பக்கங்கள்

சனி 04 2017

பயத்தால் வந்த விளைவு

காலையில் நான் எழுவதற்கு முன்னமே  அடுத்த தெருவிலுள்ள தெரிந்தவர் ஒருவர் என்னை பார்க்க வந்தவர் நான் தூங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு  என்னனை எழுப்பினார்.

ஓரிரு சத்தத்திற்குப் பின் கண் விழித்த நான்  கண்களைதுடைத்துவிட்டுக் கொண்டு அவரைப் பார்த்தேன். வந்தவர் உங்களிடம் பேச வேண்டும் எழுந்திருங்கள் என்றார்.

ஒருவித  பயத்துடன்  என்ன பேச வேண்டும் என்று கேட்டபோது... நீங்கள் இன்னாருடைய  மாமனார் இறந்த போன நிகழ்ச்சிக்கு போனீங்களா என்றார்.

ஆமாம் என்ன விசயம் என்று மீண்டும்கேட்டேன்.. உங்களை நம்பி  என் வீட்டுக்காரம்மாவை அனுப்பினால்.. இப்படித்தான் நட்டநடு ராத்திரியில் கைவிட்டு விட்டு வருவீங்களா? என்று கேட்டார்.

சட்டனெ எழுந்து ஒரு நிமிடம் என்று ஒரு விரலை காட்டியபடி விரைவாகச் சென்று பாட்டுப்பாடிவிட்டு அப்படியே  முகத்தைக் கழுவி  கட்டியருந்த லுங்கியால் முகத்தை துடைத்தபடியே  வந்தவருக்கு அருகில் நானும் ஒரு சேரைப் போட்டு அமர்ந்தேன்..

நீங்க சொல்றது ஒன்னும் புரியலைங்க.... என்று கேட்டபோது... என் நண்பருக்கு நண்பரானாவரின் மாமானார் இறந்துவிட்ட துக்க நிகழ்ச்சியில் நானும் எனது நண்பரும் கலந்து கொண்டோம் 

நண்பர் நண்பருக்கு துணையாக அங்கே இருந்துவிட.,  வேலையின் காரணமாக தங்க மறுத்த நான் மட்டும் திரும்பிவிட்டேன்..இறந்தவரை அடக்கம் செய்ய வெகு நேரமாகிவிட்டதால்.. அந்த ஊரு வழியாக செல்லும் கடைசிப் பேருந்தில் ஏறி. அந்நகரப்பேருந்து நிலையத்தில் இறங்கி மதுரை செல்லும் வெளியூர் பஸ்ஸில் ஏறி வந்தேன்.

இந்தநிலையில்  என்னை எழுப்பியவரின்   மனைவியும்  இறந்தவர் அவரது ஊர்க்காரர் என்பதால் துக்க வீட்டுக்கு வந்திருந்தார் அவரும் என்னைப்போல் ஊரு திரும்ப எண்ணியதால் ...அவரின் உறவினரின் மூலம் என்னை சுட்டிக் காட்டிஅவர் உன் வீட்டைக் கடந்துதான்  அவர் வீட்டுக்குச் செல்வார். ஆகையால் அவருடனே போ... என்று அனுப்பி வைத்துவிட்டனர்.. இது தெரியாத நானும் என்போக்கில் பஸ் ஏறி வீடு வந்துவிட்டது என்பது வந்தவர் சொன்னபிறகுதான் தெரிந்தது..

பிறகு தூங்கிக் கொண்டு இருந்த என்னை எழுப்பியவரின் கோபத்தை தவிர்க்கும் முகமாக நடந்ததை அப்படியே கூறினேன்.

நான் அந்த ஊரின் பஸ்சில் ஏறி..வெளியூர் பஸ்சில் மதுரை வந்து இறங்கிய பிறகுதான் என் பின்னால் ஒரு பெண் வருகிறார் என்று கண்டு கொண்டேன்..யாரென்று தெரியவில்லை.. பஸ்ஸில் இறங்கியவு்டன் எனக்கு பின்னால் நடந்து வந்தவர். ஒரு திருப்பதில் எனக்கு முன்னால்  வந்தவரின் மனைவி செல்ல பின்னால் ஐந்தாறு அடிக்கு பின்னால் நான் சென்று கொண்டு இருந்தபோது திடிரென்று எனக்கொரு பயம் வந்து விட்டது.

முன்னால் சென்ற பெண் விறு விறுவென்று சென்றதால் தனக்கு பயந்துதான் அப்படி செல்கிறார் என்று தோன்றியதுடன்.. பெண்ணை பிறகுபத்தி போறான் என்று தெரிந்து அந்தப் பெண்ணோ பயத்தில் கத்த எதாவது ஏடா கூடமாக நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் ..மெதுவாக நடக்க சற்று தூரத்தில் சென்ற பெண் என்னை திரும்பி பார்த்து நிற்க... நான் இதுதான் சமயம் என்று அவர்க்கு முன் சென்று வேகமாக நடந்து சென்று என் வீட்டை அடைந்தேன்.அந்த இரவில் குளித்துவிட்டு படுக்க மணி மூன்று ஆகியது... 

வந்தவர் நான் சொன்னதைக் கேட்டதும் ரெண்டு பேரும்  நல்ல கதையை கெடுத்திங்க போங்க என்றுவிட்டு..... பாவம் அவ பயத்தில் காய்ச்சல் வந்து படுத்து கிடக்கிறாள் .சரி. அவதான்  சங்கடப்பட்டு உன்னிடம் பேசாமல் இருந்தாள். என்றாள்... நீயாவது. நம்ம  முன்னாடி போவது யாரு..பின்னாடி வருவது.. யாரு எவருன்னு பார்த்து  இருந்து பேசி இருக்கலா்மல..என்ற போது.... 

தவறுதான்... பயத்தால் வந்த விளைவு  அப்படி ஆகிவிட்டது.. மன்னித்து விடுங்கள்...என்றபோது அவர் என் ஏரியா பொம்பளைகளால் எனக்கு நடந்த நிகழ்ச்சியைச் சொல்லி...

உங்க ஏரியா பொமபளைங்க மாதிரி எல்லா பொம்பளைகள  நிணச்சு.. பயந்தா
 எப்படி என்றார்...

என் அனுபவமும் நாட்டு நடப்பும் என்னை பயம் கொள்ள வைத்துவிட்டது... எனறு அவரிடம் விளக்கி சொன்னப்போது..  என் மேல் உள்ள கோபத்தை விலக்கிக் கொண்டு  பொம்பளைக்குஇப்படியா பயப்படுவது என்று சொல்லி சிரித்து சமாதனம் அடைந்தார். அவர் விடைபெற்று போகும்போது...அப்புறம்மேல் வீட்டுக்கு வந்து அவளைப்பார்த்து  நடந்ததை சொல்லிப்விட்டுப போங்க  என்றார்.

ஏன்? நீங்க சொல்ல வேண்டியதுதானே...என்று நான் சொன்னபோது... நானும் சொல்றேனுங்க.....நீங்க வந்து சொன்னா.. அவளுக்கு பயத்தால் வந்த காய்ச்சல் போகுமல்லவா என்றார்..

சரி..வந்து சொல்றேனுங்க என்று சொன்னபிறகு என் பயத்தை கண்டு சிரித்துக் கொண்டே சென்றார்.. என் பயத்தை  நான் எப்படி  அவர் மனைவிpடம் சொல்வது.. என்ற சங்கடமான பயத்தில்  நெளிந்து கொண்டு இருக்கிறேன்..

வியாழன் 02 2017

வேறு இடம் தேடி....????

வெகு நேரமாக அந்த கிணற்றின் திண்டின் மேல் அமர்ந்து காலை கிணற்றுப் பக்கமாக தொங்கப் போட்டுக் கொண்டு... அடர்த்தியாக வளர்ந்திருந்த தலை முடியை ஒரு ப்க்கமாக கோதிவிட்டுட்டு தாடியை தடவியபடியே யோசித்து கொண்டு இருந்தார் அந்த மனிதர்.

அந்த மனிதரை அந்த நிலையில்  பார்த்தால் தற்கொலை செய்து கொள்வதற்க்கான முன்னேற்பாடு  மதிரியே தெரியும்.. அது உண்மையும் கூட... அதற்கு காரணமும் இருந்தது.

அவரை உயிர்க்கு உயிராய் காதலித்த அவர் மனைவியும் இறந்துவிட்டார்.. அவரின் காதல் மனைவி வேற்று சாதி பெண் என்பதால்... அவர் தந்தை மற்றும் சகோதரர்களால் துரத்தியடிக்கப்பட்டார். 

அவரின் காதல் மனைவியின் தைரியத்தால்  தன் சாதி வெறி குடும்பத்தை ஒதுக்கிவிட்டு  அவர்களுக்கு தெரியாத ஊரில் வசித்து இரண்டு பெண்களை பெற்றெடுத்து அவர்களுக்கு மணம் முடித்துவிட்டு, மனைவிக்கு ஒத்தாசையாக... வலது கரமாக இருந்து வந்த நிலையில் திடிரென்று ஒருநாள் காப்பற்ற எந்த வாய்ப்பும் சிரமும் அவருக்கு கொடுக்காமல் அவரை பரிதவிக்கவிட்டு மனைவி இறந்துவிட்டார்.

வெளியூர்களில் வசிக்கும் மகள்கள் தங்களோடு வந்து இருக்கும்படி ஒப்புக்கு கேட்டாலும் . மருமகன்களின் குணத்தை.அறிந்து அவர்களுடன் செல்லாமல் சாக்கு போக்கு சொல்லி மகள்களைஅனுப்பி வைத்தார்..

மனைவியின் சேமிப்பு பணத்தை வைத்து.. மூன்று மாதத்தை ஒரு நொடிபோல் கழித்துவிட்டார். வேலைக்குச் சென்றாலும் அவரின் காதல் மனைவியின் பேச்சும் அரவணைப்பும்  நிணைவலைகளில் வந்து மோதியதால்  வேலை செய்யமுடியாமல் தவித்தார். தப்பித்தவறி  அவர் இயந்திரங்களில் சிக்கவிடக்கூடாது என்பதால் தெழிலகத்தின் கண்காணிப்பாளர்... லாங் லீவு கொடுத்து அனுப்பிவிட்டார்.

காதல் மனைவியின் நிணைவால் தூக்கத்தையும் இழந்து பைத்தியக்காரனைப்போல் வீதி வீதியாய் ஊர் ஊராய் சுற்றிக் கொண்டு இருந்தவர். கடைசியாக.ஒரு கிராமத்தின் .வயல் வெளியில்  ஊரை ஒட்டியள்ள இந்தக் கிணற்றில் வந்தமர்ந்தார்.

கிணற்றில் அமர்ந்து இவரின் செயல்களை வீட்டில் இருந்து கவனித்து வந்த கிணற்றுக்கு சொந்தக்கார பெண்  உதவிக்கு சிலரை அழைத்துக் கொண்டு இவரை நோக்கி  வந்தார்.

 வந்தவர் ..அய்யா... யாரு..நீங்க...? இங்கு என்ன செய்யிறீங்க..? தப்பித்தவறி இந்தக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திடாதிங்கய்யா..... தண்ணீருக்காக ஃபோர் போடுவதற்க்காக வாங்கிய கடனை அடைக்க முடியாததால்.... கிணற்றையும் வயலையும் விற்பதற்க்காக ஏற்பாடு செய்து கிட்டு இருக்கோம்....

நீங்க விழுந்து எதாவது ஆச்சுன்னா.... விற்கிற விலையை அடிமட்டமாக குறைப்பாங்க அய்யா..... அத.வாங்கிட்டு கடனை அடைக்க முடியாதுங்கய்யா.. நாங்க சாகிறத தவிர வேறு வழி இல்லங்கய்யா... என்று அழமாட்டாத குறையாக  சொல்லி முடித்தபின்  உடன் வந்த ஒருவர்.... நாங்களே சாக வழியில்லாம கிடக்கோம்.இதுல நீங்க..வேறையா.....என்றவுடன்....

தாடியை தடவுவதை நிறுத்திவிட்டு மெதுவாக எழுந்தார்....  அந்தப் பெண்ணை பார்த்து கும்பிட்டபடியே அவ்விடத்தை  விட்டு நகர்ந்து வேறு இடம் தேடி தன் பயணத்தை தொடர்ந்தார்...


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...