பக்கங்கள்

சனி 04 2016

இந்தீயாவில் ரீல் ரீலாக ஓடும் படம்..

சட்டத்தின்  முன்அனைவரும் சமம்
சாதி.மத இனங்களில் வேறுபாடு
காட்டாமை பேச்சுரிமை, வழிபாட்டு
உரிமை தனிநபர் சுதந்திரம்,
வாழ்வதற்கு பாதுகாப்பு  எல்லோருக்கும்
சமநீதி பசியும் வறுமையும்
அற்ற வாழ்க்கை, கவுரமாக
வாழும் சுதந்திரம் கவுரமான
ஊதியம் பெறும் உரிமை,
பாலின சமத்துவம். தீண்டாமை
ஒழிப்பு கட்டாய அடிப்படை
கல்வி பொதுச் சுகாதாரம்
சத்துணவுக்கு அனைவருக்கும் சம
வாய்ப்பு தேசிய வளங்களை பாதுகாத்தல்

- மேற்கண்டவைகள் இந்தீய தேசத்தில்அரங்கு நிறைந்த காட்சிகளாக  ரீல் ரிலாக ஓடுகிறது.

வெள்ளி 03 2016

தேர்தல் ஆணையம் செயல்படுமா..? செயல்படாதா..??






1975ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அரசு அலுவலரை பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, அவரது வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

2016ல் அதே குற்றத்தை செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா..? செயல்படாதா..??
Image result for கலைஞர்

வியாழன் 02 2016

திமுகவை தோற்கடிக்க தினமலர் செய்த கைங்கரியம்



நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை தோற்கடிக்க எல்லா செய்தி பத்திரிகைகளும், செய்தி ஊடகங்களும் ஓரணியில் நின்று வாங்கிய பணத்துக்கு மேலயே அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தன. . செய்தி சேனல்களிலே வருவது விளம்பரமா..? செய்தியா? என்று திகைக்கும் அளவுக்கு  கூவினார்கள். கூக்குரலிட்டார்கள்.

இவைகளுக்கு மத்தியில் .செய்தி பத்திரிக்கையின் தினமலர் மட்டும் திமுகவை தோற்கடிக்க புதுவிதமான கைங்கரியத்தை கடைபிடித்தது.

அது தமிழ் இலக்கணத்தில் வருகிற வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி. இகழ்வது போல் புகழ்வது, புகழ்வது போல் இகழ்வது போல் இருந்தது.

தேர்தல் தேதி அறிவித்தவுடனே.. எல்லா பத்திரிகையைப் போலவே அதுவும் தோ்தல்களம் என்ற ஒரு தனி  சிறப்பு பக்கத்தை தொடங்கியது.. 

அதில் கடந்த அய்ந்து ஆண்டகாலம் ஆட்சி செய்த ஜெயலலிதாவின் ஆட்சியைப் பற்றியும் ஜெயலலிதா 110 விதியின் கீழ்  அறிவித்த திட்டங்களைப்பற்றி குறை கூறுவதுபோல் விமர்சித்தது. இந்தத் தேர்தலில் திமுகதான் பெரும்பாண்மை வெற்றி பெரும் என்று ஊதி பெருக்கியது.

இந்த ஊதி பெருக்கிய தினமலரின் கைங்கரியத்தை புரியாத திமுகவின் உடன் பிறப்புகள், சூழ்ச்சிதனை புரியாமல் மெய் என நம்பி புளகாங்கிதம் அடைந்து. அடுத்தது நம்ம ஆட்சிதான் என்ற மிதப்பில் மிதந்துவிட்டார்கள், தினமலரால் மிதக்க வைக்கப்பட்டார்கள். அந்த மிதப்பில்தான். தேர்தல் பிரச்சார வேலைகளில் மும்மரமாக ஈடுபடாமல்.. அதிமுகவின் பணப்பட்டுவாடாவை தெரிந்தும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்....

இது திமுகவின் வெற்றியை தடுத்த முக்கிய காரணங்களுக்குள் தினமலர் செய்த கைங்கரியமும் ஒன்று...

புதன் 01 2016

கொய்யாப் பழம் உதிர்த்த சாறு

கடந்த அய்ந்து ஆண்டுகளாக
ஊழலை வளர்த்த கட்சி
ஊழலில் திளைத்த கட்சி
தொடரப் போகிறது ஊழலை
உரம் போட்டு வளர்க்கப்
பட இருக்கிறது.....கொய்யாப்
பழம்  உதிர்த்த சாறு
 நல்லாத் தான் இருக்கிறது
ஆனா அதன் ரத்தத்திலும்
நாவிலும்  ஆதிக்கச் சாதி
வெறி அல்லவா கோலோசு்சுகிறது.

செவ்வாய் 31 2016

கவரிமான் வேடம் போடும் கானகத்து கடும்புலி




தோழரே.... நீங்கள் கருத்து தெரிவித்த மாதிரியே.. கலைஞரும்  சொல்லி இருக்கிறார் என்று கூறியபடியே வந்தார் நண்பர்.

என்ன சொல்லியிருக்கிறார் கலைஞர் என்று தோழர் கேட்டபோது.நண்பர் கையில் கொண்டு வந்திருந்த பேப்பரை விரித்து படிக்கிறேன் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு படிக்க ஆரம்பித்தார்.

தோழரும் நண்பர் படிப்பதை கேட்க ஆரம்பித்தார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்க, சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நான் பேரவைக்குள் சென்றேன்.நான் பேரவைக்குள் செல்வதை அறிந்த ஜெயலலிதா, விருட்டென்று எழுந்து வெளியேறினாரே.... அவருடைய வெளிநடப்பு, அவர் திருந்தி விட்டார் என்பதையா..காட்டுகிறது.

அவர் அப்படி வெளியேறியது எவ்வகை அரசியல் நாகரிகத்தின்பாற்பட்டது? தொடர்ந்து ஜெயலலிதாவின் தொலைக்காட்சியிலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலும் என்னைப்பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் திமுகவைப்பற்றியும் பண்பாடற்ற அநாகரிகமான மொழியில்தானே அர்ச்சிக்கிறார்கள்..

அவரது தொலைக்காட்சியில் நடப்பதும், நாளேட்டில் அர்ச்சிக்கப் படுவதும் ஜெயலலிதாவுக்கு தெரியாமலா நடக்கிறது? பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலையை பிறர் அவருக்கு போதிக்க வேண்டுமா, என்ன? இப்படி  ஒரு பக்கம் அரசியல் நாகரித்தையும். பண்பாட்டையும் அடித்துத் துவைத்துக் காயப் படுத்துவதும், மறுபக்கம் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிப்பதுப் போல் நயவஞ்சக நாடகமாடுவதும்தான் அரசியல் நாகரிகம் என்றால்.. நாடகத்தின் அடுத்து நடக்கப் போகும் காட்சி என்ன?

கானகத்துக் கடும்புலி 
கவரிமான் வேடம் 
போடுகிறது. உங்களையும் 
கடித்து குதறும்போதுதான் 
வேடம் எனபது தெரியும்
நாவில் நெளிவது விசம் 
என்பது புரியும்..
-      
 படித்து முடித்த நண்பர் தோழரைப் பார்த்தார்.  தோழரும் சரியாய்தான் சொல்லி இருக்கிறார் கலைஞர்.. கானகத்து கடும்புலி கவரிமான் வேசம் போடுகிறது , நாவில் நெளிவது விசம் என்று...


.
                       ............................................

திங்கள் 30 2016

அது வேடிக்கை பார்க்கும் கூட்டம்...



ஏய்.. அங்க என்னப்பா.....? கூட்டமாக இருக்காங்க..!

அதுவா.... மாநகராட்சியில..தூய்மைப் படுத்தும் பணியை துவக்குறாங்கய்யா...

அப்படியா.....!!! இந்த தூய்மைப் படுத்தும் பணியால...இனி மாநகராட்சியின் ஒவ்வொரு தூணும் லஞ்சம் கேட்டு தொந்தரவு பன்னாதுல...??

அடப் போங்கய்யா.....! நீங்க...வேற.. வகுத்தெறிச்சல... கிளப்பாதீங்க....!!

அட... என்னப்பா..சொல்ற....?

பின்ன என்னங்கய்யா....மாநகராட்சி அலுவலகத்துல குப்ப நிறஞ்சு போனத சுத்தப்படுத்தறாங்க.... ஆனையரிலிருந்து துனைமேயர்வரை.. அதைத்தான் கூட்டமா நின்று  வேடிக்கை பாக்கறாங்க..... அத விட்டுபுட்டு ஒவ்வொரு தூணும் லஞ்சம் கேட்காதுல்லன்னு கேட்குறீங்க..இந்த..நக்கல்தானே... வேனாங்கிறது..

அடப்பாவிகளா...!!!குப்பை அள்ளுவதைக்கூட வேடிக்கை பார்க்கும் கூட்டமாடா. அது..!. சே..இந்த கூட்டத்தை குப்பையோடு குப்பை தொட்டிக்கு தள்ளுனாதாண்டா..... நாடு ...தூய்மையாகும்.....




ஞாயிறு 29 2016

திமுகவின் வெற்றி வாய்ப்பை தட்டி பறித்தவர்கள்..

குறைந்த வாக்குகள்
வித்தியாசத்தில் திமுக
வெற்றி வாய்ப்பை
இழந்து விட்டது
உண்மை தான்.
ஆளுங்கட்சியின் ராட்சசப்
பணநாயகமும்  தேர்தல்
ஆணையத்தின் நயவஞ்சக
செயல்பாடுகளுமே திமுகவின்
வெற்றி வாய்ப்பை
தட்டி பறிக்க
முக்கிய காரணம்Image result for கலைஞர்


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...