பக்கங்கள்

சனி 17 2014

சூது விளையாட்டில் தோற்றுப்போனவர்கள்......

தேர்தல் முடிவு
படம் .வினவு













பாரதம் என்ற தேசத்திலே அந்நாட்டின் மக்கள்  ஒரு பெருச்சாளியை தேர்ந்தெடுத்தார்கள. அந்தப் பெருச்சாளியோ....வீட்டைக் கெடுத்தது பத்தாதென்று நாட்டையே கெடுத்தது.

 பெருச்சாளியின் தொல்லையை பொறுக்க மாட்டாமல் .அந்தப் பெருச்சாளிக்கு மாற்றாக  ஒரு குரங்கை தேர்ந்தெடுத்தார்கள்.

ஏற்கனவே, குரங்கின் சேட்டையை கண்டவர்கள்தான் அதற்கு மாற்றாக பெருச்சாளியை தெர்ந்தெடுத்தார்கள். இப்போது பெருச்சாளியின் தொல்லை தாங்கமாட்டாமல் குரங்கை தேர்தெடுத்துவிட்டார்கள்.

இனி என்ன? குரங்கு தன் செட்டையை விட்ட இடத்திலிருந்து தொடங்குமா..அல்லது முதலிருந்து தொடங்குமா என்பது குரங்கின் மூதாதையர்க்கே வெளிச்சம். இந்த விளையாட்டில் இப்ப தோற்றது பெருச்சாளியோ,முன்பு தோற்றது...குரங்கோ அல்ல

பெருச்சாளியை விட்டால் குரங்கு, குரங்கை விட்டால் பெருச்சாளி இந்த சூது வியைாட்டில்  ஒவ்வொரு தடவையும் தோற்றுப் போனவர்கள் அந்நாட்டு வாக்காளர்களே.

வியாழன் 15 2014

வாரத்தில் ஒருநாள் சிக்கனமாக இருந்தால்..இந்தியா கருமாதி நடத்தும் தேசமாக மாறுவதை தடுக்க முடியுமா???

படம்.yogam.unblog.















இந்தியா என்றொரு தேசம் இன்னும் கொஞ்ச காலங்களில் வல்லராசக  மாறுகிறதோ இல்லையோ... தனியார்மயம்.தாராளமயம் உலகமயத்தால் அதாவது மறு காலனியாதிக்கத்தால் சீக்கிரமே கருமாதி நடத்தும் தேசமாக மாறப்போகிறது.

தனியார் மயத்தால்.தாராளமயத்தால் கல்வி உரிமையும் மறுக்கப்பட்டது. வேலைவா ய்ப்பும் ஒழிக்கப்பட்டது. விலைவாசியும் உயர்த்தப்பட்டது. மருத்துவவசதியும் துண்டிக்கப்பட்டது. விவசாயமும் அழிக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்தும் குறைக்கப்பட்டது. இந்த மயங்களின்
புன்னியத்தால் இயற்கையான மழையும் விரட்டப்பட்டது.

சாலைகளில் இரு சக்கர,மூன்று.நாலு சக்கர வாகனத்தின் பெருக்கத்தையும் செல்போன் , கணனியின் ஆதிக்கத்தையும் கொண்டும் இந்திய முதலாளிகளின் லாப வளர்ச்சியைக் கொண்டே இந்தியா வல்லரசாக போகிறது என்று பீத்திக் கொள்ளும் ஊடகங்களும் உள் நாட்டுமுதலாளிகளையும்  வெளிநாட்டு முதலாளிகளையும் பாதுகாக்கும் அரசுகளும் இந்தியா வல்லரசாகிறது என்று பறை சாற்றி வருகின்றன.

இந்த நிலையில். அந்நிய  டலர் மதிப்புக்கு ஈடாக இல்லாமல் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தும் இந்தியாவின் சுய சார்பான பொருளாதாரத்தை அழித்துவிட்டு இறக்ககுமதியை அதிகரித்துவிட்டன.

இயற்கையும் தன் பங்குக்கு தனியார்மயம் தாராளமயம் உலக மயத்தின் வளர்ச்சியால் வறட்சியையும்.புவி வெப்பமாயவாதையும் அதிகரித்துவிட்டது.

உலக வெப்பமயமாவதை குறைக்கும் வகையாக..ஒருநாளில் உலகமே மின்சார பயன் அனைத்தையும் தவிர்ப்பதின் மூலமாக ஒலக வெப்பமயமாவதை தடுக்கு முடியும் என்பது மாதிரி,

இந்தியாவில்வாரத்துக்குஒருநாள்.பெட்ரோல்,டீசல்,மின்சாரம்,சம்பந்தபட்டவைகளுக்கு ஓய்வு கொடுத்தால்...ரூபாயின் மதிப்பு உயர்ந்து விடாது.??? ரூபாயின் மதிப்பு உயர்ந்ததின் பயனாக  ஏறின விலைவாசிகள்  குறைந்து விடாது..??வேலை வாய்ப்பும் பெருகிவிடாது.

வாரத்தில் ஒருநாளோ, மாதத்தில் நான்கு நாளோ. அல்லது மாதம் முழுக்கவோ பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டாலும்.சரி.தனியார்மயம் தாராளமயமான மறுகாலனியாதிக்கத்தை ஒழிக்காமல்  மந்திரத்தாலோ,தந்திரத்தாலோ  வேறு எந்த வழிகளினாலும் இந்தியா என்றொரு நாடு கருமாதி நடத்துவதையோ கருமாதிஆவதையோ தடுக்கவே முடியாது..........

புதன் 14 2014

புகைத்த சிகரெட்டை வைத்த இடம் மறந்த புகைக்க மறக்காதவர்

படம் தினமணி











அவர் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது,எந்த முகாந்திரமும் இல்லாமல் அடித்த வாத்தியாரை திருப்பி அடித்ததால்...

அவர் படித்தது போதும் என்றும் அவர் படித்து முடித்துவிட்டார் என்றும்.அவருக்கு டீ.சி. கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

இதன் பயனாக இரண்டு வருடம் ஊர் சுற்றிக் கொண்டு இருந்தவர். ஊர் சுற்றுவதை நிறுத்தி வைத்துவிட்டு ஒரு அச்சகத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

இன்றைக்கு இருக்கிற செல்போன் பற்றி என்னவென்றே தெரியாத காலம் அது. தொல்லை தரும் தொலைபேசிதான் இருந்தது. ஒவ்வொரு எழுத்தாக எடுத்து அச்சுகோர்த்து.டெடில் மிஷினில் அச்சடித்தக் காலம். கம்யூட்டர் டைப்,பிலிம்,பிளேட்,பாலிமார், ஆப்செட் என்று வந்திடாத காலம். அதைப்பற்றி தெரியாத காலமும்கூட........

அப்படிப்ட்ட முன்னோர் காலத்தில் இருந்த ஒரு அச்சகத்தில் வேலை முடிந்து வேலை ஆட்கள் எல்லாம் சென்ற பிறகு. ,அவரும் அவரின் முதலாளியும் சேர்ந்து பைண்டிங்  வேலைகள் செய்வார்கள். அவர் கலிக்கோவுக்கு பசை தடவி தர,அவர் முதலாளி தைத்த பில்புக்குகளில் ஒட்டுவார்.

அவர் முதலாளிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால். சிகரெட்டை
புகைத்த வண்ணம் வேலை செய்வார். அன்று வழக்கம்போல் பைண்டிங் வேலை நடந்து கொண்டு இருக்கும்பொழுது......

சிகரெட்டை புகைப்பதும் ,புகையும்,சிகரெட்டை அருகில் வைத்துவிட்டு இழுத்த புகையை வாயி வழியாகவோ,மூக்கின் வழியாகவோ,சில நேரங்களில் இரண்டு வழியாகவோ புகையை விட்டபடி  பசை போட்ட கலிக்கோவை வாங்கி ஒட்டிக்கொண்டு இருந்தார்.

பாதி வேலை முடிந்திருந்த நேரத்தில் தொலைபேசி மணி அடித்தது. அவரை பசை போடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு.வரவேற்பு அறையிலுள்ள மேஜை மேல் இருந்த தொலைப்பேசியில் பேசச் சென்றார்.முதலாளி.

தொலைப்பேசியில் பேசி முடித்துவிட்டு வந்தவர். மீண்டும் பசையை போடச் சொல்லி ஒட்ட ஆரம்பித்தவர். அவர் உட்கார்ந்திருந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தார்.

பசை போட்டுக் கொண்டு இருந்தவரின் பெயரைச சொல்லியபடி “ சிகரெட்டை எங்க வைத்தேன்னு தெரியலயே என்று தேடினார்.

அவரும் பதறிப்போயி பசை போடும் வேலையை நிறுத்திவிட்டு,  முதலாளி புகைத்த சிகரெட்டை வைத்த இடம் மறந்ததை  முதலாளியுடன் சேர்ந்து தேடினார்.

அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி பேப்பர் பண்டல்களும், அச்சடித்த பேப்பர்களும், அடுத்த பைண்டிங்க்காக அடுக்கி வைக்கப்பட்ட பேப்பர்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

ரெண்டு பேரும் உட்கார்ந்து இருந்த இடத்தைச் சுற்றி தே்டு தேடுன்னு தேடிப் பார்த்தும்  புகைத்த சிகரெட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. புகைத்த சிகரெட்டில் இருந்து புகை எதுவும் வருகிறதா என்று  ஆராய்ச்சி பார்த்தும் சிகரெட்டை கண்டுபிடிக்க முடியவில்லை,

 கடைசியாகஅவரின் முதலாளி சோர்ந்து போயி வரவேற்பு மேஜையில் போய் அமர்ந்தவுடன் அவருக்கு குரல் கொடுத்தார்.

முதலாளிக்கு அருகில் போய் பார்த்தபோது தொலைபேசிக்கு அருகில்முதலாளி புகைத்த சிகரெட் முழுவதும் எரிந்து சாம்பலாக கிடந்தது.

அது அவரின்  முதலாளிக்கு ரெம்பவும் அறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்தது.

தொலைபேசியில் அழைப்பு வந்தவுடன்  சிகரெட்டை வாயில் புகைத்தபடியே  சென்றவர். பேச்சு வாக்கில் புகைத்த சிகரெட்டை தொலைபேசிக்கு அருகிலே வைத்துவிட்டு வந்தது. பிற்பாடுதான் யோசனையில் தெரிந்தது. பதற்றத்தில் இருவருக்குமே தொலைபேசியில் பேசச் சென்றது. நிணைவில் இல்லை.

நல்ல வேளையாக முதலாளியும்  தொழிலாளியும் ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தார்கள்.

அதிலிருந்து  அவரின் முதலாளி புகைப்பதை மறக்காமல் இருந்தாலும் அச்சகத்திற்குள் புகைப்பதை மறந்துவிட்டார்.

 தொழிலாளியான அவர் அப்பேயிலிருந்து இப்பே வரைக்கும் புகைப்பதே இல்லை...............

செவ்வாய் 13 2014

உதவியது ஹோமியோபதியின் முதல் உதவி மருந்து..!!!!

www.nhm.in














ஈழத்தமிழரின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபட்சியின் கொடும்பாவி எரித்த வழக்கின் வாய்தா ஏப்ரல் 7ந்தேதி என்று 7ந்தேதி காலையில்தான் நிணைவுக்கு வந்தது.

அதிகாலையில் படுக்கையைவிட்டு எழுந்திருந்தபோதும் பெய்யும் அடை மழையின் காரணமாக எழுந்தவுடன் நாலு கிளாஸ் தண்ணிரை குடித்துவிட்டு அமர்ந்திருந்த போதுதான் 7ந்தேதி ராஜபட்சியின் கொடும்பாவி எரிப்பு வழக்கின் வாய்தா என்று  8 மணி வாக்கில்தான் நிணைவுக்கு வந்தது.

நிணைவுக்கு வந்தவுடனே..உடனே எழுந்து பல்லை விளக்கி மழையோடு மழையாக குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டு இருந்த நேரம்.

துண்டை பிழிந்து உதறியபோது சுவற்றின் ஒரமாக சாய்த்து வைக்கப்பட்டு இருந்த பீஸ்போன நாலு டியூப்லைட்டில்  துண்டு பட்டு.டியூப்லைட்டுகள்
 கீழே விழுந்தன.

கீழே விழுந்த டியூப்லைட்டை பிடிப்பதற்க்காக குனிந்தபோது. ஒருடியூப்லைட் தவறி கீழே  விழுந்து “டப்” பென்று வெடித்து சிதறியது.

நான் கீழே குனிந்ததால் வெடித்த டியூப்லைட்டின் சிதறல்கள். எனது வலது கண்களில் புகுந்து பதம் பார்த்தன.

வலது கண்ணை மூடியபடியே மற்ற டியூப்லைட்களை சுவற்றில் சாய்த்து வைத்துவிட்டு குளித்த வட்டையில் தண்ணீரை நிரப்பி .பதற்றப்படாமல் கண்களை கசக்காமல் தேய்க்காமல் தண்ணீரில் நிதனமாக  கண்களை முழித்துவிட்டேன்.

அப்படிச் செய்ததின் பயனாக கண்களில் இருந்த முக்கால்வாசி டியூப்லைட் துறும்புகள் வெளிவந்துவிட்டாலும் . தொடர்ந்து கண்கள் உறுத்திக் கொண்டே இருந்தன . அப்போது தோழர் ஒருவர் அறிமுகப்படுத்தி.அன்பளிப்பாக கொடுத்துதவிய ஹோமியபதியில் முதல் உதவி மருந்துகள் என்ற குறிப்பேடு  நிணைவுக்கு வந்தது.

குறிப்பேட்டை படித்து பார்த்தபோது மணல்,துரும்பு.பூச்சிகள் கண்களில் சிக்கிக் கொண்டால் கண்களை கசக்காமல் ஒரு வேளை அகோனைட் உட்கொண்டால் மணல்,துறும்பு,.பூச்சிகள் வெளியே வந்தவிடும். கண்களை உறுத்தாது என்று இருந்தது.

இதற்க்கிடையில் தோழர் ஒருவரிடம் மழை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது .எனக்கு வாய்தா வாங்க முடியுமா என்று கேட்டபோது. “இன்னிக்கு புது நீதிபதி மாற்றலாகி வந்து இருக்காரு...அதனால எல்லோரும் தவறாமல் வர வேண்டும். மழையில் நணைந்து கொண்டே வந்து சேருங்கள் என்று பதிலுரைத்தார்.

உடனே,நான் வைத்திருந்த ஹோமியபதி மாத்திரைகள் அடங்கிய முதல் உதவி பெட்டியை பார்த்தபோது அதில் அகோனைட்30  என்ற மாத்திரைகள் இருந்தன.

அதில் அயந்து உருண்டையை வாயில் போட்டு சுவைத்தப்படி மேலும் ஒரு டோஸ் மருந்தை பேப்பரில் மடித்து எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்

நான் புறப்பட்டபோது மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. மழையில் நணைந்தபடி பஸ் நிறுத்ததுக்கு வந்து கிடைத்த பஸ்ஸில் ஏறி. இரண்டு பஸ் மாறி பத்தே முக்கால் மணிக்கு ஆஜர் ஆகிவிட்டேன.

கோர்ட்டிலும் புதிய நீதிபதியிடம்  உள்ளேன் அய்யா என்றும் சொல்லி விட்டேன. வாய்தா போட்டு வீட்டுக்கு வந்த பிறகும் கண்களைப் பற்றிய சிந்தனையோ.கண்களில் உறுத்தல்களோ.தொந்தரவுகளோ எதுவுமில்லை.

அன்று இரவு கணனியில்  பதிவிட அமர்ந்தபோதுதான் கண்களில் டியூப்லைட் துகள்கள் விழுந்த சம்பவமே நிணைவுக்கு வந்தது.

நல்ல வேளையாக.நான் வசூல்ராஜா எம்பிபிஎஸ்களிடமிருந்து தப்பித்து விட்டேன்.

எற்கனவே, இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய என் மூத்த மருமகனின் சிகிச்சைக்காக அவனின் திருமணத்திற்க்காக சேமித்து வைத்திருந்த மூன்று லட்சமும் பத்தாதிற்கு இரண்டு லட்சம் கடனும் வாங்கி  தொடர் சிகிச்சை செய்தும் புண் ஆறமாட்டாமல் இன்னும் ஆஸ்பத்தரிக்கு செலவழித்துக் கொண்டு இருக்கிறேன்.

கையில் காசில்லாமல்  தேர்தல்களினால் வேலையுமில்லாமல்  வருமானமும் இல்லாமல் தவித்த எனக்கு அப்போது உதவியது ஹோமியோபதியின் முதல் உதவி மருந்துதான்.

இதில் யாருக்கு முதல் நன்றியை சொல்வது..




திங்கள் 12 2014

இரண்டு கால் பிராணிகளுக்கு சேவை செய்ய வரும் கோடீஸ்வரர்களின் நாலு கால் பிராணிகளின் சொத்து மதிப்புகள்


படம் தினமணி











இரண்டு கால் பிராணிகளான இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்கு வருபவர்கள். தேர்தலில் போட்டியிடவேண்டும். போட்டியிடுவதற்கு தகுதியாக தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் பட்டியலை  தரவேண்டும்

அப்படி.இரண்டு கால் பிராணிகளுக்கு சேவை செய்வதற்க்காகவே பிறப்பெடுத்து வந்து தேர்தலில் நின்று .இரண்டு கால் பிராணிகளின்  வாக்குகளை பெற்று  எம்பி மற்றும் அமைச்சர்களாகி அந்த சேவையின் மூலம் கோடீஸ்வரர்களான கேடிஸ்வரர்களின்  அசையும் சொத்துக்களின் வரிசையில் தங்களிடமுள்ள நாலுகால் பிராணிகளின்   மதிப்புகளை வெளியீட்டள்ளனர். அவற்றில் சில.......

1. பீகாரில் உள்ள லாலு பிரசாத் என்பவர். தன் மனைவி ராப்பரிதேவியை தேர்தலில் நிற்க வைத்து  .அசையும் சொத்துக்களாக 45 பசுக்களையும், 20 கன்றுகுட்டிகளையும்  சேர்த்து  இதனுடைய சொத்து மதிப்பு  19 இலட்சம் என்று காட்டியுள்ளார்.

2. ஜஸவந்த் (மு. பிஜேபி காரர்) என்பவர்.தன்னிடமுள்ள  அரபுக்குதிரையை 30 லட்சம் மதிப்புடையது என்றும். அதிகபால்தரும் தார்பார்கள் பசுக்களும் 3 லட்சம் மதிப்புள்ளது என்று காட்டியுள்ளார்.

3. டில்லியை ஆண்ட ஷீலாதிட்சித்ன்  மகன் ஷந்தீப்  என்பவர் நாலுகால் பிராணிகளின் மொத்த அசையும் சொத்தாக 38 லட்சம் மதிப்புள்ளது என்று சொத்து மதிப்பில் காட்டியுள்ளார்.

ஆக, மேற்கண்டவர்களை் தங்கள் வளர்த்து வரும் நாலுகால் பிராணிகளுக்கு சேவை செய்வதோடு நின்று விடாமல், மனிதர்களான இரண்டு கால் பிராணிகளுக்கும் சேவை செய்ய களமிறங்கியுள்ளனர்.

 மனிதர்களான ரெண்டுகால் பிராணிகளும்,  “வளர்க்கிறவனை நம்பாமல் அறுக்கிறவனை நம்பும் நாலு கால் பிராணிகளை போல்  நம்பி ஏமாந்து தவிக்கின்றனர்.


ஞாயிறு 11 2014

விவசாயின் மகனாகப் பிறந்து விவசாயத்தின் அழிவை தடுக்க மறந்த ஒரு தலைமை நீதிபதி..




விவசாயம் அழிக்கப்பட்டு.விவசாய வேலை இல்லாத ஒரு கிராமவாசி பொழப்பக்காக நகரத்தை நோக்கி படையெடக்கும்போது.நகரத்தில அரசாங்க வேலை கிதை்தவிட்ட கிராமவாசி  கிராமத்திலா இருப்பார்.

ஒரு சாதாரண ஒரு கிராமாசியையே நிலைமை  நகரத்தை நோக்கி துரத்தியடிக்கும் போது.........

ஒரு கிராமத்தில் விவசாயின் மகனாக பிறந்து. அரசு பள்ளியில் படித்து பட்டம் முடித்து.சட்ம் பயின்று வழக்குரைஞராக பணியாற்றி, ஆளும் அரசியல் கட்சியின்  சார்பில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பெற்று.படிப்படியாக நீதிபதியாகி. ஓய்வு பெறுவதற்கு முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒரு விவசாயின் மகன்.

தன்னுடைய பணி கால்த்திலே,தனியார்மயம்.தாராளமயம், உலகமயத்தால் தன்வாழ்வுக்கும் வளத்துக்கும் உறுதுணையாக இருந்த விவசாயியான தந்தையை நிணைப்பவர் அழிக்கப்பட்ட விவசாயத்தை மறந்துவிட்டார்.

அம்பு எய்தவனைத்தான் தண்டிக்கவேண்டும்,அம்பை தண்டிக்கக்கூடாது என்று தமிழ்பழமொழியை தன் நீதிக்கு பயன்படுத்திய நீதியரசர் தனியார் மயத்தால் தாராளமயத்தால் உலகமயத்தால், விவசாயத்தோடு நாடே கொள்ளை போகும்போது தண்டிக்காமல் இருந்துவிட்டார்.

உலகத்திலே சிறந்த அரசியல் அமைப்பைக் கொண்ட நாடு இந்தியாதான் என்று பறை சாற்றியவர்.

சாதிவெறி.மதவெறி,ஏழை,பணக்காரன். இருப்பவனுக்கு ஒரு நீதி,இல்லாதவனுக்கு ஒரு நீதி, காலம் தாழ்த்திய நீதி.நீதி மறந்த நீதி போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை, வசதியாக மறைத்துவிட்டார்.

இவருடைய அனுபவம் யாருக்கு பயன்படும், உள்ளதுஉள்ளபடி இந்தியாவின் ஏழைகளுக்கு பயன்படுமா...??? அல்லது பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு பயன்படுமா.......? இவர் சொல்லிக் கொள்ளும் இவருடைய வாழ்வுக்கும் வளத்துக்கும் ஏணியாக இருந்த விவசாயத்துக்காகவது பயன்படுமா....???
இவரின் தாய் மொழிக்காகவது பயன்படுமா.....???.

தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தில்  தமிழை வழக்கு மொழியாக்ககு என்ற போராட்டத்தின்போது வாய்தா வாங்கியே வழக்கு அறிஞர்கள்ஆன வர்கள் தமிழகத்திலிருந்து உச்ச நீதிபதியாக இருந்த இவரை  தமிழை வழக்கு மொழியாக்கி விடுவார் என்று ஆகா ஓகோ என்று புகழ்ந்துரைத்தார்கள் அவர் நம்பிக்கை வைத்தார்கள்.  நம்பிக்கை வைக்கச் சொன்னார்கள். அந்த நம்பிக்கை புஸ்வானமாகியது

விவசாயின் மகனாகப் பிறந்து விவசாயத்தின் அழிவை தடுக்க மறந்த ஒரு தலைமை நீதிபதி.. தன் தொழிலுக்காக வேற்று மொழியில் வாழ்பவர் எப்படி தமிழ் மொழிக்காக எப்படி இருப்பார்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...