வெள்ளி 20 2021
அவாள் கண்ணீர் சுடு தண்ணீர்........!!!
புதன் 18 2021
கடவுளை மறுக்கும் அறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங்ன் அனுபவம்,
2009-ம் ஆண்டு ரோமில் போப்பாண்டவர் "கடவுளும் பிரபஞ்சமும்"என்ற தலைப்பில் வாட்டிகன் கிறிஸ்துவ தலைமைச்சபையில் ஒரு மாநாட்டை கூட்டினார்.
அந்த மாநாட்டுக்கு கடவுளை மறுக்கும் அறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங்கை போப் அழைத்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாநாட்டுக்கு சென்றார் ஸ்டீபன்.
உலகம் முழுதுமிருந்து வந்திருந்த விஞ்ஞானிகள் போப்பிடம் தலை தாழ்த்தி ஆசி பெற்றனர். ஆனால் அசைவற்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஹாக்கிங் முன் வந்த போப் முழங்காலிட்டு தலைகுனிந்து தன்னை வாழ்த்தும்படி கேட்டார். ஆம், கடவுளின் இருப்பை மறுக்கும் ஒரு பகுத்தறிவாளர் முன்..!
மாநாட்டில் ஹாக்கிங் தான் கண்டுபிடித்த "swift-key joined Intel" கருவியின் வழியாக பேசினார். பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை.
நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய். இது பொய் என்பதை விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது என ஆணித்தரமாக எடுத்துவைத்தார். இறுதியாக பேசிய போப் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை மறுத்து அவர்களை மதம் தண்டித்தது தவறு என்று அறிவித்தார். அன்றாலும்... விஞ்ஞானத்துக்கு அப்பால் அதிசய சக்தி ஒன்று நிச்சயம் இருக்கிறது என்று மதவாதிகளுக்கே உரிய வலிமையற்ற வாதத்தையும் முன்வைத்தார்.
ஹாக்கிங்கின் அன்று பேசியவற்றில் சில..!
1. பிரபஞ்சத்தில் இருண்ட குகைகள் (black holes) இருக்கின்றன. ஆனால், அந்த இருட்டை விட, விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளாமலும் ஏற்க மறுத்தும் அறியாமையில் உழலும் இருட்டுதான் மிகவும் ஆபத்தானது.
2. #பலகோடிக்கணக்கான #மக்கள்கடவுளை #நம்புகிறார்கள் #என்பதற்காகவே அந்த #ஆதாரமற்றபொய்யை #சுயசிந்தனையுள்ளமனிதனும் #ஏற்கதேவையில்லை.
3. கடவுள் என்ற ஒரு தனி சக்தி இருந்தால் கூட அது இயற்பியல் விதிகளுக்கு கீழ்படியும் கடவுளாகத்தான் இருக்கமுடியும்.
4. நல்லவேளை "பெருவெடிப்பு" பற்றிய என் உரையின் பொருள் பற்றி போப்பாண்டவருக்கு புரியவில்லை. இல்லையென்றால் எனக்கும் கலீலியோக்கு நேர்ந்த அதே கதிதான் நேர்ந்திருக்கும்.
விஞ்ஞானத்தின் முன் மதம் மண்டியிட வேண்டும். விஞ்ஞானம் மதத்திற்கு முன் ஒருபோதும் மண்டியிடக்கூடாது.
விஞ்ஞானம் ஆதாரங்களின், தெளிவுகளின், நிரூபணங்களின் அடிப்படையில் ஆனது.
உங்கள் அன்றாட வாழ்வின் செளகரியங்களும் வசதிகளும் விஞ்ஞானம் அளித்த வரமா அல்லது மதம் கொடுத்த அதிசயமா என்று நடுநிலையோடு சிந்தித்தால் உங்களுக்கே அது புரியும்
செவ்வாய் 17 2021
மூணு சாமிகளின் இயல்புகள்,..
ஒரு
முறை
பெரியார் இராசிபுரம் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிரில் உள்ள
தோழர்
எழுந்து அய்யா
நீங்கள் கூறுகின்ற
#நொன்டிசாமி எது?
என்று
கேட்டார்.
அதற்கு
அய்யா
அவர்கள் கொடுத்த விளக்கம் .......
"குருட்டு சாமி"
என்றால் கிருஸ்துவ சாமி.
அந்த
சாமிக்கு மெழுகுவர்த்தி ஏற்றினால் தான்
அந்த
சாமிக்கு கண்ணே
தெரியும்.
"செவிட்டு சாமி"
என்றால் அல்லா
சாமி.
அதற்கு
அரபியில் காது
செவிடாகும்படி ஓதினால் மட்டுமே காது
கேட்கும்.
கடைசியாக,
"நொன்டி சாமி"
இந்து
சாமி.
நான்கு
பேர்
முதல்
நாற்பது பேர்
வரை
பல்லக்கில் வைத்து
தூக்கினால் தான்
நகரவே
செய்யும் என்றார்.
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டும்
ஞாயிறு 15 2021
சுதந்திரம் யாருக்கு...???
சுதந்திரம் வந்துவிட்டதாக
கும்மாளம் அடிப்போரே!
இந்த சுதந்திரம் உனக்கா..
வட நாட்டானுக்கா. உனக்கா...??
முதலாளிக்கா? உனக்கா..???
கள்ள மார்க்கெட் காரனுக்கா. .
தொழிலாளிக்கா இல்ல..
அவன் ரத்தத்தை உறிஞ்சுபவனுக்கா..??
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...


