பக்கங்கள்

வெள்ளி 28 2014

எத்துனை பேருக்கு தெரியும்?



மனிதம் மட்டும் என்பவர் Sirpi Rajan மற்றும் 2 மற்றவைஆகியோருடன்

மாவீரன் பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்பட்டபோது கங்கிரசு மற்றும்
அனைத்து தேசபக்தி மொத்த குத்தகைதாரர்களும் உடம்பின் அனைத்து
துளைகளையும் மூடிக்கொண்டிருந்தபோது..........

பகத்சிங்கின் தூக்கு தண்டனையை எதிர்த்து மட்டுமல்ல பகத்சிங்கின்
செய்கையையே நியாயபடுத்தி 1931 ல் கட்டுறை தீட்டியவர் பெரியார்
மட்டும்தான் என்பது எத்துனை பேருக்கு தெரியும்?

வியாழன் 27 2014

அப்பனுக்கு கொண்டாடும் கூத்து சிவராத்திரி..

அம்மனுக்கு கொண்டாடும் கூத்து நவராத்திரி. அது மாதிரி அப்பனுக்கு கொண்டாடும் கூத்துதான் சிவராத்திரி..சாதாரண் ராத்தரி இல்ல மகா சிவ ராத்திரி.. இந்த கூத்தும் அம்மன் கூத்துப் போலவே  விசேஷமானது.

எவ்வளவுக்கு எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் இந்த கூத்தின் பிரகாரம்  அப்பனுக்கு பூஜை செய்து இரவில் கண்விழித்து  இருந்தால். எல்லா பாவங்களும் அழிந்து மோட்சம் கிடைக்கும்,

இந்த சிவராத்திரி கூத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் அவரவர்களின் குல தெய்வ கூத்து மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆக. இந்த மகா சிவ ராத்திரியில் பாவங்கள் செய்தே சொத்து
சேர்த்தவனும்வேண்டுவான்.  சொத்தையும் வாழ்வையும்
இழந்தவனும்  வேண்டுவான்.

இவர்களில்அவரவர்  கொல தெய்வமும், சிவனும் யாருக்கு அருள் பாவிப்பார்கள்.?ஃ

 நிச்சயமாக.சொத்தையும் வாழ்வையும் இழந்தவனுக்கும்
இழந்தவர்களுக்கும் அருள் புரியவே மாட்டார்கள் .ஏனென்றால்
இந்த மகா சிவராத்திரி கூத்தே பாவங்கள் செய்தவர்களுக்கே உண்டாக்கப்பட்டது. இந்த மாதிரியான ஒவ்வொரு கூத்தையும்
அநியாயம் செய்த அவர்கள்தானே கொண்டாடுகிறார்கள்.

செய்த பாவம் (அராஜகம்)மறைந்து ......புதிய பாவம் (அராஜகம்)செய்வதற்கு......................

இருப்பவர்களுக்கு உடனேநடவடிக்கை..இல்லாதவர்களுக்கு ஏனோதானோ நடவடிக்கை..

“ ...... டிசிஎஸ்-ன் முதலாளியின் காரின் மீதோ.,அல்லது டிசிஎஸ் தொழிற்கூடத்தின் மீதோ... இன்னாரென்று தெரியாத போக்கிரிகள் கல்லெறிந்து விட்டு ஓடி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்

அடுத்த நிமிடத்தில் என்ன நடக்கும். பகுதி ஸ்டேசன் ஆய்வாளர்லிருந்து உள்ளுர் உயர் போலீசு அதிகாரி முதற்க்கொண்டு எல்லா வகையான உளவு பிரிவும் தாரை தப்பட்டையுடன் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்.

வந்தவுடன் எறியப்பட்ட கல்லை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பிய கையோடு கல்லை எறிந்த கள்வனை உடனே பிடித்து இண்டர்போல் பெருமையை நிலை நாட்டியிருக்கும்.

ஆனால் டிசிஎஸ்-ல் வேலை செய்த உமா மகேஸ்வரி 13ந்தேதி காணாமல் போயி .அந்தத்தகவல் அவரது தந்தைக்கு தெரிந்து, அவர் வந்து பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் ,உமாவின் உறவினர்கள் சிப்காட் சுற்றியுள்ள பகுதியை சோதனையிட  வற்புறுத்தியும் அசைந்து கொடுக்கவில்லை.

புகாரை பெற்ற இண்டர்போல் பெருமை பெற்ற போலீசு .“உம் மக எவன் கூடவாவது ஓடிப்போயிருப்பா..என்று தன் மேட்டிமை தனத்தை காட்டியிருக்கு.......

இந்த மாதிரியான பதிலை டிசிஎஸ் முதலாளி கொடுக்கும் புகாரில் தன் மேட்டினத்தை காட்டியிருக்குமா????

 காணமல் போன தகவல் தெரிந்து புகார் செய்தவுடனே ஓடிப்போயிருந்தாலும் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல்  இடைப்பட்ட ஒரு வாரத்தில்  நடவடிக்கை எடுக்காமல் 22ந்தேதி உடலை கைப்பற்றி   இருக்கிறது.

இத்தகைய போலீசின் நடவடிக்கை “இருப்பவர்களுக்கு உடனே நடவடிக்கை, இல்லாதவர்களுக்கு ஏனோ தானோ நடவடிக்கை என்று இலட்சத்துசான்றுகளுடன்  உமா மகேஸ்வரியின் படு கொலையும்  அந்த எண்ணிக்கையில் சேறுகிறது.


புதன் 26 2014

சாதி.மத வெறியர்களுக்கு..................

செல்வேந் திரன்.கு’ன் புகைப்படம் மீது Paraneetharan Kaliyaperumal பெயர் இணைக்கப்பட்டது.
எதை முதலில் தடை செய்யலாம் ஜாதி வெறியர்களே மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்.

காதலர் தினத்தால் கற்பு கெட்டுப் போய் விடுகிறது _ ஒழுக்கம் ஓடி ஒளிந்து விடுகிறது. நமது கலாச்சாரம் சீரழிகிறது! கூடாது! கூடவே கூடாது - _ அதனைத் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என்று தண்டால், பஸ்கி எடுக்கும் ஜாதி வெறியன் ராமதாஸ் ராம்சேனா, இந்து முன்னணி வகையறாக்களுக்கு ஒரு கேள்வி?

. நவராத்திரி நவராத்திரி என்று இந்து மதத்தில் ஒன்பது நாள்கள் விழா கொண்டாடப்படுகிறதே தெரியுமா?
மூன்று நாள் சக்திக்கு (பார்வதிக்கு), மூன்று நாள் லட்சுமிக்கு, மூன்றுநாள் சரஸ்வதிக்கென்று கொலு வைத்துக் கும்மாளம் அடிக்கிறார்களே -_ அந்த ஒன்பது நாள்களில் நடக்கும் அசிங்கம், ஆபாசம் பற்றி அறியுமா இந்த இந்து முன்னணி சங்பரிவார் வட்டாரம்? மும்பையையே கதிகலங்க வைக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மாலையில் தொடங்கி நள்ளிரவில் களை கட்டும். இவற்றில் 50 லட்சம் பேர் பங்கேற்று ஆட்டம் பாட்டத்தில் ஜமாய்ப் பார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் இளை ஞர்கள், இளம் பெண்கள். வழக்கமாக இரவில் நீண்ட நேரத்துக்கு வெளியே இருக்க இளம் பெண்களைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. ஆனால் தசரா கொண்டாட்ட சீசன் முழுதும் இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால் நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணி வரைகூட இளம்பெண்கள் வெளியே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு.

இந்தக் கொண்டாட்டங்களின் போது இளசுகளிடையே ஆண், பெண், தெரிந்தவர், தெரி யாதவர், நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசங் கள் பார்க்கப்படுவதில்லை. நடன நிகழ்ச்சிகளில் ஆண்களுடன் இளம் பெண்கள் கைகோத்து ஆடுவதும் கச்சேரிகளில் ஆடிப் பாடுவதும் சகஜம். இதனால் இரவில் நீண்ட நேரம் வெளியில் தங்கும் இளம் பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஊர் சுற்றுவதும், காதலர் வீட்டில் தங்குவதும் நடப்பதால் பெண்கள் கற்பிழக்கும் நிலை ஏற்படுகிறது. தவிர, மும்பை நகரெங்கும் கட்டுக்கடங்காத கூட்டத்தை இரவு நேரத்தில் பார்க்கும் விபசாரப் பெண்களும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பணம் குவிப்பதில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணங்களால் தசரா பண்டிகைக்குப் பிறகு கர்ப்பம் அடையும் திருமணம் ஆகாத இளம் பெண்கள் எண்ணிக்கையும் எய்ட்ஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிக ரிப்பதாக மும்பை மகப்பேறு இயல் அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

கடந்த ஆண்டு தசராவுக்குப் பிறகு திருமண மாகாமல் கர்ப்பம் அடைந்த இளம் பெண்கள் எண்ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் அதிகரித்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தசராவுக்குப் பிறகு மூன்று மாத கால கட்டத்தில், ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் நடந்த கருக்கலைப்புகளைக் கணக்கிட்டு இது தெரிவிக்கப்பட்டது. 16 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களே இதில் அதிகம்.

இவ்வளவுத் தகவல்களையும் வெளியிட்டது. விடுதலை ஏடு அல்ல. 26.9.2005 நாளிட்ட தினகரன் தான். கலாச்சாரத்தைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத் ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிவசேனா என்ன செய்யப் போகிறது?

பால்தாக்கரே இந்தப் பாலியல் சமாச்சாரத்துக்குச் செய்யப் போகும் பரிகாரம் என்ன?

பகவான் கிருஷ்ணன் செய்ததுதானே என்று சமாதானம் சொல்லப் போகிறாரா?

காதலர் தினத்தால் போச்சு, போச்சு, கலாச்சாரம் போச்சு என்று கலவரக் கொடியைத் தூக்கிப் பிடிக்கும் இந்த இந்துத்துவாவாதிகள் இந்துக்களின் நவராத்திரி விழாவில் இளம் பெண்கள் திருமணம் ஆகும் முன்பே சூறையாடப்படுகிறார்களே இதற்கு என்ன பதில்?

கடந்த ஆண்டு தசராவில் அகமதாபாத், சூரத், வடோதரா ஆகிய நகரங்களில் நிகழ்ந்த ஆபாசம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை (25.11.2009) விரிவாகவே செய்தி வெளியிட்டதே. பெண்கள் மருந்துக் கடைகளுக்குப் போய் காண்டம் (சிஷீஸீபீஷீனீ) வாங்குகிறார்களாம். இந்தக் கால கட்டத்தில் 50 சதவிகிதம் அளவுக்கு பெண்களுக்கான கர்ப்பம் தடுக்கும் காண்டம் விற்பனை அதிகமாம்.

நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறார்களா சங்பரிவார்க் கும்பல்? அல்லது நவராத்திரிக்கு எதிராக மறியல் செய்வார்களா? நவராத்திரி விழா கொண்டாட்டங்களின் போது கருத்தடை உறை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிறப்பு விற்பனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தின என்று கூறுகிறார். -_ அகமதாபாத் மருந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜஸ்வந்த் படேல். வெற்றிலைப் பாக்-குக் கடைகளிலும்கூட இந்தக் கருத்தடை உறைகள் விற்கப்பட்டனென்றும் அவர் கூறியுள்ளனர். இத் தகைய உறைகளை எந்தவிதக் கூச்சமோ வெட்கமோ இன்றிப் பெண்கள் கேட்டு வாங்கினார்களாம். சொல் வது விடுதலை அல்ல _ டைம்ஸ் ஆப் இந்தியா. காதலர் தினத்தால் கலாச்சாரம் கெட்டொழிந்துவிட்டது என்று கூச்சல் போடும் மானஸ்தர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்து ராஜ்ஜியம் உருவாக் குவதில் சேனாதிபதியாக வாள் தூக்கும் நரேந்திர மோடியின் குஜராத்திலே - _ நவராத்திரி நேரத்திலே காண்டம் விற்பனை அதிகம் என்று புள்ளி விவரம் பேசுகிறதே _ என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்து மதமே ஆபாசக் கிடங்குதானே! கற்பழிக் காத கடவுள் உண்டா? சோரம் போகாத கடவுளச்சி கள்தான் உண்டா? குரு பத்தினியைக் கற்பழிக்கும் சீடர்கள் வரை உண்டே!

இந்த யோக்கியதையில் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க கம்பும் தடியுமாகக் கிளம்புகிறார்களாம், வெட்கம்! மகாவெட்கம்!

நன்றி _ஈரோட்டு பூகம்பம்-

செவ்வாய் 25 2014

சவுதி மனிதரும் தமிழ்நாட்டு மனிதர்களும்......

தமிழ் மணத்துல சூடான இடுகையும் வாசகர்கள் ஓட்டு போட்டு பரிந்துரைத்த இடுகையும் ஆக இரண்டு பதிவுகளை படித்தேன்

முதல் பதிவில் சவுதியில்  இறை அச்சத்தால்   ஆட்டை விற்க  மறுத்த ஆடு மேய்ப்பரின் நேர்மையைப பாராட்டி நாற்பது இலட்சம் பணம் குவிகிறது என்று பதிவிட்டு இருந்தார்.

இரண்டாவது பதிவில் சவுதிக்கு ஏன்? போறீங்க ,தமிழ்நாட்டுல.....மதுரையைச் சேர்ந்த இருவர் தங்களிடம் கிடைத்த தங்க நகைகளை  போலீசிடம் ஒப்படைத்த நேர்மையைால் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைப்பதாக பதிவிட்டு இருந்தார்.

இப்படியான இரண்டு பதிவுகளை படித்திலிருந்து எனக்கு தோன்றியவை,

அய்யா,
                ஆட்டை மேய்த்த சவுதிக்காரு..ஏன்? ஆட்டையை போட வில்லை என்றால்.... தன் முதலாளியே ஆட்களை நியமித்து தன்னை பரிசோதிக்கிறார் என்று சந்தேகம் வந்திருக்கும். அப்படியே ஆட்டை வித்து பணத்தை பெற்றுக் கொண்டால் இதுநாள் வரை நேர்மையாக இருந்தவிட்டு,பண சபலத்தால் ஆட்டை விற்று மாட்டிக்கிட்டால் என்ன தண்டனை என்பதும் அவருக்கு தெரிந்திருக்கிற காரணத்தால் வலியுறுத்தி கேட்டும் இறை அச்சத்தை பிரேயோகித்தார் ஆடு மேய்ப்பர்..... இந்த பதிவிலிருந்து தெரிவது என்னவென்றால் சவுதியில் நல்லவர்களே இல்லை என்பதுதான். அல்லா  இறை அச்சத்தின் காரணகாரியம் மூட பழக்கத்தை அறிந்து கொள்ள செங்கொடி,பறையோசை தளத்திற்கு சென்று படித்தால் அல்லாவின் புரட்டுகளையும் சவுதி மனிதர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து தமிழ்நாட்டு மனிதர்கள் இருவர் தங்களிடம் கிடைத்த தங்கத்தை இறை அச்சம் இன்றி நேர்மையாக போலீசிடம் ஒப்படைத்த அவர்கள். வசதி வாய்ப்பும்,பணபலம்,ஆள்பலம் இருந்திருந்தால் நேர்மையாக நடந்திருக்க வாய்ப்பும் இருந்திருக்காது.

இந்த தங்க நகைகள், அரசியல் வாதியிடமோ,அமைச்சர்களிடமோ, தொழில் முறை கொள்ளையர்களிடமே்ா, ஊழல் பெருச்சாளியிடமோ, தொழில் அதிபர்களிடமோ கிடைத்திருந்தால்......தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருந்திருந்தால்  செய்யும் தொழிலிலோ,பேசும் வார்த்தையிலோ உண்மையாக நடக்காதவர்கள்.அவர்கள்  எந்த இறைவனுக்கும் பயப்படாமல் தங்களின் பொக்கிஷத்திலே சேர்த்திருப்பார்கள். அந்த தங்கத்தின் மதிப்பு குறைந்திருந்தால்   நேர்மையாளராக அவதரித்து இருப்பார்கள்.

தங்கமோ பணமோ வறியவர்களிடம் கிடைத்தால்.அதை அவர்கள் பதுக்கவோ, பயன்படுத்தவோ வழி தெரியாதவர்கள், பின்புலமும், பணபலமும் இல்லாதவர்கள். அப்படியே தப்பித்தவறி ஆசையால் உந்தப்பட்டு பதுக்கினால் இண்டர்போல் பெருமை வாய்ந்த போலீசிடம் மாட்டாமல் தப்பித்திருக்கவே முடியாது.அவர்களின் நடவடிக்கையே காட்டிக் கொடுத்துவிடும்.

ஆசையால் உந்தப்பட்டு,தெரியாத்தனமாக  சாதாரண  ஒரு திருட்டில் மாட்டிக் கொண்ட ஒருவனை, செய்யாத திருட்டையெல்லாம் சுமத்தி  அவனை வாழ்நாள் முழுவதும் விடாமல் துரத்தும் இண்டர்போல் பெருமை வாய்ந்த போலீசு.

இந்த இண்டர்போல் போலீசு.வசதி படைத்த திருடனையோ, ஊழலில் திளைக்கும் அதிகாரிகளையோ, ஆட்சியாளர்களேயோ, அவர்கள் இருக்கும் திசைகளின் பக்கம்கூட நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும்
 பவ்யமாக பல்லைக்காட்டி தலை வணங்கும். இந்த இண்டர்போல் போலீசின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ள வினவு தளத்தை பாருங்கள்.

சவுதியில் ஆடு மேய்ப்பவருக்கும், தமிழ்நாட்டில் ஆட்டோ ஒட்டுபவர்க்கும்  பணபலம் ஆள்பலம் பின்புலமும்  இருந்திருந்தால், அவர்கள் நேர்மையாக நடந்திருக்க வாய்ப்பும் இருந்திருக்காது. அவை இல்லாததால்தான் அவர்கள் நமக்கு எதுக்கு  வம்பு என்று ஒதுங்கி கொண்டார்கள். இன்றைய சமூக சூழ்நிலையில் அதுதான் நிலைமை.


மதவாத ஆட்சியிலோ,போலி ஜனநாயக்திலோ ,நல்லவராக வாழ்வதும் நேர்மையாளராக இருப்பதும் அரிதிலும் அரிது..... பத்தில் ஒன்பது மோசம், மீதி.ஒன்றில் பாதி ரெண்டுங்கெட்டான். பாதியிலும் பாதி ஊமை, மீதி ,தான் நேர்மையாக இருப்பதோடு நேர்மைக்காக போராடுகிறார்கள். சிறு துளி பெருவெள்ளமாக...........











திங்கள் 24 2014

காதல்.......திருட்டு காதல்.......???

திருட்டு காதலுக்கு நந்தியாக இருந்த கணவனை போட்டுத்தள்ளிய மனைவி,திருட்டு காதல் செய்த மனைவியை போட்டுத்தள்ளிய கணவன், இப்படித்தான் பெரும்பாலும் தினசரிகளில செய்திகள் வலம் வரும்.

அவ்வப்போது திருட்டுக காதலியை போட்டத்தள்ளிய திருட்டுக் காதலன், திருட்டு காதலனை போட்டுத்தள்ளிய காதலி --இப்படியான செய்திகளும் வலம் வரும். இப்படியான செய்திகள் பத்தரிக்கை காரர்களுக்கும் அதை படிக்கும் வாசகர்களுக்கும் அல்வா சாப்பிட்ட மாதிரி.................

இப்படியெல்லாம் ஏன் ?நடக்குது. இதுக்கெல்லாம் காரணகர்த்தா யாருன்னு பத்திரிக்கை நடத்துகிறவனும் சரி,அதை படிக்கிறவனும் சரி, சொல்றதும் இல்லை,யோசிக்கிறதும் இல்ல...........

பத்திரிக்கைகாரன் சொல்றதுமில்லை.படிக்கிறவன் யோசிக்கிறதுமில்லை பின்ன எப்படி ?  காதல்......சரி  அதென்ன திருட்டுக்காதல் இந்ததிருட்டுக்காதல்னு கண்டு பிடித்த சிஐடி யாரு????

 திருட்டுக் காதலனை போட்டுத்தள்ளிய காதலி என்ற காதல் தொடர்பான செய்தியில் யார் திருட்டுக்காதலன் ,யார் திருட்டுக்காதலி என்ற வரைறையே இல்லை . செய்தி பத்திரிக்கை காரர்களுக்கு,

கணவனோ.மனைவியோ இருவரும் சேர்ந்து வாழும்போது, கணவனோ,மனைவியோ...அடுத்தவருடன் காதல் கொள்வதுதான் திருட்டுக் காதல் என்று பொதுவாக சொல்லப்படுகிறதா.,..........???

கீழ்கண்ட திருட்டுக்காதல்  செய்தியில் காதலியானவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்.  இவர் காதல் கொண்டவரை திருட்டுக் காதலன் என்றா சொல்லமுடியும். செய்தியில் திருட்டுக்காதலன் என்றே சொல்லப்படுகிறது எழுதப்பட்டு பரப்பபடுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு நாண்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர்.

பிரிந்த வெள்ளையன்  இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்த வள்ளியம்மாள்.தன் பிள்ளைகளுக்காக மறுமணம் முடிக்காமல் . அதே ஊரைச் சேர்ந்த சடையன் என்பவருடன் காதல் தொடர்பு வைத்துக் கொண்டார். இதில் வெள்ளையம்மாளின் காதலன் சடையனை திருட்டுக் காதலன் என்று சொல்ல வது சரியா.........???

சடையனுக்கு மனைவி  இருந்து  சடையன் தன் மனைவிக்கு தெரிந்தோ,தெரியாமலோ, வெள்ளையம்மாளுடன் உள்ள காதல் தொடர்பை வைத்திருப்பதை வேண்டுமென்றால் சடையனின் திருட்டுக்காதலி  வெள்ளையம்மாள் என்று சொல்லலாமா.........???

 வள்ளியம்மாளின் காதலன் சடையன் அடிக்கடி குடிபோதையில் வந்து“ ஓடிப்போகலாம் , ஓடிப்போகலாம் வற்புறுத்தி தகராறு செய்ததில் அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டதில், கீழே விழுந்த சடையனுக்கு தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தது.

இதைக் கண்ட வள்ளியம்மாள் காதலனை உயிரோடு விட்டால் தன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டார் என்று எண்ணி சடையனின் துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தார் என்ற செய்தியை   திருட்டு காதலால் திருட்டுக்காதலனை பரலோகம் அனுப்பிய திருட்டுகாதலி என்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில்  திருட்டுக் காதலன்  யாரு?திருட்டுக்காதலி...யாரு ??ஃ.......யாரைச் சொல்லலாம், உண்மையான காதலையே நாடகக் காதல் என்றார்கள் சாதிவெறித்தலைவர்கள்.இப்படிபட்ட  காதலை என்னவென்று சொல்வார்கள்,.....இப்படிபட்ட காதலுக்கு யார் முன்னோடிகள் இந்து  முஸலீம் கிறிஸ்தவ மதக் கடவுளா்களா???? சினிமாக்காரானா............. அந்தப்“புரத்தில் கூத்தடித்த   ஆண்டை பரம்பரைகளா???ஃஃஃஃஃஃஃஃ






தேர்தலில் பேரம் பேசுவது ஓட்டு கட்சிகளின் பிறப்புரிமை......

தேர்தல் திருவிழா வந்துவிட்டால் ஒவ்வொருஒட்டு சீட்டு கட்சிகளும் தங்கள் தங்கள் தகுதிக்கேற்பவோ, அல்லது தகுதிக்கு மீறியோ பேரத்தில் ஈடுபடும்  இது.,அந்த ஓட்டு கட்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே அதன் சதையோடும் இரத்தத்தோடும் கலந்தே இருந்து வந்துள்ளது.

தேர்தல் திருவிழா பற்றி நாள் கிழமை போன்ற விபரங்கள் அளிக்கும் முன்னரே  ஒவ்வொரு கட்சியும் தாங்கள் இதுகாரும் சொல்லி வந்த கொள்கை வெங்காயம் கோட்பாடு.கட்டுப்பாடு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு

அம்மணத்துடன்  பெரிய கட்சியாகட்டும் நேற்று முளைத்த சிறிய கட்சியாகட்டும் அவைகள் தொகுதி பேரத்தில்  நாளோரும் மேனியுமாக பொழுதொரு வண்ணமுமாக  ஈடுபட்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்து வரும்

எனவே, தேர்தலில் பேரம் பேசுவது எல்லாவகை ஓட்டு சீட்டு கட்சிகளின் பிறப்புரிமையாகவே அன்றும் இன்றும் என்றும் இருந்து வந்திரக்கின்றன.

இப்படிப்பட்ட கட்சிகளை நம்பி மோசம் போவதும் வாக்காளர்களின் தொன்று தொட்டு வரும்  பிறப்புரிமையாகவும் இருந்து வருகின்றன.

இப்படியோரு தேர்தல், இப்படிபட்ட கட்சிகள், அப்படிப்பட்ட வாக்காளர்கள்.   இவர்களால்   அணைவருக்குமான நீதியும் நேர்மையும் வாழ்வும் கிடைக்காவா செய்யும்.??????????????

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...