சுழற்சி முறையில் அன்று நான் அணிந்த சட்டை கருப்பு சட்டையாக அமைந்துவிட்டது.. நான் எதைப் பற்றியும் நிணைக்காமல் கருப்பு சட்டையுடனே வெளியே சென்றேன.
வீதி வழியாக கடைக்கு சென்று கொண்டு இருந்த போது என்னைத் தெரிந்தவர்கள் என்ன கருப்பு சட்டை...“ அம்மா...கைதுக்கா.......” என்றார்கள்.
என்னைப் பார்த்தா ...அப்படியா...தெரியுது என்றேன்.
“பின்னே கருப்பு சட்டை போட்டு இருக்கிறது அதுக்குத்தான் என்றதானே காட்டுகிறது. என்றனர்.
அப்பொழுதுதான் அவர்கள் கருப்பு சட்டையை எழவுக்கும் ,துக்கத்துக்குமான அடையாளம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்என்பது தெரிந்தது
கேட்ட..அனைவரையும் நகர விடாமல். கருப்பு சட்டையின் நோக்கத்தையும் கருப்பு சட்டையின் அடையாளம் எதுவென்று விளக்கினேன்
அட.. சாம்பிரானிகளா....... பெரியாரைத் தெரியுமா?? என்றேன்
தெரியும் என்றார்கள்.
அவர் என்ன சட்டை அணிந்திருப்பார்” என்று கேட்டேன்..
கருப்பு சட்டை என்றார்கள்.
பெரியார் கருப்பு சட்டை அணிந்தது எழவுக்கும் துக்கத்திற்கும் இல்லப்பா....
என்று விட்டு.. நான் கருப்பு சட்டை அணிந்திருப்பதற்கு , நான் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன், சுயமரியாதைக் காரன் என்பதற்கு அடையள.. மப்பா..
அந்த நோக்கத்தில் அந்த கருத்தில் தானப்பா... நான் கருப்பு சட்டை அணிந்திருக்கிறேன். என்றவுடன்..
நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்தவர் களில் ஒருவர் சொன்னர்
ராசபக்சே அய் நாவில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக காரங்கெல்லாம் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் செய்தார்கள் ...... இப்போது ஆத்தாளை களி தின்ன வச்சுதுக்காக அதிமுக காரர்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே!! என்று தகவலைச் சொல்லி கேள்வி கேட்டார்
உங்கள் கருத்துப்படியே வைத்துக்கொண்டால் முஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்கள் கருப்பு நிறத்தில் பர்தா அணிவதும், நீதிமன்றங்களில் வக்கீல்கள் கருப்பு கோட்டு அணிவதும் அய்யோ அப்பா கோவிலுக்கு செல்பவர்கள் கருப்பு சட்டை அணிவதும் எதிர்ப்பு தெரிவிப்பதற்க்காகவா அணிகிறார்கள் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்றபோது...
அவர்கள் பேசாமல் இருந்தார்கள்...நானே தொடர்ந்தேன். ஒவ்வொரும் கருப்பு சட்டை அணிவதற்கு பல காரணங்கள் கூறினாலும். கருப்பு சட்டை அணிந்துள்ள எனக்கு ஒரு காரணம்தான் .
கருப்பு சட்டை அணிவது கடவுள் மறுப்பு கொள்கைக்காரன் என்பதையும் சுயமரியாதைக்காரன் என்பதையும் பறை சாற்றி தெரிவிப்பதற்க்கத்தான் ஒழிய நீங்கள் சொல்வது போல் எழவுக்கும் துக்கத்துக்கும் அணியும் ஆடை அல்ல.....
இது தெரியாமல் அறியாமல் கருப்பு சட்டை அணிபவர்கள், கருப்பு சட்டையின் நோக்கத்தையும் கொள்கையையும் மாற்றிய கயவர்களாக இருப்பார்கள். என்றேன்.
அப்போது ..வேறு ஒருவர்.... அவ்வழியாக கருப்பு சாக்கெட் அணிந்து வந்த பெண்ணொருத்தியை காட்டி எண்ணை மடக்கினார்.
கூட்டத்தில் ஒருவர் அந்தக் கருப்பு மேடசீங்.... அன்டு கவர்ச்சி என்றார்
இன்னொருத்தர் பர்தா அணிந்த பெண்ணைப்பற்றிச் சொன்னார்..............
வீதியில் கூட்டம் சேர்ந்தது ஆட்டோவும் டூவிலர்களும் ஒலி எழுப்பியதால் கூட்டம் கலைந்தது.
நானும் பாதியிலேயே பேச்சு பேச்சாக இருக்கட்டும் என்றபடி அவ்விடத்தை விட்டு வந்த வேலையை கவனிக்கத் நகர்ந்தேன்




