பக்கங்கள்

வெள்ளி 28 2019

அதிகாலை கனவு-33

ஒரு கடவுள் தந்த  சாபமும் வரமும்....


நந்தினி ஆனந்தன் க்கான பட முடிவு




எந்த மதக் கடவுள்னு எனக்கு தெரியல..  ஒரு கடவுளு போலீஸ் மாதிரி மாறு வேடத்தில் வந்து சோதனை செய்துகிட்டு  இருந்தப்ப அவருக்கு தாகம் ஏற்பட்டது..கையோடு இருந்த வாட்டர் கேனில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால்... பக்கத்தில் தன்னிடம் -வியாபரம் நல்லா போகனுமுன்னு தினமும் வேண்டிகிட்டு இருக்கும் பக்தனான பால் காரன் வீட்டுக்கு போயி தண்ணி கேட்டார்.

அதுக்கு பால்காரன். வந்தியிருக்கிறவர் யாருன்னு தெரியாம.“பால்ல கலக்கவே தண்ணி இல்லாம கஷ்டப்படுறேன் இதுல ஒனக்கு எங்க தண்ணி தர்றது போப்பா”-ன்னு  விரட்டி விட்டாரு....

மாறு வேடத்தில் இருந்த  கடவுள் நொந்து போயி அங்க சுத்தி இங்க சுத்தி  கூட்டமா இருந்த  ஒரு இடத்த நோக்கி போயிருக்காரு.....அங்க சாராயத்த குடிச்சிகிட்டு இருந்தாங்க பலபேரு.... மாறு வேடத்தில் வந்த கடவுள்  சாரயத்துக்கும் தண்ணிக்கும் வித்தியாசம் தெரியாம சாராய பாட்டில் இருப்பதை தண்ணின்னு நிணச்சு மடக் மடக்ன்னு குடிச்சு தன் தாகத்தை தீர்த்திட்டார்.

தன் தாகத்தை தீர்த்தக் கொண்ட மாறு வேடக் கடவுள்  .. எனக்கு தண்ணி தராத பால்காரன் வீட விடாக அலைந்து தண்ணிகலந்த பாலை ஊத்தி பொழைக்ககடவது...என்று சாபம் விட்டார்

தண்ணிதந்து தாகத்தை தணித்த சாராய கடைக்கு மக்கள் அள்ளி அள்ளி கொடுத்து கும்பல் கும்பலாக  குடித்துவிட்டு போகக்கடவது என்று வரம் கொடுத்தார். இந்த நிலையில்..

கடவுள் சாபமும்  வரமும்  கொடுத்த கதையை படித்தேனா..அல்லது கேட்டேனா என்று தவியாய்  தவித்த தவியில்  கடவுளே  ! என் கனவில் வந்து சாபம் விட்டதையும் வரம் கொடுத்ததையும் எனக்கு தெரிவித்தார்..

என்னிடம் வந்து தெரிவித்த கடவளிடம்.... நீர் .வரம் கொடுத்த சாரயத்தை பற்றி நீதி தேவதையிடம் விவரம் கேட்டதால் நந்தினி என்ற செயற்பாட்டாளரும் அவருடைய தந்தையும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற  விவரம் தெரியுமா கடவுளே என்று கேட்டதுதான் தாமதம் கண்களை திறந்து கடவுளை பாரத்தால் கடவுள் தன் மாறுவேடத்தை கலைத்துவிட்டு ஆளைவிட்டால் போதுமடா சாமின்னு மாயமாக மறைந்து விட்டார்.......

இனி எங்க  விடிஞ்சு போச்சு பகல்ல எங்க கடவுள் வரப்போறார் ........






புதன் 26 2019

அதிகாலை கனவு-32.





அந்த நாள் பயம் கனவில் வந்தது..



தொடர்புடைய படம்








பெண்சில் வாங்க
குமரன் ஸ்டோருக்கு
நடந்து போனான்

தூரத்தில் சித்தப்பனின்
மனைவியைப் போல்
ஒரு பெண்
வயது குறைந்து
அழகாக தெரிந்தார்

ரசிக்க தெரியாதவன்
பயத்தால் பதட்டம்
அடைந்து வலது
பக்கமிருந்து இடது
பக்கமாய் சென்று
தப்பித்தோம் என்ற
களிப்பில் கவனித்தான்


சித்தப்பன் மனைவி
மாதிரி அல்ல
சித்தப்பனின் மனைவியேதான
அதுவும் இவனை
கவனித்த படியே
வலது பக்கமிருந்து
இடது பக்கமாய்
வந்தது. இவனுக்கு
நெஞ்சிலே டிக் டிக்
 சத்தம் பலமாக
அடிக்க ஆரம்பித்தது.

இந்த பொம்பளையை
 மட்டும் அல்ல
அவன் தெருக்கார
பொம்பளைக என்றாலே



கண்டாலே பயம்தான்
காரணம் தெரிந்தவர்களுக்கு
தெரியும் அறிந்தவர்கள்
அறிவர். தைரியத்தை
வரவழைத்து கொண்டாலும்
நெஞ்சிலே அடிக்கும்
டிக்டிக் அல்ல
திக்திக் யை நிறுத்த
முடியவில்லை.அருகில்
வந்துவிட்டாள்.பாய்ந்து
வலது பக்கம்
சென்றபோது
வலது பக்கம்
வந்தவள் மேல்
மோதிவிட்டான் அடுத்த
கனம் அவளின்
களேபரம் அய்யோ
அவளின் மார்பகத்தை
பிடித்து விட்டானாம்



ஆழ்ந்து தூங்கியவன்
கைகால்களை உதறி
 கண் விழித்த
போது கனவென்று
தெரிந்தபோதும்
பயம் மட்டும் போகவில்லை
விடியும் வரை நெஞ்சு
அடித்துக் கொண்டே
இருந்தது இந்த
பயத்தின் முன்
கதைதான் தெரியுமோ....











செவ்வாய் 25 2019

அதிகாலை கனவு-31

சென்னையில் தண்ணீர் பஞ்சம்

வடக்கே போகும் ரயில்







சரியாக 9 மணிக்கு ரயில் ஏறினார்
ரயிலும் சரியாக 9.30 நகர்ந்தது
கொடை ரோடு சந்திப்பில்
தன் செல்போனில் அலராம் வைத்தார்
பின் படுக்கையில் படுத்து
குறட்டை விட்டு தூங்கினார்
ரயிலும் சவுண்டு விட்டபடியே
ஓடிக் கொண்டு இருந்தது.

சரியாக மணி 4க்கு அலாரம் அடித்தது
எழுந்தவர் கண்களை துடைத்துக் கொண்டு
அருகில் இருப்பவர்களை சுற்றி
நோட்டம் விட்டார் எல்லோரும்
தூங்கிக் கொண்டு இருப்பதைக்
கண்டார். சட்டென்று எழுந்து
கழிப்பறையை நோக்கி ஓடினார்.
இரவில் சாப்பிட்டதில் சிலவற்றை
வெளியேற்றினார். பின் டாய்லெட்
சவரில் உடம்புக்கு மட்டும் சிறு
குளியல் போட்டார் பின் வெளியே
கண்ணாடியில் முகம் பார்த்து
தன்னை ஒப்பனை செய்து
கொண்டார். இருக்கைக்கு வந்து
செல்போனை நொண்டினார் ரயில்
எக்மோர் வந்து நினறது.. இவர்
 ரெம்ப பிரஸ்சாக ரயில
விட்டு இறங்கி வந்தார்
சென்னையில தண்ணீர் பஞ்சமாம்
அட போங்கடா பித்துகுளி பசங்களா..

என்று விசில் அடித்தபடியே
தான் செல்ல வேண்டிய இடத்துக்கு
சென்றார்...அடப் பாவி  இது
எனக்கு தெரியாமப் போச்சடா
வெட்டியா மெரினா பீச்சுக்குல
போனேன் என்று ஒருவர் திட்டியதை
கேட்டு கண் விழித்த எனக்கு
பின்னாளில் எப்பவாவது பயன்படும்
உபயோகப்படும் என்பதால் உடனே
குறிப்பெடுத்து பத்திரப்படுத்தி கொண்டேன்...........

ஞாயிறு 23 2019

அதிகாலை கனவு-30.

தொட்டில் பழக்கம்......







எனக்கு நினவு தெரிஞ்ச நாளிலிருந்து  இப்பவரைக்கும். நான் உடுத்தும் உடைகளை நானே துவைத்து கொள்வது என்பது தொன்று தொட்டு வந்த பழக்கம். மற்றவர்களுக்கு கிடைத்த பலாபலன் மாதிரி  எனக்கு துணையும்.இல்லை இணையுமில்லை.... நமக்கு ஒன்னுக்கோ- வெளிக்கோ வந்தா நாமதானே கழிக்கனும். நமக்கு பதிலா.. வேறு யாரும் கழிக்க முடியாதல்லவா  அதுமாதிரிதான்..என்னுடைய பழக்கவழக்கம்...

ஆத்துலயும் தண்ணி வரல..குளத்துலயும் தண்ணியில்ல இதுல தண்ணி பஞ்சம் வருவதற்கு முன்னமே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பழக்கமும்  என் அம்மாகிட்ட அடி வாங்கி பழகிய பழக்கமுங்க... குளிக்கையிலோ..அல்லது துணிமணிகளை துவைக்கபோதே  சிறுநீர் வந்தால் தண்ணியோடு தண்ணியாக போகட்டும் என்று பெய்துவிடமாட்டேன். அந்தப் பழக்கமும் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.


 தண்ணியில்லாததால் நாலு நாளைக்கு ஒரு தடவையாக தண்ணிர் வந்த நேரம்.. அவனவன் மோட்டார் போட்டு சட்டிமுட்டிகளில் எல்லாம் தண்ணீர நிரப்பிக் கொண்டு இருந்த வேளையில் அடி பம்பில் இடைவெளி விடாமல் அடித்ததில் ஒன்றறை ட்ரம்ப்தான் தான் அடிக்க முடிந்தது. வந்த இரண்டு மணி நேரத்துக்குள் தண்ணீர் நின்று விட்டது. 

தண்ணி அடித்த அதாவது குழாயில் அடித்த களைப்பில் உறங்கியதில் பழைய சம்பவம் ..


கந்தையாக இருந்தாலும் கசக்கி கட்டுன்னு யாரு சொன்னாங்கன்னு தெரியல...ஆரம்ப பாடசாலை டீச்சரு ..என்னயப்பாத்து அடிக்கடி சொல்லும்...அதுக்கு பயந்தே செம்மண் ஏறிய என் கால் டவுசரையும் சட்டையையும் தினசரி துவைத்துதான் அணிந்து செல்வேன்.. எவ்வளவுதான் கசக்கினாலும் சோப்பு போடாததால் என் வெள்ளை சட்டை பழுப்பேறிய செம்மண் கலராகவே காட்சிஅளிக்கும்..இது அந்த டீச்சருக்கு உறுத்தும்போல...

ஒரு நாளு காலையில எழுந்தவுடன் அருகில் உள்ள பம்ப் செட்டுக்கு போககையில் யாரோ ஒரு புண்ணியவன்  துவைக்கிற சோப்பு  கரைந்து சிறியதாக இருந்த காரணத்தால் மறந்து வச்சுட்டு போனார்...

அந்த சோப்பைக் கண்டதும் பெரு மகிழ்ச்சி... சட்டையில் உள்ள செம்மண்ணை விரட்டிவிடலாம்....என்று கால் டவசர். மேல் சட்டை ஆகியவற்றை கழட்டி தண்ணீரில் நணைத்து அம்மணத்துடன் சோப்பு போட்டுக் கொண்டிருந்தேன்.


சிறிது நேரத்தில் கூட்டம் வந்துவிடும் அதற்குள் துணிகளை துவைத்து குளித்து முடிக்க வேண்டும். கூட்டம் வந்துவிட்டால் குளிக்க முடியாது .பரபரப்பாக துவைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் ஒன்னுக்கு வந்து விட்டது. தண்ணியோடு தண்ணியாக ஒன்னுக்கு இருந்துவிடகூடாது.  எழுந்து சென்றுவிட்டால் துவைத்துக் கொண்டிருக்கும் கல்லில் மீண்டும் துவைக்க முடியாது.. அந்தக் கல்லில் இடம் பிடிப்பதற்காக இரண்டு பேர் வரிசை கட்டி நிற்கிறார்கள்...

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது என்று  அன்றே செயல் முறை விளக்கமாக இருந்தது.  இலேசாக சொர்ர்க் சொர்ர்க் என்று வந்தது.  தட்டுத்தடுமாறி கண்விழித்து. தூக்கத்தில் அவிழ்ந்து கிடந்த கையிலியை பிடித்தபடி அரக்கபரக்க கதவை திறந்து  வேகமாக வெளியே வந்து  கால்வழியாக வழிந்த  சிறு இடைவெளியில் வெட்ட.வெளியில் நீண்ட நேரமாக சிறுநீர் கழித்து.பின் நிதானத்துக்கு வந்தேன்.

நல்லவேளை குழாயில் தண்ணி அடித்த களைப்பினால் படுக்கையில் சிறு கழிப்பதை தடுத்து நிறுத்தியது என். சிறு வயதில் நடந்த  சம்பவம் கனவாக....

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...