பக்கங்கள்

சனி 31 2015

அட..கொக்கா..மக்கா.....!!!!

டேய் நாதாரிகளா.... என்ன.... என்னடா..நிணச்சிங்க..
உங்கள கொத்தியே சாகடிப்பேன்டா...
டேய் மனிதா உன் புத்திய என்கிட்டயே காட்டூறீயா...
தொலைச்சு புடுவேன்.... ஓடுடா........!!!!

 குரங்கையும்
மனிதனையும்
கழதைப்புலியையும்
ஓட ஓட விரட்டும்
தீக்கோழி

வெள்ளி 30 2015

குடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.....?????






விடாமல் செல் போன் ஒலித்தபோது..  நேத்து சாப்பிட்ட அயிட்டங்களினால் முத்து ,கழிப்பறையில் அவஸ்தை பட்டுக் கொண்டு இருந்தான். அதனால் போன் அடித்தவனை சபித்தபடி முக்கி முனகிக் கொண்டு இருந்தான். சிறிது கழித்து,  கழிப்பறை அவஸ்தையில் சற்று ரிலீசாயி வெளியே  வந்து செல்போனை எடுத்து பார்த்தான்...

ஆன் செய்து... பேசினான் “ என்னடா..மாப்பிள்ள..... என்னடா...”....

“......................”????


“பாத்ரூம்ல இருந்தேன்டா.....,.”.

.“....................””

சரி, அத விடுடா..... நீ  இப்ப எங்கடா..... இருக்க.....”???

”...........................................”....

என்னடா..காலங்காத்லா.... மூனாம் நம்பர் கடையில இருக்க..... என்னடா  நடந்தது.

“.........................”

சரி, நீ அங்கேயே  இரு... இதோ வந்துடுறேன்டா...மாப்ளே....ஃஃஃஃஃ

 மூனாம் நம்பர். அரசு மதுபானக்கடை.....அதன் அருகில் இருந்த அருந்தகத்தில் இருளாண்டி ஒரு  முழுப்பாட்டிலுடன் அமர்திருந்திருந்தான்.  மதுபான அருந்தகத்தின் வாசற்படியை முத்துவை எதிர்பார்த்து அடிக்கடி பார்த்துக் கொண்டான்.

மதுபான  அருந்தகத்தில் நுழைந்த முத்து, “ இருளாண்டி உட்கார்ந்து இருக்கும் இடத்தை நோக்கிப் போனான்.

முத்துவைப் பார்த்ததும் இருளாண்டி...கத்தினான்..“ மாப்ள.... செய்தி தெரியுமா.??.. அவளுக்கு கல்யாணம் நிச்சயமாயிருச்சு மாப்ள..... “என்னய அவ மோசம் பன்னிட்ட...டா மாப்ள....” வருங்கால கனவனுடன் சேர்ந்து என்னப்பார்த்து சிரிக்கிறடா... ,அந்த ஏமாற்றத்த என்னால   தாங்க முடியல.டா... அதனாலத்தான் காலையில... இங்க வந்திட்டேன்டா.... மாப்ளே.....


 நிஜமாவாடா.. மாப்ள.... ஒனக்கு எப்படிடா... தெரிஞ்ச்சு - முத்து கேட்டவுடன், இருளாண்டி  படத்துடன்  வந்த  செய்தி பேப்பரை காண்பித்தான்.. 

 டேய்...ஆமாடா  மாப்ள.... உன்ன ஏமாத்திட்டா..டா..மாப்ள.........  அவ ளால புன்பட்ட  இதயத்தை ஊத்தி ஆத்துவோம்..மாப்ள.....  ஊத்துடா மாப்ள...... என்றான் முத்து.


பக்கத்து இருக்கையில் அமர்திருந்த... குடிமகன்.... பங்காளி..” காதல் தோல்வியா...? பங்காளி... இந்த பொம்பளிங்கலே  இப்படித்தான் பங்காளி நானும் உங்கள் துக்கத்தில பங்கு கொள்கிறேன் பங்காளி  ... அவனும் இவர்களோடு சேர்ந்துக் கொண்டான்.

நாண்காவதாக இருளாண்டி, முத்துவின் நண்பன்  மொட்டையனும் இவர்களோடு சேர்ந்து கொண்டான். நாலு பேரும்  முழுப் போதையில் புலம்பிக் கொண்டு இருந்தனர். 

பேப்பரில்  வருங்கால கனவனுடன் படத்தில் இருந்தவளை பார்த்து திட்டிக் கொண்டு இருந்தனர்.  இருளாண்டி இப்படி புலம்பினான்

“ அடி சண்டாளி. ஒன்னயே மானசீகமாக காதலித்து வந்த என்னய இப்படி ஏமாத்திட்டியேடி....என்னய ஏமாத்தினது இல்லாம  சிரிக்கவும் செய்யிறீய்யா....!!!!.................

“மாபள.... அவள மறக்கக்கூடாதுன்னு அவ படத்த செல் முகப்புல வச்சு பூஜித்து வந்த ஒன்ன இப்படி அநியாமா... ஏமாத்தி தவிக்க விட்டுட்டாளே........ மாப்ளே....அவ பேர்ல..இருக்கிறத எல்லாத்தையும் கலச்சிடுவோம் மாப்ள........

அங்கு வந்திருந்த மற்ற குடிமகன்கள்... இவர்களின் புலம்பலைக்கண்டு ஒருவித ஆதங்கத்தோடு... இருளாண்டி. கையில் வைத்திருந்த  பேப்பரில் இருளாண்டியை ஏமாற்றிய காதலியை ஆவலுடன்  பார்த்தனர்.

அந்தப் பேப்பரில்” இருளாண்டி மானசீகமாய் காதலித்த காதலி ,வருங்கால கனவனுடன்  சேர்ந்து இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தாள..
படம்- https://plus.google.com/photos/115763330284351206140



புதன் 28 2015

கணவனை நம்பி..காதலனை கைவிட்ட கதை..

படம்-thamizhpparavai.blogspot.com
 எப்போதும் தூங்கியவுடன் விடிந்துவிடும்  அதிகாலை  பொழுது. இன்னும் கோகிலாவுக்கு விடியவில்லை... படிக்கையில் புரண்டவாறு விடியலை எதிர்ப்பார்த்து  காத்திருந்தால்.  கோகிலாவுக்கு ...அன்று நெடு நேரத்துக்குப் பிறகே  பொழுது புலர்ந்தது.

பொழுது புலர்ந்வதைக் கண்டதும் சட்டென்று படுக்கையை விட்டு எழுந்த கோகிலா..நேராக கழிவறைக்கு சென்று காலைக்கடன்களை முதல் வேலையாக முடித்தாள் ,பின்  அதிக கோல்கேட் பற்பசையை எடுத்து பிரஸ்ஸால் பல் துலக்கினாள் , அப்படியே குளித்தும் விட்டாள்.. தலையை துவட்டியபடி பீரோவில் முன் உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கொண்டபோதுதான். தன் பரபரப்பை குறைத்தாள். பின் பீரோவைத் திறந்து  ரெண்டு மூன்று சேலைகளை ஒதுக்கிவிட்டு பார்த்தவுடன் பரவசம் கொள்ளும் ஆடையை உடுத்திக் கொண்டவுடன்  ப்ரேன் லவ்லி பேஸ்டை கையில் பிதிக்கி எடுத்து தன் முகத்தில் தடவி பளிச்சிடும்படியாக தேய்த்துவிட்டு. மீண்டும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு தன் அழகை கண்டு பெருமிதம் கொண்டாள்.

பொழுதும் நன்றாக விடிந்து வெயிலும் தலையை காட்டிவிட்டது. தன் கனவனை எழுப்புவதற்க்காக சென்றபோது அவளின் கனவன் முன்பே எழுந்து தன் குழந்தைகள எழுப்பிக் கொண்டு இருந்தான். அவனிடம் சென்று விபரத்தை சொல்லி விடை பெற்றுவிட்டு  மெயின் ரோட்டுக்கு வந்தபோது. மினி பஸ் ஒன்று தயாராக இருந்தது. அதில் ஏறிக் கொண்டாள்.

மினி பஸ்ஸைவிட்டு இறங்கியபோது ஒன்பதுக்கு மேலாகயிருந்தது.. ரெண்டு மூன்று.நாண்கு தெருவைக் கடந்து அவள் பேரைச் சொல்லிக்  அவள் வீட்டைக் கேட்டபோது தெருவுக்கு கடைசியாக போகச் சொன்னார்கள்.  தெருவின்.  கடைசி பகுதிக்கு வந்தபோது குறுக்கால் ஒரு மினி தெரு ஒன்று சென்றது. எந்தப்பக்கம் செல்வது என்று தெரியாமல்,  மீண்டும் அவளின் பெயரையும் வீட்டு உரிமையாளரின் பெயரையும் சொல்லிக் கேட்டாள். அருகிலுள்ள ஒரு  காம்பவுண்டின் வீட்டின் மாடியை காட்டினார்கள்.

ஒரு வழியாக வீட்டைக் கண்டுபிடித்த திருப்தியில் மாடி படிக்கட்டில் ஏறி கதவு அடைத்து இருந்த வீட்டின் கதவைத் தட்டினாள் 

சிறிது நேரத்துக்குப்பிறகு அவளைப்போன்ற பெண்ணோருத்தி கதவைத் திறந்தால். அவளுக்கு இவளைக் க்ண்டதும்  அவளின் முகம் சற்று மாறுபட்டது. அவள் இவளிடம் என்னவென்று கேட்பதற்கு முன்பே.. இவள் பதிலை சொல்லி விட்டாள். நான் பாஸ்கரனை பார்க்க வேண்டும் என்று..

கதவைத் திறந்தவள் எதற்கு என்பதற்கு ?? முன்பாக பாஸ்கரன் என்பவன் நந்தினி  என்று குரல் கொடுத்து நந்தினியின் கையைப்பிடித்து வீட்டிற்குள் சென்று அவளிடம் கிசு கிசுத்தான். பின்பு  வாசல் பக்கம் வந்து அதுவரை நின்று கொண்டு இருந்த கோகிலாவை வீட்டிற்குள் வருமாறு அழைத்தான்.

வீட்டிற்குள் வந்த கோகிலாவிற்கு அமர இருக்கையை போட்டுவிட்டு அவள் முன்னே தானும் ஒரு இருக்கையை போட்டு அமர்ந்தான். அந்த நேரம் நந்தினி ஒரு கூடைப் பையை கையில் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டு இருங்கள் கடைக்கு சென்று வருகிறேன் என்று கதவை  இலேசாக சாத்தியவண்ணம் பாஸ்கரனை பார்த்து கண்களால் சைகை காட்டிவிட்டு வெளியே சென்றாள்.

நந்தினி வெளியே செல்லும் வரை அமைதியாக இருந்த கோகிலா,  பாஸ்கரனை கட்டிப்பிடித்துக் கொண்டு “ஓ” வென் அழுது  புலம்ப ஆரம்பித்தாள்.

உன்னை நம்பி வந்த  என்னை, இப்படி மோசம்  செய்துவிட்டாயே..பாஸ்கரா...??

முதலில் அழுகையை நிறுத்து கோகிலா, சத்தம்போட்டு அழாதே.. என்று பாஸ்கரன் சொன்னபோது, அவனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு. கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு  மீண்டும் பேசினாள்... பாஸ்கரா ஏன்? இப்படி, என்னை  கை விட்டு விட்டாய்...

“கோகிலா, அழுகையை நிறுத்திவிட்டு , நன்றாக யோசித்துப்பார், நானா மோசம் செய்துவிட்டேன., என்னை  மோசம் செய்துவிட்டவள் நீதான் கோகிலா....

இப்படி அபாண்டமாக பொய் பேசாதே பாஸ்கரா... “கட்டிய கனவன் எனக்கு துரோகம் செய்துவிட்டான்” என்று சொல்லி என்னை உன் வலையில் வீழ்த்தி, அவனைவிட நீ நன்றாக வாழ வைப்பேன் என்று சத்தியம் செய்து, பாச மழை பொழிந்த நீ...... கட்ந்த  மூன்று மாதங்களுக்கு மேலாக என்னை மறந்து நம் குழந்தைகளை மறந்து வீட்டை மறந்து, எனக்கு தெரியாமல் இவளுடன் குடித்தனம் நடத்துகிறாயே  !!! மோசம் செய்தது நீயா....நானா....பாஸ்கார.....

இதோ பார்.. கோகிலா.. பழைய கதைகளை பேசி என்னை மயக்காதே! இப்போது உனக்கு என்ன வேண்டும். அதைச் சொல்...

“நீ   எனக்கு வேண்டும்,  நீ வீட்டுக்கு வர வேண்டும்.” பாஸ்கார...

அது முடியாது கோகிலா....ஒனக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன் கோகிலா... “நீ உன் கனவனை வேவு பார்க்க என்னை நியமித்தாய்., அந்த பழக்கத்தைத பயன்படுத்தி சும்மா கிடந்த என்னை உன் மேல் மோகம் கொள்ள வைத்தாய், உன் கனவன் அடுத்தவன் மனைவியுடன் ஓடிப்போன பிறகு. நிர்க்கதியாய் நின்ற நீ ,உனக்கு துனையாக  நான் இருக்க வேண்டும் என்று அழுதாய், பெண் என்றால் பேயும் இறங்கும் என்பது போல் என் வீட்டாரின் எதிர்ப்பை எல்லாம் எதிர் கொண்டு.நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் முடிக்காமல் உன்னுடன் வந்துவிட்டேன். இதுநாள்வரை உனக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. நீயும் செய்யவில்லை   நீயே கதி என்று இருந்தேன். எப்பொழுது ஓடிப்போன உன் கனவன் உன்னிடம் வந்து தஞ்சம் அடைந்து பாவ மன்னிப்பு. கேட்டானோ.... நீயும் மறுதலிக்காமல்  அவனை ஏற்றுக் கொண்டாயோ, அன்றைய தினத்திலிருந்து இடையில் வந்தேறியான நான்  விலகி விடுவதுான் முறை, உன் கணவனுக்கு பாவ மன்னிப்பு வழங்கும் போதே என்னை நீ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை  அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கோகிலா. உன் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை ..நீ உன் கனவனுடனே சேர்ந்து வாழு கோகிலா....

“அவன் பாவம் பாஸ்கரா.... அழுது புரண்டு என்னை கலங்க வைத்துவிட்டான். உன்னை என்னால் மறக்க முடியவில்லை பாஸ்கார.....உன் குழந்தைக்காகாவது என்னோடு வந்துவிடு பாஸ்கரா...???

அது என் குழந்தையல்ல...உன் கனவனின் குழந்தை......

கோபம் கொள்ளாதே..பாஸ்கரா.... மூத்ததுதான் அவன் குழந்தை..இளையது உன் குழந்தை பாஸ்கரா்.... ...

அவன் குழந்தையை நான் எப்படி என்குழந்தையாக பார்த்தேனோ... அதே போல் என் குழந்தையும் அவன் குழந்தையாக வளர்க்கட்டும். கோகிலா..

அவனுக்கு இரண்டாவது நம் குழந்தை என்று தெரியாது பாஸ்கரா........அவன் உன்னை பெருமையாக பேசுகிறான்.நீ என்னுடனே இருக்க வேண்டும் என்று கேட்டபோது , அவன் சம்மதித்துவிட்டான் பாஸ்கரா.... வா..பாஸ்கரா.....

கோகிலா... நான் சொல்வதை கேள்.. உன்னைத்தேடி உன் கனவன் வந்து விட்டான். என்னால் என் வீட்டாரிடம் திரும்பச் செல்ல முடியாது. அதோடு நானும் உன் கணவனுடன் சேர்ந்து உன்னுடன் வாழ முடியாது.  பையன் எனக்கு பிறந்தவன் என்று அவனிடம் எப்பவாது ஏற்படும் சண்டையின் போது கோபத்தில் கொட்டி விடாதே....கோகிலா.... என்னை மறக்க பழகிக் கொள்..நீ என்னை கைவிட்டது போல் இவளை நான் கைவிடக்கூடாது கோகிலா....என்னைப்போல் எல்லாவற்றையும் துறந்து வந்தவள்.

நந்தினியை பற்றித் தெரியும் பாஸ்கரா, நீ இருக்கும் இந்த இடத்தின் முகவரியை கொடுத்தது. நந்தினியின் உறவுக்கார்கள்தான் பாஸ்கரா........

 உன் மூலம் அவளை பழி வாங்குவதற்க்காக முகவரியை  கொடுத்திருப்பார்கள் .கோகிலா......“நீ கூப்பிட்டு நான் வந்தவன்.. , நந்தினயோ நான் கூப்பிட்டு வந்தவள்” என்னை பழி வாங்குவதாக நிணைத்து அவளை பழிவாங்கிவிடாதே...... உன் கனவனை மன்னித்து ஏற்றுக் கொண்டது போல், என்னையும் அவளையும் மன்னித்து ஏற்றுக் கொள் கோகிலா....


இவள் உன்னை ஏமாற்றி விட மாட்டாளா....??? பாஸ்கரா.....!!!!

நிச்சயமாக. ஏமாற்றமாட்டாள். ஏனெ்னறால் அவள் புருசன்  நிச்சயமாக திரும்பி வர மாட்டான். அவன் அவளின் காதலியுடன் தற்கொலை செய்து கொண்டுவிட்டான்.

.நான் தவித்த தவிப்பை உணர்ந்தவள். என்னில் எல்லாமும் உணர்ந்தவள். உன்னால்தான் எனக்கு அவள் கிடைத்தாள்.உன் கனவனுடன் சந்தோசமாக இருந்த போது என்னால் இடையூறு ஏறப்பட்டுவிடக்கூடாது என்று வீட்டை விட்டு வெளியே வந்து தவித்தபோது, என் தவிப்பை கண்டு,என்னை காப்பாற்றியவள், கோபப்பட்டு அவளிடம் வார்த்தயை கொட்டி விடாதே.... கோகிலா......என் மேல் உண்மையாகவே அன்பும் பாசமும் இருந்தால்.... என்னை அவளுக்கு சொந்தமாக்கு விடு கோகிலா....எப்பொழுதும் நாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம் கோகிலா...

கடைக்குச் சென்ற நந்தினி  முக மலர உள்ளே வந்தாள். கோகிலாவின் காலில் விழுந்தாள். எனக்கும் யாருமில்லை. பாஸ்கரனைத்தவிர..என்றாள்., வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, இருவரிடமும் விடை பெற்று பாஸ்கரனை இழந்துவிட்ட சோகத்துடன.வெளியே வந்தாள். கோகிலா...






செவ்வாய் 27 2015

தற்கொலைக்கு தூண்டிய நீதி மன்றம்......


படம்-www.akaramuthala.in


 15 வயதுள்ள சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக காரைக்கால் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமாரின் மனைவியும் சிறுமியின் வளர்ப்பு தாயாருமான அம்பிகா மற்றும்  சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக  இருந்த அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மனைவி வள்ளி மற்றும் சிறுமியை திருமணம் செய்து கொண்ட சிவக்குமார் ஆகிய மூவரையும்  காவல்துறையினர்  கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

நீதி மன்றத்தின் உத்தரவுப்படி காரைக்காலில் மகளிர் சிறை இல்லாததால்  புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அம்பிகா, மற்றும் வள்ளியை அடைத்தனர்.

 நீதி மன்ற காவலில் இருந்த அம்பிகா தனக்கு ஜாமீன் வேண்டி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..கொள்ளை  அடித்து ஊழல்வாதி என்று தீர்ப்பு கூறப்பட்டவர்களுக்கு உடனே விடுதலையும், 25 அடிக்கு பதிலாக 25000 அடிக்கு தாதுமணல் கொள்ளை அடித்தவர்களுக்கு மு்ன்ஜாமீன் வழங்கி நீதியை நில நாட்டிய நிதிமன்றம்   அம்பிகாவுக்கு ஜாமீன் வழங்கவில்லை.

இதனால் வெறுப்படைந்த அம்பிகா, நள்ளிரவில் சிறை வளாகத்தில் உள்ள கழிப்பறை ஜன்னல் கம்பியில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரை தற்கொலைக்கு துாண்டியது  நீதிமன்றம் என்றால். அந்த நீதி மன்றத்தை,.   எந்த பீனல் கோட்டில் வழக்கு பதிவு செய்து எந்தச் சிறையில் அடைப்பார்கள்.

திங்கள் 26 2015

அதிசியமே அசந்து போகும்“ குடியரசு 66” படப்பிடிப்பு

உலக கதாநாயகன் அண்ணன் நடிகர் ஓ..“பாமா”வும்  இந்து தேசியத்தின் தெற்காசிய கதாநாயகன் . தம்பி  நடிகர் மோடியும், புது தில்லி பிலிம் சிட்டியில் இணைந்து நடிக்கும் ”குடியரசு 66” படத்தின்  சிறப்பு படபிடிப்பில்.......

3 கி்.மீ. தூரம் கொண்ட ராஜபாதையில் 160 சிசிவி கேமராக்களும், இவற்றில் முகத்தை தெளிவாக படம் பிடிக்கக்கூடிய  18 மீட்டர் தொலைவுக்குள் படம் பிடிக்கக்கூடிய அதி நவீன கேமராக்களுடன் படப்பிடிப்பு  நடந்தன. இந்த படத்தின் படப்பிடிப்பிற்க்காக டெல்லி முழுவதும் 15,000 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு  டெல்லிக்காரர்களும், அமெரிக்ககாரர்களும் கூட்டாக சேர்ந்து பணியாற்றுகிறார்கள்.

 “குடியரசு66” படத்தின் படப்பிடிப்பிள்போது  இரு கதாநாயகர்களுக்கும்  படத்தில் பங்கு கொள்ளும் நடிக-நடிகையர்களுக்கும் சேர்த்து பாதுகாப்புக்கு என 80.000 ஆயிரம் டெல்லி போலிசாரும், 20,000 துணை ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆக.15,000 கேமராக்களுடனும் 1லட்சம் போலீஸ பாதுகாப்புடன் குடியரசு66 படத்தின் படபிடிப்பு  காட்சிகள் எடுக்கப்படுகின்றன.

“குடியரசு” படத்தின் படபிப்பின் போது எடுக்கப்பட்ட அரிய வகை காட்சிகள்.
படப்பிடிப்புக்கு முன்

ரசிகர்களுக்கு


படப்பிடிப்புக்கு முன்


இரு கதாநாயகர்கள் உலா வரும் “குடியரசு66”படத்தின் ஒரு காட்சி

ஞாயிறு 25 2015

அவருக்கும் ஜே!..இவருக்கும் ஜே!!..



படம்-http://ta.wikipedia.org/s/1q
தென்னகத்து  ஜேம்ஸ்பாண்டு முதன்முதலாக வில்லனாக நடித்தஒரு படம். அதில் வரும் பாடல் ஒன்று..

“அண்ணனுக்கு ஜே!!!
காளையனுக்கு ஜே!!! ”

என்று வரும் பின்பு- பாட்டு.. .இப்பொது இதுமாதிரி..ஜே!! முழக்கம் கேட்டுவிட்டது    அந்த முழக்கம்தான் இது

“இந்தியாவுக்கு விலையில்லா சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மாவுக்கு ஜே!!”...

“அந்த மகாத்மாவை விலையுடன் போட்டுத்தள்ளிய கோட்சேவுக்கு ஜே!!!”

அற்பனுக்கு வாழ்வு வந்தா...................அந்த பழமொழியைத்தான் நிணைவு படுத்துகிறது இந்த முழக்கம்

இந்த முழக்கங்களுக்கு சொந்தக்காரர்கள் யார் யரென்று தாங்களே கண்டுபிடித்து கொள்ளுங்கள்.
படம்http://ta.wikipedia.org/s/4ur



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...