அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு.....பற்றி பலரும் தெரிந்திருப்பார்கள்..தெரியாதவர்கள் இவ்லோகத்தை மறந்து அவ்லோகத்தில் மிதப்பார்கள்.... நல்லது அவர்கள் நன்றாகவே மிதக்கட்டும். இன்னொரு கூட்டம் ஒன்று இருக்கும் வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்று இருக்கும் இவ்விரண்டு கூட்டத்தை விலக்கி விட்டு..தீர்ப்பை பற்றி தெரிந்தவர்கள் மட்டும் அறிந்து கொள்வது..
இந்திய நாடு இறையாண்மை கொண்ட சமத்துவ, மதசார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் வரையறுக்கப்பட்டுள்ளது. அது இனி அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் இருந்து அய்யோத்தீ தீர்ப்பின் மூலமாக தூக்கிலப்பட்டது.
தொல்லியல் துறை யின் ஆய்வுச் சான்றே போலியானது...எல்லாவித அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் செய்தி நிறுவணங்களும் தங்கள் சொத்தை நிறுவனத்தை பாதுகாத்து கொள்ள தீர்ப்பை வரவேற்று தங்களின் மதப் பற்றை காட்டிக்கொண்டுவிட்டன....
பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு எந்தவித தண்டனையும் இல்லை. இதிலிருந்து அறிந்து கொள்வது...
ஆர்எஸ்எஸ்- பாஜ.க-வின் சட்டங்களை மீறி எந்த நீதிமன்றமும் இனி செயல்பட முடியாது.என்பதையே இந்த தீர்ப்பு உணர்த்துகிறது .