பக்கங்கள்

வியாழன் 29 2018

நினைவலைகள்-27.





கதை கேளு..கதைகேளு..நாட்டு நடப்பு கதைகேளு....





ஜனநாயகம் க்கான பட முடிவு







உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிக்கு சென்றபோது.. இடைவேளைக்கு பின்புதான் வழக்கு விசாரனைக்கு வரும் என்று வக்கீல் அய்யா சொன்னதைக்கேட்டு... உட்காருவதற்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார் அவர்.

அவரக்கு அருகில் வந்தமர்ந்த இருவர் . இருவரில் ஒருவர் பேசுவதை மற்றவர் ஆர்வமுடன்  கேட்டுக் கொண்டு  இருந்தார்..  அவர்கள் இருவரையும் பார்வையால் ஒரு முறை பார்த்துவிட்டு..தன் பையில் கொண்டுவந்திருந்த ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியவர்.

சிறிது நேரத்தில் வாசிப்பில் மனம் செல்லாமல்  அருகில் அமர்ந்திருந்தவர் சொல்லிய கதையில் கவனம் சென்றது.. அவர்களை பார்த்தும் பார்க்காததுமாக..இடையில். கதையை கேட்கத் தொடங்கினார்..

2014-ல் ஒரு ஏழைத்தாயின் மகன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது அன்று அரங்கேற்றிய நாடகங்களை இப்போது சற்று நினைவு படுத்தி பாருங்கள் என்றவர் தொடர்ந்து அவரே கதையைத் தொடர்ந்தார்.

“ஊழற்றவர்”  “ உறுதியானவர்” விரைந்து முடிவெடுப்பவர், மந்திரிகளையும் அதிகாரிகளையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டக்கூடியவர், ஒவ்வொரு நாளும் அவர்கள் என்ன உண்கிறார்கள். என்ன உடுத்துகிறார்கள். என்பது வரை கண்காணித்து இயக்கக் கூடியவர்.” என்றெல்லாம்  அனைத்து முதலாளிகளின்  ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்ட ஏழைத்தாயின் மகனான மோடியின் பிம்பம் காற்று போன பலூனாக மாறி வருகிறது என்று விட்டு அதன் காரணங்களை வரிசையாக பட்டியலிட்டார்.

சி.பி.ஐ.இயக்குநர் அலோக் வர்மா, “பிரதமர் அலுவலகம் சட்டவிரோதமாகவும் உள் நோக்கத்தடனும் தன்னை பதவியிலிருந்து அகற்றியிருப்பதாக” ஏழைத்தாயின் மகன் அரசின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

“ ரிசர்வ் வங்கி யின் சுதந்திரத்தில் அரசு தலையிட்டால் அர்ஜென்டினாவைப் போல் பொருளாதார- அரசியல் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் ” என்று ஏழைத்தாயின் மகன் அரசை எச்சரிக்கிறார். ரிசர்வ் வங்கியின் தணை ஆளுநர் விரால் ஆச்சார்யா,

“வராக் கடன் என்று பல்லாயிரம் கோடி நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலைக் கொடுக்குமாறு” ரிசர்வ் வங்கி ஆளுநர்க்கும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகத்துக்கும் நோட்டீசு அனுப்புகிறார் தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யா..... இது போன்ற ஜனநாயகத்தால் தேசத்துக்கு ஆபத்து என்றபோது

 கேட்டுக் கொண்டே வந்தபோது.. கோடாங்கி ஆடிய அவருடைய  தலை ஒரு கனம் ஆட்டத்தை நிறுத்தியது  அடுத்து கதையின் தொடர்ச்சியை  கேட்க ஆவலாக இருந்த போது இடைவேளைக்கு பின் விசாரணை தொடர்வதற்க்கு அறிவிப்பாக மணி ஒலித்தது....

கதை சொன்னவரும் கதை கேட்டவர்களும் பாரபரப்பாக அவ்விடத்தை விட்டு எழுந்தனர்.....



செவ்வாய் 27 2018

நினைவலைகள்-26.

பெண்- விடுதலையை பற்றி சித்திர புத்திரன் சொன்னது.....
சித்திரபுத்திரன் க்கான பட முடிவு




“கற்பு” என்கிற வார்த்தையும், “விபச்சார தோசம்” என்கிற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகிறதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருசர்கள் முழு விடுதலை பெற்றிருப்பதற்கு காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும்,விபச்சாரதோசம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதனாலயே முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்

ஆதலால், பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் , ஆண்கள் போல் நடக்க வேண்டும். மற்றபடி புல் என்றால் புருசன், கல் என்றால் கனவன் என்றோ.. ஆண்கள் தங்கப் பாத்திரம், அதை யார் தொட்டாலும் கழுவ வேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும். என்றும் பெண்கள் மண் பாத்திரம்  வேறு யார் தொட்டாலும் தீட்டு போகாது. அதை உடைத்து  குப்பை தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கிற முறை இருக்கின்ற வரை.... பெண்களுக்கு விடுதலையோ- சுதந்திரமோ கிடையாது.

எனவே, பெண்கள் தங்களை மண் சட்டி என்று எண்ணாமல் தங்களை தங்கப் பாத்திரம் என்று எண்ணிக் கொள்ளவேண்டும்.


என்றோ..படித்தது. பிறன் மனை உறவு குற்றமில்லை என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது... பார்வையாளர்களில் ஒருவர் சொன்னது...

ஞாயிறு 25 2018

நினைவலைகள்-25.

என்னை செத்துப்போ என்றவன்.........!!!!!!!!!!


ஆள் நடமாட்டம் க்கான பட முடிவு




வாரத்தில் மூன்று
நாள் அல்லது
நான்கு நாள்
அந்த வழியே
சென்று வந்தேன்.

எந்த பிரச்சினையும்
இல்லை இன்று
அவ் வழியே
சென்ற போது
நாலு ஐந்துபேர்
வழி மறித்தார்கள்
ஆட்கள் நடமாடிக்
 கொண்ட போது
கடைகள் திறந்து
இருந்த போதும்...

பேண்ட் பையில
பணம் இல்லை
செல்லை தவிர
மறித்தவர்கள் ஒரு
புன்னகையுடன் கை
நீட்டி பின்னால்
 பார்க்கச் சொன்னார்கள்

இரு சக்கர
வாகனத்தின் சைடு
ஸ்டாண்டை போட்டு
நிதனமாக திரும்பி
பார்த்தேன் ஒரு
தடியான ஆள்
கையை ஆட்டி
தன்னருகில் வருமாறு
சைகை செய்தார்

அவர் அருகில்
சென்று நின்றேன்
என் பெயர்
 சொல்லி நல்லா
இருக்கிறாயா என
நலம் விசாரித்தார்

இவர் யாரென்று
தெரியவில்லை ஒரே
குழப்பம்  என்னை
மேலும் கீழும்
பார்த்துவிட்டு ஊதாம
வத்தாம அப்படியே
இ்ருக்கே.. எத்தன
பிள்ள இருக்கு

பிள்ள இல்ல
என்றதும் கல்யாணம்
ஆகி எத்தன
வருசம் ஆச்சு
என்னது கலியாணம்
ஆகலியா  டேய்
என்னவிட மூத்தவன்டா
நிய்யி.... கலியாணம்
முடிக்காம இத்தன
வருசம் என்னடா
செய்து கிட்டு
இருந்த அடப்பாவி.

சின்ன வீடு
பெரிய வீடு
குடி கூத்தி
அதுவும் இல்லயா....
எதுக்குடா இருக்க
செத்துப் போடா

சரி என்ன
யாருன்னு தெரியுதா..
தெரியலையா..நாசமா
போச்சு...நல்லா
என்னப் பாத்து
சொல்லு  யோசன
பன்னி சொல்லுடா..

சுற்றி நின்றவர்கள்
ஹா ஹா வென்று
சிரித்து விட்டு
என்னையே பார்த்தார்கள்
எனக்கு ஒரு
க்ளுவும் கிடைக்கவில்லை





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...