பக்கங்கள்

வெள்ளி 11 2016

மோடியின் புதிய 2000ரூபாயின் சாதனை




இன்று மதியம்
பாக்கிஸ்தான் இராணுவ
வீரன் சுட்டதில்
இந்திய ராணுவ
வீரரின் நெஞ்சில்
 பாய்ந்த குண்டு
ஒன்று அவர்
பாக்கெட்டில் சிப்ஸ்
பொருத்தப் பட்ட
புதிய 2000
ஓவாயில் பட்டு
திரும்பி பாக்கிஸ்தான்
வீரனின் உடலை
துளைத்து சல்லியாக
ஆக்கியது நும்மில்
எத்துனை பேருக்கு
தெரியும்................


வியாழன் 10 2016

மோடி என்றால் மோசடி என்று அர்த்தம்




நண்பா..ரெம்ப சிரமாம இருக்கு .வேலை கூலிய வாங்கின பிறகுதான் 500ரூபா செல்லாதுன்னு தெரிஞ்சுச்சு....கடையில வாங்க மாட்டுறாங்கே...அட  ஏன்? கேட்குற அரசாங்க சாராய கடையில.. வாங்கினவன்..இப்போ வாங்க முடியாது .செல்லாதுன்னு சொல்லிட்டான்... என்ன செய்வது தென்று தெரியவில்லை... உங்கள மாதிரி எனக்கு  பேங்க் கணக்கு எதுவுமில்ல.. தயவு செய்து  இந்த 500ரூபாய வச்சுகிட்டு ஒரு முன்னூறு ரூபா கொடுங்க  மீதிய நாள பின்னக்கி வாங்கிக்கிறேன் நண்பா....

அதுசரி, நண்பா... ஏன்? 500ரூபா செல்லாதுன்னு தெரியுமா...?..நண்பா...


என்னமோ  கருப்பு பணத்த ஒழிக்க போறதுக்காக  500,1000ரூபாக்களை செல்லாதுன்னு அறிவிச்சு இருக்காங்கேகளாம்...நண்பா....

அப்போ..நீ வச்சு இருப்பது கருப்பு பணம் ...நண்பா...?

இல்ல நண்பா.... அன்றாட கூலி வேலை செய்து  சம்பளம் வாங்கி வருவது உனக்கு தெரியாத நண்பா.....!!!!!இது எப்படி நண்பா கருப்பு பணமாகும்


எனக்கு தெரிஞ்சு என்ன நண்பா.... செல்லாதுன்னு அறிவிச்சவன்னுக்கு தெரியவில்லையே...? இந்தப்பணம் கருப்பு பணமுன்னு சொல்லிட்டாங்க..நண்பா.....

கோபமும் ஆத்திரமும்தான்  வருது  என்ன செய்வது...நண்பா.. நான் உன்னிடம் கேட்டுவிட்டேன் நீயும்  உன் நண்பர்கள் யாரிடம் கேட்பீரு்கள்...

நீ..நான்..மற்ற நண்பர்களின் குடும்பமும் மற்றும் நம்மைப் போன்றவர்களின் குடும்பம்தான் கருப்பு பண முதலைகள் என்று கணித்து நமக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்..... வங்கிகளில் மாற்றிக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.. வங்கிகள் உடனே பணத்துக்கு பணம் என்று மாற்றி உடனே தருவதில்லை.. எங்கும் ஒரே பரிதவிப்பும்  படபடப்பும் வேதனைதான். நானும் என் நண்பர்களும்தான் வங்கிகளில் காத்து கிடக்கிறோம் நண்பா..

உண்மையான கருப்பு பண முதலைகள் யார் நண்பா....? அவர்கள் நம்மைப் போன்று உங்களைப் போன்று வங்கி வாயில் காத்துக் கிடந்து திண்டாடுவார்களா..??

அம்பானி. அதானி, ரஜினி, நத்தம். ஓபிஎஸ், இவர்களைப் போன்றவர்கள் .யாரும்  வங்கிகளில் வரிசையில் நின்று காத்து கிடக்கவில்லை நண்பா...

அப்படியா....அப்போ...இந்த 500,1000த்தை செல்லாதுன்னு  அறிவிச்ச மூஞ்சி யாரு நண்பா.........??

உன் கூலிப் பணத்தை மாற்ற முடியாமல்... அல்லாடும் நாட்டில் பத்து இலட்சத்துக்கு உடை உடுத்தி பகட்டாக வலம் வந்த மோடி தான் நண்பா....அதோடு கருப்பு பணத்தை கண்டுபிடித்து அந்த பணத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் எனக்கும் உனக்கும் ரூபா 15இலட்சத்தை கொடுப்பேன் என்று சொன்ன வீராதி வீரர் சூராதி சூரர்தான்  நண்பா....

என்னது  பிரதமர்ர்ர் மோடியா...???

ஆம் நண்பா... இனிமேல் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..... மோடி என்றால் மோசடி என்று அர்த்தம்   ......நண்பா...

...........................!!!!!!!!!!!!!!!!




புதன் 09 2016

மாப்பு...எத்தனை ஆப்பு வச்சாலும்.....

................





மாப்பு......நேத்து  இந்தீயாவுக்கே  ஆப்பு வச்சது  தெரியுமா....?

இந்தியாவுக்கு தானே..மாப்பு...

ஒனக்கு சேத்துதான் ஆப்பு மாப்பு...


மாப்பு.... எப்படித்தான் எனக்கு எத்தனை ஆப்பு வச்சாலும் என் மண்டை மயிற ஒன்னக்கூட  புடுங்க முடியாது... தெரியுமா மாப்பு..

ஆ.... உண்மைதான்  மாப்பு... ஒனக்கு மண்டையிலே ஒத்த பொட்டு முடி இல்லேங்கிறது.. ஆப்பு வச்சவனுக்கு எங்கே தெரியப் போகுது......

ஆனாலும் மாப்பு... ஆப்பு வச்சவனைத்தான் ஆப்பு வாங்கினவிங்க பெருமையா பேசுவாங்க....மாப்பு.

உண்மைதான் மாப்பு.. அது இந்த நாட்டோட பிறவிக்குணம்.மாப்பு  ஆப்பு வச்சவனையே ஒலக ரேஞ்சுக்கு தூக்கி வச்சு பேசுறது அவ்வளவு சீக்கிரத்தில் போகாது மாப்பு...

ரெண்டு நாளைக்கு ஆப்பு வச்சத பத்தி பொங்குவாங்கே.. மூனா நாத்து ஆப்பு வாங்கினதே தெரியாமே.. பீத்துவாங்க..மாப்பு... இவிங்கள பத்தி நமக்கு தெரியாதா மாப்பு....

...............





செவ்வாய் 08 2016

அறிந்து கொள்ளுங்கள்-1

இரசியப் புரட்சியின் நூற்றாண்டு..

1917ஆம் ஆண்டு நவம்பர் 7ல் இரசியாவில் மார்க்சிய தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்டு தோழர் லெனின் தலைமையில் சோசலிச புரட்சி வெற்றிடைந்தது. அந்த இரசியப் புரட்சியின் நூற்றாண்டு 2017ஆம் ஆண்டு.

இரசியப் புரட்சி பூமிப் பந்தின் 5ல் ஒரு பகுதி மண்ணில் ஒரு சொர்க்கத்தை படைத்தது. சமத்துவமான ஒரு சோசலிச கட்டமைப்பை உருவாக்கியது. மக்களின் அணைத்து தேவைகளையும் பெறுவதற்க்கான ஒரு சமூக அமைப்பை உருவாக்கியது.

இப்படியான ஒரு  சொர்க்கத்தை, சோசலித்தை இரசியாவில் படைத்துக் காட்டுவதற்கு வழிகாட்டியாக இருந்த மார்க்சியத்தை நடைமுறைக்கான சித்தாந்தம் என நிருபித்துக் காட்டினார் தோழர் லெனின்.

பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தமான மார்க்சியத்தை பூமாலை தொடுப்பது போல இலகுவாக  தொடுக்கவில்லை.

இந்த மார்க்சிய சித்தாந்த்தை உருவாக்குவதற்கு தோழர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஜென்னி மார்க்ஸ் ஆகியோரின் உழைப்பு ஈடு இணையற்றது.

மார்க்சுக்கு முன்னால் இருந்த சித்தாந்த வாதிகள்? அறிஞர்கள், உலக சமூக பிரச்சினைகளுக்கு விளக்கம் தந்தார்கள், வியாக்கனம் செய்தார்கள்.. அதன் மூலம் கற்பனையான சோசலித்தை மக்களுக்கு போதித்தார்கள், முதலாளிகளின் சுரண்டலுக்கும் கொடுமைகளுக்கும் ஒடுங்கி ஒன்றி வாழ்வதற்கே  வழிகாட்டியாக அவர்கள் இருந்தார்கள்.

ஆனால் பாட்டாளி வர்க்க சித்தாந்த ஆசான் மார்க்ஸ் முதலாளிய தத்துவ சமூகத்தை தலைகீழாக  புரட்டி போடும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு வழிகாட்டினார். அவர் உருவாக்கிய சித்தாந்தமே மார்க்சிய சித்தாந்தம். அந்த பேராசான் 1818-ம் ஆண்டு மேமாதம் 5ந்தேதி பிறந்தார். அவர் பிறந்து2017ம் ஆண்டுவரை இரு நூற்றாண்டாகிறது.

இவற்றோடு, 1949ம்ஆண்டு அக்டோபரில் தோழர் மாவோவின் தலைமையில் நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து மலர்ந்தது மக்கள் சீனம். 1966-ல் சோசலித்தை நோக்கி முன்னேறிய செஞ்சீனத்தை முதலாளிய தத்துவ பாதைக்கு இழுத்து செல்ல முயன்ற அதிகார வர்க்கத்தின் கம்பலை முறியடித்த சீனப் பண்பாட்டுப் புரட்சிக்கு ஐம்பதாமாண்டு..

1967ம் ஆண்டு இந்திய புரட்சி வானில் சிவப்பு நட்சத்திரமாய் தோன்றியது நக்சல்பாரி எழுச்சி. அது போலி கம்யூனிச இயக்கத்தை அம்பலப்படுத்தி இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு பாதை வகுத்து கொடுத்தது. வசந்தத்தின் இடி முழக்கமாக தோன்றிய நக்சல்பாரி எழுச்சிக்கு ஐம்பதாமாண்டு.


இந்தாண்டு..,


பேராசான் மார்க்ஸ் பிறந்த தின இரு நூற்றாமாண்டு
இரசியப் புரட்சியின் நூற்றாண்டு
மக்கள் சீனத்தின் பண்பாட்டு புரட்சிக்கு ஐம்பதாமாண்டு
இந்திய புரட்சியின் விடிவெள்ளி சிவப்பு நட்சத்திரம் தோன்றிய நக்சல்பாரி எழுச்சியின் ஐம்பதாமாண்டு..



ஞாயிறு 06 2016

மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!

மாமேதை மார்க்ஸ் பிறந்தநாள் 200-ஆம் ஆண்டு !
ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு !!


முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!
1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. பஞ்சைப் பராரிகளின் ஆத்திரப் பெருமூச்சு. வரலாறு தலைகீழாய்க் கவிழ்த்துப் போடப்பட்ட நாள் சவுக்குகளின் பிடி கைமாறிய நாள். நூற்றாண்டுகால அந்தகாரத்தினுள் கோடி நட்சத்திரங்கள் மலர்ந்த நாள். வீழ்த்தப்பட்டவர்கள் வர்க்கமாய் எழுந்த நாள். கையேந்திக் கேட்டவர்கள் கைநீட்டி எடுத்துக் கொண்ட நாள். உரிமைக்காக ஏங்கியவர்கள் அதைப் பறித்துக் கொண்ட நாள். அதிகாரம் செலுத்த ஆண்டைகளும் அதிகாரிகளும் தேவையில்லை என நிரூபித்த நாள். முடியாதென அறிஞர்கள் நகையாடியதையெல்லாம் மக்கள் முடித்துக் காட்டிய நாள். அதிகாரத்தின் இறுமாப்பு தகர்த்தெறியப்பட்ட நாள். மேகங்களுக்கு மேல் வாழ்ந்து பழகிய மத பீடங்கள் தரையிறக்கப்பட்ட நாள்.
1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. அரசாங்கம் வேறு மக்கள் வேறு என்ற பழைய சரித்திரம். மக்களே அரசாங்கம் எனத் திருத்தி எழுதப்பட்ட நாள். ஆலைகளில் சிறைப்பட்ட தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தில் அமர்ந்த நாள்.விவசாயிகளின் வியர்வையால் வளம் பெற்ற நிலங்களெல்லாம் அவர்களுக்கே சொந்தமான நாள். சம்மட்டி ஏந்திய கைகள் அரசியல் சட்டம் வரைந்த நாள். ஏர் கலப்பை ஏந்திய கைகள் பூமிப் பந்தின் ஆறில் ஒரு பங்கைத் தாங்கிய நாள். மனிதனின் பேராற்றல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாள். கூட்டுத்துவம் என்கிற ஓவியம் உயிர்பெற்று சட்டகத்தினுள்ளிருந்து எழுந்து வந்த நாள்.
1917 நவம்பர் 7ம் தேதியில் அரங்கேறியது வரலாற்றின் மற்றுமொரு நிகழ்வு அல்ல. பரிணாம வரலாற்றில் மனிதக் குரங்கிலிருந்து மனித மூதாதை உருவானதற்கு இணையான நிகழ்வு. நிதி, நீதி, காவல், படை, நிர்வாகம் என அரசின் அனைத்து அலகுகளையும் மக்களே செலுத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்வு. பராரிகள் பாராள முடியும் என்பதை பறைசாற்றிய நிகழ்வு. செல்வத்தைப் படைத்தவர்கள் அதன் எஜமானர்களாகவும் முடியும் என்பதை உணர்த்திய நிகழ்வு. நூற்றாண்டுகளாய் அறிவு மறுக்கப்பட்டவர்கள் மனித குலத்தின் மொத்த அறிவையும் சில நாட்களிலேயே சுவீகரித்துக் காட்டிய நிகழ்வு.மனித வாழ்க்கை வாயில் துவங்கி வயிற்றைக் கடந்து ஆசண வாயில் முடியும் ஒன்றல்ல என்பதை உணர்த்திய நிகழ்வு. கட்டளையிடும் படைத்தலைவன் மேல் களமாடும் வீரனுக்கு பதிலளிக்கும் கடமை உண்டென்பதை நிறுவிய நிகழ்வு.
வரும் திங்களன்று 7.11.2017 அன்று சோவியத் யூனியனை சாதித்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. இந்த ஆண்டு முழுவதும் சோவியத் யூனியன் குறித்த கட்டுரைகள், கதைகள், விவாதங்கள், வீடியோக்கள் அனைத்தும் வெளியிடுவோம். மேற்குலகிலேயே பொதுவுடமை வேண்டும் என்று இளைய தலைமுறை முழக்கமிடும் நாளில் இந்த நூற்றாண்டு விழா இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டி, உலக மக்களை விடுவிக்கும் கடமையை தொழிலாளி வர்க்கம் நிறைவேற்றும்.
– வினவு

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...