பக்கங்கள்

புதன் 27 2011

அண்ணல் தழுவிய புத்தரின் தத்துவங்களிலிருந்து...............

tamilmanam

அதிகம் உண்பவன் ஞானம் பெறமுடியாது.உண்ணாமல்
பட்டினி   கிடப்பவனும் ஞானம் பெறமுடியாது.

அதிகம்  உறங்குபவனும்.உறங்காமல் இருப்பவனும்
ஞானம் பெற முடியாது.     (ஞானம்---அறிவு)

மண்---பொன்------பெண்  இந்த ஆசைகள்  உள்ளவரை
துன்பங்கள் நீங்காது.
1.மனித வாழ்க்கை துன்பம் நிறைந்தது.
2.துன்பத்திற்கு காரணம் ஆசையே!
3.ஆசைகளை மனிதன் நீக்கினால் துன்பத்திலிருந்து
மீளலாம்

வாழ்வில் வறுமை வரும்,நோய்வரும், முதுமைவரும்
இறுதியில் மரணம் வரும்.

துறவிகளின் நெறிமுறைகள்.
1. ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளில கலந்து கொள்ளக்கூடாது.
2. மலர்,வாசனை திரவியங்களை பயன் படுத்தக்கூடாது.
3. அளவான உணவே உட்கொள்ள வேண்டும்.
4. மிருவான,பஞ்சு மெத்தைகளில் படுக்கக் கூடாது.
5. பணம் வைத்துக்கொள்ளக்கூடாது,கேடகக்கூடாது
சேர்க்கக கூடாது.

உயர்ந்தோர்-தாழ்ந்தோர் பேதமில்லை.சாதி 
வேறுபாடுகள் இல்லை,ஏழை-பணக்காரன்
உயர்வு-தாழ்வு இல்லை. 

மதச்சடங்குகள்,யாகங்கள்,வேதம்ஓதுதல்,
யாகங்கள், பலிகள் கிடையாது.

நன்றி. அண்ணல்

அண்ணல் தழுவிய புத்தரின் தத்துவங்களிலிருந்து...............

அதிகம் உண்பவன் ஞானம் பெறமுடியாது.உண்ணாமல்
பட்டினி   கிடப்பவனும் ஞானம் பெறமுடியாது.

அதிகம்  உறங்குபவனும்.உறங்காமல் இருப்பவனும்
ஞானம் பெற முடியாது.     (ஞானம்---அறிவு)

மண்---பொன்------பெண்  இந்த ஆசைகள்  உள்ளவரை
துன்பங்கள் நீங்காது.
1.மனித வாழ்க்கை துன்பம் நிறைந்தது.
2.துன்பத்திற்கு காரணம் ஆசையே!
3.ஆசைகளை மனிதன் நீக்கினால் துன்பத்திலிருந்து
மீளலாம்

வாழ்வில் வறுமை வரும்,நோய்வரும், முதுமைவரும்
இறுதியில் மரணம் வரும்.

துறவிகளின் நெறிமுறைகள்.
1. ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளில கலந்து கொள்ளக்கூடாது.
2. மலர்,வாசனை திரவியங்களை பயன் படுத்தக்கூடாது.
3. அளவான உணவே உட்கொள்ள வேண்டும்.
4. மிருவான,பஞ்சு மெத்தைகளில் படுக்கக் கூடாது.
5. பணம் வைத்துக்கொள்ளக்கூடாது,கேடகக்கூடாது
சேர்க்கக கூடாது.

உயர்ந்தோர்-தாழ்ந்தோர் பேதமில்லை.சாதி 
வேறுபாடுகள் இல்லை,ஏழை-பணக்காரன்
உயர்வு-தாழ்வு இல்லை. 

மதச்சடங்குகள்,யாகங்கள்,வேதம்ஓதுதல்,
யாகங்கள், பலிகள் கிடையாது.

நன்றி. அண்ணல்






செவ்வாய் 26 2011

யாருக்கும் பாரமாய்............

எனக்கு டீ குடிக்கும்
பழக்கமில்லை-அதனால்
டீ கடைக்கு போவதில்லை

மது குடிக்கும் பழக்கமில்லை
ஆனால் மது கடைக்கு
போகமல் இருந்தில்லை

சாமி கும்பிடும் பழக்கமில்லை
ஆனாலும் சாமி கும்பிடாமல்
இருப்பதில்லை

சாப்பாடு கிடைப்பதில்லை
அதற்காக சாப்பிடாமல்
இருக்க முடிவதில்லை

யாரிடமும் பேசுவதில்லை
பேசினால் அவர்களை
விடுவதில்லை

யாரும் என்னை சிரிக்க
வைக்க முடிவதில்லை
அதற்க்காக நானும்
 அழுவதில்லை

வாழ்க்கையை ரசிக்க
தெரியவில்லை-அதற்காக
தற்கொலைக்கு
போனதில்லை

புமி எனக்கு பாரமாய்
இருந்ததில்லை-அதனால்
யாருக்கும் பாரமாய்
இருக்க போதில்லை.


ஞாயிறு 24 2011

உஷா இருங்கோ !.......................உஷாருங்கோ !

அமெரிக்க முன்னால் அண்ணன் சொன்னார்.இந்தியர்கள. நிறைய
சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் என்று. அண்ணனுக்கு வாயில
கொழுப்பு ,அந்த கொழுப்ப குறைக்க உளறிக்கொட்டினார் அண்ணன்

இந்தியாவிலும் குறிப்பா தமிழ்நாட்டில்  திண்டு்ம் தின்னாமலும்
கொழுப்பேறி குண்டானவர்கள் . உடலை எடையை குறைக்க
படாதபாடு படுகிறார்கள்.ஆண்களைவிட பெண்களின் பாடு ரெம்பவும்
கஷ்டம் . ஒன்னோ,ரெண்டோ பிள்ளகளை பெற்றுவிட்ட பெண்கள்
குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்ட பிறகு உடம்பு எடை கூடுவதும்
அதை குறைக்க படாதபாடு படுகிறார்கள்

படித்த,வசதியுள்ள பெண்கள் ஆண்களைப் போலவே அதி காலையில்
நடைபயணம் பயிலுகிறார்கள். ஒல்லியாக இருக்கும்போது குண்டாக
விரும்புவதும்.குண்டான பிறகு நார்மலாக இருக்க விரும்புவதுமாக
சிந்தனையிலும் அல்லாடுகின்றனர்.

கனவர்களுக்கும்,சக பெண்களுக்கும் பார்ப்பற்கு அழகாகவும்,பெருமை
பேசவெண்டும் என்பதற்காக முன்னோர் காலத்திலிருந்து பெண்கள்
தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் வாழ்நாளில் பாதி நாட்களை
 இதற்கே செலவழித்துகொண்டு இருக்கிறார்கள்

இந்த இருபத்தினோறாவது நுாற்றாண்டு காலத்திலும் விடாது .
ஆண்கள் முடிதிருத்தம். சலுனாக மாறிஆண்கள் அழகு நிலையமாக
இயங்குவது போல், பெண்களுக்கென்றே பெண்கள் அழகு நிலையம்
பியுட்டி பார்லர்.......இப்படி....இதற்காக ...டி.வி,பண்பலை ரேடியோ
பேன்ஸி ஸ்டோர்களில்  விதவிதமான விளம்பரங்கள்.

இதுமாதிரி பெண்களக்கான விளம்பரங்களில்  ஒரு மாதிரியான
விள்பரத்தை,“படித்த,மேதாவிகளின்,நடுத்தர ”மக்களின் நல்ல
பத்திரிக்கையென பெயரெடுத்த தினமணியின் இனைப்பான
தினமணிகதிரில் ஒரு விளம்பரம்.எடுப்பான மார்பகங்கள்-என்ற
விளம்பரம் இதிலும் போலிகள் வந்துள்ளதால்  அடையாளம்
பார்க்கவும் என்ற குறிப்பு வேறு.

வீரிய எழுச்சிக்கு, நீண்டநேரம் அனுபவிக்க.......இப்படி ஆண்களுக்கான
விள்ம்பரம்.  அழகான,கவர்ச்சியான, நளினமிக்கதாக.எடுப்பான
மார்பகங்கள் ..இப்படி பெண்களுக்கான விளம்பரங்கள்.

எப்படி எப்படியோ,சிந்திக்கிறாங்கப்பா என்ற மாதிரி எப்படி எப்படியோ
விளம்பரங்களும் ,தொழில்களும் வல்லரசாகும் இந்தியாவில்
பெருகி போச்சு..

இருக்கிறவர்கள் ஏமாறமாட்டார்கள்.அப்படி அவர்கள் ஏமாந்தாலும்
பிரச்சினையில்லை.இல்லாதவர்கள் ஏமாந்தால்...............

எம்ஜியாரை புரட்சி நடிகராக ஏற்றிவிட்ட பட்டு கோட்டையின்
பாட்டு போல, 

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே!......என்று பாடலாமா?

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள்.
ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்று.ஆறுதல் படுத்தி
கொள்ளலாமா?......எம்ஜியாருக்காக டிஎம்எஸ. பாடிய

ஏ...மா...றா...தே!  ஏமாறாதே!.-என்று ஏமாறுபவர்களுக்கும்
ஏமாற்றாதே! ஏமாற்றாதே!! - என்று எமாற்றுபவர்களுக்கு்ம்
மனு கொடுக்கலாமா???

நாய்கள் ஜாக்கிரதை ,மாதிரி விளம்பரங்கள் ஜாக்கிரதை
என்று வெளியிடு்ங்கப்பா!!............என்னது அப்படி போடுவது
பத்திரிக்கை தர்மம் இல்லையா? அய்யயோ! அய்யயோ!!

உஷா இருங்கோ!............உஷாருங்கோ!.......விளம்பரங்கள்
உஷாருங்கோ!.........

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...