பக்கங்கள்

சனி 03 2018

நினைவலைகள்-12..









மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு....................


மானமும் அறிவும் மனிதருக்கு அழகு க்கான பட முடிவு






போனவாரத்திலிருந்தே..தீபாவளி ..தீபாவளி..என்றுதான் எல்லோருடைய மூளையிலும் ஒவ்வொரு விதமாக கண்டிப்பாக பதிவாகி .இருக்கும்.. என் மூளையிலும் தீபாவளி பதிவாகி இருந்தது.

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து நானோ என் தாயரோ கொண்டாடியது இல்லை. அன்று என் வீட்டில் அடுப்பு எரியாது... ஆனால்.. என் வீட்டில் இட்லி. வடை. திண்பண்டங்கள் ..சுவிட்காரம் சில.. கிடைக்கும்  இட்லியே பார்க்காத... சாப்பிடாத எனக்கு  தீபாவளிக்கு  கிடைத்துவிடும்.. 

அன்றிலிருந்து இரண்டு நாள் அல்லது மூன்று நாளைக்கு இட்லிதான்.. மட்டன்  கொழம்பை மட்டும் என் தாயார் அவ்வப்போது சுட வைத்து கொடுத்து விடுவார்.. என் தாயார் இல்லாத நேரங்களில் நானே சுடவைத்து சாப்பிட்டு விடுவேன்.

புது சட்டையும் எனக்கு கிடைத்துவிடும்... துவைத்தால் சாயம் போய் விடும்.. புண்ணியத்துக்குவிடுகிறேன். கொடுத்த மாட்டை பல்ல குத்தி பார்க்க கூடாது என்று என் தாயார் சொல்வதால்... கிடைத்தே போதும் என்று இருந்துவிடுவேன்.

அது சரி...கஞ்சிக்கே.. அல்லாடும் எனக்கு இட்லி வடை சுவிட்காரம் எல்லாம் எப்படி கிடைக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழவே வேண்டாம். அதை நானே சொல்லி விடுகிறேன்.   அதாவது வந்துங்க...எங்க அம்மா வேல செய்யுற வீட்டிலிருந்து கொடுப்பாங்க.... எங்கம்மாவுக்கு சேல கொடுக்கும்போதே..எனக்கும் என் அக்காவுக்கும் துணிகள் எடுத்து கொடுத்து விடுவாங்க.... அந்த  வீட்டு எஜமானர்களின் தயவில் எங்களுக்கும்.. தொழிற்சாலையில்   போனஸ் கொடுப்பது மாதிரி.....
ம்...
நாள் நாள் ஆக எனக்கு தீபாவளி என்றாலே... அதன் மீது  எனக்கு ஒரு வெறுப்பு வந்துவிட்டது.. இல்லாத குறை என்பதைவிட...தீபாவளியை வைத்து காசு பணம் இருக்கிற பக்கிகளை விட.... இல்லாத பக்கிகள். பெண்கள் .செய்யிற அலும்பு பெரும் அலும்பாக இருக்கும்.  காசு இல்லையே தீபாவளி எதுவும் வேண்டாம் புறந்தள்ளாது..... கடனுக்காக நாயாய் பேயாய் அலையும்..கடனும் கிடைத்துவிட்டால்  வாங்கிய கடனுக்கு மேலேயே செலவு செய்யும்... ஒரு நாள் கூத்துக்கு மீசையை வைத்த கதை மாதிரிதான்.. தீபாவளி  முடிந்தவுடன்
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட அதக்கும் நாயாய் பேயாய் வேலை செய்யனும்

இப்படியான பார்வை எனக்கு. யாரும் சொல்லாமலே  எனக்கு தோன்றியது.
அதனால் என் தாயாருக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை.. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பது போல... நான் சாகும் இப்படிபட்ட மோசமான அறிவுக்கும் நடப்புக்கும் சம்பந்தமே இல்லாத கேடு கெட்ட விழாக்களை இதுவரை கொண்டாடிதில்லை.. இனிமேலும் கொண்டாடுவதில்லை....

நண்பர்கள். உறவினர்கள்.. தீபாவளிக்கு கவனி என்று கேட்கும்போது... தீபாவளி தமிழன் கொணடாட வேண்டிய விழா இல்லை என்று அவர்களை ஒட விடுவதில்லை... நான் தீபாவளியை கொண்டாடுவது இல்லை... கொண்டாடுபவர்கள்தான்  கொண்டாடாதவர்களை கவனிக்க வேண்டு்.ம் என்று நசூக்காக சொல்லி விட்டு நகர்ந்திடுவேன்

வீம்புக்கு நான் ஏன்? தீபாவளியை கொண்டாடுவதில்லை என்று வாதம் புரிபவர்களிடம்.... பாரதிதாசனின் இந்தக் கவிதையைச் தான் பாடித்து சொல்வேன்..

  நரகனைக் கொன்ற நாள்
நல்விழா நாளா?
நரகன் யார்
நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை 
அழைக்கின்றாரே!

இராக்கதன் என்றும்
இயம்புகின்றாரே!

அசுரன் என்றால்
தமிழன் என்றல்லலோ பொருள்?
பழக்கம் தனில் ஒழுக்கம்
இல்லையேல..
கழத்துப் போயினும்
கைக்கொளல் வேண்டாம்
தீபாவளியை தீ வாளி என
விடேல்


இராமனின் அப்பனுக்கு
 அறுபதாயிரம் பொண்டாட்டி
நம்பினாய்...........

ரிஜியின் மனைவி
கள்ள உறவால்

சிவனின் உறுப்பறுந்து
“சிவலிங்கம்”
உருவானது   அதையும்
வணங்குகிறாய்..

பார்வதி அழுக்குரண்டை
 பிள்ளை வினாயகன்
கதை நம்பி
கொண்டாடுகிறாய்

ஆணுக்கும் ஆணுக்கும்
 பிறந்த பிள்ளை
“அய்ப்பன்” என்றதும்

அய்யம் கேட்காமல்
இருமுடி சுமந்து
பொருளை இழக்கிறாய்.

சீதை பத்தினி
அவளை தொடாமல்
காத்த இராவணன்

உன்குல எதிரியென
பூனூல் சொல்நம்பி
“ராமலீலா” 
 மகிழ்கிறாய்

பூமி கடலுக்குள்
பன்றி அவதாரம்
மீட்பு  காதல்
கலவி...்”


“நரகாசூரன்”
பிறப்பு இறப்பு
கொண்டாட்டம்
“தீபாவளி”

ஒரு நாள்
கூத்துக்கு மீசை
இழந்த கதையாய்
கடன் சுமக்கிறாய்

இப்படி
நுற்றுக்கணக்கில்
கதைகள் அள்ளி
விட்டாலும்......

அனைத்திலும் தேவர்
அசுரர் போர்
கருவாயிருக்கும்...
யார் அசுரர்
யார் தேவர்
எவர் நலன்
காக்கும் கதைகள்

எதுவும் புரியாமல் 
 அல்லது புரிந்தும்
கொண்டாடும் எம்
இழிச்ச வாய்
தமிழ்மக்களே!

எப்படி உங்களை
மீட்போம் என
மனம் தளராமல்

ஆயிரம் ஆண்டுகள்
அறிவீணத்தை ஈரோட்டு
சுடர்கொண்டு எரித்து

மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு
என்பதை விதைத்து

பகுத்தறிவுடன்
சுய மரியாதை
வாழ்வுக்காய்
சூளுரைப்போம்..


--கேட்கிறவர்.. நட்பாக இருந்தவராக இருந்தால்...வாழ்த்துவார். பின்னாளில் .தொடரவார்.... மனித மாக்காளக இருந்தால்... என்னை ஏற இறங்க பார்ப்பார். சிறிது நேரம் முறைப்பார்..... பிறகு தன் பொன்னான வாயால் ஒரு கடியோ..அல்லது பல கடியோ கடித்துவிட்டு  ..திரும்பி பார்க்காமல் சென்று விடுவார்...





திங்கள் 29 2018

நினைவலைகள்-11..

ஒரு புத்தகத்தால் முறிந்த நட்பு.....
...












அவர் கேட்டார்...என்ன..முன்பெல்லாம் காந்தி கடையில உக்காந்துகிட்டு..மணிக்கனக்காக ரெண்டு பேசி சிரிச்சிகிட்டு இருப்பீங்களே!...இப்ப அந்தக் கடைய பக்கமே உன்ன காணல..... சண்டையா... என்றார்.

நான் தெரியாத மாதிரி எந்தக் காந்தி என்றேன்..

அட..நா....என்ன ரூபா நோட்டுல இருக்கிற காந்திய பத்தியா..கெட்கப்போறேன்.. பித்தளை பாத்திர கடை வச்சிருக்காரே...அந்தக் காந்தியக் கேட்டேன்.. என்ன சண்டையா....என்றார்.


ஓ.....அந்தக் காந்தீயா...... சண்டையெல்லாம் ஒன்னுமில்ல....அவரு வியாபாரியா..நடந்துகிட்டாரு..... அதனால நான் அவரு கடைக்கு போறதில்ல..அவருடன் பேசுறதில்ல..என்றேன்...

என்ன வியாபாரியா நடந்துகிட்டாரா...அட..கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லேன்...

உங்களுக்கு இன்னைக்கு வேல இல்லையா....?

வேல இருக்குதுப்பா.... கொஞ்சம் ஓய்வு எடுத்துகிட்டாத்தானே... தொடர்ந்து வேல செய்ய முடியும்.... அதுல உன்ன வேற பாத்துட்டேன்.  என் கிட்ட பேசாம போக முடியுமா...???

எனக்கு வேல இருக்குதுல........

வேல...வேல...ன்னு என்னத்த கண்ட... எட்டு மணி நேர வேல, எட்டு மணி நேர ஓய்வு, எட்டுமணி நேர பொது விவகாரம் என்பது உனக்கு தெரியாதா...???

எனக்கு என்ன 24 மணி நேரமும் வேல செய்ய ஆசையா...??? முன்ன சீக்கிரமாய் முடித்த வேலைகள்...இப்ப முடிக்க ரெம்ப நேரமாகுது...வேலை கொடுக்கும் வாடிக்கையாளர்கள்கூட  காலையில கொடுத்துட்டு .மாலையில கேக்குறாங்க.....எல்லாரும் பரபரப்பா ஆயிட்டாங்க....அவுகளுக்கு ஈடாக..என்னால் வேலை செய்ய முடியவில்லை... எங்க வீட்டில இருக்கிறவிங்களப்பத்திதான் உங்களுக்கு தெரியுமே....சரி...அதவுடுங்க... காந்தி கடைக்கு நான் போகாததைப்பத்தி சொல்றேன்.


காவல் கோட்டம் என்ற புத்தகம் தெரியுமல......

தெரியுமே..!!.சிபிஎம் காரரு.. எழுதினது..மேலமாரட்வீதி, பெருமாள் மேஸ்திரி வீதி என்று எப்படிபெயர்வந்தது என்று மதுரையைப் பத்திய வரலாற்றை எழுதியிருக்காருன்னு  கேள்விப்பட்டு இருக்கேன்...ம்ம்ம் சொல்லு...

அந்தப் புத்தகம் வெளிவந்து ரெண்டு வருசத்துக்கு மேலாச்சு.... மதுரை புத்தகக் காட்சியில..அவர் இரண்டு செட் வாங்கியிருக்காரு. புத்தக ஆசிரியர்கிட்ட கையெழுத்தெல்லாம் வாங்கியிருக்கேன் என்று சொன்னாரு... ஒரு கட்டத்தில் நான் , எனக்கும் சேர்த்து ஒரு புத்தகம் வாங்கி வரச் சொன்னதாக பொய் சொல்லி..அதனால் ரெண்டு செட் வாங்கி வந்தேன்... ஒரு புத்தகத்துக்கு 600ரூபாய் கொடு என்று என்னிடம் கேட்டார்.

உங்களிடம் நான் “ காவல் கோட்டம் ” புத்தகம் வாங்கி வரச் சொல்ல வில்லையே..!என்றபோது...இல்ல.. நீ வாங்கி வரச் சொன்னாய் என்று சத்தியம் செய்தார்... சரி..நான் சொன்னதாகவே  இருக்கட்டும் நாளைக்கு வந்து பேசிக் கொள்வோம்..என்று சொல்லிவிட்டு போன் அழைப்பில் பதில் பேசிக் கொண்டு சென்று விட்டேன்.

அப்போதே... அந்தப் புத்தகத்தைப்பற்றி போனில் பேசிய நண்பரிடம் விசாரித்தேன்...அவர் புத்தகத்தை..புத்தக கண்காட்சியில் 300 ரூபாய்க்கு வாங்கியதாகவும் அவரிடம் அந்தப் புத்தகம் சும்மா்தான் இருக்கிறது.. வரும்போது வாங்கிச் செல் என்றார்

மறுநாள் காலையில் காந்தியை சந்தித்து..நான் வாங்கிவரச் சொன்னது உண்மையோ? பொய்யோ.. எதுவாக இருக்கட்டும் தங்கள் சொல்லுக்காக அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொள்கிறேன்.. இப்போது 400ரூபாயை வாங்கிக் கொள்ளுங்கள்.. மீதியை இரண்டொரு நாளில் தந்து விடுகிறேன் என்றபோது..

நான் சொல்வதை மறுத்து விட்டு..இல்லை..நான் வியாபாரி என்பது உன் மர மண்டைக்கு புரிய மாட்டுகிறது.  மொத்தமாக கொடு என்றார்.  இப்போது காசு இல்லை  பிறகு வந்து கண்டிப்பா கொடுத்துவிடுகிறேன் என்றபோது உடன்பட மறுத்துவிட்டு கொச்சையாக பேசினார்...

அவரின் வியாபார புத்தியைப்பற்றி  யோசித்த நான்..அவர் வாங்கியதாக சொல்லப்பட்ட ரெண்டு புத்தகத்தையும் என் முன் காட்டுங்கள்... எனக்காக நீங்கள் வாங்கியிருந்தால் உடனே முழுப்பணத்தையும் உடனே தந்துவிடுகிறேன் என்றபோது  இப்போது மட்டும் எப்படி பணம் வரும் என்று கேட்டார்.

அவருக்கு அருகில் உள்ள தவனைக் கடையைக் காட்டி..தவனைக்கு வாங்கியாவது எனக்காக வாங்கியதாக சொல்லப்பட்ட புத்தகத்திற்குரிய மொத்த பணத்தையும் கொடுத்துவிடுகிறேன் என்ற போது.. அந்த இரண்டு புத்தகத்தையும் காட்ட மறுத்துவிட்டார். ஒரு புத்தகத்தை மட்டுமே காட்டிவிட்டு ஒரு புத்தகம் ஒரு நண்பர் படிக்க வாங்கிச் சென்று இருக்கிறார் என்றார் எப்பொழுது தருவார் என்றபோது... அவர் வெளியூர் சென்று இருக்கிறார் அவர் வந்தப்பின்தான் கிடைக்கும் என்றார். படிக்க வாங்கிச் சென்றவரின் செல் நம்பரை கேட்டபோது....அதெல்லாம் சொல்லமுடியாது
புத்தகத்தை வாங்கு..வாங்கவில்லையா.... போய்கிட்டே  இரு... என்றார்.

இப்படி  அந்தக் காந்தி அடுக்கடுக்காக பொய் பேசியதோடு என்னையும் கொச்சையான வசவுகளால் திட்டியதால்.... உன் சகவாசமும் வேண்டாம் உன் புத்தகமும் வேண்டாம் என்று வந்துவிட்டேன்... சில மாதங்கள் என்னை கூப்பிட்டபோதும்  நட்பு..நண்பர் என்பது என்னவென்று தெரியாத வியாபாரிடம் நட் பு கொள்ள தேலையில்லை என்பதால் அவரோடு பேசுவதில்லை.. அவர் கடைக்கு போவதுமில்லை.....  இதுான் காரணம்

ஓ.....ஓ...ஓ..கதை..அப்படி போகுதா....அப்பச்சரி.....அப்பச்சரி..... நா..வேற..மாதிரி நிணச்சேன்....


வேற மாதிரின்னா...”

“அது உனக்கு வேண்டாமே....”


சரி..சரி..இனி நான்  போகலாமா....???

ஒரு..டீ..குடிச்சிட்டு போகலாமே...சாரி..நீதான் டீ குடிக்க மாட்டில.... வடை. பஜ்ஜி எதாவது.....


சரி..உங்களுக்காக......காசு.......


நான்..கொடுத்துகிறேன்.......மறுக்காமல் வா.....


இருவரோடு..கூடுதலாக இருவர்  சேர்ந்து...சீனிக்கு பதிலாக..சர்க்கரையை பயன்படுத்தும் டீக் கடைக்கு சென்றோம்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...