பக்கங்கள்

சனி 25 2015

சொக்கியின் கேள்விக்கு பதில் சொன்ன சொக்கன்.

படம்-eluthu.com


சொக்கனின் மனைவியான சொக்கியும், சொக்கியின் கனவனான சொக்கனும் கடைத் தெருவுக்கு சென்று வீட்டுக்கு தேவையான சில சில்லரை சாமான்களை வாங்கி, ஆளுக்கொரு சுமையாக சுமந்து கொண்டு வீதி வழியாக  உலா வந்து கொண்டு இருந்தனர்.

அப்படி வீதி வழியாக வந்து கொண்டு இருந்த பொழுது ரோட்டு ஓரமா இருந்த சனியை ..அதாவது அரசு சாராயக்கடையைப் பார்த்தும்  சொக்கனுக்கு கைகால் படபடத்தது. உடன் சொக்கி வந்து கொண்டு இருந்ததால்... அந்தப் படபடப்பை கஷடப்பட்டு அடக்கிக் கொண்டு. கவனமில்லாமல் பறிகொடுத்தவன்.  போல ஏக்கத்துடன் கடையை பார்த்தவாறே நடந்து வந்து கொண்டு இருந்தான் 

தன் பேச்சுக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்த தன் கனவன் திடிரென்று பதில் சொல்லாமல் வருவதைக் கண்டு  சொக்கனை பார்த்த சொக்கி.. சொக்கனின் பார்வையை செல்வதைக் கண்டு  . சொக்கனின் பார்வையை தன் பக்கம் திருப்பினாள்...

வீதியில் போவோர் சொக்கியை உற்றுப்பார்த்த வண்ணம் சென்றதை கவனித்த சொக்கன்.. சொக்கியை கவனித்தான். சொக்கியின் மாறாபபு ஒரு பக்கமாய் விலகி இருப்பதைத்க்கண்டு. சனியின் மேல் உள்ள பார்வையை விலக்கிவிட்டு, முன்னால் சென்று கொண்டு இருந்த சொக்கியை நெருங்கிச் சென்று  சொக்கியிடம் மாறாப்பை சரி செய்யச் சொன்னான்.

சொக்கி புன்னகை புரிந்தவளாக..... நீ அங்க பார்வையைச் செலுத்தியதால்தான் ரோட்டுல போறவன் இங்க பார்வையை செலுத்துறான். என்றான்.

சொக்கியின் மாறாப்பு சரியா இரருப்பதைக் கண்ட சொக்கன் சரி..சரி... சீக்கிரமா... வீட்டுக்குப் போகலாம் என்று எட்டு வைத்தான். இரண்டு மூன்று சாராயக் கடையை கடந்து வந்தபோது.... சொக்கி கேட்டாள்.

ஏ..மச்சான்.  அடுத்த வருசம் சாராயக் கடையை எல்லாம் அடச்சிடுவாங்களே!!
அப்போ..இந்தக் குடிகாரன்க...  எல்லாம் குடியை விட்டு விடுவாங்களா. மச்சான்.

சொக்கி கேட்ட இந்த கேள்விக்கு சொக்கனால் பதில் சொல்லமுடியவில்லை.. தீவிரமாக யோசித்துக் கொண்டே வந்தான்.

என்ன..மச்சான்.. நாங்.... கேட்டதுக்கு பதிலையே காணோம்..என்றாள்

நா..ஒரு கேள்வி கேக்றன்.. நீ பதிலச் சொல்லு.. அதிலே..நீ கேட்ட கேள்விக்கும் பதில் இருக்கும் என்றான் சொக்கன்..

அப்படியா......!!  கேளு... பதிலச் சொல்றேன் என்றாள் சொக்கி.

சன் டீவிய மூடப்போறாங்களாம்.... அப்படி சன் டீவிய மூடிட்டா....சன் டீவி சேனல்ல வர்ர தொடர விடாம பாத்து வர்ர நீ... என்ன பன்னுவ....  என்று கேட்டான்.சொக்கன்

சொக்கி தாமதிக்காமல் பதில்  சொன்னாள் “மூடிட்டா. அதுக்கென்ன பன்றது. அடுத்த சேனல்ல வர்ர தொடர பார்ப்பேன் என்றாள்.

சொக்கன் இப்போது சிரித்தான்.

சொக்கன் சிரித்ததை புரிந்து கொணடால் சொக்கி.

நீ சேனல மாத்திக்கிற மாதிரி , குடிமகனகளும் வேறு வழிய மாத்தி குடியை தொடருவாங்கே...டீ....என்றான். சொக்கன்.

வெள்ளி 24 2015

வலிப்போக்கனை திணறடித்து திக்குமுக்காட செய்தவர்கள்...!!!!

Logo
தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் மற்றும் ப்ளாக்கர்., வேர்டு

பதிவுலகில்  வலிப்போக்கனை திணற வைப்பதோடு ,திக்கு முக்காட வைத்துக் கொண்டு இருப்பவர்கள் மூவர்.

அவர்கள். ஜோக்காளி-பகவான்ஜி, பூவை பறிக்க கோடாலி எதற்கு ? என்று கேட்கும் கில்லர்ஜி, வாங்க நண்பர்களவோம், என அழைக்கும் வலைஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள். இவர்கள்தான் அந்த மூவேந்தர்கள்.

ஒவ்வொரு பதிவர்களின் பதிவுகளுக்குச் சென்று பதிவுகளை படித்து கருத்துரை வழங்கி  அவர்களின் தமிழ்மண ஓட்டையும் பதிவு செய்வார்கள்.
எனது பதிவுக்கும் இந்த மூவேந்தர்கள் வந்தார்கள். படித்தார்கள் , கருத்துரை வழங்கினார்கள் தமிழ்மண ஒட்டையும் போட்டுவிட்டு, ஓட்டே போடாத வலிப்போக்கனையும் தமிழ்மண ஒட்டை போட வைத்தார்கள்.

இவர்களைப்போல் அணைத்து பதிவர்களின் பதிவுகளை படித்து கருத்துரை வழங்கி தமிழ்மண ஒட்டு போடுவது வலிப்போக்கனால் முடியாது என்று   இருந்தாலும இந்த மூவேந்தர்களின் பதிவுகளுக்கு மட்டும் தொடர்ந்து  சென்று வந்த  கையோடு  இவர்களால் மற்ற பதிவர்களின்  சில பதிவுகளையும் படித்து கருத்துரை வழங்கியும் தமிழ்மண ஓட்டு போட்டும்  கொஞ்சம் வளர்ந்தார்.

ஆரம்பத்தில், வலிப்போக்கன் பதிவுகளை  தொடர்ச்சியாக படித்து கருத்துரை வழங்கி வந்தவர். “வேடந்தாங்கல் கருண்” என்பவர். இன்று இருக்கும் அறிவு அன்று இல்லாததால. “ வேடந்தாங்கல் கருண்”னின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது..  அன்று மதிக்கத் தெரியாத மன்னாங்கட்டி வலிப்போக்கனை “வேடந்தாங்கல்-கருண்” மன்னிப்பாராக....

அன்று மதிக்கத் தெரியாமல் இருந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதற்க்காக...இந்த மூவேந்தர்களின் வழியைப் பின்பற்றி தூணாக இல்லாவிட்டாலும் துறும்பாக இருப்போம் என்று எண்ணி   மற்ற பதிவர்களின் தளத்திற்கு சென்று மொய் மற்றும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் முதலில் ஓட்டை போட்டுவிட்டு  பிறகு பதிவை படித்து கருத்துரை வழங்கி    வரும் வழியை  சிறிது சிறிதாக செய்து வருகிறேன்.

அப்படிச் சென்றதன் பயனாக.... தில்லையகத்து வி. துளசிதரன் அவர்கள் ஒரே நேரத்தில் வலிப்போக்கனின் பதிணோறு பதிவைகளையும் படித்து ,கருத்துரை வழங்கி, அதே  வேளையில் மறுமொழியிட வைத்து ,திணற அடித்ததோடு அல்லாமல் திக்கு முக்காட வைத்துவிட்டார்.


ஆக, வலிப்போக்கனை திணறடித்து திக்கு முக்காட வைக்கும்  மூவேந்தர்கள் வரிசைவயில் தில்லையகத்து துளசிதரன் அவர்களும் இணைந்து விட்டார் என்றே தோன்றுகிறது.  இதிலிருந்து திணற அடித்து திக்கு முக்காட வைப்பவர்கள் மூவர் அல்ல ..நால்வர் என்று ..திணறடித்து திக்கு முக்காட வைப்பதற்க்காக தொடர்ந்து வந்து கருத்துரை வழங்கி வரும் பதிவர்களின்  கருத்துரை  அவைக்கு மனமுவந்து தெரிவித்துக் கொள்கிறேன்.



புதன் 22 2015

மருமகனுக்கு ஊத்திக்கொடுத்த தாய்மாமனுக்கு இபிகோ 307


படம்-வினவு


“கலசப்பாக்கம் அருகே 4 வயது சிறுவனுக்கு மது கொடுத்த தாய்மாமன் பிடிபட்டவுடன் . தாய்மாமன் மீது இபிகோ 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது போலீசு.” – இது  நாளிதழ் செய்தி.
மக்களின் நண்பர்கள் உடனே  சிந்தித்து. சின்னப் பையனுக்கு சரக்கு கொடுத்தால் அதற்கு இன்ன செக்சன் என்று,  உடனே அறிவித்துவிட்டார்கள் 

இந்தியன் பீனல் கோடைத் தயார் செய்த வெள்ளைக்காரன் எழுத மறந்தவிட்டாலும் அவர்கள் வழி ஆளும்.  அரசியல் சட்ட பிதாமகர்களின் தொலைநோக்குப் பார்வையில்  பட்டுவிட்டது 
பால்மணம் மாறாச் சிறுவனுக்கு சரக்கு ஊற்றிக் கொடுப்பது, அவனைக் கொலை செய்யும் முயற்சிதான் என்று கண்டுபிடித்து ,  வழக்கும் பதிவு செய்த போலீசு.
மருமகனுக்கு ஊத்திக்கொடுத்த தாய்மாமனுக்கு 307  போட்டு சிறையில் அடைத்தது., சட்டம் அனைவருக்கும் சமம் மூச்சுக்கு முன்னூறு தடவை ஓதும் வல்லுனர்கள்.
மக்களுக்கெல்லாம் மது ஊத்திக் கொடுக்கும் மம்மி மீது என்ன செக்சன் போடுவார்கள்? என்ன தண்டனை விதித்து தீர்ப்பெழுதுவார்கள்?....அந்த வழக்கை எத்தனை ஆண்டுகணக்கில் இழுத்தடிப்பார்கள்.????.

தெரிஞ்சவுங்க சொன்னா...வருகிற தேர்தல்ல  ஓட்டு கேட்பவர்களுக்கும் அறிக்கை விடுபவர்களுக்கும்   பரப்புரை செய்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.. எதோ உங்கலால முடிந்த உதவியாக இருக்கட்டுமே.....!!!!!

செவ்வாய் 21 2015

ஊத்தி கொடுத்த மம்மி ஸ்தானத்தில் இருந்து சிந்திக்குமாறு...

amma-sarakku-cartoon-small-724x1024
படம்-வினவு



படம்-செல்வம் பழனிச்சாமி


அம்மாவின் அரசு டாஸ்மாக்கில்
கேட்ட சரக்கை கிடைக்கவிடாமல்
செய்தார்கள் போதாத குறைக்கு
சரக்கின் விலையை கண்ட
மேனிக்கு உயர்த்தி விட்டார்கள்

சாராய பாட்டிலில் கரப்பான்
பூச்சிஎன்ன .. ஆணுறை முதல்
பாம்பு வரை மிதந்ததை பார்த்தாயிற்று

அரசு அங்கீகாரம் பெற்ற
டாஸ்மாக் பார்களை எவ்வளவுக்கு
முடியுமோ அவ்வளவுக்கும கேவலமாக
நடத்தியதையும் பார்த்தாயிற்று


இது மட்டுமா..எல்லா வற்றுக்கும்
 மேலாக டாஸ்மாக் சாராயம்
அதிக விசத்தன்மை வாய்ந்தது
என்று வருமளவுக்கு உற்பத்தி
தரத்தை குறைத்தார்கள்.....எவ்வளவுக்கு


கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு
 டாஸ்மாக குடிமக்கள்களை கேவலப்படுத்திய
பின்பும் திருந்த மறுக்கும் குடி
மக்கள்கள் மதுவிலக்கு கொண்டு
வந்தால் மட்டும்  சட்டனெ
திருந்தி விடுவார்களா..என்பதை

தமிழ்நாட்டு  குடிமகன்களுக்கு ஊத்தி
கொடுத்த மம்மியின் ஸ்தானத்தில்
இருந்து   சிந்திக்குமாறு அடுத்த
தேர்தலைக்காக ஓட்டுப்போட
காத்திருக்கும் குடிக்காத குடி
மக்கள்களை கேட்டுக் கொள்கிறேன்.................


 நன்றி-- வில்லவன் இராமதாஸ்

திங்கள் 20 2015

துன்பத்தை.. போக்கியவர்கள்....


படம்-floranjayraj.blogspot.com



நண்பர்களில் ஒருவர் சொன்னார்...சார். அந்தக் காலத்து அரசர்களில் துன்பத்தை போக்கியவர்கள் யாரென்று தெரியுமா  சார்  என்றார்.

அவர் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல்..... தெரியல....சார். உங்களுக்கு தெரியுமா..சார்...? என்று கேட்டேன்.

எனக்கு தெரியலைன்னு தான் உங்ககிட்ட கேட்டேன் சார் என்றார்.

“ பரவாயில்லையே...நமக்கு துணையாக வநது விட்டாரே.. என்று எண்ணிக் கொண்டு. அடுத்து அமர்திருந்த நண்பரிடம்.  சார். உங்களுக்கு தெரியுமா..சார் --கேட்டேன்.

அவர் அதைப்பத்திதான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன், என்றார்.

ரெம்ப சுத்தம் என்று விட்டு, நானே யோசிக்க..ஆரம்பித்தேன். அப்போது  “சிந்தித்தால் சிரிப்பு வரும், மனம் நொந்தால் அழுகை  வரும்” என்ற பாடல்தான் வந்தது.....துன்பத்தை போக்கியவர்களை பற்றி ஒன்றும் வரவில்லை.

கடைசியாக  மூவரும் விடைபெற்றுச் செல்லும்போது, சொன்னேன்.  சார். நாளை கழித்து மறுநாள்  என்னுடைய தளத்தை பாருங்கள். துன்பத்தை  போக்கிய மன்னர்களை கண்டுபிடித்து பதிவிடுகிறேன் என்றேன்.

“  சீக்கிரமாக கண்டு பிடித்து தெரிவியுங்கள். என்று விட்டு,நல்லது.. பார்ப்போம், என்று விடை பெற்றார். இரண்டு நாட்கள் எந்த சிந்தனையும் இல்லாமல் மறந்துவிட்டேன். வேலையில் அவரும் மறந்துவிட்டார். 

 எனது கைப்பேசிக்கு  மிஸ்டு கால் வந்தது. அதில் பேசியபோது சம்பந்தாமில்லாமல் ஒருவர் பேசி என்னைத் திட்டினார். “ ஏய்யா  இப்படி மிஸ்டு கால் வந்ததுன்னு இம்சை கொடுக்குறிங்க...”  என்றார். அவரிடம் வாங்கிய திட்டால் வந்தது  இந்த ஞானம்....

அன்று துன்பத்தை  போக்கிய மன்னர்கள்.

புறாவின் துன்பத்தை போக்கியவர் சிபி மன்னர்.

பசுவின் துயருக்காக தன் மகனை கொன்றவர் மனு நீதிச் சோழர்.

கண்ணகியின் சிலம்பின் மாணிக்கபரல்களை கண்டு தன் வாழ்நாளை முடித்துக் கொண்டவர் பாண்டியமன்னர்.

இன்று துன்பத்தை போக்கிய அரசர்கள்

கள்ளச் சாரயம் குடித்து பொட்டென
போக வேண்டாம். நல்லச் சாராயம்
குடித்து அரசு கல்லாவை நிரப்பி
மற்றவர்களுக்கு இம்சை கொடுத்து 
சாவு என்று நல்லச் சாராயக்கடையை
திறந்து விட்டவர் கொலைஞர்..அரசர்

தீய சக்தியால் சூது கவ்விய போதும்
தீய சக்தி திறந்த சாராயக் கடையான
அமுதசுரபியை மட்டும் மூடாமல்  குடி
மக்களின் குடியை கெடுத்து தன் கல்லாவை
நிரப்பியது புர்ர்ச்ச்சிசி தல்வரின் கொல்லைப்
 புற  வாரிசு புருச்சி தல்வி.....அரசி

நாட்டின் இயற்கை வளங்களான 
ஆற்று மணலை, நிலத்தடி நீரை
கடலோர தாது மணலை கொள்ளை
அடித்தவர்களையும் புருச்சி தல்வியின்
சாராயக் கடைகளையும் பாதுகாப்பது
நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்கள்
நீதி வழங்கும் நிதி பதிகள் ஏவல்
பணி செய்யும் காவல் படைகள்.

-
- மேற்படி அன்றைய மன்னர்களும்  அரசர்களும் இன்றைய அரசிகளும் அந்த அரசின் ஆட்சியாளர்களும்தான்  அன்றும் இன்றும்  துன்பத்தை போக்கியவர்கள்.




ஞாயிறு 19 2015

ஒரு ஞான சூன்யத்தின் கேள்விக்கு என்ன பதில்????


படம்-tamilsnow.com

அறிவார்ந்த பெரிய்ய்ய யோர்களோ!

அஞ்சு வருடத்திற்கு ஒரு முறை ஒட்டு போடுவதையே மகத்தான ஜனநாயகம் என்று பீத்தீக் கொள்ளும் வெறும் பீத்தர்களே  !!!

இந்த ஞான சூன்யத்தின்  கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன???

*  தெருவுக்கு தெரு சாராயக்கடையை திறந்து வைத்து   குடியை கெடுத்துக் கொண்டு இருப்பதையும், அந்தக் குடியால் ஏற்படும் விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிர் பலிகளையும் கண் கூடாக தெரிந்திருந்தும்.. “உயிரைக் காக்க ஹெல்மெட் அணியுங்கள்” என்று அறிவார்ந்த ஞானபிரகாசங்கள் சொல்வதற்கு  அருகதை உண்டா???

* குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மூடாமல், குடிததுவிட்டு வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சென்றாலும் சாலை விபத்துகளை, உயிர்பலிகளை தடுக்க முடியுமா?? ?


*  குண்டும் குழியுமான சாலையை  செப்பனிடாமல், ஹெல்மெட் அணிந்து கொண்டால் விபத்துகளை குறைக்க முடியுமா..???


*  கட்டாய ஹெல்மெட் என்பது உயிரை காக்க என்ற பெயரில் போலீஸ கல்லாவை நிரப்பவா???


*குடி கெடுக்கும்  டாஸ்மாக்கை மூடுவதற்கு வக்கில்லாத போது.,ஹெல்மெட்  எப்படி உயிர் கவசமாகும்..????




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...