பக்கங்கள்

வியாழன் 14 2019

இனி அடிப்படை தகுதி......../????

அனிதாக்கான பட முடிவுகள்"



உலகம் சுற்றும் கிழவனின்
 செகட் இன்னிங்கஸ் ஆட்சியில்

நீட் பயிற்சி மையங்களில்
சேர்ந்து படித்து தேர்ச்சி
பெற பணம் வேண்டும்.

அல்லது............

அத்தேர்வில் மோசடி செய்து
தேர்ச்சி பெறுவதற்கும் பணம்
  வேண்டும். ஆக... மொத்தத்தில்
இனி மருத்துவராவதற்கு முக்கிய
அடிப்படை தகுதி  பணம்தான்...

செவ்வாய் 12 2019

" அவாள் "களுக்கு ஆப்பறைந்த கீழடி....


கீழடி நாகரிகம்
படம்-பிபிசி தமிழ்


 இந்திய துணைக்கண்டத்தின் அறிவுச செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதிமூலம்  வேதங்கள் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள்  ஆகும். எனவே சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கு மூத்த மொழியாகும். ஆகவே சமஸகிருதம் தெய்வீக தன்மை கொண்டது. எனவே, சமஸ்கிருதம் அறிவியல் தன்மை கொண்டது. இதை நாசாவே சொல்லிவிட்டது.

எனவே பிற பிராந்திய மொழிகள் பேசும் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை வாழ வைத்து கொண்டிருக்கும் ” அரிய வகை அறிஞர்களான அவாள்களுக்கு ” கடன் பட்டவர்கள்.  ஆகவே, சாதியும்-சாதித்தூய்மையையும் -பேனப்படவேண்டும்.


இப்படி  பார்ப்பனிய கும்பலும். அதன் குண்டாந்தடிகளான ஆர்.எஸ்.எஸ், பரிவார அமைப்புகளும் மக்களிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவாள்களுக்கு ஒரே வீச்சில் ஆப்பறைந்துள்ளது கீழடி...

ஞாயிறு 10 2019

அய்யோ...த்தீ்........






 அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு.....பற்றி பலரும் தெரிந்திருப்பார்கள்..தெரியாதவர்கள் இவ்லோகத்தை மறந்து  அவ்லோகத்தில் மிதப்பார்கள்.... நல்லது அவர்கள் நன்றாகவே மிதக்கட்டும்.  இன்னொரு கூட்டம் ஒன்று இருக்கும் வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்று இருக்கும்  இவ்விரண்டு கூட்டத்தை விலக்கி விட்டு..தீர்ப்பை பற்றி தெரிந்தவர்கள்  மட்டும் அறிந்து  கொள்வது..

இந்திய நாடு இறையாண்மை கொண்ட சமத்துவ, மதசார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் வரையறுக்கப்பட்டுள்ளது.  அது இனி அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் இருந்து  அய்யோத்தீ தீர்ப்பின் மூலமாக தூக்கிலப்பட்டது.

தொல்லியல் துறை யின் ஆய்வுச் சான்றே போலியானது...எல்லாவித அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் செய்தி நிறுவணங்களும் தங்கள் சொத்தை நிறுவனத்தை பாதுகாத்து கொள்ள  தீர்ப்பை வரவேற்று தங்களின் மதப் பற்றை காட்டிக்கொண்டுவிட்டன....

பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு எந்தவித தண்டனையும் இல்லை. இதிலிருந்து அறிந்து கொள்வது...

ஆர்எஸ்எஸ்- பாஜ.க-வின் சட்டங்களை மீறி எந்த நீதிமன்றமும் இனி செயல்பட முடியாது.என்பதையே இந்த தீர்ப்பு உணர்த்துகிறது .

படம் -வினவு



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...