பக்கங்கள்

சனி 17 2016

மடப்பய திருடன்கள்.......

....................................
..................................
..................................









சிறையில் அடைப்பட்ட
திருடன் ஒருவன்
கிளி ஜோசியம்
பார்க்க ஆசைப்
பட்டான் தான்
எப்போது விடுதலை
ஆவோம் என்று.....


மற்றொரு திருடன்
நிணைத்தான் மார்கழி
மாத யோக்கியனாக
மாறினால் உடனே
விடுதலை கிடைக்குமென்று

வெள்ளி 16 2016

புரிந்தது போல் இருந்தது.

...........................
.............................
...............................












பெண் பார்க்கும்
படலத்தின் போது
மாப்பிள்ளையின் புகைப்
படத்தை பார்த்த
பெண்ணின் பார்வையை
கவனித்த  வேளையில்
ஒன்னும் புலப்படாமல்
தவித்த போது
பெண்ணின் தகப்பனார்
மாப்பிள்ளையின் வீட்டைப
பார்க்க வருகிறோம்
என்ற பிறகு
புரிந்தது போல்
இருந்தது மாப்பிள்ளை
வீட்டாருக்கு.............

புதன் 14 2016

அது ஏன்? சாமி..........

........................
......................
................

செத்தவர்கள் எல்லாம்
பேயாக உலா
வருவதில்லை நாண்டு
கிட்டு செத்தவர்கள்
மட்டும்   தான்
பேயாக உலா
வருகிறார்கள் என்றால்
போலீசால் சுடப்
பட்டவர்கள்  அவர்களால்
தூக்கில் இடப்
பட்டவர்கள் பேயாக
உலா வருவதில்லை...யே
அது   ஏன்?..சாமி.

செவ்வாய் 13 2016

கரையை கடந்தவள்கள்......

 கடந்த வாரம் வந்தவள்
பெயர் நாடாவாம் அவள்
கரைக்காலில் கரையைக்
கடந்தாளாம் அவள் போகும்
போது மோகப் பார்வையை
மறைத்து  விட்டு இது
என்ன “நாடா”டா என்று
கேட்டு கனமழையை வீசி
விட்டு சென்றாளாம் அவள்.

நாடாவுக்கு பின் வந்தாள்
வர்தா என்பவள் அவள்
வரும்போதே நானென்ன
 நாடாவைப் போல் வக்கத்தவளா
என்று கேட்டு 120 கிமீ வேகத்தில்
வந்தவள் ஒரு லட்சம்
மரங்களை வேரோடு முறித்தாள்
போன வருடம் செம்பரம்
பாக்கத்தை மறந்தவர்களுக்கு பாடம்
புகட்ட எண்ணி பத்தாயிரம்
பேரை வீட்டை விட்டு
வெளியேற வைத்தாள் அவர்களில்
ஏழு பேரின் உயிரை பறித்தாள்
வக்கத்த சிரிக்கி  “நாடா”வை
விட நான் ஒசத்திடா என்று
களி நடனம்  என்ற
அழுகுனி ஆட்டத்தை ஆடினாள்

போடி விறுதா சிரிக்கி
வர்தா...  உனக்கு முன்னாலே
தமிழகத்தின் தலைநகரான
சென்னை சமஸ்தானத்திலே
ஆறு முறை  முதல்
அமைச்சராக பதவி வகித்து
தமிழ் சமூகத்தை சீரழித்த
சதிகாரி   என்று பெயரெடுத்த
ஒருத்தி உன் சக்களத்தி
நாடாவுக்கும் உனக்கும் முன்னாடி
1991ன்னிலே வந்து ஆடாத
ஆட்டம் எல்லாம் போட்டு
விட்டு கரையை கடந்தாள்
என்பது ஒனக்கு தெரியுமாடீ....
ரெம்பவும் தான் பீத்தாா டீ





திங்கள் 12 2016

தீர்க்கதரிசி பாரதி........

.................
...................
.....................

பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம்
என  போயஸ்
கார்டன் சகோதரிகளை
பற்றி அன்றே
பாடி வைத்து
தீர்க்கதரிசி என்று
பெயரெடுத்தான் பாரதி..

ஞாயிறு 11 2016

பாரதி 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால்...

கொண்ட கொள்கைக்காக நஞ்சு
அருந்தி செத்தார் சாக்ரடீஸ்
தூக்கில் தொங்கினார் பகத்சிங்
போர் வீரர்களுடன் வீரராக
செத்துக் கிடந்தார் திப்பு சுல்தான்
கண்ட துண்டமாக வெட்டிக
கொல்லப்பட்டு கிடந்தார் நக்சல்பாரி
கவிஞர் சரோஜ் தத்தா..


“கவிஞர் பைரனுக்கும் ஷெல்லிக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்; அவர்கள் இருவரையும் புரிந்து கொண்டவர்களும் நேசிப்பவர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். 36 வயதில் பைரன் இறந்தது நல்லது – அவன் மேலும் வாழ்ந்திருந்தால் பிற்போக்கான முதலாளியவாதியாக மாறியிருப்பான். மாறாக, 29 வயதில் ஷெல்லி இறந்தது வருந்தத் தக்கது; ஏனென்றால் அவன் வாழ்க்கை முழுதும் புரட்சியாளனாக இருந்தான். மேலும் வாழ்ந்திருந்தால் சோசலிசத்தின் முன்னோடியாக விளங்கியிருப்பான்”
– மார்க்ஸ் அடிக்கடிக் கூறுவார் என்று அவரது மகள் எலியனார் மார்க்ஸ் கூறியது.
. பாரதி மேலும் 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பகத்சிங், பொதுவுடைமை இயக்கம், ஹெட்கேவார், பெரியார், அம்பேத்கர் ஆகிய அனைவரையும் எதிர் கொண்டிருப்பான்.
மேலும் படிக்க............பாரதி அவலம்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...