பக்கங்கள்

வெள்ளி 26 2015

மனிதனை மனிதக் குரங்காக மாற்ற முயல்கிறது மரக்கறி கூட்டம்...!!!!!

வினவு


முன்னாள் குடியரசு தலைவரும், சங்கர மடத்தின் தலைமைச் செயலருமானா ஆர்.வி தமது இளமையின் ரகசியம் மரக்கறி உணவுதானென்றும், புலால் உணவையே தடை செய்ய வேண்டுமென்றும் சமீபத்தில் பேசியிருக்கிறார். ஆர்.வி போன்ற ஜந்துக்கள் அழியாமலிருக்கக் காரணம் மரக்கறி உணவுதான் காரணம் என்பது உண்மையாயின் முதலில் அதைத் தடை செய்ய வேண்டும் என்பது நம் கருத்து. அது ஒருபுறமிருக்க, கிடா வெட்டுத் தடைச் சட்டம் வந்ததிலிருந்து சைவம், ஜீவகாருண்யம் பிரச்சாரம் தீவிரமாகியிருக்கிறது. நமது நாட்டில் புலால் உணவு சாப்பிடாதவர்கள் அதிகம் போனால் பத்து சதவீதம் பேர். இவர்கள் பெரும்பான்மை மக்களை நாகரிகப்படுத்த முயற்சிப்பதும், அதைப் புலால் உண்ணும் பெரும்பான்மையினர் சகித்துக் கொள்வதும்தான் மிகப்பெரிய அவமானம்.
ஆர். வெங்கட்ராமன்
ஆர்.வி போன்ற ஜந்துக்கள் அழியாமலிருக்கக் காரணம் மரக்கறி உணவுதான் காரணம் என்பது உண்மையாயின் முதலில் அதைத் தடை செய்ய வேண்டும் என்பது நம் கருத்து.
உண்மையைச் சொன்னால் குரங்கு மனிதனாக மாறியதற்கான காரணங்களில் மிக முக்கியமானது புலால் உணவு. இறைச்சி உணவுதான் குரங்கின் மூளை மனித மூளையாக வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான வேதியியல் அடித்தளத்தை உடலுக்கு அளித்து என்கிறார் எங்கெல்ஸ்!
மனிதனை மனிதக் குரங்காகப் பின்னுக்கு இழுப்பதுதான் பாசிசம் என்பது தோழர் ஜூலியஸ் பூசிக்கின் மதிப்பீடு. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் பார்ப்பன பாசிஸ்டுகள் நம்மை மரக்கறிக்கு இழுக்கிறார்கள் போலும்! பஜ்ரங் தள் என்பது குரங்குப் படைதானே!
எனினும், தமிழ் மக்களை அவ்வளவு சுலபமாகக் குரங்காக்க முடியாது. காரணம் நாகரிகம். இசை, கலை, மொழி ஆகியவற்றைப் போல உணவுப் பழக்கமும், சுவையறிவும் ஒரு பண்பாட்டின் வளர்ச்சியை மதிப்பிடும் அளவுகோல். அவ்வகையில் தமிழ் மக்களின் உணவுப் பழக்கம் குறித்து சில அரிய செய்திகளை நாம் தெரிந்து கொள்வதன் மூலம் குறைந்த பட்சம் குரங்காக மாற்றப்படும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.
புலால் உணவு
இவர்கள் பெரும்பான்மை மக்களை நாகரிகப்படுத்த முயற்சிப்பதும், அதைப் புலால் உண்ணும் பெரும்பான்மையினர் சகித்துக் கொள்வதும்தான் மிகப்பெரிய அவமானம்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பழந்தமிழ் மக்கள் புலால் உணவை, அதாவது ஊன் உணவைப் பழக்கமாகக் கைக் கொண்டிருந்தனர் என்பது சங்கப் பாடல்களிலும், கல்வெட்டுகளிலும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கின்றன. “அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்” என்று பெரும்பாணாற்றுப் படி அரிசிச் சோற்றுடன் வெள்ளாட்டு இறைச்சியைக் கலந்து உண்ட செய்தியைச் சொல்லுகிறது. மதுரைக் காஞ்சியும் “ஆடுற்ற ஊன்சோறு நெறியறிந்த கடி வாலுவன்” என்று தமிழர்கள் ஊன் சோறு உண்டதை உவப்பக் கூறுகிறது. அதாவது, அந்தக் காலத்தில் பிரியாணிக்கு அழகிய தமிழ்ச் சொல் ஊன்சோறுத. ஏதோ நெய்தல் நிலத்திலும், மலை சார்ந்த குறிஞ்சி வாழ் மக்கள் மட்டும்தான் தாவர உணவு மட்டுமின்றி, புலால் உணவுக்குப் போயினர் என்று யாரும் பொய் சொல்ல முடியாது. உழுதும், பயிரிட்டும் வாழ்ந்த மருத நிலத்து மக்களும் ஆமைக்கறியின் ருசி தெரியுமா உனக்கு, வேண்டுமானால் மருதநிலத்தில் வந்து தங்கிப்பாரு என்பது போல அழைக்கின்றனர்.
மீன் பொரித்தல்
“மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்”
அறுசுவை என்றாலே சைவம்தான் என்று சரடு விடுபவர்களின் முகத்தில் புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட சங்கதிகளை உப்புக் கண்டம் போல் இலக்கியத்தில் காத்து வைத்திருக்கின்றனர் பழந்தமிழ் மக்கள். கடல் இறாலையும், வயல் ஆமையையும் கலந்து தின்ற சுவை வேண்டுமா? “கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்” என்ற ‘பட்டினப்பாலை’க்கு வாருங்கள். மீன் இறைச்சியும், விலங்கு இறைச்சியும் சேர்த்துப் பொரிக்கும் பக்குவம் வேண்டுமா? “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” – இந்தப் பட்டினப்பாலை வரிகளை சங்கராச்சாரிக்குப் படிக்கக் கொடுங்கள். அவரும் தண்டத்தைப் போட்டுவிட்டுக் கொண்டத்தைக் கேட்டுக் கத்த ஆரம்பித்து விடுவார்.
குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு குறமகள், “வலி பொருந்தி ஆட்டுக்கிடாயின் குருதியோடு கலந்த தூய வெள்ளரிசியைப் பலியாக சிதறுகிறாள்” என்று திருமுருகாற்றுப்படை பழந்தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையைச் சொல்கிறது. மலைகளில் ஏறி தேன் சேகரித்து, முயல் வேட்டையாடி உழைப்பில் ஈடுபட்டிருந்த உண்மையான முருகனுக்கு ஊன் உணவே பிடித்தமானது.
முருகன், ஸ்கந்தனான பிறகு உண்டைக்கட்டியே அவனுக்கும் உணவாகி விட்டது. இப்போது, சுடலை மாடன், ஸூடலை மாடஸ்வாமியாக மாற்றப்படுகிறார். இனி கிடாவெட்டும் கிடையாது. வெறும் பொங்கல்தான். அவாள் “சுத்தம்” செய்ய விரும்புவது சுடலை மாடனை அல்ல – சூத்திர, பஞ்சமரைத்தான்.
– சுடர்விழி
இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகப் பயன்பட்ட நூல், வாசகர்கள் படிக்க வேண்டிய நூல்.
தமிழர் உணவு
நூலாசிரியர் : சே. நமசிவாயம்
வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
அக்டோபர் 2003, புதிய கலாச்சாரம்

வியாழன் 25 2015

முதலில் நீங்கள் திருந்துங்கள்...!!!!



Dr.சிவராமன் அவர்களின் பேச்சின்
சுருக்கம்:-


1-- மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட், பிரட், புரோட்டா சத்து இல்லை, என்பதால் அல்ல; அதில் விஷம் உள்ளது. இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்

அழிவை காண்பீர்கள்; விழித்து கொள்ளுங்கள் .


2-- சாக்லெட் வேண்டாம்; வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.

3-- pizza,burgers தவிர்க்கவும்


4-- கோதுமை அரைத்து பயன்படுத்துங்கள்; கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க கலப்படம் உள்ளது


5-- பழங்கள்  கொய்யா, வாழை, விதை உள்ள திராட்சை, Melons அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்


6-- corn flakes, oats வேண்டாம்; கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும்


7- சீனி  வேண்டாம்; தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கல்கண்டு பயன்படுத்தவும்


8-- black tea without sugar good. சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.


9-- இனி யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்;  கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள்


இது என்னுடைய வேண்டுகோள். நாம் தான் முதலில் திருந்தவேண்டும். பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளுவோர், விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.


 பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு, பணம் அல்ல;ஆரோக்கியமும்  குணமுமே. உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு. Hyper activity because of this types of food also; 

அனைவருக்கும், இவை அனைத்தும் தெரிந்த விஷயம்தான்; இனியும் நீங்கள் தூங்ககூடாது', பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து சம்மட்டியால் அடித்து கொண்டிருப்போர் பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வையுங்கள்,; வாழவேண்டும், ஆரோக்கியத்துடன்.அனைவரும் வாழ வையுங்கள்...

புதன் 24 2015

ஏய்....யோகா......உன்னால்..என்னவெல்லாம்.....தீரும்,,,,,???

படம்-tamilyogas.blogspot.com


ஏய்...யோகா......
உன்னால்.. ஏறின
விலை வாசியை
குறைக்க முடியுமா...?

மின்சாரத்தை தொட்டால்
ஷாக் அடிக்கும்
அப்போது..இன்று
மின்சார பில்லை
பார்த்தவுடன் ஷாக்
அடிக்காமல் இருக்க
செய்ய முடியுமா..??

இல்லாதவருக்கு பசி
பட்டினி இல்லாத
நிலையை ஏற்ப்படுத்த
முடியுமா.....???

இந்நாட்டை கூவி
கூவி ஏலம்
போட்டு விற்பதை
தடுக்க முடியுமா...????

 கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும்
ஆட்சியில் அமருவதையாவது
தடுக்க முடியுமா....?????

இல்ல...
ஓட்டுக்கு துட்டு
தருவதையாவது
தடுக்க முடியுமா.....??????

சரி விடு, டாஸ்மாக்
யோகாவையாவது
உன்னால் தடுத்து
நிறுத்த முடியுமா......???????

ஏய்...யோகா....
இது மாதிரி
கேட்பதற்கு நிறைய
இருக்கிறது.நான்
கேட்பது இருக்கட்டும்
நீ சொல்லு
யோகா உன்னால்
என்னவெல்லாம் தீரும்..............????????

திங்கள் 22 2015

எது யோகா......????

நேற்று நாடு முழுவதும்
ஒரே ஓலம் யோகா
யோகா என்று.........
நேற்று அவாள்கள்  செய்தது
யோகாவா... சிந்தித்தால்
பைத்தியம் பிடிக்கும்
மனம் நொந்தால்
புலம்பல் வரும்

இதோ படத்தில்
இவாள்கள் செய்தது
தான் யோகா....
இவாள்களின் யோகா..
மனிதர்கள் உணர்ந்து கொள்ளும்
யோகா....அ்ல்ல.. அல்ல
அதையும் தாண்டி....
 புனிதமான யோகா.......!!!!
அதை அனுபவித்தவர்களுக்கே
அந்தப்புனிதம் புரியும்.....

குறிப்பு:-
முதலில் படத்தை பார்த்து
புரிந்து கொள்ளுங்கள்
பிறகு குரு இல்லாமலே
தாங்கள் யோகா கற்றுத்
தெளியலாம்.
Embedded image permalink
படம்-

டாஸ்மாக்  யோகா க்கான பட முடிவு
படம்-suvanappiriyan.blogspot.com

படம்-suvanappiriyan.blogspot.com

டாஸ்மாக்  யோகா க்கான பட முடிவு
படம்-tamil.thehindu.com

படம்-suvanappiriyan.blogspot.com

படம்-www.maalaimalar.com

படம்-www.tamilcnnlk.com
படம்-sirippupolice.blogspot.com








ஞாயிறு 21 2015

முதுகெலும்பு இல்லாதவர்களால் முதுகெலும்பு வளைக்கப்பட்டவர்கள்.!!!




படம்-www.siruppiddy.net



எனக்கு மூத்தவர்அவர், அவர் என்னை அண்ணே.. என்று கூப்பிடுவதை கண்டவுடன் அவருக்கு அருகில் சென்றவுடன் அந்த அண்ணன். இப்படிச் சொன்னார்.

“அண்ணே....! நாட்டுல நடக்கிற எத்தனையோ அநியாயத்தை நீங்க சொன்னிங்க.... இப்ப..நா சொல்ற  அநியாயத்தை நீங்க கேளுங்கண்ணே என்று அவர் சொன்னவுடன். அவர் ஜூலை-1 அநியாயத்தைதான் சொல்லப் போறார்ன்னு எனக்கு தெரிந்தது. தெரிந்ததை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..

என்னண்ணே... நீங்க புதுசா நடக்காத அநியாயத்தவா ...சொல்லப் போறீங்க... ம்ம் சொல்லுங்கண்ணே அந்த அநியாயத்த... என்றுவிட்டு சற்றுத் தொலைவில் நின்று கொண்டு இருந்தவர்களை அவர்க்கு அருகில் வரவழைத்தேன்.

அவர்...அந்த  அநியாயத்தை பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தார்.

அண்ணே.... தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து. சென்னையில இருக்கிற நீதிமன்றம் உத்தரவாம்ண்ணே... !!!

நம்மை ஆள்வது அரசா...???நீதிமன்றமா???ன்னு  எனக்கு ஒரே புதிரா இருக்கு்ணணே.....!!!!

கணக்கை தப்பா போட்ட நீதிபதிய வேலைய விட்டு தூக்க முடியல......????

குடித்துவிட்டு காரோட்டி கொலை செய்தவன தண்டிக்க முடியல....????

60 கிலோமீட்டர் வேகத்தில போற வாகனத்தின் உரிமையை ரத்து செய்ய முடியல....????

சாலை விபத்துக்கு முதல் காரணமான டாஸ்மாக்கை மூடச் சொல்லி ஒரு உத்தரவு போட முடியல...?????

தனியார் வாகன உற்பத்திய குறைத்து, பொது பேருந்து போக்குவரத்தை ஊக்குவிக்க ஒரு ஆணை இல்ல.....????

வாய் பொளந்து  நாறிக் கிடக்கும் சாலைகளை செப்பனிடச் சொல்வதற்கு திராணியில்ல........

டிவிஎஸ் எக்லெல்ல  மெதுவாக போயி வரும் எங்களை போன்றவர்கள் தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்தாம்ணணே....


சும்மவா  கொடுத்தான் எட்டு போட்டு காட்டியும் அதுல சூத்த..இதுல சூத்த ன்னு சொல்லி பலதடவை அலையவிட்டு ஓட்டுநர் உரிமம் பெற்றால்... தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்தாம்ண்ணே..

அவர் சொல்லி முடித்ததும் இனனொருத்தர் தன்பங்குக்கு சொன்னார்.
ஏற்கனவே, இப்படி சொன்னானுக... தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டுவது நம்ம தொழிலுக்கு ஆவாதுன்னு தெரிந்ததும் நானும் இப்படி புலம்பித்தான் தொழிலையும் விட்டுட்டேன். அதோடு வண்டியையும் வந்த விலைக்கும் வித்திட்டேன்.

அதுசரிப்பா..அவுக ஞாயப்படியே பாப்போமப்பா...... தலைக்கவசம் அணிந்த சாலை விபத்திலிருந்து தப்பிக்கலாம் என்றால்.. ரோட்டில ஓரமாநடந்து போறவன் ஏம்ப்பா .சாகுறான்......என்றார் வேறு ஒருவர்.

இத..அவிங்கிட்டதான் கேட்கனும் என்றார் இன்னொருத்தர்.

இப்படியாக ஒவ்வொருத்தரும் தங்கள் புலம்பலையும் வயித்தெரிச்சலையும் கொட்டி தீர்த்தனர். ஒன்றிரண்டு பேர்களைத் தவிர பெரும்பாலானவர்கள். தலைக்கவத்திற்கு எதிராகவே தங்களின் ஆதங்கத்தை  வெளிப்படுத்தினார்கள்.

யாணை வாங்கிவிட்டவர்கள் அதற்கு தினி போடமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவர்களை “முதுகெலும்பு இல்லாதவர்கள்”, அவர்களின் முதுகெலும்பை வளைத்துவிட்டதாகவே தெரிந்தது.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...