பக்கங்கள்

சனி 07 2015

கூண்டு கிளிகளாக்கும் தொலை காட்சிகள்.!!!


வழக்கம் போல்
இந்த ஆண்டு
மார்ச் எட்டு
மகளிர் தினம்
ஞாயிறு கிழமையில்
அதுவும் விடுமுறை
தினத்தில்...............


உழைக்கும் மக்கள் 
வீடுகளில் நட்ட
நடுவே கொலு
வீற்றிருக்கும் தொலை
காட்சி களில் மகளிர்
தின சிறப்பு காட்சிகள்
மகளிர் தின வாழ்த்துக்கள்.
சிறப்பு படங்கள்
சிறப்பு உரைகள்
சுரனையை கெடுக்கும்
தொடர்கள் நிறுத்தப்பட்டு.....


மகளிர் தினத்தில்
கற்று கொடுக்க
பல தொலைக்காட்சிகள்
உங்களை நிரந்தர.
 கூண்டுக் கிளிகளாக்க...........

வெள்ளி 06 2015

மம்மி ரிட்டன்ஸ்.....!!!!


ஜெயா கைது, காஞ்நிபுரம் காட்சிகள் (2)

படிக்க--http://www.vinavu.com/2014/12/18/jaya-wealth-case-degeneration-of-tamilnadu-politics-com-marudhaiyan-
வினவு




படம்-Surya Born To Win




தலை முறை தலை முறையாக
குடுபத்தோடு பாடுபட்டும்
காலம் நேரம் பார்க்காமல்
கடுமையாக உழைத்தும்
வாங்கிய கடனை
அடைக்க முடியாமல்
நல்ல சாப்பாடு
சாப்பிட முடியாமல்
தவிக்கும் வாக்காள
பெரு மக்களே!!

ஒரு ரூபா சம்பளத்தில்
அறுபத்தாறு கோடியே
அறுபத்தைந்து லட்சம்
ரூபா சம்பாதிக்க
உங்களால் முடியுமா???

என்னால் முடியும்
என்று உங்களிடம்
ஓட்டு வாங்கிச்
சென்று உங்களுக்காக
ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து தமிழகத்தை
ஆண்ட மம்மி
நிருபித்து உள்ளது.

ஒரு ரூபா சம்பளத்தில்
 கடுமையாக உழைத்து
உயர்ந்த மம்மி

பொறாமைக் காரர்களால்
ஏவி விடப் பட்ட பில்லி
சூனியங்களை பதினெட்டு
காலம் கடத்தியும்
சிலநாள் சிறை
கம்பிகளுக்குள் அடை
படும் தடங்கள்
ஏற்பட்டது.

அந்தத் தடங்கள்
நீங்க வேண்டி
தன் அடிமை
ஏவல் கூட்டம்
மூலம் யாகம்,
ஹோமம் ஆயிரம்
மொட்டை மண்
சோறு என்று
பலவித பரி
காரங்கள் செய்தார்

அந்த பரிகாரங்கள்
செய்ததின் பலனாக
ஒரு ரூபா சம்பளத்தில்
மீண்டும் உங்களுக்கு
உழைக்க அடுத்த வாரம்
மம்மி ரிட்டன்ஸ் ஆகிறார்.


.

வியாழன் 05 2015

இட்லரின் வழி ஒரு பாசிசம்...


தமிழகத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை கோறும் காவித்துறவி

மாட்டு  உயிரை
காக்க வேண்டும்
என்பதாக கூப்பாடு
போடும் வீரத் துறவிகள்.


கள்ள சாராயத்துக்கு
பதிலாக நல்ல சாராயம்
வழங்கி..மனித
உயிர்களை காவு
வாங்கும் மாபாதக
செயலுக்கு தடை
போடத கோட்டையை
ஆள வந்த சீமான்களும்..
இந்து மத துறவிகளும்

முந்தைய காலம்
தொட்டே இருந்து
வந்த ஏழைகளின்
உணவு பழக்கத்தை
மதத்தின் பெயரால்
மாற்றியது தான்
இட்லரின் வழி வரும்
பாசிசம் என்பது..









புதன் 04 2015

அவனுக்கு மட்டும் உரிமை ஏன்?

படம்-tamilnanbargal.com

இறைவன் கொடுத்த
உயிரை பறிக்க
யாருக்கும் உரிமை
இல்லை என்றால்.......................

அனுதினமும் சாலை
விபத்தில் ..  போலீஸ்
லாக்ப்பில்  சாதி மாறி
காதலித்தால் சாதி
வெறியில் பல
உயிர்கள் பறிக்கப்
படுகிறதே அதற்கு
மட்டும் தனி உரிமை ஏன்?

வயது முதிர்ந்த
உயிர்களை கொடுத்த
இறைவனே பறித்துக்
கொல்கிறானே.....

அவனுக்கு மட்டும்
உரிமை ஏன்?

செவ்வாய் 03 2015

உபதேசம் சொல்வது யாருக்கும் எளிது...

படம்-www.nimirnthunil.in

பத்தாம் வகுப்பு
பனிரெண்டாம் வகுப்பு
ஆண்டுத் தேர்வு
எழுதப் போகும்
மாணவர்களுக்கு

அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லை
உச்சி மீது வானிடிந்து
வீழ்ந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
 அச்சம் என்பது இல்லையே
என்று தைரியம்
சொன்னார் முன்னால்
மாணவர்............

அந்த முன்னால்
மாணவரிடம் இந்நாள்
மாணவர் கேட்டார்

அச்சமில்லை அச்சமில்லை
என்று பாடியவரே
தமிழ்நாட்டிலிருந்து
புதுச்சேரிக்கு .அச்சப்பட்டு
ஓடிய..போது..........

பாட்டை படித்தவர்கள்
அச்சமில்லாமல் எழுத
முடியுமா....???






திங்கள் 02 2015

அனல் பறக்கும் மதுரை....

படம்-www.tamilvu.org


தன்
கனவனுக்கு திருட்டு
பட்டம் சூட்டி
கொலை செய்யப்பட்டதால்
கோபம் கொண்ட
கண்ணகி மதுரையை
எரித்தார்...............

கண்ணகி எரித்த
தீயை  அணைக்காமல்
எல்லோரும்  தோது
போட்டு இருந்ததினால்
கோடை காலம்
வரும் முன்னே
மதுரையில் அனல்
பறக்கிறது..........

ஞாயிறு 01 2015

கண்களில் தெரிந்த ஏற்றத்தாழ்வு.......

படம்-malar.tv

தெய்வீகக் கண்கள்
அழகான கண்கள்
காதல் கண்கள் என்று
பார்த்தவர்கள் சொன்னார்கள்

உற்று... உற்று
பார்த்தேன் அந்தக்
கண்களை அதில்
காதல் தெரியவில்லை
காமம் தான் தெரிந்தது

அந்தக் காமம் கூட
ஒரு தலை பட்சமாய்
இருந்தது. இருப்பவனுக்கு
தான் கிடைக்கும் என்று.........................




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...