பக்கங்கள்

சனி 13 2021

அவர்கள் காசு யாருக்கு வேணும்.........!!!!!!!!

 



காலை வேளையில்

நகரத்தின் ஒரு

தெருவில் சண்டை

சச்சரவு..........


ஏன் ? சண்டை

எதற்கு சச்சரவு

வேடிக்கை பார்த்த

போது கேட்டது...


“ நான்  தேவடியாள்தான்

அதுக்காக அவன்கள்

கொடுக்கிற காசுக்காக

வாறவன் போறவன்

கிட்ட எல்லாம்

படுக்க முடியுமா..???"


சண்டையில் வந்த

 அந்த வார்த்தை

வாறவன் போறவன்

யார் ? என்றால்

கீழ்சாதி  பயல்களாம்.


அவர்களும் காசு

கொடுத்துதானே....!!!


“ அவர்கள் காசு

யாருக்கு வேணும்......"

 

சற்று நேரத்தில்

பார்வை திசை

மாறிய  போது.......


“என்னங்கடா  வேடிக்கை

நான் இங்கே..

அவுத்து போட்டா

ஆடுறேன்  போங்கடா..

ஒங்க சோலிய

பாத்துகிட்டு................!


காலையிலேயே  வெயில்

சுட்டெரித்து விட்டது







வியாழன் 11 2021

கடிகாரம் உணர்த்திய உண்மை...........

 





தூங்கி எழுந்தவுடன்

கடிகாரம் பார்ப்பது

வழக்கம் அந்த

வழக்கப்படி அன்று

எழுந்தவுடன் கடிகாரத்தை

பார்த்தேன் கடிகாரம்

தன் ஓட்டத்தை

நிறுத்தி இருந்தது.

இரவில் தூங்கும் 

போது ஓடிக்கொண்டு..

இருந்தது............


இம்சைகளின்....அரச

மனுச மனுசிகளுக்கும்  

ஒருநாள் ......அவர்களின்

ஆட்டத்தையும் 

ஓட்டத்தையும்  

நிறுத்த காலம் 

ஒன்று உண்டு

புதன் 10 2021

தமிழ்நாட்டில் இதுவும் நிஜம்............!!!!

 முகக் கவசம்

அணிந்த ஒருவர்

டேய்.... என்னடா

தமிழ்நாடு தமிழர்க்கே!

னு கூவிக்கிட்டே

இருக்கானுங்களே.. கீழே

உள்ள படத்தை

காட்டி இதுக்கு

இன்னா சொல்வானுங்க....

.................................


அதுக்கு நான்

தமிழ்நாட்டில் இதுவும்

நிஜம் என்றேன்..







திங்கள் 08 2021

என்னடா...வேடிக்கை............

 



நீல வானம்

வெண் மேகமாகி

சட்டென்று கரு

நிறமேகமாக .திரண்டது.......


தலை அண்ணாந்து

கண் விரிந்து

வாய் பொளந்து

பார்த்து கொண்டிருந்தவனின்

வாயிலும் கண்ணிலும்

சட சட வென்று

தண்ணீரை கொட்டி

என்னடா வேடிக்கை

என்று விரட்டியடித்தது

மழை..................


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...