பக்கங்கள்

சனி 21 2013

ஒரு கொலைகாரனுக்கு பாதுகாப்பு பில்டப்ப பாருங்கோ.........


http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/modisecurity.jpg
கொலைகாரன் மோடிக்கு 2002ல்  பாபர் மசூதி இடிப்பு இருந்தும்  குஜராத்  கோத்ரா கொலை வரைக்கும்  நரேநந்திர மோடி நீரோ மோடியாக இருந்ததினால். நீரோ மோடிக்கு 2002லிருந்து கருப்பு சீருடை அணிந்த 18 கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். உள்ளுரில் முதல் தலையாக இருப்பதால் உள்ளுர் காவல் துறையிலிருந்து 108 பேர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்

இந்த நிலையில் நீரோ மோடி,ஹீரோ மோடியாக, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளுரைத்தவிர வெளியூர்க்கும்   செல்வதாலும்.

கொள்ளைக்காரனுக்கு அடுத்து கொலைகாரன்  செங்கோல் செலுத்த
இருப்பதாலும்இப்பொழுதே கொலைகாரனுக்கு 18 ஆக இருந்த
கருப்பு பூனையை 36 உயர்த்தி நீரோ மோடி ஹீரோ மோடியாக
வலம் வரச்செய்கின்றனர்...


வெள்ளி 20 2013

ஒரு ஊரில் ரெண்டு நல்ல மனுசன்கள்....(உருவகக்கதை)


 ஒரு ஊருல ரெண்டு நல்ல மனுசங்கே இருந்தாங்கே....


இருந்தாங்கலா.... ..........................

அந்த ஊருல இவிங்க ரெண்டு பேரைத்தவிர நல்ல மனுசனுங்க
எவனுமே இல்ல......... அப்பேர்பட்ட இந்த ரெண்டு நல்ல
மனுசனுங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தது.

இந்த ரெண்டு நல்ல மனுசனுகளுக்குள் என்ன பிரச்சன வந்தது??

அந்த பிரச்சன என்னான்னா,

அந்த ஊருலுள்ள கோயில்ல இருந்து .ரெண்டு மனுசனுக்குள் யாருக்கு முதல் மரியாதை கொடுப்பதில்தான் பிரச்சன வந்தது. அந்த ஊரிலுள்ள ஏழு அடி உயரமுள்ள பெரியவங்க மற்றும்  சிறியவங்க என ஊரிலுள்ள எல்லாரும் கோயில்ல கூடிட்டாங்க...............

 அப்ப ....பூசாரிகிட்ட ரெண்டு நல்ல மனுசன்ல ஒருத்தன் தன்னுடைய அருமை பெருமைகளைச் சொன்னான்...........


நா..ந்தேன் .   நம்ம கொல தெய்வத்தோட மகிமைய மொத மொதல்ல ரத்த யாத்திர நடத்தி ,நம்ம சாமி ஒன்னுக்கு அடிச்ச இடத்தில வேறு ஒருத்தன் கோயில் கட்டியிருந்தத  இடுச்சு.ஒலகம்பூராவுக்கும் தெரியும்படியா மீட்டு தந்தேன். நாட்டுல எல்லாரும் செங்கல்ல கொண்டவந்து கோயில் கட்ட முயற்ச்சி எடுத்தேன் அதனால எனக்கு மொதல் மரியாதை பதவி கொடுத்தா
நம்ம கொல தெய்வத்துக்கு  சட்டுபுட்னு கோயில கட்டிபுடுவேன் என்றான்.


இதைக்கேட்ட இன்னொரு நல்ல மனுசன்  கன்னத்திலுள்ள  மயிரைத் தடவியபடி செருமினான். பூசாரி அவனைப் பார்த்தான்.

ஊர் ஊரா போயி யாத்திரை நடத்தி சாதித்ததை, நா....இருந்த இடத்திலே சாதித்துவிட்டேன.

“கருவிலே வளர்ந்த குழந்தையை தாயின் வயிற்றைக் கிழித்து”
நம்ம கொல தெய்வத்துக்கு  அபிசேகம் செய்து பலருடைய உயிரை காணிக்கையா செலுத்தியுள்ளேன.இது எல்லோருக்கும் தெரியும்,  இதோடு முதல் மரியாதை பதவியையும் கொடுத்தால்,  இன்னும் நம்ம தெய்வத்திற்கு பலமடங்குகளாக அபிசேகமும் காணிக்கையும்  செய்வேன். நம்ம கொல தெய்வத்தின்  குலப்பெருமையை ஒலகத்தில் நிலநாட்டுவேன் என்றான்.



ரெண்டு நல்ல மனுசன்கள் சொன்னதைக்கேட்ட பூ....பூசாரி சொன்னான்.

 நம்ம சாமி ஒன்னுக்கு அடிச்ச இடத்தை மீட்டது சரியானது பாராட்டப்படவேண்டியது முக்கியம். ஆனா.அது பழைய
கதையாகிவிட்டது. இன்னும் அங்க கோயில கட்ட முடியல.,
அத அப்படியே விட்டுவிட முடியாது. அந்த நல்ல மனுசனையும்
 மறக்க முடியாது. இருந்தாலும்   ..........புதிய வழியில்..............

 நம்ம கொல தெய்வத்துக்காக  “ வயிற்றையே கிழித்து கருவிலே
வளர்ந்த சிசுவைக் கொன்று” அதன் ரத்தத்தை காணிக்கையா
கொடுத்ததில்  நம்ம கொல தெய்வத்துக்கு  பெருமையும் பெரும்
பேரும் வீரமும்  கிடைக்கச்சிருக்கு ...

இதுதான் இன்னிக்கு வரை  புகழுந்து பேசும் பேச்சாக இருக்கிறது.
இதோடு முதல் மரியாதை பதவியைக் கொடுத்தால் இன்னும்
காணிக்கையும் இரத்த அபிசேகமும் செய்து  ஒலகத்துக்கே
முன்மாதரியாக நடந்து  நம்ம கொல தெய்வத்தையே நட்டமா
நிப்பாட்டி  அதன் அருளை  ஒலகம் பூரா  பரப்புவாரு , இப்ப இதுதான் லேட்டஸ்ஸ்........வழி...........

ஆகவே,வயித்த கிழிச்ச  நல்ல மனுசனுக்கே,மொதல் மரியாதை ”
என்று பூசாரி சொன்னபோது, பல்லி கிச்கீச்கிச் என்று கத்தியது.
 “இந்தா நம்ம கொல தெய்வமும்  சொல்லிவிட்டது என்றான் பூசாரி.

ரத்த யாத்திரை நடத்திய  முதல் நல்ல மனுசன், பூசாரியின்
சொல்லுக்கும் பல்லியின் உத்தரவுக்கும் எதிராக எதுவும்
பேசாமல் மனம் புழுங்கிவிட்டு,“ வயிற்றை கிழித்து சிசுவின்
ரத்தத்தை  அபிசேகம் செய்த  சக நல்ல மனுசனுக்கு. “மொதல்
மர்ரியாதை ” கிடைத்ததை  பாராட்டினான்.


குழுமியிருந்த  அந்த ஊரு மக்களோ,   வரும் திருவிழாவில்
நமக்கு ரெண்டு புல்லுகட்டு கிடைக்கும் நல்லா தின்னுட்டு
பேளலாம் என்று நிணைத்தஆட்டு மந்தததைகள் கணக்கா  ம்மே...........ம்மே..........ன்னு கத்திக் கொண்டு கலைந்து சென்றனர்.

வியாழன் 19 2013

அரவானனா.......? அரவானியா.......?



அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று
 கொண்டு இருந்தார்  சாலையின் ஓரத்தில் ஒருவர்  நின்றபடி
 பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் கண்டதும்.((சிறுநீர் கழிப்பது)
இவருக்கும்  பாட்டுபாடத் தோன்றியது.

சுற்றும் முற்றும் பார்த்தார். பெண்கள் யாரும் சாலையில் வரவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு சுவறொரம் ஒதுங்கினார்.

அவர் பாட்டுப்பாடிய சுவரில்,“ இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது ”என்று எழுதிவைக்கவில்லை. மனத்திருப்தியுடன் பாட்டு பாடிக் கொண்டு
இருந்தார்.

ஏற்கனவே.பாட்டுபாடிக் கொண்டு இருந்தவர். பாட்டை முடித்துக்
கொண்டு சென்றுவிட்டார்.

அவர் மட்டும் பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது. அந்த நேரத்தில்
முக்காடிட்ட ஒரு நபர்  அவருகில் வந்து நின்றார்.

பாட்டுபாடும் நிணைவில் இருந்தவர். தன்னை ஒட்டி வந்து நின்ற
உருவத்தை கவனிக்கவில்லை. பாட்டு பாடி முடித்து பேண்ட்
 ஜிப்பை இழுத்து விடும்போது வந்து நின்ற உருவத்தை
 கவனித்துவிட்டார்.

சிறிது நேரத்தில் அவருக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. அவருக்கு அருகில்  முக்காடிட்டு நின்றது திருநங்கை.

பேச்சு மூச்சு இல்லாமல் நடையைக் கட்டினார். முக்காடிட்ட
திரு நங்கையும் பாட்டு பாடிவிட்டு அவருடன் சேர்ந்து பஸ்
நிறுத்தம் வரை  சென்றார். உடன் வரும் நபரின் முகத்தை  பார்க்க
பல தடவை முயற்சித்தார். முக்காடு இட்டதால் முகத்தை சரியாக
பார்க்க முடியவில்லை அவரால்.........

என்னைக் கண்டதும் இந்த விபரத்தை சொல்லி, ஒரு சந்தேகத்தை
எழுப்பினார்.

ஆணாயிருந்து பெண்ணாக மாறியவரா? பெண்ணா இருந்து ஆணாக மாறியவரா? என்று எப்படி? தெரிந்து கொள்வது என்றும். உடைகள்
சுடிதாரா, பைஜாமான்னு எதுன்னு தெரியவில்லை என்றார்.

 இதைக் கேட்டு கொண்டு இருந்த ஒருவர் அவரிடம் சொன்னார்.
ஆனாயிருந்து பெண்ணாக மாறியவர் அரவானன்,
பெண்ணாயிருந்து ஆணாக மாறியவர் அரவானி என்றார்

அருகில் இருந்த ஒரு அறிவாளி,அவர் சொல்வதை மறுத்து,
பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் அரவானன், ஆணாயிருந்து பெண்ணாக மாறியவர் அரவாணி என்றார்.

அந்த இருவரும்.சொல்லியதில் எது சரி? என்று  என்னிடம்
கேட்டபோது., “என்னை, ரஜினி பகதன் ஒருவன் ஒம்போதுன்னு
திட்டினான்., அந்த ஒம்போதுக்கு என்ன அடையாளம்
அர்த்தமுன்னு எனக்கு தெரியல. , நீங்க மயிர் பிளக்கும் விவாதம்
 நடத்திகிட்டு இருக்கீங்க,

 இங்க பாருங்க நண்பர்களே!

இந்தியாவையே குஜராத்தா மாத்த போகுது கொடூர மாக கொலை செய்து  ருசி கண்ட பூனை ஒன்னு, அத தடுக்க முடியாத நாமலெல்லாம் அரவானானா, அரவானியான்னு முதல்ல  யோசிங்க....என்றபோது  யாரும் மூச்சு விடவில்லை. அமைதி நிலவியது.

அமைதி ஆபத்துக்கு அறிகுறின்னு யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

இந்தியாவே.....!!!!!!!!!!!! குஜராத்தாக மாறிவிடுமோ????????????????????
கலவரங்கள் மோடி

புதன் 18 2013

தாலி பிச்சையால் காந்தியின் உயிரை மீட்ட கஸ்தூரிபா..!!!

,புல்லானாலும் புருஷன்,கல்லானாலும் கணவன்,கணவனனே கண்கண்ட தெய்வம் என்ற ஒப்புமைக்கேற்ப, இந்தியயாவின் பெண்களுக்குரிய பொதுப் பண்புகளான அடக்கம்,சகிப்பு தன்மை,,பொருமை,தியாகம், கணவன்வழியே தன்வழி என்று புராணத்தில் கணவனை மீட்ட சாவித்தரியாக   1869ல் பிறந்து அரை ஆடை பக்கரியை மணந்து,  உண்ணாவிரத்தில் உயிரைவிட இருந்த காந்தியை மடிபிச்சையால் மீட்டு  75 வயதுவரை வாழ்ந்து மடிந்தவர் கஸ்தூரிபா.

ஆணாதிக்கத்திடமிருந்து  விடுபட,பார்ப்பண பெண்கள், உயர்ஜாதிப்பெண்கள், பிற்ப்படுத்தப்பட்ட பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள் போன்ற இந்தியாவின் ஒட்டு மொத்தப் பெண்களின் உரிமைக்காக போராடி, பெண்களுக்கான உரிமையை வாங்கித் தந்தவர் அண்ணல் அம்பேத்கார்.

பெண்களைவிட மிகவும் கொடுமையாக , இந்து மதத்திலுள்ள தாழ்த்தப்பட்டவர்களை மனிதர்களாக நடத்தப்படுவதில்லை என்பதையும்,  அத்தகைய தாழ்த்தப்பட்டவர்களுக்கு “அரிஜன்”( கடவுளின் குழந்தைகள்) என்று பேரு வைத்த காந்தியையும் ஆதாரததோடு அம்பலப்படுத்தி, அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் போராடி, மனிதர்களாக மதிக்கப்படாத  மக்களுக்கு இரட்டை வாக்குரிமை பெற்றுத் தந்தார்.

போராடி பெற்ற  இரட்டை வாக்குரிமையை எதிர்த்து, இந்தியாவின்  நிமிட கணக்கில் நேரத்தை பகிர்ந்து வாழ்ந்த  மகா....ஆஸ்துமாவான அரைஆடை பக்கிரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

அரை ஆடை பக்கரியின் உண்ணாவிரதத்தைக் கண்டு , இந்தியாவிலுள்ள பார்ப்பன உயர்ஜாதி கைகளிலுள்ள ஊடகங்களும் பல கட்சி தலைவர்களும்   அஞ்சா-நெஞ்சரை கொல்ல வந்த வில்லனாக அண்ணல் அம்பேத்கரை சித்தரித்தன.

வில்லனாக சித்தரித்த தலைவர்களின் மத்தியில் ஒருதலைவர் மட்டும்.

“கோடிக்கனக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிட ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல, காந்தியின் மரணத்தை குறித்து தாங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் உறுதியில் இருந்து பின் வாங்காதீர்கள்” என்று தந்தி கொடுத்தார் தலைவர் பெரியார்.

உறுதியாக இருந்த அம்பேத்கரை, காந்தியின் மனைவி கஸ்தூரிபா, அண்ணல் அம்பேத்கரை நேரில் சந்தித்து.தன் கணவரின் பிடிவாத போக்கை மன்னித்து தன் கணவரின் உயிரை  காப்பாற்றும்படி தாலிப்பிச்சை கேட்டார்.

 ஆணாதிக்க கொடுமையிலிருந்து பெண்களுக்கு போராடி விடுதலை வாங்கித் தந்த அண்ணல், கஸ்தூரிபாவுக்காக மனமிரங்கி  அவரின் கணவரின் உயிரை காப்பாற்றினார்.

இதனால், இந்து மதத்தில் மனிதனாக மதிக்கப்படாத தாழ்த்தப்பட்டவர் களுக்கான   போராட்டத்தில், அரைஆடை பக்கரியின் “பிளாக்மெயில்” அரசியலினால் தோற்றார்.


நன்றி! வே. மதிமாறனின்


ஞாயிறு 15 2013

நல்ல நண்பனை மனைவியாக ஆக்கிய ஒரு தலைவர்....!!!!!!!

இந்தியாவின் ரப்பர் ஸ்டாம்பு என்றால் பாட்டாளி வர்க்க அரசியல் தெரிந்தவர்கள் புரிந்தவர்கள் சடடென்று சொல்லிவிடுவார்கள் இந்தியாவின் குடியரசு தலைவரென்று......

அப்பேர்பட்ட  இந்தியாவின் குடியரசு தலைவர் ஒருவர், நல்ல நண்பனை மனைவியாக ஆக்கிக் கொண்ட கதைதான் இது.

இந்தியாவின் இரண்டாவது குடியரசு தவைராக பதவி வகிப்பதற்கு
முன். முதல் குடியரசு துனைத் தலைவராக   ராதாகிருஷ்ணன்
பதவி வகித்தபோது, பதவியின் ஒரு வேலையாக   வெளிநாடு
செல்வது  ஒரு விதி.

அந்த விதிப்படி, வெளிநாட்டுப் பயணம் மேற்க்கொண்டார். பயணம் செய்த போது தங்குவதற்க்காக எற்ப்பாடு செய்யப்பட்ட அறையில் ஒரு படுக்கை மட்டும் போடப்பட்டு இருப்பதை அறிந்து,இன்னொரு படுக்கை போடும்மாறு சொன்னாராம்.

அறை ஏற்ப்பாடு செய்தவர்களோ! துனைக்கு யாருமில்லாமல் தனியாக வந்திருக்கும் இவர், மனைவியை இழந்தவர். எதற்கு இன்னொரு படுக்கை போடச் சொல்கிறார் என்று பலான சந்தேகம் கொண்டு குடியரசு துனைத் தலைவரின் அறையை நோட்டமிட்டனர்.

அப்போது.ஒரு படுக்கையில் ராதா கிருஷ்ணனும்,இன்னொரு
படுக்கையில் புத்தகங்களும் இருந்தததைக் கண்டனர்.

இதைப்பற்றி ராதாகிருஷ்ணன், புத்தகங்கள்தான் என் மனைவி,
அவைதான்என் படுக்கையில் இருக்கும். அதற்குத்தான் இன்னொரு
படுக்கை என்று சொன்னார்

நல்ல நண்பனுக்கு அடையாளம் புத்தகங்களே என்றுதான் சொல்வார்கள். அந்த நல்ல நண்பனையே.மனைவியாக்கி கொண்டவர்தான் இந்தத்தலைவர்.



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...