்குத்தான்  தீரப் போகுதோ தெரியலையம்மா.........??????


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...