பக்கங்கள்

சனி 17 2015

இந்தியாவிலேயே முதன் முறையாக..... மதுரையில்


ஊழல் நீதிபதிகளுக்கெதிராக வழக்குரைஞர்கள் போராட்டம்









ஒரு  பிளாஷ்பேக்...
சில மாதங்கள் முன் ’கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்’ என உத்தரவிட்டார். உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன். இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் தர்மராஜ், செயலாளர் ஏ.கே. ராமசாமி மீது சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டது. இதற்கிடையே மதுரையில் ஆயிரகணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு நீதித்துறை ஊழல் ஒழிப்பு பேரணி ஒன்றை நடத்தினர். இதில் ஊழல் செய்த நீதிபதிகள் என ஒரு பட்டியலை வெளியிட்டார்கள். செப்-14-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ் சிவஞானம் அமர்வு முன் திரண்ட 11 வழக்கறிஞர்கள் ’தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்’ என பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் இடையிலான விவகாரம் உச்சநீதிமன்றம், சட்டமன்றம் வரை ஒலித்து தணலாக தகிக்க தொடங்கியது.
இந்நிலையில்’நாங்கள் அராஜகம் செய்பவர்களல்ல... மக்களுக்காகவே நிற்பவர்கள்’ என்று கூறும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோவன். மேலும் ஒரு உத்தரவு தங்களுக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் அதை மீறும் உரிமையும், போராடுகிற உரிமையும் ஜனநாயத்தில் அனைவருக்கும் உண்டு அப்படி கேள்வி எழுப்பிய மதுரை வழக்கறிஞர்கள் மீது கண்டம்ப்ட் ஆஃப் கோர்ட்னு போட்டுருக்காங்க. அதே சிவில் நீதிபதிகள் பணி நியமனம் சம்பந்தமான உத்தரவில் ஊழல், சாதி பாராபட்சம் உண்டு என நீதிபதி சி.எஸ். கர்ணன் உத்தரவுக்கு உடனே ஸ்டே கொடுக்கிறது அதே உயர்நீதிமன்றம் ஏனிந்த பாரபட்சம்?
’தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும்’ என வழக்கறிஞர்கள் அறவழியில் போராடினர். ஆனால் இதைக் கண்ட தலைமை நீதிபதி, ’நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக காவல்துறையோ வழக்கறிஞர்களைக் கண்டு பயப்படுகிறது. எனவே மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) பாதுகாப்பு நீதிமன்றத்திற்கு வேண்டும்’ என்கிறார். பிப் 19, 2009-ல் போலிஸ் மிகப்பெரிய தடியடி தாக்குதலை, வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் நடத்தியது. அதில் நீதிபதிகள் கூட காயமடைந்தனர். அப்போது கூட கேட்காத மத்திய பாதுகாப்பை இப்போது ஏன் கேட்கிறார்கள்.
சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு கேட்பது வழக்கறிஞர்கள் மீது ஒரு பீதியை உருவாக்கும் செயல் ஆக தற்போது சட்டமியற்றுதல், ஆட்சி செய்தல் இரண்டையும் நீதிமன்றம் தானே எடுத்துக் கொண்டால் இரண்டுக்கும் எதிரான ஜனநாயக போராட்டத்தை மக்களின் நீதிமன்ற பிரதிநிதிகளான நாங்கள் முன் எடுத்து செல்வோம்’ என்றார் அழுத்தமாக.
போலிஸ் உதவி கமிஷனர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”வழக்கறிஞர்கள் மது பாட்டிலோடு வருகிறார்கள், பெண் போலீசை கிண்டல் செய்கிறார்கள், யோகா வகுப்பு நடத்த விடாமல், வழக்கறிஞர் மில்டன், ரஜினி தடுக்கிறார்கள், மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி அதை மேற்கோள் காட்டி சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு தேவை என்கிறார். ஆனால் சட்டமன்றத்தில் பேசிய ஜெ. 5.8.2015ல் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இறுதி ஆணையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். அந்த உத்தரவில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட வில்லை’ என கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம்.
”கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளை இப்படி சிலவற்றில் நீதிபதிகள் மீது புகார்கள் எழுந்து, அது தலைமை நீதிபதிக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு தீர்வுமில்லை, ஜக்கி வாசுதேவ் மீது புகார்கள் இருக்க அவர் நிறுவனம் மூலம் யோகா நடத்துவது சரியில்லை என்று மனு கொடுத்தோம். நீதித்துறை முறைகேடுகள் குறித்து விசாரிக்க தனி முறையை ஏற்படுத்தணும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய பெஞ்ச் பார் ரிலேசன்ஷிப் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள கமிட்டி இருக்கு. அதன் மூலம் செய்யணும். அதைவிட்டு கண்டம்பட் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது” என்றார் ஆணித்தரமாக.
நீதியைப் பெற மக்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது நீதிமன்றம் என்ற அஸ்திவாரம் தான். அந்த அடித்தளத்தில் நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் என்ற இரண்டு தட்டுகளும் சமமான புரிதலோடு இருந்தால் மட்டுமே நீதித் தராசு சரியாக இருக்கும்.
-சே.த. இளங்கோவன்
-நக்கீரன், செப் 30-அக். 02

வெள்ளி 16 2015

“வளரும் தொழில் அதிபர்கள்”

Sardhar Ali என்பவர் Gowri Abira மற்றும் 35 பேர் ஆகியோருடன்
ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு, "டிடர்ஜென்ட்' சோப் பவுடருக்கு ஏகப்பட்ட "டிமாண்ட்' இந்த கிராக்கிக்கு என்ன காரணம் என்பதை ஆராயும் போது தான் உண்மை புலப்பட்டுள்ளது.
இந்த சோப்புப் பொடியில் தண்ணீர் கலந்தால், அதில் இருந்து வரும் வாசனை, பால் வாசனை போலவே இருந்ததாம். இந்த சோப்புத் தண்ணீரை, பாலுடன் கலந்து அங்குள்ள பால் வியாபாரிகள் பாலை விற்பனை செய்து விடுகின்றனராம்! ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனை மேற்கொண்ட, 200 கிராமங்களில், 41 கிராமங்களில் இது போன்ற கலப்படம் நடப்பதை சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்!
பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்!

இந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க, "ஹோமோ ஜினைஸ்' என்ற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி, பாமாயிலை, "குளோபுயூல்ஸ்' - சிறு, சிறு துளிகளாக மாற்றி விடுகின்றனராம்!

சிந்தெடிக்' பால் - செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா?

காஸ்டிக் சோடா.
தண்ணீர்.
ரீபைன்ட் ஆயில்.
உப்பு.
சர்க்கரை.
யூரியா.
இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாதாம்!

அடப்பாவிங்களா? இன்னும் எதைத்தான் கலப்படம் செய்யாம பாக்கி வச்சிருக்கீங்களோ தெரியலியே!

வியாழன் 15 2015

ஒரு ஒய்யாரக் கொண்டையில் இருந்த ஈறும் பேனும்


படம்- வினவு..
கர்நாடகா லோக் ஆயுக்தா : ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
லோக்பாலும் லோக் ஆயுக்தாவும் ஊழலை ஒழிக்க வந்த இரட்டைக் குழல் துப்பாக்கியாக வருணிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழலும் அதிகாரமுறைகேடுகளும் அந்தச் சித்திரத்தில் சாணியை அடித்துவிட்டன. “மற்றவர்கள் ஊழல் செய்தால் லோக் ஆயுக்தாவில் முறையிடலாம்; அந்த லோக் ஆயுக்தாவிலேயே ஊழல் நடந்தால் யாரிடம் முறையிடுவது?” – எனக் கேட்டு விக்கித்து நிற்கிறார்கள் ஊழலுக்கு எதிராகப் போராடிவரும் சமூக ஆர்வலர்கள். எனினும், இந்த விவகாரத்தை இவ்வளவு எளிமையாக – அந்தத் தெய்வத்தையே விசாரிப்பது யார் என்பது போன்ற நாடகபாணி வசனத்திற்குள் சுருக்கிவிட முடியாது.

கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழலில் அந்த அமைப்பின் தலைமையே சம்பந்தப்பட்டிருப்பதுதான் இங்கே கவனங்கொள்ளத்தக்கது. அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ், அவரது உறவினர் கிருஷ்ண ராவ், லோக் ஆயுக்தாவின் இணை கமிஷனர் (Joint Commissioner) சையது ரியாஸ், லோக் ஆயுக்தாவின் தலைமை நிலைய ஊழியரான வீ.பாஸ்கர், ஹோட்டே கிருஷ்ணா – இவர்கள்தான் லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழல், அதிகாரமுறைகேடுகளின் சூத்திரதாரிகள்.
பதவி ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகள்தான் இந்தக் கும்பலின் பலியாடுகள். அத்தகைய அதிகாரிகளைத் தொலைபேசி அல்லது கைபேசி வழியாகத் தொடர்புகொள்ளும் இந்தக் கும்பல், “நீங்கள் இலஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் இருக்கிறது. அதை அமுக்குவதற்கு இவ்வளவு பணம் வேண்டும்; இல்லையென்றால் மானம் மரியாதையோடு ஓய்வுபெற்றுப் போக முடியாது” என மிரட்டிப் பணம் பறித்து வந்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 2013-ல்தான் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் தலைமை நீதிபதியாக பாஸ்கர் ராவ் நியமிக்கப்பட்டார். பாஸ்கர் ராவுக்கு நெருக்கமான இந்தக் கும்பல், அவர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளிலேயே 109 அதிகாரிகளை மிரட்டி, ஏறத்தாழ 180 கோடி ரூபாய் அளவிற்குப் பணம் பறித்திருக்கிறது. அதிகாரிகளை மிரட்டுவதற்கு லோக் ஆயுக்தா தலைமை அலுவலகத் தொலைபேசியையும், அவர்களை மிரட்டி வரவழைத்துப் பேரம் நடத்துவதற்கான இடமாக லோக் ஆயுக்தாவின் தலைமை அலுவலகத்தையும் பயன்படுத்தி வந்திருக்கிறது, இக்கும்பல். திருடன் தலையாரி வீட்டில் ஒளிந்துகொண்ட பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கோ தலையாரி வீடே அலிபாபா குகையாக இருந்திருக்கிறது.
இக்கும்பலால் மிரட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற செயற்பொறியாளர், தன்னிடம் “ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக” லோக் ஆயுக்தாவின் போலீசு கண்காணிப்பாளர் சோனியா நாரங்கிடம் வாய்வழியாகப் புகார் அளித்தார். இதனையடுத்து 23 அதிகாரிகள் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் புகார் அளித்தனர். இவற்றின் அடிப்படையில் சோனியா நாரங்க் விசாரணை நடத்தி, அஸ்வின் ராவ் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார். லோக் ஆயுக்தாவின் துணை நீதிபதி ஆதி சுரேஷ் இந்த ஊழல் குறித்து ஒரு உள் விசாரணை நடத்த உத்தரவிட்டு, பத்திரிகைகளுக்கும் இந்த ஊழல் குறித்த தகவல்களை அளித்தார்.
முதற்கட்ட விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபொழுதே, அவற்றை முடமாக்கும் சதித்தனத்தில் இறங்கினார், தலைமை நீதிபதி பாஸ்கர் ராவ். லோக் ஆயுக்தா போலீசு கண்காணிப்பாளர் சோனியா நாரங்க் நடத்தும் விசாரணைக்குத் தடை விதிக்குமாறு லோக் ஆயுக்தா கூடுதல் போலீசு டி.ஜி.பி பி.எஸ்.மீனாவிடம் தெரிவித்த பாஸ்கர் ராவ், இந்த ஊழல் புகார்களை பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசு விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழல் குறித்து முறையான விசாரணை கோரி லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைமை நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் பெங்களூருவில் நடந்த ஆர்ப்பாட்டம்.
இந்தத் தில்லுமுல்லுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் இன்னொருபுறமோ கர்நாடகா உயர்நீதி மன்றம் லோக் ஆயுக்தா துணை நீதிபதி ஆதி சுரேஷ் உத்தரவிட்டிருந்த உள் விசாரணைக்குத் தடை விதித்தது. சமூக ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும் வழக்கம் போல சி.பி.ஐ. விசாரணை கோர, அதற்கு, “லோக் ஆயுக்தா சுதந்திரமான அமைப்பு; அதனைக் கலைக்க முடியுமே தவிர, அதன் மீது விசாரணை நடத்த உத்தரவிட முடியாது. அதன் விதிகளிலேயே அதனை விசாரிப்பதற்கான வழிமுறைகள் இல்லை” எனத் தெளிவுபடுத்தினார், கர்நாடகா மாநில முதல்வர்.
ஆயிரம் இருந்தாலும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லியாக வேண்டுமல்லவா! இந்த ஊழலை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறது, கர்நாடகா அரசு. அக்குழு அஸ்வின் ராவ் உள்ளிட்ட சிலரைக் கைது செய்ததோடு, அவர்களைத் தமது காவலில் வைத்து விசாரணையை நடத்திவருகிறது. இந்த விசாரணையை ஒரு நாடகம் எனக் குற்றம் சுமத்தியிருக்கிறார், கர்நாடகா லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைமை நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. “பாஸ்கர் ராவ் தனது மகனைக் காப்பாற்ற முயலுகிறார்; மற்றவர்களோ அதன் மூலம் தங்களையும் சேர்த்துக் காப்பாற்றிக் கொள்ள முயலுகிறார்கள்” எனக் குறிப்பிட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை அம்பலப்படுத்தியிருக்கிறார், அவர்.
***
லோக்பால், லோக் ஆயுக்தா மட்டுமல்ல, மைய ஊழல் தடுப்பு கமிஷன் (Central Vigilance Commission), தகவல் அறியும் உரிமைச் சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் (Whistle Blower Act) – என கடந்த சில ஆண்டுகளில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு பல புதிய சட்டங்களும், புதிய அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. குடிமைச் சமூக அமைப்புகளும் தன்னார்வலர்களும் மட்டுமின்றி, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரும் இத்தகைய அமைப்புகளைக் கைதட்டி வரவேற்பதோடு, நிலவுகின்ற அரசியல் கட்டமைப்புக்குள்ளேயே இவற்றின் மூலம் ஊழலையும் அதிகார முறைகேடுகளையும் ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் முயன்று வருகின்றனர். அவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த மோசடியான நம்பிக்கை ஏற்கெனவே பல்லிளித்துவிட்டது என்பதற்கு கர்நாடகா லோக்ஆயுக்தாவையும் தாண்டிப் பல உதாரணங்கள் உள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிறவி ஊனம் கொண்டதாகும். இராணுவம் மற்றும் உளவுத் துறை நிறுவனங்களிடமிருந்து அவற்றின் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெற முடியாதபடி அவற்றுக்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விலக்கின் மூலம் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அந்நிறுவனங்களில் புழுத்து நாறும் ஊழலையும் மறைத்துவிட முடியும். அதேசமயம், மற்ற துறைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இச்சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுவிடுவதும் சாத்தியமானதல்ல.
உச்சநீதி மன்ற நீதிபதிகளின் மருத்துவத்திற்கு அரசு எவ்வளவு செலவு செய்கிறது என்ற விவரத்தைக் கேட்டுத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், “இது நீதிபதிகளின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகும்” எனக் கூறி, அந்த விவரத்தை அளிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது. இப்படி ஒவ்வொரு துறையும் ஏதோவொரு காரணத்தைக் கூறித் தகவல்களை அளிக்க மறுப்பதும், தகவல்களுக்குப் பதிலாக வெற்றுக் காகிதக் குப்பைகளை அனுப்பி வைத்து ஏமாற்றுவதும் இந்த விவகாரத்தில் சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. மேலும், உச்சநீதி மன்றம், சி.பி.ஐ., மத்திய பணியாளர் தேர்வாணையம், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல அரசுத் துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தம்மையும் விலக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்துள்ளன.
இதற்கு அப்பால், தகவல் உரிமை ஆணையங்கள் அரசின் எடுபிடியாகச் செயல்பட்டு வருவதற்குத் தமிழகத் தகவல் ஆணையத்தை முன்மாதிரியாகக் குறிப்பிடலாம். தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் இரண்டு ஆணையர் பதவிகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பாமல் காலியாக விட்டிருப்பதன் மூலம் ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கி வைத்திருக்கிறது, அ.தி.மு.க. அரசு. தகவல்களை உரிய காலத்தில் தராத அதிகாரிகள் மீது அபராதம் விதிக்க வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறிப்பிடுகிறது. ஆனால் தமிழகத் தகவல் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீபதியோ, “அரசு அதிகாரிகள் மீது அபராதம் விதித்து அரசு கருவூலத்தை நிரப்ப நான் விரும்பவில்லை” எனக் கூறி, அதிகாரிகளின் பாதுகாவலனாகத் தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் அதிகாரிகள் தகவல்களைத் தராமல் கிடப்பில் போடுவதற்கான வழியைத் திறந்து வைத்துள்ளார், அவர்.
தமிழக அரசின் விளம்பரங்களுக்காக செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்த விவரங்களைத் தருமாறு சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ. இளங்கோ விண்ணப்பித்த மனுவிற்குப் பதில் தராமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், இது குறித்த விசாரணை தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி முன் நடந்தது. அப்பொழுது சிவ.இளங்கோ தன் முன்னே நாற்காலியில் அமர்ந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, அவர் தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகப் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி அவரைக் கைது செய்ய வைத்தார், ஸ்ரீபதி. அரசிடமிருந்து தகவல் கேட்டால் கைதுதான், சிறைதான் என இதன் மூலம் எச்சரித்திருக்கிறது, தமிழக அரசு.
மைய ஊழல் தடுப்பு ஆணையத்தில் கடந்த ஜனவரி 2007 தொடங்கி செப்டம்பர் 2014 முடிய அதிகாரமுறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக 3,634 புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதில் 1,063 புகார்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதில் 78 வழக்குகளில் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் – இடமாறுதல், பதவி உயர்வும் சம்பள உயர்வும் நிறுத்திவைப்பு என்ற வகையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊழலில் ஈடுபட்ட ஒரு அதிகாரி மீதுகூட கிரிமனல் குற்றவழக்கு தொடர பரிந்துரைக்கப்படவில்லை. இது, ஊழல் தடுப்பு ஆணையம் என்பது சோளக்காட்டுப் பொம்மையைவிட நகைப்புக்குரிய நிலையில் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இப்படி புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் கேலிக்குரியதாக இருக்கின்ற அதேபொழுதில், மோடி அரசோ ஊழல் தடுப்புச் சட்டங்களில் கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது காணப்படும் வீரியத்தையும் பிடுங்கிவிடும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. பொருளாதார வளரச்சிக்குச் சாதகமாக அதிகாரிகளின் சுதந்திரமான செயல்பாடுகளை உத்தரவாதப்படுத்துவதற்கு, ஊழலையும், நேர்மையான பிழையையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டம்-1988-ல் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென நிதியமைச்சரே பரிந்துரை செய்திருக்கிறார். இத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்து நிற்கின்றன. இதன் பொருள் இயற்கை வளங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கைமாற்றிவிடுவதில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளைச் சட்டபூர்வமாக்குவது தவிர வேறில்லை.
இதனையடுத்து, அரசு இயந்திரத்துக்குள் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்துவோரைத் தடுக்கும் நோக்கத்தோடு இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தங்களைச் செய்திருக்கிறது, மோடி அரசு. இதன்படி, ஊழல் புகார்களைத் தெரிவிக்கும் இடித்துரைப்பாளர்கள் தமது பெயர், முகவரியை மறைத்துக் கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்பது கைவிடப்பட்டு, அவர்கள் தமது அடையாளத்தை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும்; ஊழல் புகார்களைத் தெரிவிப்பவர்களை அரசு அலுவல் இரகசியச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என்பதும் கைவிடப்பட்டு, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தும் திருத்தங்களும் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் தேசப் பாதுகாப்பு, அந்நிய நாடுகளில் இருந்து பெறப்படும் பகிர்ந்துகொள்ள முடியாத தகவல்கள், வர்த்தக நலன்கள் ஆகியவை குறித்த புகார்களை விசாரிப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டு, இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் மேலும் நீர்த்துப் போகுமாறு திருத்தப்பட்டுள்ளது.
காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான் லோக்பால் சட்டம் என்ற பஞ்சு மிட்டாய் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஊழலைச் சகித்துக்கொள்ளாத யோக்கியவானாகக் காட்டிக்கொள்ளும் மோடி அரசோ, இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செவது என்ற பெயரில் இந்த பஞ்சு மிட்டா சட்டத்தையும் முடக்கி வைத்திருக்கிறது. இதன் விளைவாக, மைய அளவில் செயல்பட வேண்டிய லோக்பால் அமைப்பை உருவாக்குவதையும் தடுத்து வைத்திருக்கிறது.
இந்தக் குழிபறிக்கும் வேலைகள் ஒருபுறம் நடந்துவர, தகவல் அறியும் உரிமைச் சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் போன்றவை ஊழலை ஒழிப்பதைவிட, அவற்றை ஆதரித்துச் செயல்படுபவர்களைத்தான் அபாயகரமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. தகவல் உரிமை ஆர்வலர்கள் கொல்லப்படுவது இன்னமும் நாடெங்கும் தொடர்ந்து நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் உரிமைச் செயற்பாட்டாளர் மதியழகன் தற்பொழுது குண்டர் சட்டத்தில் கைது செயப்பட்டிருக்கிறார். காரணம், ராசிபுரம் அருகேயுள்ள மோளப்பாளையத்திலுள்ள ஒரு மலையைச் சட்டவிரோதமாக வெட்டியெடுத்ததில் அம்மாவட்ட ஆட்சியர் வரை பலருக்கும் உள்ள பங்கை வெளிக்கொணர்ந்து, அந்தக் கொள்ளையை எதிர்த்துப் போராடியதுதான், அவர் செய்த ‘குற்றம்’. வியாபம் ஊழலை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் பாண்டேவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பை தில்லி போலீசு விலக்கிக் கொண்டுவிட்டதால், அவர் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இருப்பதற்குள்ளேயே கர்நாடகா லோக் ஆயுக்தா அமைப்புதான் உருப்படியானது என்று பேசப்பட்டு வந்த நிலையில்தான், அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறியிருக்கிறது. இந்நிலையில் மற்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் லோக் ஆயுக்தாக்களின் யோக்கியதையைப் பற்றிப் பேச வேண்டிய தேவையேயில்லை. பழைய அமைப்புகள் போலவே இப்புதிய அமைப்புகளும் தமது கடமைகளை ஆற்ற மறுத்து, அதற்கு எதிராகத் திரும்பிவிட்டன. அன்னா ஹசாரேயும் ஆம் ஆத்மி கட்சியினரும் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்டு, இப்புதிய அமைப்புகள் குறித்து உருவாக்கிய பிரமையெல்லாம் தகர்ந்து தவிடுபொடியாகிவிட்டது.
இருப்பவர்களுக்குள்ளே கொஞ்சம் யோக்கியவான் என வடிகட்டிப்பட்டுதான் நீதிபதி பாஸ்கர் ராவ் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரோ புறங்கையை நக்கிவிட்டார். ஆனாலும், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினர் லோக் ஆயுக்தா போன்ற நிறுவனங்களுக்கு இன்னும் ஆகச்சிறந்த, அப்பழுக்கற்றவர்களைத் தேடிப் பிடித்து நியமிப்பதுதான் தீர்வு எனக் கூறி, இந்தப் பொத்தலை அடைத்துவிட முயலுகிறார்கள். இந்த சூப்பர்மேன் தத்துவமெல்லாம் அந்நியன், இந்தியன் போன்ற சினிமாக்களுக்குத்தான் பொருந்திப் போகுமே தவிர, தனியார்மய யுகத்தில் நடைபெறும் ஊழலைத் தடுக்க மயிரளவிற்குக்கூடப் பயன் தராது. நம் கண் இருப்பவர்களெல்லாம் ஸ்ரீபதி, பாஸ்கர் ராவ் போன்ற பசுந்தோல் போர்த்திய புலிகள்தான். அத்திபூத்தாற் போல ‘அப்பழுக்கற்றவர்கள்’ இந்த நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டாலும், அவர்களும் கூடத் தமக்குத் தேவைப்படும் ஊழியர்களுக்கும், தமது நடைமுறைக்கும் ஏற்கெனவே ஊழலால் நிறைந்து இருக்கும் அரசு இயந்திரத்தைதான் நம்பியிருக்க வேண்டும் எனும்பொழுது, இந்த நிறுவனங்கள் கூத்தில் கோமாளி வேடம் போடுவதைத் தாண்டி வேறு எதையும் சாதிக்க முடியாது.
இவையெல்லாம், ஊழல், அதிகார முறைகேடுகளை நிலவுகின்ற அமைப்பு முறையைப் பயன்படுத்திக் கொண்டு ஒழித்துவிட முடியாது என்பதையும், அதற்கு இந்த அமைப்பு முறையைச் சாராத புதிய மக்கள் அதிகார அமைப்புகளை நிறுவ வேண்டிய அவசியத்தையுமே எடுத்துக் காட்டுகின்றன.
– திப்பு
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015

புதன் 14 2015

நீங்கள் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகள்.....

படம்-Prpc Milton Jimraj

ஆவின்றி அமையாது உலகு!
நாம் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகள்

“மாடு ஒரு வாழை மரம்” என்று பொருத்தமாக வருணித்தார் ஒரு கால்நடை மருத்துவர் . மாட்டிடம் கிடைக்கும் நாமறிந்த பாலும், இறைச்சியும் அதன் பங்களிப்பில் ஒரு பகுதி மட்டுமே. இது தவிர மாட்டின் கொம்பு முதல் குளம்பு வரை எல்லா பாகங்களும் பல துறைகளில் முதன்மையாகவும், துணையாகவும் பயன்படுகின்றன. உணவு, பற்பசை, அழகு சாதனங்கள், மருத்துவம், தொழிற்ச்சாலை, ஊர்திகள், விமானம் என மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் மாடின்றி வாழ்க்கையில்லை.


மாட்டை சாணி போடும் ஒரு புனித மிருகமாக சித்தரிக்கும் இந்து மதவெறியர்களே அதைக் கேவலப்படுத்துகிறார்கள். வரலாற்றில் ஆநிரை மேய்த்தலுடன்தான் மனித வாழ்க்கை துவங்கியது. மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, ஆறறிவு உயிரினமாக வடிவமைத்துக் கொண்டதில் கால்நடை இறைச்சி ஒரு முக்கியக் காரணமாகும். அதன்பின் பரிணமித்த நாடோடி வாழ்க்கையிலும் சரி, நிலையான விவசாயத்திலும் சரி, நிலையான விவசாயத்திலும் சரி கால்நடைகள், குறிப்பாக மாடு மனித குலத்திற்கு அளப்பரிய சேவையை செய்தன.


மனிதனது அறிவு, அனுபவம், வாழ்க்கை அனைத்திலும் மாடுகள் கொண்டிருக்கும் உறவென்பது இன்று நேற்றல்ல, பல்லாயிராமாண்டு பழமை வாய்ந்தது. ஏடறியாத வரலாற்றின் தொன்மைக் காலத்தில் இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சியும், புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடியும் கண்டம் விட்டுக் கண்டம் நடந்த மனிதனோடு மாடுகளும் நடந்தன. இன்றும் ஜெட் விமானங்களின் இயந்திர உராய்வைத் தடுக்கும், மசகு எண்ணெயில் கலந்திருக்கும் கொழுப்பின் மூலமாக மாடுகளும் மனிதனை ஏந்திப் பறக்கின்றன.

மாட்டிறைச்சியின் மகத்துவம்
மாட்டின் வயிறு நான்கு அடுக்குகளாய்ப் பிரித்து உணவுப் பொருளைக் கட்டம் செரிக்கின்றது. மனிதன் எளிதில் உட்கொள்ள முடியாத, ஆனால் மனித உடலுக்குத் தேவையான பல்வேறு தாவரங்களை மாடு உட்கொள்கிறது. மாட்டிறைச்சியை உண்ணும்போது நாமும் அந்த சக்தியைப் பெறுகிறோம். மேலும் ஏனைய இறைச்சிகள், தாவரங்களைக் காட்டிலும் மாட்டிறைச்சியில்தான் அதிகமான இரும்பு மற்றும் துத்துநாக சக்தியும்(Iron & Zinc) இருக்கின்றன். பசலைக் கீரையின் சாறு ஒரு லிட்டரில் இருக்கும் இரும்புச் சத்தை பெற மாட்டிறைச்சியின் 90 கிராமே போதுமானது.

மேலும் இச்சத்துக்கள் மனிதனது வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடற்சக்திக்கும், சோர்வின்மைக்கும், நினைவுத் திறனுக்கும் அவசியமானவை. அடுத்து, இச்சத்துக்களை தாவரங்களிலிருந்தே பெறலாமென சைவ உணவு வெறியர்கள் வாதிடுகின்றனர். உன்மை என்னவென்றால் தாவரங்கள் மற்றும் அதன் மருந்து வகைகளிலிருந்து மனித உடல் 3 சதவீத்தை மட்டுமே உறிஞ்சிக் கொள்கிறது. ஆனால் மாட்டிறைச்சியிருந்து 23 சதவீதசத்தை நமது உடம்பு ஏற்கிறது. மேலும் அன்றாடம் மாட்டிறைச்சியை உண்ணும்போது நமது உடல் தாவரங்கள் மற்றும் அதன் மருந்துகளிலிருந்து மேலதிக சக்தியை உறிஞ்சும் ஆற்றலையும் பெறுகிறது.

நையாசின், வைட்டமின் டி போன்ற சத்துக்களும், ரத்தத்தின் சிவப்பணுக்களை விருத்தி செய்து நரம்பு மண்டலங்களைப் பாதுகாக்கும் ‘வைட்டமின் 12’(இந்த வைட்டமின் ஏனைய தாவர, விலங்குகளிடம் அதிகம் கிடைக்காத ஒன்று) மாட்டிறைச்சியில் அபரிமிதமாக கிடைக்கின்றன.

வாழ்க்கை முழுவதும் அரைப்பட்டினி நிலையிலேயே வாழும் தலித் மக்களின் ஆரோக்கியத்தை ஓரளவேனும் பராமரிப்பது மாட்டிறைச்சி என்றால் மிகையல்ல. உண்மையில் தரமான மாட்டிறைச்சியைக் குழந்தைப் பருவம் முதல் சாப்பிட்டு வந்தால் இந்திய மக்களின் சராசரி உடல் எடை, உயரம் அதிகரிப்பதோடு நோயற்ற ஆயுள் சராசரியும் வெகுவாக நீளும். பசுவின் புனித மென்ற பெயரில் பார்ப்பனியம் நமது உடல் நலனுக்கு எவ்வளவு பெரிய தீங்கிழைத்திருக்கிறது என்பதை அறிக.

இதுவரை சைவமென்று நினைத்துக் கொண்டிருக்கும் பல்வேறு உணவுப்பொருட்களில் மாடு உள்ளது. மாட்டு எலும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின் என்ற புரதக் கூழைச் சேர்த்தே ஐஸ்கிரீம், இனிப்புத் தயிர்க்கட்டி (யோகர்ட்) தயாராகிறது. மேலும் சாக்லேட், சூயிங்கம், பழச்சாறு, ஒயின், பீர், பிஸ்கட் வகைகளிலும் மாடு கலந்திருக்கிறது. மனிதனால் செரிக்க முடியாத மாட்டின் பாகங்கள் கால்நடை, செல்ல விலங்கு, கோழி, மீன் ஆகியவற்றின் தீவனமாக நுகரப்படுகிறது.
மாட்டின் மருந்துப் பொருள்கள்
மருத்துவ உலகம் தான் கண்டுபிடித்திருக்கும் பல அரிய உயிர் காக்கும் மருந்துகளுக்காக மாட்டுக்கு பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இம்மருந்துகளில் சிலவற்றை செயற்கை முறையில் தயாரிக்க முடியுமென்றாலும் அவற்றின் விலை அதிகமாகும்.
உலகின் சர்க்கரை நோயாளிகளில் அதிகம் பேர் இந்தியாவில் தான் வாழ்கிறார்கள். சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் மருந்து மாட்டின் கணையத்திலிருந்தே தயாரிக்கப்படுகிறது. ஒவ்வாமை, மூட்டு முடக்குவாதம் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான ‘ஹெபரின்’ மருந்து, தைராய்டு சுரப்பிகளை இயங்க வைக்கும் ‘தைராபிடின்’, டெட்டனஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ‘பாரா தைராய்டு ஹார்மோன்கள்’, அறுவைச் சிச்சையின்போது ரத்தப்பெருக்கை குறைத்து உறையை வைக்கும் ‘க்ளுக்கோன்’, காயங்களை சுத்தம் செய்யும் ‘ட்டிரிப்சின்’ மற்றும் ‘குரோமோட்டிப்சின்’ , புண்களின் சீழை வடிய வைக்கும் ‘டிஅக்ஸி ரைபோ நியூக்கிலியேஸ்’, இருதயத்தின் ரத்த அடைப்பை நீக்கும் ‘பிப்ரிநோலெஸிக்’ போன்ற அரிய மருந்துகளையும் மாடு அளிக்கின்றது.
மேலும் எய்ட்ஸ் நோய்க்கு பயன்படும் ‘பிடல் காப் சீரம்’ புற்றுநோய் சிகிச்சைக்கான ‘ஆல்புமின்’ ஆகியவற்றையும் மாடு தருகின்றது. பசுவை புனிதத்தின் பெயரில் ஒதுக்கி வைத்தால் அவ்வரிய மருந்துகள் கிடைக்காது என்பதோடு, ஏழைகளே மிகவும் பாதிக்கப்படுவர்.
தோல் பொருட்கள்

அதிகமான கால்நடைகள் வாழும் இந்தியா இயல்பாகவே தோல் உற்பத்தியால் முண்னணி வகிக்கின்றது. காலணி, கைப்பை, பெட்டி, பர்ஸ், தொப்பி, பெல்ட், துணிவகை, செல்போன் உறை, கார் இருக்கை உறை, விலங்குகளின் கழுத்து, இடுப்பு பட்டைகள் முதலானவை மாட்டின் பங்களிப்பகளாகும்.

அழகு சாதனப் பொருட்கள்
மாடின்றி அழகு சாதனப்பொருட்கள் ஒன்று கூட தயாரிக்க முடியாது. முகச்சவர கிரீம்கள், லோசன்கள், குளியல் மற்றும் சலவை சோப்புகள் , சிவப்பழகு களிம்புகள் , பற்பசைகள், மணம் வீசும் செண்டுகள், கூந்தலைப் பராமரிக்கும் ஷாம்புகள், தலைக்கு பூசப்படும் பல வண்ணச் சாயங்கள் அனைத்திலும் மாடு இருக்கிறது.
இதர பயன்பாடுகள்
பெயிண்ட், டிஸ்டம்பர், பிளைவுட், புகைப்படச் சுருள், மெழுகுவர்த்தி, பென்சில்கள், கோட்டு பட்டன்கள், இசைக்கருவி நரம்புகள், டயர், மசகு எண்ணெய், கீரிஸ், பிளாஸ்டிக் சிமெண்ட் அச்சுகள், வெடிமருந்து, உரம், அச்சு மை, தாளின் வழவழப்பு, சலவை நோட்டின் விறைப்பு, தீயணைப்பு பொருட்களின் நுரை ஆகியவற்றில் மாட்டின் பாகங்கள் சேர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் சரி, ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் சரி, மாடு இல்லாமல் எவரும் வாழ முடியாது.
\ஒருவேளை இந்து மதவெறியர்கள் இப்படியும் கூறலாம். “இதுவரை மாட்டின் மூலம் கிடைக்கின்ற மருந்துகள், பொருட்களை அறியாமல் பயன்படுத்தி விட்டோம். இனி மறந்தும் கூடப் பயன்படுத்த மாட்டோம்”. அப்படி உறுதியாகப் பின்பற்றினால் இந்து மதவெறி அமைப்புகளை இந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியும் பணியை நாம் செய்ய வேண்டியதில்லை. ‘கோமாத’ வே பார்த்துக் கொள்ளும்.
-ஸ்பார்ட்டகஸ்
புதிய கலாச்சாரம், அக்டோபர் 2003

செவ்வாய் 13 2015

தனயனை தடுத்த தாய்.....

படம்-jaghamani.blogspot.com

ஆண்டைகளின் விட்டு
பணியினை முடித்து
வீடு வந்து
சேர்ந்த அம்மா..
தன் மகனுக்கு
உணவு தயாரித்த
முன்னிரவின் போது


தன்வீட்டு மரக் கிளையில்
ஒளிவிட்டு திரிந்த
மின்மினி பூச்சிகளை
 பிடிக்க எத்தனிக்கும்
தன் மகனிடம்...............

வேண்டாம் மகனே
மின்மினி பூச்சிகளை
பிடித்தால்.அவை
உன்   கையை
சுட்டு  விடும்
என்று அடுப்பு
எரித்த போது
சுட்ட தன்
கையை காட்டி
தனயனை தடுத்தால்
அந்தத்..தாய்....

.

திங்கள் 12 2015

கேள்வி இங்கே.. !!!...பதில். எங்கே...???

மேலும் அறிய......கிளிக் செய்க...

பசுவின் பிள்ளைகளே?


ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீ காரர்கள் யாருக்கேனும் 

இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை

 வால்மீகி ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அப்படியே தமிழில்

 மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
**************




பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் 

குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் 

தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் 

அழைப்பது ஏன்?




பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை 

பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த 

கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை 

நிரூபிக்கட்டும்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...