பக்கங்கள்

புதன் 23 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --52...



மாட்டுக்காக கொலை பண்ற நாடு,
முக்காவாசி மீடியாக்கள் அரசின் பூட்ஸை நக்கும் நாடு,
பட்டினிச்சாவை புறக்கணித்து நடிகரின் தற்கொலையை மாதக்கணக்கில் விவாதிக்கும் நாடு,
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று இந்த நாட்டின் நண்பனான அமெரிக்கா தன் மக்களை எச்சரித்த நாடு,
மக்களுக்கு சம்பள இழப்பை கொடுக்க மனமில்லாத ஒரே நாடு,
கொரோனா காலத்திலும் பாமர மக்களிடம் சுரண்டிக்கொண்டு பெரிய முதலாளிகளிடம் ஒரு ரூபாய்கூட வசூலிக்காத ஒரே நாடு,
நாட்டை அடையாளப்படுத்த இப்படி பல சமாச்சாரம் இருக்கு சார்..
எதுக்காக மெனக்கெட்டு இந்தியை அடையாளமாக்கணும்


 உலக அரங்கில் அடையாளத்துடன் தமிழ் இருக்கிறது.. பல்வேறு நாடுகளில் ஆட்சி மொழியாகவே தமிழ் இருக்கிறது. தமிழக அரசுக்கு இன்னும் சொரணை வரவில்லை தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வில்லை என்பதற்காக இந்தியை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.. "எனக்கு இந்தி தெரியாது போடா"

செவ்வாய் 22 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --51...

 

ராபர்ட் கிளைவின் வாழ்வினைப் படித்த பொழுது ஒரு செய்தி.......


கிளைவை லண்டன் பாராளுமன்றத்தில் நிற்க வைத்துக் கேள்வி கேட்கின்றார்கள், 

இந்திய மக்களை தரக்குறைவாக நடத்தினீர்களாமே..?

அரசர்களிடம் லஞ்சம் பெற்றீர்களா?


கிளைவ் சொல்கின்றான்.


"இங்கிலாந்து மக்கள் மனநிலைக்கும்,

இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கின்றது!

நமது அரசு மக்களுக்கு கட்டுப்பட்ட உரிமை கொண்ட‌ மக்களாட்சி....

 மக்கள் இங்கே அரசு மீதும் சமூகத்தின் மீதும் பொறுப்பாய் இருக்கின்றார்கள் ..


இந்தியர்கள் அப்படி அல்ல, ஆள்பவர்களைப் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை.....


ஆள்பவர்கள் செய்யும் அடாவடியினைப் பற்றியோ சண்டைகள் பற்றியோ அதனால் ஏற்படும் வரிச்சுமைகள் பற்றியோ அவர்கள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.....


 கிளைவ்  இந்த சமூகத்தை புரிந்து கொண்ட அளவுக்கு இந்தியர்கள் யாரும் புரிந்து கொள்ள வில்லை... அப்படி புரிந்து கொண்டவர்கள் சொற்பமே!...


இந்திய சமூகம் சாதி ரீதியாக பிரிந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக இருந்ததால்

 ஒரு சமூகம் என்ற  உணர்வு தோன்றவே இல்லை.அதற்கான வாய்ப்பும் இல்லை.


பார்ப்பனியம் நீடிக்கும் வரை இந்த நிலை தொடரவே செய்யும்.



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...