பக்கங்கள்

சனி 11 2016

இனி வக்கீல்கள் சைகையால் வாதாட வேண்டியதுதான்.

நண்பர் ஒருவரை சந்தித்தபோது ஒரு தகவலை சொன்னார் .. மதுரை அய் கோர்டில் ஒரு வக்கீல் சத்தமாக வாதிட்டதால் அவர்மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றார். 

அப்போது அவரிடம் எனது அனுபவத்தையும் நடப்பையும் சொன்னேன்.


சுத்தமாகவே... சென்னை  உயர் நீதி மன்றத்திலும் சரி, மதுரை கிளை உயர்நீதி மன்றத்திலும் சரி, வக்கீல்களோ.. நீதபதியோ... பேசுவது.. நல்ல காது உள்ளவர்களுக்கே  அதாவது நல்லா கேட்கும் திறன் உள்ள .(கூடியிருக்கும்) வக்கீல்களுக்கே .ஒன்னும் கேட்காது. இப்படி அவர்களுக்கே.கேட்காததை. நிதிபதி என்ன சொன்னார் என்று சக வக்கீல்களை கேட்டுத்தான் அவர்களே தெரிந்து கொள்வார்கள்.

இதில். தனியாக உட்கார வைக்கப்பட்டு இருக்கும் வழக்குக்கு சம்பந்தபட்டவர்களுவர்களுக்கு  தனது வக்கீல் என்ன பேசினார். அதற்கு நீதபதி என்ன சொன்னார். என்பது பற்றி  சுத்தமாக ஒரு எழவும்  புரியாது

இந்த லட்சனத்தில் வழக்குரைஞர்களை ஒடுக்கும் சட்டத்தை  பேசி முடிக்கும் வரை அமுல்படுத்த மாட்டோம் என்று கூறியதாக தமிழ்நாடுபார் கவுன்சில் தலைவர் சொல்லியதை தெரிந்து  கண்டே.. மதுரைக்கிளையில் ஒரு வக்கிீல் சத்தமாக வாதிட்டார் என்பதற்க்காக  அவர் மீது  வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. என்றால் அதுக்கு பேரேன்ன ஒடுக்கு முறைதானே! இதுதான் நீதிபரிபாலனமாம்.....ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே.........


இனி, என்ன.. வக்கீல்கள், வாய் மொய் பொத்தி,கண்ணை மூடிக் கொண்டும், சைகையால் பேசிக் கொண்டும் நீதி கேட்டு வரும் மக்களுக்கு நிதி வாங்கி கொடுக்க வேண்டியதான்....என்று பேசியபோது  நண்பர் சொன்னார். இதுவும் இன்னொரு போலீஸ் நிலையம் தான்.என்று.




வெள்ளி 10 2016

ஒரு அதிகாரி தன் கடமையை செய்திருந்தால்...



ஒரு அதிகாரி
தன் கடமையை
சரியாக செய்து
இருந்தால்..அவர்
போட்டி இட்ட
மற்ற வேட்பாளர்களை
விட அதிக
வாக்குகள் பெற்று
வித்தியாசத்தில் வெற்றி
பெற்று இருப்பேன்
என்று இருந்ததை 
படித்தபோது. எப்படி
கன்டெய்னர் லாரியை
மீறிய வெற்றியா...?
என்றார் நண்பர்.



புதன் 08 2016

வாதத்தில் வென்ற வக்கீல்



அதிகாலை கனவுகள 2 வை படித்த என் நண்பர் ஒருவர் வக்கீல்கள் மத்தியில் பெருமையாக உலாவி வருகின்ற  “வாதத்தில் வெற்றி கண்ட வக்கீல்லைப்பற்றி..ஒரு கதையைப் பற்றிச் சொன்னார்.

தன் மனைவியானவர் அடுத்த ஒருவருடன் உறவு கொணடு இருந்ததை பார்த்த கனவன்.. உறவில் இருந்தவன் தப்பி ஓடிவிட. அகப்பட்ட தன் மனைவியை கோபத்தில் கண்ட துண்ட வெட்டி படுகொலை செய்துவிட்டான் அந்தக் கனவன்.

தன் மனைவியை கொலை செய்தவனுக்கு  தூக்கு தன்டனை விதித்தது நீதிமன்றம். . அந்தக் கொலைகாரனோ தனக்கு சார்பாக வாதாடிய வக்கீடம் என்னய்யா..இப்படி எனக்கு தூக்கு தண்டனை  என்று கேட்டபோது. அந்தக் கொலைகாரனிடம். வக்கீல் சொன்னாராம் கவலைப்படாதே எப்படியும் உனக்கு விடுதலை வாங்கித் தருவேன் என்று.

மனைவியைக் கொன்ற கொலைகாரனை தூக்கில் போடும் நாள் வந்தது. அப்போது கொலைகாரனின் வக்கீல் அவனிடம் நான் சொல்வது மாதிரி சொல் என்றாராம். கொலைகாரனும்  சரி என்று தலையாட்டினான்.

தூக்கு போடுவதற்கு  முதல் நாள் நீதிபதி. அந்தக் கொலைகாரனிடம் உன்னுடைய கடைசி ஆசை என்ன என்று கேட்டாராம். அப்போது அந்தக் கொலைகாரன் வக்கீல் சொல்லிக் கொடுத்ததை சொன்னபோது.. நீதிபதி கோபம் கொண்டு அவனை இன்றைக்கே தூக்கில் போட உத்தரவிட்டபோது.

கொலைகாரனின் வக்கீல் தன் வாதத்தை சொன்னாராம். அய்யா.இவன் இப்படிச் சொன்னதற்கே   கோபப்படுகிற நீங்கள்.. அடுத்தவருடன் தன் மனைவி சேர்ந்திருப்பதை பார்த்த இவனுக்கு வந்த கோபத்தில்தான் கொலை செய்துவிட்டான் என்றார். வக்கீலின் வாதத்தை ஏற்ற நீதிபதி மனைவியை கொலை செய்த  அந்தக் கனவனை விடுதலை செய்ய உத்தரவிட்டாராம்..

இந்தக்கதை.. ஒவ்வொரு.நீதிமன்ற வளாகத்திலும் வக்கீல்கள் மத்தியில் வக்கீலின் வாத திறமைக்கு சான்றாக உலாவுவதாக சொன்னார். இருப்பினும் அதிகாலை கனவுகள்2ல் பற்றி அவர் சொன்ன தீர்ப்பு சரியில்லை..


நண்பர் சொன்ன கதை இது நிஜமோ..பொய்யோ எப்படி இருந்தாலும்.. புராண இதிகாச கதைகள் மாதிரி ஒவ்வொரு துறையிலும் இது போன்றதங்கள் துறை சார்ந்த பெருமையை பீத்திக்கிற கதைகள் தொன்று தொட்டு உலாவிக் கொண்டுதான் இருக்கிறது..


செவ்வாய் 07 2016

அதிகாலை கனவுகள்-2



கனவில் அறிந்த நீதி. நிஜத்தில் மறந்த நீதி,

முகம் தெரிந்த ஒருவரிடம்.. முகம் தெரியாத ஒருவர் அழுது கொண்டு தன் குறையை அவரிடம் சொல்கிறார்

முகம் தெரிந்தவருக்கு பழக்கமான ஒருவரின் பெயரை குறிப்பிட்டு பழக்கத்தின் அடிப்படையில் கடன் கொடுத்தேன். கடந்த ஒரு வருடமாக வட்டி எதுவும் தரவில்லை. சரி கொடுத்த பணத்தையாவது தரச் சொல்லி கேட்டும்.  பல நாட்களாக வாய்தா சொல்லியும் பணம் தரவில்லை. சண்டையிட்டு கேட்டபோது..ஒரு பொய்யைச் சொல்லி சரியாய் போய்விட்டது,  பணம் தர முடியாது. செய்வதை செய் என்கிறார். தாங்கள்தான் எப்படியாவது அவரிடம் பேசி கொடுத்த பணத்தில் பாதியையாவது கொடுக்கச் சொல்ல வேண்டும் என்றார்.

முகம் தெரிந்தவரோ...கடன் வாங்கியவரை கூப்பிட்டுவரச் சொல்லி ஒரு ஆளை அனுப்புகிறார். அவர் வரட்டும். தாங்கள்  அடிதடியின் போது நடந்த வகையிலஉண்மை விவரத்தை சொல்லுங்கள் என்றார்.

முகம் தெரியாதவர் சிறிது நேர அமைதிக்குப்பின்.  நடப்பு விவரத்தை சொன்னார். 

கொடுத்த கடனுக்கு வட்டி கேட்டு போகும்போது  கடன் வாங்கியவரின் மனைவிக்கும் கடன் கொடுத்தவருக்கும் நட்பாகி அது காதலாக வளர்ந்து இருந்தது. அந்தக் காதலின் பயனாக கடன் வாங்கியவரின் மனைவிக்கும் வட்டியில்லாமல் பணம் கொடுத்துள்ளார்.

ஒருநாள் கடன் கொடுத்தவருக்கு அவரின் குடும்பத்தில்  வேறு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டது..அந்த சிக்கலை தீர்ப்பதற்க்காக கடன் வாங்கியவரிடம் சென்று தன் குடும்ப சிக்கலைச் சொல்லி தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு இருக்கிறார். கடன் வாங்கியவரோ..வாங்கிய கடன் பணத்தை திருப்பித் தராமல் நாட்களை கடத்திக் கொண்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நெருக்கி பிடித்து  சண்டையிட்டு அடிதடியாகி பணத்தை கேட்டபோது.. கடன் வாங்கியவரின் மனைவியுடன்  கடன் கொடுத்தவர் தொடர்பு வைத்திருந்து  பலமுறை உறவு கொண்டதால் நீ கொடுத்த பணமும் வட்டியும் சரியாப் போச்சு, பணம் தரமுடியாது என்று ஒரு பானத்தை வீசினார்..

அதிர்ந்து போன கடன் கொடுத்தவர். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தபடி  கடன் வாங்கியவரின் மனைவிக்கு  அவர் வாங்கிய கடன்  பணத்தை விட அதிகம் செலவழித்து உள்ளதாகவும் தெரிவித்து. அந்த பணம் கூட எனக்குத் தர வேண்டாம். இவர் வாங்கிய கடனில் பாதியாவது  நீங்கள் தரச் சொல்லுங்கள்  என்று  மேற்கண்ட முகம தெரிந்த நண்பரிடம்  மேற்கண்டவாறு அழுது முறையிட்டு கொண்டு இருந்தார்.

கடன் வாங்கியவர் வந்தவுடன் அவரிடம் நடந்த விபரத்தைக் கேட்டார்.

கடன் வாங்கியது உண்மைதான். அந்தக் கடனுக்கு வட்டி வாங்குற சாக்கில் என் பொண்டாட்டிகூட எத்தினவாட்டி படுத்திருப்பான். வேறு ஒருத்தனா இருந்தா இன்னேரம் வெட்டி கண்டதுண்டமா ஆக்கியிருப்பான்ல...எதோ ஒரே சாதிசனமா இருந்ததினாலும் உங்க்கிட்ட பழக்கமா இருக்கானே என்றுதான் விட்டு வைத்திருக்கேன்...இந்த லெட்சனத்தல தாய..ஒளி பணத்த கொடுன்னு கேட்கறான். எவ்வளவு நெஞ்சழுத்ம் இருக்கன்னு பாரேன்  என்று கடன் வாங்கியவர். வந்தவர் கோபமாக  பேசிய பொழுது.

முகம் தெரியாதவர். அவரை சத்தம் போட்டு அமைதி படுத்தினார்.

இருவரும் அவருக்கு முன் அமைதியாக இருந்தனர்..முகம் தெரிந்தவர்  செல்போனில் பேசி முடித்த்தும்.இருவரிடமும் பொதுவான் நடைமுறைகளை பேசிவிட்டு தான் சொல்படி இருவரும் நடந்தால் இரு வீட்டாருக்கும் நல்லது என்று கூறிவிட்டு பல விசயங்களை பேசி .இருவருக்கும் பொருத்தமான் ஒரு நீதியையும் தீர்ப்பையும் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல இருவரும் சரி...சரி...சரி என்று அவர் கூறியபடியே நடப்பதாக கூறிவிட்டுச்  நிம்மதியுடன் சென்றனர்.

முகம் தெரிந்த நபர் சொன்ன தீர்ப்பும் நீதியும் என்னவென்று  கனவில் தெரிந்து இருந்த எனக்கு.. விடிந்த பின்... முகம் தெரிந்தவரின் முகமும் அவரின் சொன்ன தீர்ப்பும் நீதியும் நினைவுக்கு வரவில்லை நானும் முயற்சித்தும்  எனக்கு தலைவலிதான் வந்த்து.

படித்துவிட்ட நண்பர்கள் அவர் என்ன தீர்ப்பு சொல்லி இருப்பார் என்று, தாங்கள் அறிந்தவற்றை தெரிந்தவற்றை சொன்னால் கனவில் கண்ட அந்த்த் தீர்ப்பு இதுதான் என என் நினைவுக்கு வருகிறதா..என்று சரி பார்த்துக்கொள்வேன்.

திங்கள் 06 2016

மீசையா?...முக்கியம், மூக்கு தானே முக்கியம்...!!



அவரை பார்க்கும் போதெல்லாம் இவருக்கு வித்தியாசமாக தெரிந்தார் அவர். அது என்ன வித்தியாசம் என்று இவருக்கு தெரியவில்லை. ஆனால்  அவரிடம் வித்தியாசம் தெரிந்தது உண்மை. வேலைகளில் முழ்கி அலைந்து திரிந்த்தால் அந்த வித்தியாசத்தை அறிய முடியாமல் தள்ளி வைத்துவிட்டார்.

ஒருநாள், வேலைகள் எல்லாம் முடிந்து ஓய்வாக இருந்த சமயத்தில் அவரின் நிணைவு வந்தது இவர்க்கு. அப்படிநிணைவு வந்தவுடன் அந்த நிணைவை ஒதுக்கி தள்ளி விடாமல் உடனே தன் செல்போனில் அவருடைய எண்ணுக்கு தொடர்பு கொண்டார். மறுமுனையில் அந்த கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. அத்தோடு அவரும் அதை மறந்துவிட்டார்.

திரும்பவும் ஒருநாள். இவர் தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த வேளையில். அவர் வருவதைப் பார்த்தார்.. எதோ யோசனையில் சென்றவரை அவர் பெயர் சொல்லி அழைத்தார் இவர்.. அவர் இவரைக் கண்டதும் ஆச்சரியப்பட்டவர் போல் காட்டி, முகத்தில் புன்னகை தவழ இவரிடம் வந்து நின்றார் அவர்.

வந்தவருக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்து..தான் கைப்பேசியில் தான் தொடர்பு கொண்டதை தெரிவித்தார் இவர். அவர் கைப்பேசியில் சார்ஜ் இல்லை என்பதை தெரிந்து. கொண்டவுடன்...அவரிடம் தெரியும் வித்தியாசத்தை பற்றிக் கேட்டார். அவரும் நான் சொல்வது இருக்கட்டும் அந்த வித்தியாசம் என்னவென்று தாங்கள் கண்டுபிடித்து சொல்ல முயலுங்கள் என்றார் அவர்.

அவரும் இவரை நன்றாகப் பார்த்துவிட்டு.. தெரியுது.. ஆனா என்னவென்று கண்டுபிடிக்க தெரியவில்லை என்றார். பிறகு சிறிது நேரங் கழித்து அவரையே சொல்லச் சொன்னார்.

அவர் இவரைப் பார்த்து சிரித்துவிட்டு சொன்னார். வேறு ஒன்றுமில்லை முன்பு தாடி மீசையுடன் பார்த்திருந்த தாங்கள். இப்போது மீசை தாடி இல்லாமல் என்னை பார்க்கிறீர்கள். அதுதான் வித்தியாசம் என்று அவர் சொல்லி முடிக்குமுன்...இவர்...அட...ஆமாப்பா...ஆமாப்பா..இப்பத்தான் நினைவுக்கு வருகிறது.என்று சொன்னார்.

தொடர்ந்து அவரே சொன்னார். இவருக்கும் அவருக்கும் தெரிந்த நண்பரின் பெயரைச் சொல்லி. தான் தாடி மீசை வைப்பதை பார்த்து ஆசைப்பட்டு எனக்கு போட்டியாக மீசை தாடி வைக்க ஆரம்பித்தார் அவர்.

அவர் கண் பட்டதால் என்னவோ அன்றைக்கு பிடித்த ஜலதோசம் மீசை தாடியை எடுத்த பிறகுதான் விட்டது. ஜலதோசத்துடன்  மூக்கில் புண் ஏற்ப்பட்டு அவதிப்பட்டதைக் கண்டு வீட்டில் உள்ளோர்கள் எல்லோரும். மீசையாக முக்கியம்..மூக்குதானே முக்கியம் என்று என்னை வசைபாட தொடங்கிவிட்டார்கள்...ஜலதோசம் தீராமல் அவதிப்பட்ட தானும் மீசையா முக்கியம் மூக்குதானே முக்கியம் என்று தாடியையும் மீசையும் எடுத்துவிட்டேன்.என்னைப் பார்த்து தாடி மீசை வைத்தவர் எனக்கு முன்பு வந்து. தாடியையும் மீசையையும் தடவி கொண்டு இருப்பது என்னை .நக்கல் செய்வது போல் இருக்கிறது என்று அவர் சொன்ன போது...

இவர் “நமக்கு மீசையா...முக்கியம்... மூக்குதான் முக்கியம் என்றபோது. இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை கேட்டுக் கொண்டு இருந்த சிலரில் ஒருவர்..நமக்கு மீசையா..? முக்கியம். மூக்குதானே முக்கியம் அப்பத்தானே எதிரில் ஒருஆள் பேசிக் கொண்டு இருக்கும்போது ஆள்காட்டி விரலை மூக்குக்குள் விட்டு மூக்கை  நோண்டோ நோண்டுன்னு நோண்ட முடியும் என்று சொல்ல அது கேட்டு இன்னொருவர். ஆமாம.. அந்த மூக்கீல் நிறைய மூக்கு பொடியை திணிக்க முடியும்   என்று பதிலுக்கு சொல்ல  அடுத்த ஒரு அறிவாளி, “ஆமா மூக்கு இருந்தால்தானே  இழுத்துவிட்ட புகையை மூக்குவழியாக விட முடியும்” என்று சொல்ல இவரும் அவரும்  அவர்களுடன் சேர்ந்து பலரும் சிரித்தார்கள்.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...