பக்கங்கள்

வெள்ளி 08 2023

..இந்து இன மக்களின் பால் பேரன்பு கொண்டு பார்ப்பணர்களை தண்டித்த ஒளரங்கசீப்

 

ஔரங்சீப்

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட 

ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.


தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது. 


நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது


. கோயில் இடிக்கப்பட்டது. 


இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.


மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா? 


ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.


முனைவர் அ. தஸ்தகீர்.(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)


ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'

Page : 70,71


இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். 


P.N.Pande


“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”


P.N.Pande, Islam And Indian Culture, Page 55


இந்த வரலாறு ஏன் மறைக்கப்பட்டது..இந்து இன மக்களின் பால் பேரன்பு கொண்டு பார்ப்பணர்களை தண்டித்த ஔரங்கசீப்பை கொடுங்கோல் மன்னர் என்று ஏன் யூத பார்ப்பணர்களால் சித்தரிக்கப்பட்டது

வியாழன் 07 2023

இந்து கோயில்களை கொள்ளையடிப்பது யார்...?

இந்து கோயில்களை கொள்ளையடிப்பது யார்..?        

கோயில் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவது எப்படி? ?                 

RSS பாஜக தமிழ்நாட்டில் கோயில்களை குறிவைப்பது ஏன்.? ?? 

ஆதாரங்களுடன் தோழர் தமிழ் காமராசன்.



டாக்டர் BR .அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கவில்லை தெரியுமா..??

 டாக்டர் BR .அம்பேத்காரை

மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கவில்லை தெரியுமா..?? 👇 இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து.. தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்.! பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்த யுனிவர்சிட்டியில் ஒரு சங்கம் உண்டு.!! (LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம், officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆக இருக்க முடியும் ஆனால் அவ்வளவு எளிதாக அந்த சங்கத்தில் உறுப்பினராக முடியாது. ஏன் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்தவர்கள் மட்டுமே அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்க முடியும்.! officer club, அந்தச் சங்கத்தில் இந்தியாவில் இருந்து... உறுப்பினர் ஆன ஒரே நபர் அம்பேத்கர் மட்டுமே.!! டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் அந்த சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும்.! ஆனால் அந்த சங்கத்தில் உள்ளவர்கள் தான் நாட்டில் மிகச்சிறந்த தெளிவான, ஆற்றல் பொருந்த்திய அறிவாளியாக இருக்க முடியும்.!! அப்படி இருக்கும் போது அவர்கள் ஈடுபடும் போராட்டம் எப்படி தவறாகச் இருக்க முடியும்.! இது தெரியாத ஒரு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தை பல ஆயிரம் பேரைத் திரட்டி ஈடுபடும் போது டாக்டர் அம்பேத்காரை கைது செய்வேன் என்று பிரிட்டிஷ் அதிகாரி மிரட்டி உள்ளான்.!! அந்த அதிகாரி உடனே டாக்டர் அம்பேத்கரை கைது செய்ய முற்படும்போது டாக்டர் அம்பேத்கர் என்னை கைது செய்ய பிடிவாரண்டு இருக்கா என்று கேட்டு உள்ளார்.. உடனே அவனும் பிடி வாரண்டு தயார் செய்து கொடுத்துள்ளான்.! அந்த பிடிவாரண்டை டாக்டர் அம்பேத்கர் டைப் பண்ணி அதை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தார் அதை பார்த்த பிரிட்டிஷ் அரசு அந்த அதிகாரியை உடனே சஸ்பெண்ட் செய்தது ஏன் என்றால் டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள உலக அறிவாளிகளுக்கான "officer club" சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும்.!! ஆனால் டாக்டர் அம்பேத்காரை அவ்வளவு எளிமையாக கைது செய்ய முடியாது அந்த அதிகாரி இது கூடத் தெரியாமல் இருந்திருக்கிரானே என்பதால் பிரிட்டிஷ் அரசு அவனை உடனே சஸ்பெண்ட் பன்னியது.! உடனே டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷ் அரசிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார் அந்த போலிஸ் அதிகாரியை சஸ்பெண்ட் பன்னுனா மட்டும் போதுமா என்று.? அதற்கு உடனே பிரிட்டிஷ் அரசு அனைத்து பிரிட்டிஷ் அதிகாரிகளையும் வெளியேற்றப்பட்டு அந்த அதிகாரியை பிரிட்டிஷ் நாட்டிற்கே வரவழைத்துக் கொண்டது.!! இந்தியாவில் இருந்து இதுவரை அந்த சங்கத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரை தவிர வேறுயாரும் இது வரை உறுப்பினர் ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.! அண்ணல் அம்பேத்கர் வரலாற்று_பதிவு


செவ்வாய் 05 2023

தேவசகாயத்தின் மீசை....


திருவனந்தபுரம் செல்லும் வழியில், நெய்யாற்றின் கரை எனும் ஊர்.....

அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதி.... உத்ரம் திருநாள் மன்னரின் ஆட்சி....(1846-1860)

ஒடுக்கப்பட்ட ஆண்கள், மீசை வைக்கக்கூடாது என்பது #சட்டம்.. ஆனால், தேவசகாயத்திற்கு

மீசை வைக்க வேண்டும் என்பது ஆசை..

சட்டத்தை மீறினால் அன்றைய மன்னன் ஆட்சி என்ன செய்யும் என்பதும் அவனுக்கு தெரியும்!

ஆனாலும் இளம் காளையான, தேவசகாயம், இதை எதிர்த்து கலகக்கொடியை, கையில் ஏந்தினான்; தனக்குள் ஒரு சமூகப் போராளி உருவாவதைஅப்போதுஅவன்உணரவில்லை... மீசை வைக்கக்கூடாதுஎன்றசட்டத்தைஉடைக்க, திமிறி எழுந்தான்...

தனக்கு மீசை வைத்துத் தர வேண்டும் என்று, சிகையலங்காரம் செய்பவரிடம், பல முறை கேட்டும், அவர் ஒப்புக்கொள்ளவில்லை...

ஒரு வேளை, மீசை வைத்துக் கொடுத்தால், தனது நிலை என்னவாகும் என்ற அச்சம்...

ஆனாலும் விடவில்லை, தேவசகாயம்...


இறுதியில், தேவசகாயத்தின் முகத்தில், முறுக்கு மீசை, குடியேறியது...விடவில்லை ஆட்சியாளர்கள்;துரத்தியது நாயர் பட்டாளம்!

அதே நேரம் மிகவும் ரகசியமாக, தேவசகாயத்தை, திருவனந்தபுரம், திருமலை எனும்இடத்தில்உள்ள,மன்னரின்மாளிகையில், தோட்டக்காரனாக, ஊழியம் செய்ய அழைத்துச் சென்று,ஏற்பாடுகள் செய்தனர் உறவினர்கள்....

ஊழியம் என்பது, திருவாங்கூரின் #தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கருதப்பட்ட மக்கள் எதிர்ப்பு எதுவும் கூறாமல் செய்ய வேண்டிய #கட்டாயமானது;இந்த #ஊழியம் என்பதற்கு #ஊதியம் எதுவும் இல்லை..

அங்கே, அவர்கள், ஊற்றும் #கஞ்சி அல்லது #கூழ் போன்றவை கிடைக்கும் போது குடித்துக் கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்!

கொஞ்சம் நெல்லும் கொடுப்பார்கள்...


மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில், அவரை, எட்டுவீட்டு பிள்ளைமார், போத்திகள், ஆகியோரிடமிருந்து, காப்பாற்றிய, நாடார் சமூகத்தின், உதவிகளுக்காக, திருமலை மாளிகை அருகாமையில் சில நாடார் குடும்பங்களை, மார்த்தாண்ட வர்மா, வசித்துக் கொள்ள அனுமதித்திருந்தார்...

தேவசகாயம், பூந்தோட்டத்தில், தனது வேலையை செய்து வந்தார்..

ஆனால், அங்கே அவருக்கு, சம்பளம் எதுவும் இல்லை... ஏற்கனவே குறிப்பிட்டது போல் வெறும் கஞ்சியும், நெல்லும் தான் கிடைத்தது..

வெகுண்டெழுந்தான், தேவசகாயம் எனும் போராளி..


"எனக்கு, கஞ்சியும், நெல்லும், தேவையில்லை;எனது, பெற்றோருக்குக் கொடுக்க, எனக்கு சம்பளம் தான் வேண்டும்; அதுவும், மன்னரின், #சக்கரம்(எங்கள் பகுதியில், நாணயத்தை இப்போதும் சக்கரம் என்று சொல்லும் வழக்கு உண்டு; அப்போது, சக்கரம் என்ற நாணயமும் உண்டு) தான் வேண்டும்!வேலைக்கு கூலி வேண்டும்; கஞ்சி அல்ல", என்ற, கலகக்குரல், முதன் முதலாக, திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஓங்கி ஒலித்தது! தேவசகாயத்தின் கலகக் குரல்,

திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதும், இடி

முழக்கமாக ஒலித்தது; ஆடிப் போனது அரண்மனை....


தன்னோடு, வேலை செய்த 5 பேரையும்இணைத்துக் கொண்டார், தேவசகாயம்!

ஆனால், விடவில்லை ஆட்சியாளர்கள்..

தேவசகாயத்தையும், சகாக்கள் 5 பேரையும், துரத்திப் பிடித்து, கண் காணத இடத்திற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்து படுகொலை செய்தது, நாயர் பட்டாளம் ...

தனது மண்ணின் மக்கள், படுகொலை செய்யப்பட்ட போதும் கூட, அதற்காக குரல் எழுப்பவோ, ஒரு துளி கண்ணீர் சிந்தவோ கூட, அங்கே அனுமதி இல்லை..


ஆனால், ஜான் காக்ஸ் என்ற கிறிஸ்தவ மிஷனரி, இதை விடவில்லை..

தேவ சகாயத்தின் குடும்பத்தினரையும், சகாக்கள் 5 பேரின் குடும்பத்தினரையும், தனது வீட்டில் பாதுகாப்பாக, மறைத்து வைத்து விட்டு,நேராக,மன்னரிடம்சென்று,நடந்தவற்றை கூறி, தேவசகாயத்தையும், அவரது சகாக்களையும் படுகொலை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்....


அதே நேரத்தில், அரண்மனை அதிகாரிகள், ஆறு உடல்களையும் எடுத்துக்கொண்டு, திருவனந்தபுரம், பொது மருத்துவமனைக்கு சென்றார்கள்....(திருவனந்தபுரத்தில் இப்போதும் இந்த மருத்துவ மனை இருக்கிறது; General Hospital)..

டாக்டர், முல்லர், என்ற ஐரோப்பிய மருத்துவரை சந்தித்து, கொலை செய்யப்பட்ட, ஆறு பேரும், காலரா காரணமாக இறந்து போனதாக, சான்றிதழ் தர வேண்டும் என்று கேட்டனர்; நேர்மையான அந்த மருத்துவர், போலி சான்றிதழ் தர முடியாது என்றும், ஆறு பேரும், கொலை செய்யப்பட்டதாக மட்டுமே சான்றளிக்க முடியும் என்று உறுதியாக கூறினார்..

அப்போது, அரச குடும்பத்தினர் சார்பில், அப்போது, Resident பொறுப்பில் இருந்த, Major General: william Cullen(1840-1860),டாக்டர், முல்லர் அவர்களை சந்தித்து, போலி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கேட்டார்...

முடியவே முடியாது என்று மறுத்து விட்டார் டாக்டர்; 

விடவில்லை டாக்டர் முல்லர்; தேவ சகாயமும், அவரது சகாக்கள் 5 பேரும், படுகொலை செய்யப்பட்டதாக, மதராஸ் நீதிமன்றத்தில், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்..

இறுதியில், கொலையாளிகள்அனைவருக்கும், மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், கொலையாளிகள் அனைவரையும், தண்டிக்காமல் காப்பாற்றி விட்டது, திருவாங்கூர் ஆட்சி....


ஆனாலும், தேவ சகாயங்கள், வருவார்கள்...

அனைத்தையும் தகர்ப்பார்கள்..


முகத்தில் முளைக்கும் ரோமத்தைக் கூட, விட்டு வைக்காத,தேவ சகாயத்தின், ரோமத்தைக் கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள், இறுதியில், அதிகாரங்களை இழந்தது கூட, வரலாறு தான்...


நாடுணர்த்திய நாடார் போராட்டங்ஙள்(மலையாளம்)

பக்கம், 214-219..By.Prof.J.Darwin

கவடியார் தாஸ் எழுதிய ஜோலிக்கு கூலி சமரம் 1854 என்ற மலையாள நூல்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...